Monday, March 21, 2022

உங்களில் ஒருவன் 
..
தமிழ்நாடு முதலமைச்சர் 
முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்கள் எழுதிய நூல் உங்களில் ஒருவன் வெளியீட்டுவிழா 
அயலக தி.மு.க. குவைத்  Non residents Tamil Indian association நடத்திய விழாவில் 
நூலை வெளியிட்டு பேசினேன் ..
முதல் பிரதியை உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் நண்பர் மானமிகு.சித்தா்த்தன் பெற்றுக்கொண்டார் 
விழாவில் பள்ளி மாணவச் செல்வங்களில் தனித்திறன் போட்டிகளும் பரிசளிப்பும் நடந்தது .. 
பெரியாரை, பேரறிஞரை,முத்தமிழறிஞரை, காயிதெமில்லதை சிறுவர் பேச கேட்க மனம் மகிழ்ந்தது ..
நாளைய தலைமுறைக்கு நல்லதை விதைக்கிறோமென்ற மனதிருப்தி ..
..
தன் வரலாறு நூல் குறித்து சிறிய உரை நிகழ்த்தினேன் .. நூல் நெடுக சாமானியனின் மொழியில் தலைவர் கதைத்திருத்தார்  . எழுத்தாளுமை மிக்க சொல்லாடல்கள் இல்லையெனினும் ,பக்கத்துவீட்டுகாரன் திண்ணையில் அமர்ந்து பழங்கதை பேசுவதை போல அமைந்திருந்தது தளபதியாரின் 
உங்களில் ஒருவன் ..
..
அண்ணா குறித்து அவர் எழுதும் போது  "அப்பனைப் போல பிடிவாதகாரன்" என்றதை பெரும்பேறாக கருதுகிறார் ஆம் கலைஞர் பிடிவாதகாரன் தான் ..67ல் ராமநாதபுரம் தொகுதிக்கு ஆள்கிடைக்கவில்லை மாவட்ட செயலாளர் தென்னரசு யாரும் ராஜாவை எதிர்க்க முன்வரவில்லை என அண்ணாவிடமே சொன்னதையும், கலைஞர் ஆளிருக்கிறார் தங்கப்பன் குதிரை வண்டிக்காரர் என்ற போது எல்லோரும் அச்சத்தை வெளிபடுத்த வென்று காட்டுகிறேனென 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ததையும் நினைவுகூர்ந்து .. 
ஆம் கலைஞர்  பிடிவாதகாரர் தான் கொள்கை பிடிவாதம் நிறைய உண்டு..
..
எம்ஜிஆரை நினைவுகூர்ந்திருப்பார்.. அதில் அப்பனை போலவே முகமூடியை கிழித்தெறிகிறார் என கூறி 
அமைச்சர் கோவிந்தசாமி மறைந்த பிறகு குடும்பநிதி வசூலுக்காக கோபாலபுரம் கிளைக் கழகம் சார்பில் 
எம்ஜிஆரின் "நாடோடி மன்னன் " படத்தை #பகல்காட்சி திரையிட முடிவு செய்த போது எம்ஜிஆர் திரையரங்க மேலாளரை மிரட்டியதையும் தளபதியாரே நேரில் பேசியபோது கோபம் அடைந்ததையும் குறிப்பிட்டிருப்பார் .. அதைச்சொல்லி எம்ஜிஆர் நல்ல வியாபாரி அரசியல்வாதியல்ல தன் இமேஜ் பகல்காட்சியில் திரையிட்டால் கெடும் என்பதை உணர்ந்தே கோபட்டதை சுட்டிகாட்டி பேசினேன் .. போகிறபோக்கில் லாவகமாக எம்ஜிஆரின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார் என்றேன் ..
சிறை குறித்து அவரது அனுபவங்கள் 
நாளை உன் பிள்ளையை காண நீயும் இங்கு வரகூடும் .. பொதுவாழ்வு பூங்காவனம் அல்ல என்ற மேற்கோளை சுட்டிகாட்டிய கலைஞரின் கடிதம் பல நினைவுகளை வரவழைத்தது ..
நிறைய விடயங்கள் நிகழ்வுகள் நூலில் இடம்பெறவில்லை அடுத்தடுத்த பாகங்களில் பதிவு செய்யவேண்டும் ...
..
அதோடு..
மிக முக்கியமாக அயலக அணி தேர்வை சுட்டிகாட்டி உழைப்பவனுக்கு பொறுப்பை தர வேண்டுமென்ற கருத்த பதிவு செய்ய தவறவில்லை .. இந்த இயக்கதிற்கு வண்டிக்காரர்கள் தேவை எனச் சொல்லி,  திராவிட இயக்கம் சிகை அலங்கார நிலையங்களிலும் திண்ணை, தெருமுனை பிரச்சாரங்களில் வளர்நதது .. இயக்கத்திற்கு இன்றைய தேவை வைரவியாபாரிகள் அல்ல 
வண்டிக்காரர்கள் என்ற போது அரங்கம் கைத்தட்டி வரவேற்றது 
..
வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் 
நல்ல நல்ல விதைகளை தேடி விதைத்துக்கொண்டே இருப்போம் .. 
திராவிடம் வாழும் ஆளும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment