உலகப் பெண்கள் தினம்
..
நீண்ட நாட்களாக என்னை துரத்திக்கொண்டிருந்த கேள்வி
ஏன் அதிகாரமிக்க பதவிகளில்
பெண்களை திராவிட இயக்கங்கள் அமர்த்தவில்லை
(அதிமுகவை திராவிடக்கட்சியாகவே கருதவில்லை அது ஆர்எஸ்எஸ் உருவாக்கிய மாற்றுபாதை)
கேள்வி இன்னும் முடியவில்லை
அதற்கான தகுதியானவர் கண்டெத்தமுடியவில்லயா ..
..
திராவிடக் கழகத்தின் பொருளாளராக மானமிகு. டாக்டர் ஈரோடு பிறைநுதல் செல்வி கௌதமன் இருந்தார் அவர் விபத்தில் மரணமடைந்த பிறகு அப்பதவிக்கு பெண்கள் யாரும் நியமனம் செய்யபடவில்லை .. இதுகுறித்து உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் நடத்திய "திருக்குறள்"மாநாட்டிற்கு வருகை தந்த தி.கழகத்தின் துணைத்தலைவர் மானமிகு.கலி.பூங்குன்றனாரிடம் கேட்டேன்
அப்போது உடனிருந்து ஊக்கம் தந்தவர்
ஆசான் மறைந்த மானமிகு.செல்லபெருமாள் அய்யா அவர்கள்
அதற்க கலி.பூங்குன்றனார்
அதற்கான தகுதியுடையவர்கள் வரும் போது கிடைக்கும் என மழுப்பலான பதிலை தந்தார் .. நிறைய பேர் இருக்கிறார்களே என்ற போது மௌனம் பதிலாக வந்தது அந்த திருக்குறள் மாநாட்டில் குறளின் அரபி மொழிப்பெயர்ப்பு
வெளியிடபட்டது நெஞ்சைவிட்டு அகலாத மகிழ்வான நிகழ்வு ..
..
திராவிட முன்னேற்ற கழகத்தில்
பேரறிஞர் அண்ணா, நாவலர், பேராசிரியர், துரைமுருகன் என செயலாளர்கள் தொடர்கிறார்கள்,பொருளாளர்களாக
மதியழகன்,எம்ஜிஆர்,பேராசிரியர்,சாதிக்பாட்சா,ஆற்காடுவீராசாமி தளபதியார்,துரைமுருகன், டி.ஆர்.பாலு என பொறுத்தமானவர்களை நம்மால் கண்டெடுக்க முடிகிறது ஆனால்
"பெண்கள்" இந்த பதவிகளை ஆளுமை செலுத்த வாய்ப்புகளை தராமலேயே தவிர்த்து வருகிறோம்.. நிறைய காரணங்களை தேடுகிறோம் எல்லா நேரங்களிலும் பணியாற்ற முடியாதென அபத்தங்களை பாதுகாப்பை வைத்திருக்கிறோம்.. வாய்ப்புகளை தந்து அவர்கள் திறமையை வெளிகொணர மறுப்பது திராவிட சித்தாந்ததிற்கு எதிரானது..
பெண்கள் உயர் பதவிகளில் வரவேண்டும் ஆணுக்கு பெண் சமம் என கொள்கையை பாட்டில் வைத்த கைதட்டி மகிழ்கிறோம்
பெரியாரின் கனவை நினைவாக்க முயன்றுக் கொண்டிருக்கும் நாம் திராவிட இயக்க பதவிகளிலும் நிகழ்த்தி முன்உதாரணம் ஆகவேண்டாமா..
..
தகுதியானர்கள் கிடைக்கவில்லை என்ற சப்பை வாதம் தேவையில்லை திராவிட இயக்க வரலாற்றை படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்ற பெயரில் என்னால் 10 பேரை அடையாளம் காட்டமுடியும்.. கடைசிவரை துணைப் பொதுசெயலாளர் பதவியிலேயே கடந்துவிட போகிறோமா.. அல்லது மகளிர் தலைவி என பாலின வேறுபாட்டை நாமும் தொடர்ந்து கடைப்பிடிக்க போகிறோமா .. அல்லது திட்டங்களுக்கு பெயர் சூட்டினோம் பெருந்தகையாளர்களை புகழ்ந்தோம், நலத்திட்டங்களை செய்தோம் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைத்தோமென நம்மை நாமே ஏமாற்றி காலம் கடத்த போகிறோமா.. பெண்களுக்கு சலுகை தந்தோமே என மகிழ போகிறோமா.. இயக்க செயல்பாடுகளில் உயர்பொறுப்புகளை தந்து உரிமையை நிலைநாட்ட வேண்டாமா..
..
"திராவிட மாடல்" புதிய வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் தலைவர் தளபதியார்
இயக்கத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே தலைவராக மதிக்கபடுகிறார்
The Leader of Tamil Nadu மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறார் .. மகளிர் என்ற குறுகிய நிலையிலிருந்து மாறும் காலம் வந்துவிட்டது ..
இயக்கங்களின் உயர் பொறுப்புகளிலே அமர்த்துவோம் புதியதொரு சமுதாயம் படைப்போம் ஏற்றதாழ்வற்ற பாலின பாகுபாடற்ற நிலை உருவாகும் போதே திராவிட சித்தாத்தத்தின் வெற்றி என பறைசாற்றமுடியும் ..
..
நம் தலைவர்
செய்வார்
செயல் தலைவர் தளபதியார்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
தமிழகம் கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் ..
..
மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது ..
பெண்கள் நாள் வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment