Wednesday, March 9, 2022

"தமிழ்நாடு அரசு” வாதத்தினை ஏற்று பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..
 இந்திய ஒன்றிய அரசு கடுமையாக எதிர்த்தும், பரோலில் நன்னடத்தையை கருத்தில் கொண்டும்,  தமிழக அரசு எழுவர் விடுதலை ஆவதை விரும்புகிறதென்பதை மேற்கோள்காட்டியும் பிணை வழங்கியிருக்கிறது ..
கூடவே ஆளுநர் காலதாமதபடுத்த அதிகாரம் இல்லை தனியாக முடிவெடுக்க கூடாது அமைச்சரவையின் தீர்மானத்தை உடன் பரிசீலித்திருக்கவேண்டும் என கோடுட்டுகாட்டி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் ..
..
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பேரறிவாளன் பரோலில் இருக்கிறார் எட்டுமாதங்கள் தொடர்ந்து பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு புதிய உதாரணம் படைத்திருக்கிறது .. ராஜீவ் கொலையில் நமக்கு உடன்பாடில்லை அதற்காக திமுக சூறையாடபட்டதும் தொடர்ந்து பாசிச சக்திகள் திமுக அதிகாரத்திற்கு வருவதை தடுக்க "புலிகள்தொடர்பு" என்று கதைகட்டியதும் அதனால் திமுக இழந்ததை விட தமிழ்நாடு இழந்தது அதிகம் 
..
பேரறிவாளன் நீண்ட சிறைவாசம் இளமையை இழந்து நோய்வாய்பட்டு பெற்றோர்களுக்கு கடமைகூட செய்யமுடியாமல், அவர்களுக்கு பாரமாக இருந்தது தான் மிச்சம்.. தூக்குதண்டனையை விட கொடுமையான சிறைத்தண்டனை காலம் மிகசிறந்த படிப்பினையை தந்திருக்கிறது .. இளைஞர்கள் வழிகேட்டில் செல்லாமல் மதம் சாதி இனம் மொழியென வெறிக்கொண்டு தவறான பாதையில் செல்லாமல் எதையும் ஜனநாயக முறைப்படி அணுகவேண்டும், சிறு தவறுகூட மிகப்பெரிய தண்டனையைதந்துவிடும் என பாடம் போதித்திருக்கிறது .. நீண்டநாள் சிறைவாசிகள் நிலைமை அது மதமேறிய செயல்களால் ஏற்பட்டிருந்தாலும் விளைவு கொடுமையான பாடத்தை நமக்கு கற்பிக்கும்..
..
பிணையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, இனியேனும் தமிழ் தேசியம் பேசும் போலிகளை நம்பாதீர்கள்.. இப்போது கூட திருமுருகன் போன்ற ஈழத்தை வைத்து வயிறுவளர்க்கும் அயோக்கிய கூட்டம் ஜாமீனின் வந்ததை மக்கள் போராட்டமென திசை திருப்ப முயல்கிறது கவனம் தேவை ..  வழக்கிலிருந்து முழுமையாக விடுதலையாகும் வரை போலிகளிடம் அடைக்கலமாகாமல் இழந்தை வாழ்வை மீட்க முயலுங்கள் .. காலம் முழுவதும் கண்ணீரோடு கடந்த தாயை உடனிருந்து கவனித்துக்கொள்ளுங்கள் .. அரசியல் கடந்து நிறைய இருக்கிறது வாழ என்பதை அறிந்து புதிய வாழ்க்கையை வாழ முயலுங்கள் ..தவறு செய்திருந்தாலும் இல்லையெனினும காலம் தந்த பாடம் வரலாற்றில் பலருக்கு நிறைய செய்தியை சொல்லும்.. 
புதியவாழ்வை தொடங்குங்கள் தோழரே..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment