Monday, February 28, 2022

தளபதி..
எங்களின் சுவாசம்
தமிழர்களின் முகவரி
தமிழ்ப் பண்பாட்டு கவசம் 
..
உழைப்பு உயர்வு தரும் 
படித்தும் கேட்டுமிருக்கிறோம் 
கண்டது உமை கண்டுதான் ..
எளியவரின் குரல் கேட்கும்
இதயமே..
அழுதவர் கண்ணீர் துடைக்கும் கரமே..
பாழாய்ப் போன பத்தாண்டின் 
இருள் களைய வந்த சூரிய ஒளி நீ..
பகைவருக்குள் அருளும் பேரரருள் நீ..
..
நையாண்டி செய்தோரை,
நகைத்து நக்கலடித்தோரை,
உன் பெரும் மௌனம் சாய்த்தது
உன் பதில் 
செயலில் என்பதறிந்து பதர்கள் 
தெறித்தோடுகின்றன..
முடியாதிவரால் என்று ஆருடம் சொன்னவர்கள்
பேரலையில் முழ்குதல் காண்தல் பேரழகு..
..
நேர்மையில் நின்றாய் 
பகைவரோ
நேரெதிர் நிற்பதற்கே நடுங்கிறார்
உண்மையும் நன்னெறியும் 
உயர்த்தும் என்பதை 
அறியாத அபலைகள் 
கலங்கி நிற்பதை காண இன்பம்
முடிந்ததென்றார்.. இனி,
முடியாதென்றார் 
ஆனால் உழைப்பு உயர்வுதருமென அறியாமல் போனார்..
..
எதிரிகள்,  இனபகைவர்கள்,
துரோகிகள்,
பலநாளாய் காத்திருந்த 
"நடுநிலைகள்" 
குதறதுடித்தவர்கள்
தலைவரின் நேர்மைகண்டும்
நெஞ்சுரம் கண்டு 
பகைமுடிக்கும் ஆற்றல்கண்டு
காலிழந்து வீழ்கின்றனர்
..
அகவை 69
தமிழகமே வாழ்த்துகிறது
வாழ்க!
எம்மான்
பனி நீக்கும் சூரியனே..
வாழ்க! பல்லாண்டு..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment