Wednesday, June 26, 2019
வேண்டும்..வேண்டும்
#என்ன_வேண்டும்..
நல் எண்ணம் வேண்டும்
ஆன்றோர்
சான்றோர்..
அறிவில் சிறந்தோர்
அறமுடையோர்..
நிழல் வேண்டும்..
..
அதிகம் பேசாத..
அளவு மீறாத..
சொல் வேண்டும்..
அகமும் புறமும்
நன்மையால்
நிறைதல் வேண்டும்..
..
அடுத்தவன் பசி
அறிதல் வேண்டும்..
இல்லாதோர்
யாசிக்கும் முன்
ஈகும் குணம் வேண்டும்..
..
மடமை நீங்கி
மதி பேசும் நிலைவேண்டும்..
அறிவின் சுடரொளியில்
அகம் காணவேண்டும் ..
..
பகையறிய வேண்டும்
போராடி வெல்ல
பயிற்சி வேண்டும்..
இடையிடையே தோல்வியும்..
இடைவிடாத முயற்சியும்
வேண்டும்.
..
நேர் நிற்கும்
பகைவர் வேண்டும்
நேரான வழியே
வேண்டும்..
..
கொஞ்சும் காதல்
கொஞ்சும் பொய்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் கலவி
வேண்டும் வேண்டும்..
..
புறம் சொல்லா ..
பிறர் பழி சொல்லா..
நிலை வேண்டும்..
..
நிறைய..வேண்டும்
நிறைய நிறைய அல்ல..
நிம்மதி தரும் நிலையே
வேண்டும்..
போதும் என்னும்
மனம் வேண்டும்
போதாது போதாது..
இன்னும் இன்னும்
அறிவு வேண்டும்..
..
மனதை அடக்கி
மமதை ஒடுக்கி
நன்மை பெருக்க
பயிற்சி வேண்டும்
..
அறிவின் சொல்லை
ஏற்கும் நிலை
எப்போதும் வேண்டும்..
..
இன்னும்
நிறைய.. வேண்டும்
அவையாவும் நல்லதாய்
வேண்டும்..
..
நிறைய..நிறைய
வேண்டாம்..
நிறைவான..
நேரான வழியில்
பொருள் வேண்டும்..
..
உழைப்பில் வரும்
உன்னதம் வேண்டும்..
உயர பறந்தாலும்
உண்மை மாறாது வேண்டும்.
..
அறம் தவறா
நெறி பிறழா..
நிலை வேண்டும்
இன்னும்..இன்னும்..
நல்லெண்ணம் ..
வேண்டும்..
நல் எண்ணம்..வேண்டும்..
..
#வேறென்ன_வேண்டும்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment