Wednesday, June 19, 2019

திராவிடம் வெல்லும்

நேற்று அடித்த பெருமழையின் ஈரக்காற்று இப்போதும் வீசுகிறது .. மலை உச்சியில் நின்று தூய பிராணவாயுவை சுவாசித்தைப்போல புத்துணர்ச்சி ..நெஞ்சு நிம்மதி அடைகிறது ..பெருங்கிழவனும் பேராசானும் முத்தமிழறிஞரும் விட்டு சென்றது பெரும் திராவிட உணர்வாளர் படை என்ற நிம்மதி முகத்தில் தெரிகிறது இடையில் சில அடிமைகள் பியூட்டிபுல் பாடி அசிங்கபட்டு நின்ற நிமிடங்கள் நெஞ்சில் வந்து போனாலும் எதிரிகளே இதுவரை நீர் பார்த்தது எங்களின் பிழைகள் .. இனி வருவதோ மானம்கொள் மறத்தமிழர் கூட்டம்.. எதற்கும் அஞ்சா திராவிடர் படை தளபதியின் வழிகாட்டலில் திமிரி எழும் தீங்கு கண்டால் எனும் போது எத்தனை ஆனந்தம்.. .. சிலர் தமிழ்வாழ்க! பெரியார் வாழ்க!! கலைஞர் வாழ்க!!! திராவிடம் வெல்க!!! என்றதெல்லாம் அவைக்குறிப்பில் இடம்பெறாதென புளங்காகிதம் அடைகிறார்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை நூற்றாண்டு கண்ட இயக்கத்தை நடத்தும் எங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்கள் கதறுனீர்கள் அல்லவா அதை உலகமே தமிழனின் தன்மானம் கண்டு வியந்தது பார்த்தீரா .. அது தான் வேண்டும் ஆரிய படைக்கெதிராக .. பாஜகவின் பாசிச பார்பன சித்தாந்தத்திற்கெதிராக .. ஒரே ஒரு படை உண்டு அது திராவிடர்களெனும் மண்ணின் மைந்தர்கள் கூட்டமென அறிந்துக்கொண்டீர்கள் அல்லவா .. எதற்கெடுத்தாலும் தலையாட்டு குல கோடாரிகள் இல்லை.. மானம் ஒன்றே பெரிதென கொள்ளும் மாந்தழிழர் கூட்டம், சுயமரியாதை சுடரொளிகள், எதை எப்படி எங்ஙனம் எதைக்கொண்டு முடிப்பதென எங்கள் கிழவன் எங்களை பயிற்றுவித்திருக்கிறான் .. அதை செயலிலும் செய்துகாட்டி உலகமே வியக்கும் ஆற்றலோடு பயணித்த கலைஞரின் "பயமறியாத" தம்பிகள் இனியும் பார்க்கதான் போகிறீர்கள் .. தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக .. இந்த மண்ணின் மொழியை .. பன்முகதன்மையும் பழமையும் இலக்கண செழுமையும் நல் இலக்கியமும் கொண்ட உலகின் மூத்த மொழியை அறியணையேற்றுவரை போராடுவோம் இந்திய அரசின் அங்கரீத்த மொழியாக தமிழை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டமென சொல்லிவிட்டு செய்வோம் .. .. தமிழ் வாழ்க என்றால் பார்பனன் பதறகிறான் அது நமக்கு புரிகிறது .. அவன் எப்போதுமே தமிழோடு பகை கொண்டே நடப்பவர்கள் தங்களையும் தமிழர்களென சொல்லிக்கொண்டே சமஸ்கிருதத்தை தமிழோடு இணைத்து "ஜலமென" கதைப்பவர்கள் தமிழை நீச பாஷை என சொல்லி செத்ததை (சமஸ்கிருதத்தை) பந்தியில் வைக்க முனைபவர்கள் திராவிட கலைச்சாரத்தை இந்த மண்ணின் கலைகளை இசையை, பண்பாட்டை மறுதலித்து தங்கள் கலாச்சாரத்தை புகுத்த .. எண்ணுகிறவர்கள்.. எல்லா நிலையிலும் தமிழனின் பண்பாட்டு தொன்மையை அழிக்க நினைக்கிற கூட்டம் அது ..ஆனால் தமிழைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நாதாரிகளும் பதறுகிறார்கள் .. அரைகுறை தெளிவும் பாசிசத்தின் பொருளுக்கு மயங்கி பதவி பணமென திரியும் மூடர்களே பெரியாரை படியுங்கள் தெளிவு பெறுவீர்கள் .. கலைஞரை அண்ணாவை அறிந்தால் திராவிடத்தால் கிடைத்த பாதுகாப்பு புரியும்.. இந்த மண்ணை காக்க .. எம் இனத்தை மொழியை உரிமையை மானத்தை காக்க திராவிடமே அரணாய் திகழும் .. திராவிடம் வெல்லும் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment