Sunday, June 23, 2019

சுமப்போம் சிலகாலம்

காங்கிரஸுக்கு இன்னமும் எத்தனை நாட்கள் பல்லக்கு தூக்குவது .. திமுக அதிக இடங்களில் நிற்க வேண்டும் கே.என்.நேரு.. நேருவின் கூற்றில் ஒரு பகுதி வரை உடன்படுகிறேன் .. வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் என்றில்லை மற்ற கூட்டணி கட்சியினரும் ஏதோ தங்களால் மட்டுமே தங்களின் தனி செல்வாக்கால் மட்டுமே வென்றதாக மார்தட்டுவதும் திமுகவின் கொள்கைக்கெதிராக ஒருவகையில் திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதை வாடிக்கையாக்குகிறார்கள் .. தேர்தல் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்தபோன ஒன்று வெற்றி பெறும்வரை தான் திமுகவின் தயவு தேவை என்று செயல்படுவோரின் சுமையை ஏன் தொடர்ந்து சுமக்கவேண்டும் என்ற கேள்வியில் பொருள் இருக்கிறது. திருநாவுகரசர் தன் சொந்த செல்வாக்கில் வென்றதாக சொல்கிறார் அவரின் செல்வாக்கெல்லாம் பழைய கதை என்பதை மறந்து பேசுகிறார் பாஜக உட்பட பலகட்சிகளில் பயணித்து சொந்த ஊரில் கூட மதிப்பிழந்த நிலையில் தான் மீண்டும்,வாய்ப்பு கிடைத்ததை மறந்து பேசுகிறார் வெற்றி பெறுகிற அளவு செல்வாக்கிருக்கிறவர் முன்பே திமுகவின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லியிருக்கலாம் இந்த முறை மிக சாதூர்யமாக கூட்டணி அமைத்து அதை மிக சரியான பாதையில் கொண்டு சென்று வெற்றிபெற வைத்ததில் பெரும்பங்கு திமுகவிற்கு அதன் தலைவருக்கு உண்டு .. .. இந்த முறை உள்ளாட்சியில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் அதிக இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் அது கட்டாயம் ஒற்றை இலக்கில் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் போதும் பிற கட்சிகளுக்கும் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை போதும் இருநூறுக்கும் சற்று குறைவான இடங்கள் அல்லது இருநூறு இடங்களில் நிற்க வேண்டும் அதிக எண்ணிக்கையில் விட்டுதருவது திமுகவின் பலத்தை குறைக்கவே உதவும் நேருவின் கருத்தில் உடன்பட வேண்டியிருக்கிறது .. ஐந்து தொகுதிக்கு மாவட்ட செயலாளர் என அவர் தன்னை குறுக்கி கொண்டாலும் ஒட்டுமொத்த திமுகவினரின் குரலை தான் பதிவு செய்திருக்கிறார்.. வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் தகுதிக்கு மீறி வாரி வழங்குவதென்பது நமக்கு நாமே குழிப்பறிப்பதை போன்றது .. தமிழகத்தில் சில கட்சிகள் லெட்டர்பேட் கட்சியை போல சுருங்கிவிட்டன .. சில வலைதள கட்சியை போல ஊடக தொடர்பில் மட்டுமே உள்ளன கம்யூனிஸ்ட்கள் நிலை பெரியளவில் தாக்கத்தை தரகூடியவையாக இல்லை சிறுத்தைகள் உட்பட பெரிய பலமென்று சொல்லிவிடமுடியாது ஆனாலும் சிறியளவில் அவர்கள் பங்கிருப்பதை மறுக்க இயலாது .. கலைஞர் சொல்வார் இரண்டு விழுக்காடு கூட இல்லாதவர்கள் பெரியளவில் பேரம் பேசுவார்கள் ஊடகங்கள் அதை பெரிதாக்கும் அதே வேளை அவர்களின் சமூகத்தையும் அரவணைக்கும் பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது .. கம்யூனிஸ்ட்களின் வெற்றிபெற்று வரவேண்டியது மிக அவசியம் என்பார் .. .. நேரு சொன்னதைப் போல முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைக்கு உண்டு இன்றைய சூழலில் பாசிசத்தை வேரறுக்க .. காங்கிரஸை சற்று சுமக்கதான் வேண்டும் .. திமுக பிரிந்து அதிமுக உதயமானது ஒருவகையில் நல்லது தான் .. எதிரான இடத்தில் வேறு யாரும் வந்துவிடாமல் பிரதான எதிரிகள் அந்த இடத்தை நிரப்பாமல் நம்ம பங்காளியே அந்த இடத்தை நிரப்புவது மகிழ்ச்சி தான் என்றார் கலைஞர் ..ஆம் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸை அழித்து அந்த இடத்தில் பார்பன ஜனதா வந்திருக்கும் .. அதே நோக்கில் பார்த்தால் காங்கிரஸை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது பாசிச பாஜகவிற்கு இந்த மண்ணில் இடமளிக்காமல் இருக்க .. ஆசிரியர் வீரமணி சசிகலாவிற்கு ஆதரவாக பேசிய போது சிலர் கடிந்து கொண்டோம் ..பாசிசத்தை விரட்ட வேண்டிய பெரும் பொறுப்பை உணராமல் .. அது எந்தளவு தீங்கை தந்திருக்கிறதென பார்க்க முடிகிறது .. ஆம் .. சில காலம் காங்கிரஸை சுமப்போம் .. பாஜகவை பார்பனீயத்தை பாசிதத்தை வேரறுக்கும் வரை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment