Thursday, June 20, 2019

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி

இந்தியாவிற்கு சுதந்திரமே வேண்டாமென்ற சொன்ன பெரியாரை பெயரை உச்சரித்ததற்காக கங்கை நீரை கொண்டு நாடாளுமன்றத்தை கழுவவேண்டும். அர்ஜூன் சம்பத் கங்கையை சுத்தபடுத்த சில ஆயிரம் கோடி செலவு செய்தும் (செய்தார்களா என்பது வேறு விடயம்): இன்னமும் பிணங்களும் பிணந்திண்ணிகளின் கழிவுகளுமாக தான் இருக்கிறது கங்கை நீரை கொண்டுவந்து நாடாளுமன்றத்தை அசுத்தபடுத்தாமல் இருந்தாலே நல்லது .. .. பெரியார் ஏன் விடுதலை நாளை கறுப்பு நாள் என்றார் இன்னமும் சனாதனவாதிகளால் .. பாசிச பார்பன வர்க்கத்தால் அடிமைபட்டுகிடக்கிறவனின் .. விடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்ததாக சொல்வது ஏமாற்றுவேலை என்பதால் சொன்னார் எல்லோருக்கும் சமஉரிமை பெறாத போது ஏற்றதாழ்வாய் நீதி.. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே எல்லா பலனையும் அனுபவிக்கும் போது கல்வி வேலைவாய்ப்பில் பார்பனர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் சமமான நீதி கிடைக்காதென்பதால் தாழ்த்தபட்டவருக்கும் பிற்படுத்தபட்டவருக்கும் இன்னமும் உரிமைகள் கிடைக்காத போது பெறும் விடுதலை பயனளிக்காதென்பதால் கறுப்பு தினம் என்றார்.. இன்னும் கொஞ்சகாலம் ஆங்கிலேயனிடத்தில் ஆட்சி இருந்தால் எல்லோருக்கும் சமஉரிமையை நிலைநாட்டி விடலாம் என்ற மானுடபற்றால் சொன்னார் .. இந்திய நாடாளுமன்றத்தில் அவர் பெயரை உச்சரிக்காமல் வேறு யார் பெயரை உச்சரிப்பது .. .. விடுதலை போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென்றும் ஏன் உங்கள் சக்தியை வீணாக்குகிறீர்கள் முஸ்லிம்கள் கிருஸ்துவர்களுக்கெதிராக போராடவேண்டும் ஆங்கிலேயே ஆட்சி எதிராக அல்ல என்று சொன்ன சர்வாக்கர் என்ற தேசதுரோகியை .. நான் வேடிக்கை பார்க்கவந்தேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மண்டியிட்ட "பாரத ரத்னா" வை (வாஜ்பாய்) ஆங்கிலேயனுக்கு பல்வேறு இழிவான காரியங்களை செய்து பயன்பெற்ற வர்க்கத்தினரை.. வீட்டு பெண்களை அம்மணமாய் ஓடவிட்டு ஊர்களை எழுதி வாங்கிய (கு.கா.பாளையம்) ஆச்சார்யர்களை எல்லாம் கொண்டாடுகிற தேசத்தில்... நாட்டின் மீதும் நாட்டின் மக்கள் மீதும் அவர்கள் உயர்வு பெற வேண்டுமென சதா சிந்தித்த உயர்மகன் பெரியார் .. எனக்கு மதப் பற்றோ சாதிப்பற்றோ இனப்பற்றோ மொழி பற்றோ இல்லை எனக்கிருப்பதெல்லாம் மானுடப்பற்றுதான் என்ற பெருமகன் பெரியாரை கொண்டாடாமல் வேறு யாரை கொண்டாடுவது .. பெரியார் பெயரை உச்சரிக்காமல் வேறு யாருடைய பெயரை உச்சரிப்பது .. .. உண்மையில் அர்ஜூன் போன்றவர்கள் சொரணையோடு போராடவேண்டும் யாருக்கும் எதற்கும் அடிமையல்ல நீ என புரியவைத்தவர் இன்றைக்கு காஞ்சி சங்காசாரியாரை (கும்பகோணம் மடம் என்பது தான் சரி- சங்காராச்சாரி அல்ல) நீ போய் பார்க்க முடிகிறதே .. இதுவே பூரி சங்கராச்சாரியரை பார்த்துவிட முடியுமா உம்மால்.. மகாராஷ்ட்ராவில் குண்டியில் சுடுதண்ணீர்தான் வரும்.. நீயெல்லாம் இப்படி பேசுவதற்கு உரிமையை பெற்று தந்தவர் பெரியார் பிராமணீயத்தை உடைத்து உன்னைப் போன்றோரை சுயமரியாதையோடு நடமாடவிட்டவர் இன்றைக்கு வாய்க்குவந்ததை எல்லாம் பேசி திரிகிறீர்களே அந்த கருத்துரிமையை பெற்று தந்ததும் பெரியார்தான் .. சுவாமி என கக்த்தில் வேட்டியோடும் கையில் செருப்பை சுமந்து நின்ற உன்னை மரியாதையோடு நடத்துகிறார்களே .. அதற்கெல்லாம் காரணம் இந்த கிழவன் தான்.. இந்த மண்ணை இந்த மக்களை நேசித்தவர் பெரியார் .. அனைவருக்கும் சமமான நீதி, உரிமை, கல்வி வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டுமென பாடுபட்ட .. தொலைநோக்கோடு கடமையாற்றிய பேராசான் பெரியாரை பற்றி பேசாமல் யாரை பற்றி பேசமுடியும் .. நாடாளுமன்ற மைய்ய மண்டபத்திற்கே பெரியாரின் பெயரை தான் வைக்கவேண்டும்.. நிச்சயம் ஒருநாள் அது நடந்தேறும்.. வடக்கிலும் மேற்கிலும் பெரியார் பேச தொடங்கியிருக்கிறார் .. எச்சரிக்கை வெத்துவேட்டுகளே வீழ்ந்து போவீர்கள் .. சனாதனம் வீழும் சமத்துவமே வெல்லும்.. .. பெரியார் வாழ்க! அண்ணா வாழ்க!! கலைஞர் வாழ்க!!! தமிழ் வாழ்க!!!... .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment