Tuesday, June 25, 2019

திமுக எம்பிக்கள்

பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார் திமுக எம்பிக்கள் தொடக்கமே நல்லதாய் .. எதிரிகளுக்கு தீயென எரிவது தெரிகிறது .. மாநிலங்களவையில் நேற்று திருச்சி.சிவா நீட் தேர்விற்கெதிராக கிராமபுற மாணவர்களுக்கெதிரானது என ,நீட் கோட்சிங் சென்டரில் 2 லட்சம் பணம் செலுத்தி படிக்கவேண்டியிருக்கிறது நாடெங்கிலும் உள்ள 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவ படிப்புகளுக்காக பலகோடி கணக்கில் வியாபாரம் நடக்கிறது பணம் உள்ளவன் மட்டுமே இனி மருத்துவ நுழைவு தேர்வையே எழுத முடியும் என்கிற நிலை ஆபத்தானது ..அதோடு சட்டமன்றத்தில் ஒருமனதாக எடுக்கபட்ட தீர்மானத்தில் அடிப்படையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் மறுப்பது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என பேசினார் .. மக்களவையில் டி.ஆர்.பாலு இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட நுழைவு தேர்வை ரத்தாக்கியதை குறிப்பிட்டு பேசினார் .. இன்றைய தினம் தண்ணீர் பஞ்சத்தை குறித்து பேசும் போது திமுக கொண்டுவந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது தமிழக அதிமுக அரசு ஊழல் அரசு அதற்கு துணை போகிறது மத்திய பாஜக அரசு என்றவுடன் பாஜகவினருக்கு அடியெல்லாம் எரிவதை காண முடிந்தது .. .. மாறனின் இன்றைய பேச்சு வரலாறு குறித்துக்கொள்ளும் எதற்காக இவருக்கெல்லாம் தொகுதி ஒதுக்கவேண்டுமென சிலநேரம் நான் எண்ணியதுண்டு இப்போது இவரின் பேச்சு நம்பிக்கையை தருகிறது இன்னும் நிறைய சீற்றங்களை பாஜக காண வேண்டியிருக்கும் அறசீற்றமாய் கலைஞரின் அடலேறுகள் அணிவகுத்திருக்கிறார்கள் தலையாட்டிகளையே கண்ட பாஜகவிற்கு கொள்கையாளர்களை தன்மான சுடரொளிகளை எதற்கும் அஞ்சா திராவிட திமிர்களை காணும் போது எரியதான் செய்யும் .. தமிழகமும் இந்தியாவில் தானே இருக்கிறது என்ற பேச்சு பொருள் பொதிந்தது .. துக்ளக்கில் கூட குருமூர்த்தி பெரியார் பெயரை நாடாளுமன்றத்திலே பேச தொடங்கியிருப்பது கண்டு பொசுங்கியிருக்கிறார் பெரியாரை எதிர்த்தும் குரல்கள் என்ன செய்துவிட்டாரென கேள்வி எழுந்திருப்பதாக புளங்காகிதம் அடைகிறார்.. பெரியார் எனும் அறிவின் சுடரொளியில் எம் மக்கள் தெளிவில் இருப்பதால் தான் இன்னமும் எகத்தாளம் பேசிவிட்டு நடமாடமுடிகிறது.. இல்லையெனில் வடமாநிலங்களை போல கட்டிவைத்து உதைக்கிற காட்டுமிராண்டித்தனம் வந்திருக்கும் .. கருத்துரிமைக்கு காவலாய் இருப்பதால் தான் கண்டதையும் பேசமுடிகிறது .. .. அதிமுக அரசை ஊழல் அரசென்று 2016 ல் பாஜகவின் அமிர்தா ஷா சொன்னதை தான் தயாநிதி சொல்கிறார் .. அதிமுகவை சொன்னால் பாஜக பதறுகிறது ஊழலுக்கு துணை போகிற கேடுகெட்ட நிலையை இந்த தலையாட்டிகளை வைத்துதான் பார்பனர்களை உயரத்திற்கு கொண்டுவர முடியுமென்பதால் இவர்கள் பதறுகிறார்கள் அதிமுக ஆட்சியில் இருக்கும்வரை தான் நினைத்ததை சாதித்து தமிழர்களுக்கு தமிழ் மண்ணிற்கெதிராக செயல்பட முடியும்.. இதுவரை நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஜால்ரா போடுகிற கோழைகளை தான் கண்டிருக்கிறார்கள் இப்போதுதான் சரியான எதிரியை .. அறிவுக்கொண்டு வாதிடும் திணறடிக்கும் ஆளுமைகளை பார்க்கிறார்கள் .. இன்னும் நிறைய இருக்கிறது விடுவாதாயில்லை.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment