Tuesday, June 11, 2019
காதல்
புரிகிறதா.
என் பேசும் விழியின்
பேசாமொழி..
உனக்கு புரிகிறதா..
கண்களில் காணும்
காதல் பொய்..
கடைவிழி தேடும்..
காமம் பொய்..
காந்த விழிசொல்லும்
கவிதை பொய்..
கள்ளத்தனமாய்..
நீ..
மெல்ல சொல்லும்..
எல்லாம் பொய்..
..
அன்பு வேண்டுமா..
ஆசை வார்த்தையை குறை
அடுக்கடுக்காய்
மாயமொழியின்
உளறலை விடு..
கண்ணி வைத்து
எனை கவிழ்க்கும்
கடைவழியை அடை..
..
அன்பு..
இதயத்தில்
கனிந்ததாய் வேண்டும்
இதழ் வழி வரும்
காய்ந்த மலராய் அல்ல..
..
காதல்..
காதலாய் வேண்டும்..
..
என்ன சொல்லி விட்டேன்
எழுந்து செல்கிறாய்..
..
நியாயமா
பேசவந்ததை
பேசாமலேயே
போகிறாய்..
..
உன் உதடுவரை
வந்த வார்த்தை
மொழியாய் விழாமல்
மௌனிதமாய்
போனதேன்..
..
ஏதேனும்
எதைப்பற்றியேனும்..
எதுவாகினும்..
அல்லது
பொய்யேனும்
பேசியிருக்கலாம்..
..
இதமாய்
இல்லையெனினும்
கொஞ்சம்
கடுத்த வரிகளிலாயினும்
ஏதேனும்
சொல்லி இருக்கலாம்....
..
எனக்கு
பிடிக்காத ..
பொய்யர்கள் மொழியில்
புராண கதையேனும்
சொல்லியிருக்கலாம்..
..
ஏதேனும்...
அருகில் அமர்ந்து
ஆசைமொழி..பேசி
அர்த்தமற்ற சிரிப்பை
அழகாக தந்திருக்கலாம் ..
..
//
என்ன இருக்கிறது
பேசயென்கிறாய்..
அதுவும் சரிதான்..
..
நீயும் நானும்
தனிமையிலெனில்..
பேச என்ன இருக்கிறது..
..
இதயம்
பேசும் மொழி..
வார்த்தையாய்
வந்தால்..
#மெய்யிழக்கும்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment