Friday, June 7, 2019

கலைஞர்96

இன்று .. குவைத் பன்னாட்டு திமுக நடத்தும் கலைஞர் 96 .. செம்மொழிநாள் .. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் விழாவில் .. Banu Iqbal பானு இக்பால் .. மாண்பிமை நாசர் போன்ற ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள் அவர்கள் முன் .. நானும் சிறிதாய் முணுமுணுக்க வருகிறேன் கவிதை இதோ.. இது கவிதையில்லையெனினும் கவலையில்லை .. பேராற்றல் கொண்டவர்கள் முன் சிறிதாயேனும் பங்கேற்பதில் மகிழ்ச்சி கலைஞர் அரங்கில் அரங்கேற்றுவதற்கு முன் இதோ.. இங்கே.. ********************************* #கலைஞர்கருணாநிதி.. .. தமிழகத்தின் தாரக மந்திரம் எல்லா பண்ணைகளிலும் விளைச்சல் தரும் வீரியவிதை எதிரிகளின் ஜீவாதாரம் உரக்க உச்சரிக்கவில்லையெனினும் உதட்டால் முணுமுணுக்கவாவது செய்கிறார்கள் மவுனமாய் மனதுக்குள் திரும்ப திரும்ப உச்சரிக்கிறார்கள் உச்சரித்தால் சிலருக்கு சோர்வு போய் சோறு கிடைக்கிறது.. உரக்க உச்சரித்தவனும் உள்ளத்தில் பூஜித்தவனும் கொடூரமாய் கொரித்து கொட்டியவனும்.. யாராயினும் சோறு உண்டு .. .. தமிழகத்தின் கலை இலக்கியத்தில் அரசியலில் .. ஆன்றோர் சபையில்.. கல்வியாளர்கள் .. கருத்தாளர்கள்.. மறுப்பாளர்கள்.. மதியாளர்கள்.. மகான்மார்..மத்தியில் இப்பெயர் பிரசித்தம் .. .. இந்த கிழட்டு சூரியனின் சுழற்சிதான்.. வக்கற்றவனுக்கு. அரசியலில் வக்கற்றவனுக்கும் வாழ்வு தந்தது .. எத்தனை அம்புகள் அத்தனையும் மாலையாய் கழுத்தில் விழுகிறது பாவம் எதிரிகள் சிலர் மூர்ச்சையாகிறார்கள் .. அரைகுறைகள்.. அறியாதுபோய்.. ஆணியடிக்க நினைக்கிறார்கள் அடித்தபிறகுதான்.. அவர்களுக்கே புரிகிறது.. தன் கை மாட்டிக்கொண்டது.. பாவம் அறிவிலிகள் உணர்ச்சியின்.. கொந்தளிப்பில்.. வாய் உளறுகிறார்கள் .. எங்கிருந்து வந்தது இவ்வளவும் என்கிறார்கள் மந்திரிகுமாரியிலேயே.. சில ஆயிரங்களை கண்டவர்.. விமர்சனம் செய்வோர் அறிக திருட்டுரயிலேறி வந்தாய் சொல்கிறீர்.. கலைஞரே சொல்கிறார்.. பக்கத்தில் என்னோடு பயணம் செய்தவன் போல் பேசுகிறார் பட்டாமிராசு இல்லையென்றாலும் பரதேசியில்லையென்றார் போதிய வருவாய் இருந்ததென்றார் .. தமிழகம்... கலைஞர் பெயரை உச்சரிக்காமல் விடிவதேயில்லை.. மறைந்ததாய் பொய் சொல்கிறார்கள் தினம் தினம் விடியல் தருவதே இவர் தானே இவர் பெயரைதான் .. இந்தியாவே உச்சரிக்கிறது .. தொலைநோக்கோடு தீட்டியதெல்லாம் இந்தியாவே கடைபிடிக்கிறது அரசியலின் அரிச்சுவடியும் அரசியல் இலக்கணமும் இவன்தான்.. புதியதொரு இந்தியாவை கட்டமைப்பதாய் சொல்வோரே .. கலைஞர் 70 களில் கட்டமைத்ததைதான் இன்று .. கடைபிடிக்கிறீர் .. கலைஞரே.. எங்கள் கவியே காவியமே .. எங்கள் மூச்சே திராவிடப் பெருவுடையே நவீன தமிழகத்தின் தந்தையே சமூகநீதியின் போர்வீரனே.. பெரியாரின் பெருஞ்சீடனே.. பேரறிஞரின் தம்பியே எம் தலைவ.. உன்புகழ் நிலைத்துநிற்கும் உன்னைப்போலொருவனை தமிழகம் கண்டதில்லை தொட்டதெல்லாம் தூயபார்வையும் தொலைநோக்கும் பகுத்தறிவும் பண்பாட்டு சிறப்பும் கருணையும் கருத்தும் கண்ணியமும் ஏழைகள்பால் கவலையும் விளிம்பில் நிற்போரை காத்துநிற்கும் அரணும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும் உரிமையென ஓயாது உழைத்தமையும் .. ஒவ்வொரு தனிமனிதனும் உன்னால் உயர்ந்தான் உன் உழைப்பால் உன் திறனால் உன் திட்டத்தால் உயர்ந்தான் நீரின்றி உலகில்லையென்றார் நீ யின்றி தமிழகத்தின் உயர்வில்லை பேராற்றலே பேரன்பே.. பேரருளே .. வாழ்க ..நீ.. உன் புகழ் வாழ்க!! .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment