Saturday, June 1, 2019

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு

இந்தி திணிப்பு .. எந்தமொழி மீதும் வெறுப்பில்லை ஆனால் எம் மீது திணிக்கபட்டால் எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை திருச்சி சிவா சொன்னதைப்போல கந்தக கிடங்கில் தீவைக்க ஆசைபடுகிறது எரித்து சாம்பலாக்கிவிடும் எச்சரிர்கை .. மத்திய அரசு பதவியேற்று 48 மணிநேரம் திகைவதற்குள் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது கேபினெட் கூட்டம் முறைப்படி கூடாதபோது எங்கிருந்து தயாரிக்கபட்டது இந்த கொள்கையென அறிவோம் தென்னகம் குறிப்பாக தமிழகம் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளாத போது .. அடிமை அதிமுக அரசை வைத்து காரியம் சாதித்துக்கொள்ளலாமென பாசிச பாஜக நினைக்குமேயானால் எந்த விலைக்கொடுத்தும் திமுக அதை தடுக்கும் .. .. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் அப்போதுதான் தான்தோன்றிதனமாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் திணிக்கபடும் திட்டங்களும் கொள்கைகளும் தடைய முடியும் ..எதையும் யார் மீதும் திணிப்பதென்பது பாசிசம் .. என்ன உணவு உண்ணவேண்டுமென சொல்வதும் எந்த மொழியை கற்கவேண்டுமென சொல்வதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அதே போல் தமிழை பிற மொழி பேசுவோரிடம் திணித்தாலும் அப்போதும் எதிர்ப்போம் .. மொழி அரசியல் செய்வதாக சில அறிவிலிகள் கூச்சலிடுகிறார்கள் நிச்சயமாக இல்லை...எம் மொழியை இரண்டாந்தரமாக்க முயலும் முயற்சியை முலையிலேயே கிள்ளியெறிகிறோம்,.. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது கூட ஊடகங்கள் கட்டியவை உண்மையில் "இந்தி திணிப்பு எதிர்ப்பு" போராட்டமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கவேண்டும் .. .. நாடாளுமன்றம் கூடியதுமே திமுக எம்பிகளுக்கு வேலை வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்புவதோடு சபை நடத்தவிடகூடாது எதிரியே தீர்மானிக்கிறான் எதை ஆயுதமாக்கவேண்டுமென்று .. மொழிப்போர் என்பதை விட மொழி திணிப்பு போர் என பிரகடனம் செய்து படையோட்டம் நடத்த வேண்டும் .. தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது ஹிப்ளு மொழி இலக்கணத்தை கொண்ட மொழி 1840 களில் உருதுவிற்கெதிராக வடிவமைக்க பட்ட மொழி .. 1920 கூட அரசாங்கம் வெளியிட்ட ரூபாய் தாளில் இல்லாத மொழி நம் மீது திணித்து .. பல்லாயிரம் ஆண்டாய் இலக்கணம் மாறாமல் .. பன்மொழிகளை கிளை மொழியாய் கொண்ட தாய்மொழி தமிழ் .. "உண்மையில் மொழிகளின் தாய்" எங்கள் தமிழ் மொழி .. உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுதந்த பழைமையான மொழி இருக்க எதற்கு இந்தி .. பன்மொழி பேசும் நாட்டில் ஒரு மொழியை முன்னெடுப்பது திணிப்பதென்பது சிதைவை ஏற்படுத்தும் .. மராட்டியர்கள் மீது திணிக்கபட்ட இந்து மொழியால் தங்கள் மொழி வளத்தை இழந்தார்கள் அரசில் அலுவல்களில் மராட்டிய மொழியை திரும்பவும் கொண்டுவர போராட வேண்டியிருந்தது அதே நிலை பிற மாநிலங்களுக்கும் வரலாம் எசசரிக்கை வரும்முன் காப்போம் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment