Tuesday, June 18, 2019
தமிழ் வெல்லும்
ராமசாமி பேரை கேட்டால் குலை நடுங்குகிறதா ..
நடுங்கும்.. தமிழ்நாடு என் நாடு தமிழ்வாழ்க என மிக பெரிய ஜனநாயக அரங்கில் பாசிசம் நடுங்க எங்களால் உரத்த குரலில் உறுதிமொழி ஏற்கிறோமே இப்போது புரிந்திருக்குமே வந்தவர்கள்
யாரென்று .. பெரியாரின் பேரப்பிள்ளைகள் பெரும்படையாய் வந்திருக்கிறார்கள் .. தமிழ் நை போலே .. நை போலோ என கதறுவது கேட்கிறது .. பெரியார் வாழ்க என்றவுடன் அதுவரை பாரத் மாதாக்கி ஜே சொன்னவன் ஜெய் ராம் என்கிறான்
சங்கிகளே ..ஜெய் ராம் என்றாலும் அது ராமசாமி எனும் பெரியார் தான் .. பொருள் அதுதான்
..
கலைஞர் வாழ்க தமிழ் வாழ்க பெரியார் வாழ்க என வீர முழக்கமிட்டு எங்கள் வீரர்படை கால் பதித்திருக்கிறது .. சிலர் ஏன் அண்ணா பெயரை சொல்லவில்லை என்கிறார்கள் .. பெரியார் பெயரிலேயே எல்லாம் அடக்கம் இன்றைக்கும் தமிழகத்தை பெருங்கிழவன் தான் வழிநடத்துகிறான் .. யார் பெயரை உச்சரித்தால் எதிரி குலை நடுங்குகிறானோ அவனே என் இனத்தின் தலைவன் .. தர்மபுரி டாக்டர் செந்தில் குமார் கருஞ்சட்டையோடு வந்து பெரியார் வாழ்க என்ற போது உண்மையில் கண்களில் நீர் கசிந்தது
..
சரியான நபர்களை தேர்வு செய்திருக்கிறார் தலைவர் தளபதியென வியந்தேன் ..
சரியான காலகட்டத்தில் மிக சரியான நபர்கள் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி மிக இக்கட்டான பாசிசத்தின் பிடியில் ஜனநாயகம் சிக்குண்டு மூர்ச்சையாகி கிடக்கிற சூழலில் ஜனநாயக பெருவெளியின் ஒளிகீற்று நாடாளுமன்றத்தில் படர்கிறது .. எதையும் யாருடைய அனுமதியின்றியும் செய்து முடித்துவிடலாமென்ற எண்ணம் இனி ஈடேறாது .. தமிழகம் இந்தியாவின் கழிவை சுமப்பதற்கான நிலம் அல்ல.. இது அறிவின் சுடரொளியில் ஜொலிக்கும் தேசம் இங்கே அறிவாசான் பெரியாரின் கைத்தடி உண்டு .. பேரறிஞர் போட்ட பாதை உண்டு பேரருளாளன் நடத்திகாட்டிய ஆற்றல் மிகு அடலேறுகளின் படை உண்டு வழிநடத்த.. படையோட்டம் நடத்த தளபதி உண்டு .. கண்ணயர்வின் கதகதப்பில் சிலர் ஊடுருவியதும் அதுவே பூட்டியிட்ட சனாதனத்திற்கு திறவுகோலாய் போனதும் கண்டு எம் மக்கள் யாரை அனுப்பினால் இந்த சனாதனவாதிகளின் கொட்டத்தை அடக்கமுடியுமென அறிந்து அனுப்பியிருக்கிறார்கள் .. ஆரம்பமே புரிந்திருக்குமே ..
..
சிலையை உடைப்போம் என்றவர்களுக்கு .. அவர்கள் பெரும்பான்மை சபையில் சென்று வந்துட்டேன்னு சொல்லு எனும் தைரியம் பெரியாருக்கு மட்டுமே உண்டு. சிலை வெறும் கல் யாருமில்லா வேளையில் உடைக்கலாம் சிதைக்கலாம் ஆனால் எங்கள் சித்தாந்தத்தை வெல்லவோ சிதைக்கவோ முடியாது ..மீறினால் திமிரி எழுந்து அடிக்கும் .. தமிழ் வாழ்க என்றால் உன் தாய் மொழியை வாழ்க என்று சொல் .. உன் மொழிக்கு அங்கீகாரம் இல்லையென்றால் தனியே அழு.. தமிழ் எங்கள் உணர்வோடு உயிரோடு கலந்த மொழி .. பாரத் மாதாக்கி ஜே என்பதலிருந்தே .. தமிழர்கள் இந்தியர்கள் அல்ல அவர்கள் தனி இனம் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் சங்கிகள் ..
முதல்நாளே கதறவிட்டிருக்கிறது தமிழகம் .. ஒரு சொரணையற்ற பிண்டம் வந்து தமிழ்வாழ்க சொல்லாமல் சென்றிருக்கிறது தேனி நிலம் இன்று வெட்கபட்டுநிற்கிறது ..
உலகளவில் #தமிழ்_வாழ்க ஒலி கேட்கிறது ..
நன்றி! பெருமக்களே.. நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியோடு பணியாற்றுகிறீர்கள்
..
தமிழ் வெல்லும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment