Sunday, June 2, 2019
கலைஞர்
யோசிக்கிறேன்
எண்பதுகளில் திராவிட இயக்க வரலாற்றை நான் படிக்க தொடங்கிய நாட்களில் அப்படியொன்றும் ஈர்ப்பு மு.க.மீது வந்துவிடவில்லை..
பெரியாரிய கருத்துக்களில் எனக்கேற்ப்பட்ட தாக்கம் என்னை செதுக்கிய காலகட்டம் அது....
..
ஒரு முறை தஞ்சைக்கு கலைஞர் வருகிறார் என்றார்கள்..
அதற்கு முந்தைய தினம் என்று நினைக்கிறேன் ..வானொலியில் கலைஞர் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்துகிறார் ..
வித்தியாசமான விடயம்
வாங்காத கப்பலுக்கு பேரமா ..
நான் தான் கப்பலையே வாங்கவில்லையே அதற்குள் கருணாநிதி ஊழல் என்கிறார் என எம்ஜிஆர் பேசிய நேரம்.
..
வானொலியில் விளக்கம் தருகிறார்..
வாங்காத கப்பலுக்கு பேரமா என்கிறார்...
//
அன்றாடம் நீங்கள் ரசிக்கும் திரைப்படம் மூலம் விளக்கம் தர நினைக்கிறேன்..
தன்னந்தனியே ஒருஅழகி தாமரை முகத்தாள் தனியே சென்றிடுவாள் அவளை சில முரடர்கள் வழிமறித்து கற்பை சூறையாட முனைவர் ..
அந்நேரம்..
மரத்திலிருந்தோ, மதில் சுவற்றிலிருந்தோ கதாநாயகன் பொத்தென்று குதிப்பான்..
பின்னர் என்ன நடக்கும் ..
முரடன் ஒருவனுக்கு கால் ஒடியும் ஒருவனுக்கு கை ஒடியும்..
பின் கதாநாயகியை பத்திரமாக அழைத்துச்செல்வார்..
..
அப்போது அடிப்பட்ட முரடர்கள் ஏனப்பா கதாநாயகரே நாங்கள் தான் அவளின் கற்பை சூறையாடவில்லையே ஏன் எங்களை அடித்தாய் என கேட்டால் எப்படி நகைச்சுவையாக இருக்குமோ அப்படித்தான் வாங்காத கப்பலுக்கு பேரமா என்பதும் என சுவையாக பேசினார்..
மறுதினம் அவரின் பேச்சை கேட்க ஆவல் மேலிட தஞ்சை திலகர்திடலுக்கு
சென்றேன்.
அதற்கு பிறகு ஏறகுறைய எல்லா பேச்சுக்களையும் எழுத்தையும் பல வடிவங்களில்..( சிடி ,வானொலி,தொலைகாட்சி) பார்த்து கவனித்து வருகிறேன்..
..
இவரால் மட்டும் எப்படி சுவை மாறாமல் எழுத பேச முடிகிறது.. என்று வியந்ததுண்டு
ஒற்றை வரியில் சிலம்பமாட எப்படிமுடிகிறது
"உணவுக்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்" என்னதொரு உவமை ..
அரசியலில் எதிரிகளின் செயல்பாட்டை...தீர்மானித்து அவர்களை தன்னைச்சுற்றியே தமிழக அரசியல் களத்தை இயக்குகிற..இயங்க வைக்கிற வல்லமை
இந்திய அரசியல் கணிடிராததது
அரசியல் இலக்கணம் இவர்.. இவரின் கொள்கை சார்ந்த பணிகள் செய்திட்ட நலதிட்டங்கள் அதனால் பயன்பெற்றோர் பட்டியல் .. தொலைநோக்கு சிந்தனை காலகடந்தும் இந்தியாவே வியந்து ஏற்கும் பயணிக்கும் இவரது செயல்கள் திட்டங்கள்
வார்த்தையில் வடித்திட முடியாது..
இன்றைய சில்லறைகள் முதல் அரசியலின் பிஎச்டி படித்தவர் வரை
இவரால் மட்டுமே இவரை எதிர்த்து, அல்லது ஆதரித்து செயல்ப்பட்டால் மட்டுமே அரசியல்களத்தில் சிறுதுநேரமாவது நிற்கமுடியும் என்கிற நிலையை கடைசி வரை உருவாக்கியவர்.. மறைந்தும் இவரைச் சுற்றியே அரசியல் இயங்குகிறதே .. ஆம் அரசியல் சூரியன்
..
கலைஞர் அரசியல் வேறல்ல..
இதுவே கலைஞர் என்னும் பெருமகனின் ஆளுமையை ஒருநாளில் எழுதிவிடமுடியாது
இந்திய துணைகண்டம் கண்ட
ஒப்புற்ற ஒளிவீசும் தலைவர் கலைஞர்...
நிறைய விடயங்கள் மிச்சம் இருக்கிறது..
பின்னர் எழுதுகிறேன்..
#கலைஞர்96
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment