Sunday, June 30, 2019
இஸ்லாமிய அமைப்புகள்
தமிழக முஸ்லீம்கள்/ இஸ்லாமிய அமைப்புகள்..
..
தமுமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஹைதர் அலி
நீக்கபட்டார் இன்னுமொரு அமைப்பு உருவாகலாம்
..
முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள்..
முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை.ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு..
எனக்கு தெரிந்து 20 மேற்பட்ட அமைப்புகள் செயல்படுகின்றன ..
நீ..சரியல்ல நானே சரி என்பதில் தொடங்கி தங்களுக்குள் தெருச்சண்டையிட்டுக் கொள்கிற சராசரியாக தான் அமைப்புகள்..
எல்லாம் அமைப்புகளும் அரசியல் செய்கின்றன அரசியல் அறியாமலேயே..
..
ஒரு சின்ன விடயம் கிடைத்தால் போதும் அதை நானே முன்னெடுப்பேன் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் பலன் சூழியம்
..
இவர்களால் இஸ்லாமிய சமூகம் அடைந்த பயன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை..
மாறாக சமூகம் அடைந்த பின்னடைவே அதிகம் ..
ஒற்றுமையில்லாமல் இருப்பதை அரசியல் கட்சிகள் திமுக உட்பட தங்கள் நலனுக்காக பயன்படுத்தும் அவலம்தான் நடக்கிறது..
..
தமிழக முஸ்லிம்கள் அரசின் சலுகைகளைப் பெற லெப்பை என அரசில் பதிவு செய்துக்கொள்வார்கள்..
மரைக்காயர் ராவுத்தர், போன்றவர்கள் கூட தங்களை லெப்பை என பள்ளிகளில் பதிவு செய்துக்கொள்வது வழக்கம்
(லெப்பை) பிரிவினர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் வழங்கியது ..
திராவிட ஆட்சி தமிழகத்தில் வந்த பிறகுதான் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பிரிவினரையும்
#BC ல் அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்..
ஒருவகையில் எல்லோரையும் ஒரே நிழலில் கொண்டுவந்தது கூட திராவிட ஆட்சிதான்..
..
முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போதுமானதாக இல்லை இன்னும் நிறைய உரிமைகள் தரப்படாமலேயே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..
என்றாலும் இதுவரை தமிழக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் எல்லா உரிமை (சலுகை) களும் இடஒதுக்கீடு உட்பட அனைத்தும் கலைஞர் செய்து தந்தது என்பதை..மறுக்கவோ மறைக்கவோ முடியாது..
..
இன்னும் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது வழங்கப்படாமல் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை தான்..
..
முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லாமல் அது சாத்தியப்படாது..
முஸ்லிகள் ஒற்றுமை என்பது இன்றைய சூழலில் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ..???
..
தமிழகத்தில்
மற்ற மதத்தவர்களுக்கு ஒன்றிரண்டு அமைப்புகள் தான் இருக்கிறது.
ஆனால் அவையாவும் பிரச்சனைகளை உருவாக்குவதே இல்லை மாறாக மதப்பிரச்சனைகளில் தங்கள் வேற்றுமையை மறக்கிறார்கள் ..
..
தாய்சபை என அழைக்கப்படும் முஸ்லிம்லீக்கில் கூட இவர்கள் இணைய மாட்டார்கள்..காரணம் தலைமையை குறைச்சொல்வார்கள் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை முன்னெடுக்கிறதென்பார்கள்..
தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை கலையாதவரை...
இங்கே யார் பெரியவன் என்கிற..
யார் தலைவர் என்கிற நிலை மாறாத வரை..
எதுவும்
#சாத்தியமில்லை ..
..
ஆலஞ்சியார்
Wednesday, June 26, 2019
வேண்டும்..வேண்டும்
#என்ன_வேண்டும்..
நல் எண்ணம் வேண்டும்
ஆன்றோர்
சான்றோர்..
அறிவில் சிறந்தோர்
அறமுடையோர்..
நிழல் வேண்டும்..
..
அதிகம் பேசாத..
அளவு மீறாத..
சொல் வேண்டும்..
அகமும் புறமும்
நன்மையால்
நிறைதல் வேண்டும்..
..
அடுத்தவன் பசி
அறிதல் வேண்டும்..
இல்லாதோர்
யாசிக்கும் முன்
ஈகும் குணம் வேண்டும்..
..
மடமை நீங்கி
மதி பேசும் நிலைவேண்டும்..
அறிவின் சுடரொளியில்
அகம் காணவேண்டும் ..
..
பகையறிய வேண்டும்
போராடி வெல்ல
பயிற்சி வேண்டும்..
இடையிடையே தோல்வியும்..
இடைவிடாத முயற்சியும்
வேண்டும்.
..
நேர் நிற்கும்
பகைவர் வேண்டும்
நேரான வழியே
வேண்டும்..
..
கொஞ்சும் காதல்
கொஞ்சும் பொய்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் கலவி
வேண்டும் வேண்டும்..
..
புறம் சொல்லா ..
பிறர் பழி சொல்லா..
நிலை வேண்டும்..
..
நிறைய..வேண்டும்
நிறைய நிறைய அல்ல..
நிம்மதி தரும் நிலையே
வேண்டும்..
போதும் என்னும்
மனம் வேண்டும்
போதாது போதாது..
இன்னும் இன்னும்
அறிவு வேண்டும்..
..
மனதை அடக்கி
மமதை ஒடுக்கி
நன்மை பெருக்க
பயிற்சி வேண்டும்
..
அறிவின் சொல்லை
ஏற்கும் நிலை
எப்போதும் வேண்டும்..
..
இன்னும்
நிறைய.. வேண்டும்
அவையாவும் நல்லதாய்
வேண்டும்..
..
நிறைய..நிறைய
வேண்டாம்..
நிறைவான..
நேரான வழியில்
பொருள் வேண்டும்..
..
உழைப்பில் வரும்
உன்னதம் வேண்டும்..
உயர பறந்தாலும்
உண்மை மாறாது வேண்டும்.
..
அறம் தவறா
நெறி பிறழா..
நிலை வேண்டும்
இன்னும்..இன்னும்..
நல்லெண்ணம் ..
வேண்டும்..
நல் எண்ணம்..வேண்டும்..
..
#வேறென்ன_வேண்டும்..
..
ஆலஞ்சியார்
Tuesday, June 25, 2019
திமுக எம்பிக்கள்
பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார் திமுக எம்பிக்கள் தொடக்கமே நல்லதாய் .. எதிரிகளுக்கு தீயென எரிவது தெரிகிறது .. மாநிலங்களவையில் நேற்று திருச்சி.சிவா நீட் தேர்விற்கெதிராக கிராமபுற மாணவர்களுக்கெதிரானது என ,நீட் கோட்சிங் சென்டரில் 2 லட்சம் பணம் செலுத்தி படிக்கவேண்டியிருக்கிறது நாடெங்கிலும் உள்ள 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவ படிப்புகளுக்காக பலகோடி கணக்கில் வியாபாரம் நடக்கிறது பணம் உள்ளவன் மட்டுமே இனி மருத்துவ நுழைவு தேர்வையே எழுத முடியும் என்கிற நிலை ஆபத்தானது ..அதோடு சட்டமன்றத்தில் ஒருமனதாக எடுக்கபட்ட தீர்மானத்தில் அடிப்படையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் மறுப்பது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என பேசினார் .. மக்களவையில் டி.ஆர்.பாலு இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட நுழைவு தேர்வை ரத்தாக்கியதை குறிப்பிட்டு பேசினார் ..
இன்றைய தினம் தண்ணீர் பஞ்சத்தை குறித்து பேசும் போது திமுக கொண்டுவந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது தமிழக அதிமுக அரசு ஊழல் அரசு அதற்கு துணை போகிறது மத்திய பாஜக அரசு என்றவுடன் பாஜகவினருக்கு அடியெல்லாம் எரிவதை காண முடிந்தது ..
..
மாறனின் இன்றைய பேச்சு வரலாறு குறித்துக்கொள்ளும் எதற்காக இவருக்கெல்லாம் தொகுதி ஒதுக்கவேண்டுமென சிலநேரம் நான் எண்ணியதுண்டு இப்போது இவரின் பேச்சு நம்பிக்கையை தருகிறது இன்னும் நிறைய சீற்றங்களை பாஜக காண வேண்டியிருக்கும் அறசீற்றமாய் கலைஞரின் அடலேறுகள் அணிவகுத்திருக்கிறார்கள் தலையாட்டிகளையே கண்ட பாஜகவிற்கு கொள்கையாளர்களை தன்மான சுடரொளிகளை எதற்கும் அஞ்சா திராவிட திமிர்களை காணும் போது எரியதான் செய்யும்
..
தமிழகமும் இந்தியாவில் தானே இருக்கிறது என்ற பேச்சு பொருள் பொதிந்தது .. துக்ளக்கில் கூட குருமூர்த்தி பெரியார் பெயரை நாடாளுமன்றத்திலே பேச தொடங்கியிருப்பது கண்டு பொசுங்கியிருக்கிறார் பெரியாரை எதிர்த்தும் குரல்கள் என்ன செய்துவிட்டாரென கேள்வி எழுந்திருப்பதாக புளங்காகிதம் அடைகிறார்.. பெரியார் எனும் அறிவின் சுடரொளியில் எம் மக்கள் தெளிவில் இருப்பதால் தான் இன்னமும் எகத்தாளம் பேசிவிட்டு நடமாடமுடிகிறது.. இல்லையெனில் வடமாநிலங்களை போல கட்டிவைத்து உதைக்கிற காட்டுமிராண்டித்தனம் வந்திருக்கும் .. கருத்துரிமைக்கு காவலாய் இருப்பதால் தான் கண்டதையும் பேசமுடிகிறது ..
..
அதிமுக அரசை ஊழல் அரசென்று 2016 ல் பாஜகவின் அமிர்தா ஷா சொன்னதை தான் தயாநிதி சொல்கிறார் .. அதிமுகவை சொன்னால் பாஜக பதறுகிறது ஊழலுக்கு துணை போகிற கேடுகெட்ட நிலையை இந்த தலையாட்டிகளை வைத்துதான் பார்பனர்களை உயரத்திற்கு கொண்டுவர முடியுமென்பதால் இவர்கள் பதறுகிறார்கள் அதிமுக ஆட்சியில் இருக்கும்வரை தான் நினைத்ததை சாதித்து தமிழர்களுக்கு தமிழ் மண்ணிற்கெதிராக செயல்பட முடியும்..
இதுவரை நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஜால்ரா போடுகிற கோழைகளை தான் கண்டிருக்கிறார்கள் இப்போதுதான் சரியான எதிரியை .. அறிவுக்கொண்டு வாதிடும் திணறடிக்கும் ஆளுமைகளை பார்க்கிறார்கள் ..
இன்னும் நிறைய இருக்கிறது
விடுவாதாயில்லை..
..
ஆலஞ்சியார்
Monday, June 24, 2019
சுதா..ரகுநாதன்
சுதா ரகுநாதனுக்கு பிராமண அமைப்புகள் பகிரங்க மிரட்டல்..
இசை அரசி எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை சுதா ரகுநாதன் .. அய்யங்கார் ஆத்து பெண் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் அவரின் மகள் ஒரு கிருஸ்துவரை மணக்கிறார் .. இதில் மற்றவர்களுக்கு என்ன வந்தது பார்பன அடிப்படைவாதிகள் வலைதளங்களில் மிக மோசமாக பதிவிட்டும் சுதாவின் தொலைபேசி எண்ணை வெளியிட்டு அவரை தொடர்ந்து "அர்ச்சனை" செய்கிறார்கள் .. எப்படி கலப்பு திருமணம் செய்யலாம் என சிலர் கூக்குரல் கேட்க சகிக்கவில்லை .. மனிதனும் நாயும் திருமணம் செய்தால் தான் அது கலப்பு.. மனிதன் மனுஷியை திருமணம் செய்வது எப்படி கலப்பாகும் என்பார் பேராசான் பெரியார் ..
..
இதுவரை பார்பன பெண்கள் வெளிநாடுகளில் பிற மதத்தவரை திருமணம் செய்ததில்லையா .. இசை கலைஞர்களில் பலர் செய்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு இப்போது வர காரணம் என்ன..? ஒரு கருப்பர் இன ஆண் என்பதாலா .. Sudha Ragunathan with her son in law
மாடு free என சுதாவோடு அவரது மாப்பிள்ளை நிற்கும் போட்டோவை போட்டு கீழ்தரமாக எழுதியிருக்கிறார்கள் ..
மிலேச்சன் கலப்பு சண்டாள சாபம் ப்ராமண இழுக்கு
அவள் பேரனுக்கு பூணூல் அருகதை இல்லை சங்கீத ஞானம் சாக்கடையில் ..என கடுமையான விமர்சனங்கள் ..
..
சாதி மத மறுப்பு திருமணங்களை "சுயமரியாதை" என கண்ணியமாக அழைத்து பழகியிருக்கிறோம் .. ஆனால் சில சங்கிகள் ஹார்மோன் சுரப்பில் வந்த கோளாறு என கொச்சைபடுத்துகிறார்கள் .. எந்த மதமும் சாதியும் கலப்பில்லாமல் இல்லை நீங்கள் பிடித்து தொங்குகிற மத அடையாளங்களோ சாதிய திமிரோ ஆய்விற்குட்பட்டால் கடைசியில் நீர் நிஜத்தில் இல்லை என்கிற உண்மை அதிர்ச்சி தரும்
நீங்கள் கட்டிசுமக்கிற எந்த விதிகளும் ஆச்சாரங்களும் பாலின விடயத்தில் அடிபட்டு போகும் இயல்பாய் மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எந்த கட்டுபாடுகளையும் உடைத்து சிதைத்துவிடும் எவரும் தன்னை ஒரு சமூகத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது மதத்தை சார்ந்தவன் என்று சொல்லிவிட முடியாது ஏதோவொரு கலப்பு எங்கோ நடந்திருக்கும் ஆதம் தொட்டு கலப்பில் தான் மனித சமூகமே பரிணாம மாற்றம் அடைகிறது என்கிற உண்மை விளங்காமல் ஒரு சாதியை மதத்தை ஆச்சாரத்தை கோட்பாட்டை பிடித்துக்கொண்டு கதறுகிறீர்கள் .. தோண்டினால் அசிங்கபட்டுநிற்பீர் ஆச்சாரம் என்பதே இல்லை என்கிற உண்மை விளங்கும்
..
இப்படி பட்ட திருமணங்களை சங்கிகள் கடுமையாக எதிர்க்கிறவரை பெண்கள் பெருவாரியாக பெரியாரை தேடுவார்கள் .. சிவசங்கிரி சொன்ன ஒரு விடயம் ஞாபகம் வருகிறது எனக்கு விதிக்கபட்ட கட்டுபாடுகளும் அடக்குதலும் என்னை பெரியார் திடலுக்கு வரவழைத்தென்றார் .. முதலில் ஒருவரின் தனிபட்ட குடும்ப விடயங்களில் அவர்களது விருப்பு வெறுப்புகளில் மதம் சாதி கலாச்சாரம் பண்பாடு ஆச்சாரம் என சொல்லி தடைவிதிக்க எதிர்க்க செய்யாதீர்கள் ..
..
சுதா பாடிய பாடல் நினைவிற்கு வந்தது ..
எனை என்ன செய்தாய் வேங்குழலி..
உனக்கும் எனக்கும் வேறு பகையில்லையே..
..
ஆலஞ்சியார்
Sunday, June 23, 2019
சுமப்போம் சிலகாலம்
காங்கிரஸுக்கு இன்னமும் எத்தனை நாட்கள் பல்லக்கு தூக்குவது ..
திமுக அதிக இடங்களில் நிற்க வேண்டும் கே.என்.நேரு..
நேருவின் கூற்றில் ஒரு பகுதி வரை உடன்படுகிறேன் .. வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் என்றில்லை மற்ற கூட்டணி கட்சியினரும் ஏதோ தங்களால் மட்டுமே தங்களின் தனி செல்வாக்கால் மட்டுமே வென்றதாக மார்தட்டுவதும் திமுகவின் கொள்கைக்கெதிராக ஒருவகையில் திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதை வாடிக்கையாக்குகிறார்கள் .. தேர்தல் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்தபோன ஒன்று வெற்றி பெறும்வரை தான் திமுகவின் தயவு தேவை என்று செயல்படுவோரின் சுமையை ஏன் தொடர்ந்து சுமக்கவேண்டும் என்ற கேள்வியில் பொருள் இருக்கிறது. திருநாவுகரசர் தன் சொந்த செல்வாக்கில் வென்றதாக சொல்கிறார் அவரின் செல்வாக்கெல்லாம் பழைய கதை என்பதை மறந்து பேசுகிறார் பாஜக உட்பட பலகட்சிகளில் பயணித்து சொந்த ஊரில் கூட மதிப்பிழந்த நிலையில் தான் மீண்டும்,வாய்ப்பு கிடைத்ததை மறந்து பேசுகிறார் வெற்றி பெறுகிற அளவு செல்வாக்கிருக்கிறவர் முன்பே திமுகவின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லியிருக்கலாம் இந்த முறை மிக சாதூர்யமாக கூட்டணி அமைத்து அதை மிக சரியான பாதையில் கொண்டு சென்று வெற்றிபெற வைத்ததில் பெரும்பங்கு திமுகவிற்கு அதன் தலைவருக்கு உண்டு ..
..
இந்த முறை உள்ளாட்சியில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் அதிக இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் அது கட்டாயம் ஒற்றை இலக்கில் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் போதும் பிற கட்சிகளுக்கும் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை போதும் இருநூறுக்கும் சற்று குறைவான இடங்கள் அல்லது இருநூறு இடங்களில் நிற்க வேண்டும் அதிக எண்ணிக்கையில் விட்டுதருவது திமுகவின் பலத்தை குறைக்கவே உதவும் நேருவின் கருத்தில் உடன்பட வேண்டியிருக்கிறது .. ஐந்து தொகுதிக்கு மாவட்ட செயலாளர் என அவர் தன்னை குறுக்கி கொண்டாலும் ஒட்டுமொத்த திமுகவினரின் குரலை தான் பதிவு செய்திருக்கிறார்.. வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் தகுதிக்கு மீறி வாரி வழங்குவதென்பது நமக்கு நாமே குழிப்பறிப்பதை போன்றது .. தமிழகத்தில் சில கட்சிகள் லெட்டர்பேட் கட்சியை போல சுருங்கிவிட்டன .. சில வலைதள கட்சியை போல ஊடக தொடர்பில் மட்டுமே உள்ளன கம்யூனிஸ்ட்கள் நிலை பெரியளவில் தாக்கத்தை தரகூடியவையாக இல்லை சிறுத்தைகள் உட்பட பெரிய பலமென்று சொல்லிவிடமுடியாது ஆனாலும் சிறியளவில் அவர்கள் பங்கிருப்பதை மறுக்க இயலாது .. கலைஞர் சொல்வார் இரண்டு விழுக்காடு கூட இல்லாதவர்கள் பெரியளவில் பேரம் பேசுவார்கள் ஊடகங்கள் அதை பெரிதாக்கும் அதே வேளை அவர்களின் சமூகத்தையும் அரவணைக்கும் பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது .. கம்யூனிஸ்ட்களின் வெற்றிபெற்று வரவேண்டியது மிக அவசியம் என்பார் ..
..
நேரு சொன்னதைப் போல முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைக்கு உண்டு இன்றைய சூழலில்
பாசிசத்தை வேரறுக்க .. காங்கிரஸை சற்று சுமக்கதான் வேண்டும் .. திமுக பிரிந்து அதிமுக உதயமானது ஒருவகையில் நல்லது தான் .. எதிரான இடத்தில் வேறு யாரும் வந்துவிடாமல் பிரதான எதிரிகள் அந்த இடத்தை நிரப்பாமல் நம்ம பங்காளியே அந்த இடத்தை நிரப்புவது மகிழ்ச்சி தான் என்றார் கலைஞர் ..ஆம் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸை அழித்து அந்த இடத்தில் பார்பன ஜனதா வந்திருக்கும் .. அதே நோக்கில் பார்த்தால் காங்கிரஸை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது பாசிச பாஜகவிற்கு இந்த மண்ணில் இடமளிக்காமல் இருக்க .. ஆசிரியர் வீரமணி சசிகலாவிற்கு ஆதரவாக பேசிய போது சிலர் கடிந்து கொண்டோம் ..பாசிசத்தை விரட்ட வேண்டிய பெரும் பொறுப்பை உணராமல் .. அது எந்தளவு தீங்கை தந்திருக்கிறதென பார்க்க முடிகிறது ..
ஆம்
..
சில காலம் காங்கிரஸை சுமப்போம் .. பாஜகவை பார்பனீயத்தை பாசிதத்தை வேரறுக்கும் வரை..
..
ஆலஞ்சியார்
Saturday, June 22, 2019
விஜயகாந்த்
விஜயகாந்தின் அசையா சொத்துகள் ஏலத்துக்கு வருகிறது .. கோடிகளில் கடன் பெற்று கல்லூரி மேம்பாட்டிற்காக செயல்பட்டதாகவும் வருவாய் ஏதுமில்லாததால் கடனை திரும்ப தர முடியவில்லை என பிரேமலதா சொல்கிறார் ..ஒருவர் வங்கியில் கடன் பெறுவதும் திருப்பி தராத போது வங்கி நடவடிக்கை எடுத்து பிணையாக பெற்ற சொதிதை ஏலம் விடுவதென்பது நடைமுறை
..
இதில் நமக்கென்ன இருக்கிறது
ஆனால் பிரபலமான ஒருநடிகர் அரசியல்வாதி என்கிற போது பேசபடுகிறார் ..
விஜயகாந்தின் பாதையை நாம் நோக்கினால் தெளிவற்றவராக எதையும் அவசரகதியில் உடனே கிடைத்திட வேண்டுமென்ற எண்ணம் உடையவராக தெரியும் அடிப்படை அரசியல் கூட அறியாதவராக தான் பொதுவாழ்விற்கு வந்தார் சினிமாவில் தனக்கு உறுதுணையாய் நின்ற இப்ராகிம் ராவுத்தரை கூட இன்னும் சொல்லபோனால் தன் வாழ்வையே விஜயகாந்திற்காக என்றவரை இவரின் திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக புறக்கணித்தார் .. நட்பின் இலக்கணமாக அப்போது பேசபட்டார்கள் கர்ணன் துரியோதனன் என்றெல்லாம் சிலர் சினிமா இதழ்களில் எழுதியது ஞாபகம் வருகிறது .. அப்போது தொடங்கிய சரிவின் தொடக்கத்தை இவர் கண்டுக்கொள்ளவில்லை ..
கல்யாண மண்டபத்தின் தூண் இடிபடுகிறதென்பதற்காக கலைஞரோடு பிணங்கி
அரசியல் கட்சியை தொடங்கியவர் ஆரம்பத்தில் ஒருவித மாய ஈர்ப்பு தெரியும் அதை சரியாக பயன்படுத்தினால் (உழைத்தால், சரியான தெரிவு செய்தால்)
தான் அரசியலில் வெற்றிபெற முடியுமென்ற யதார்த்த அரசியல் அறிவில்லாத காரணத்தால் மாயவலையில் சிக்கியவரை போல அரசியல் அந்திமத்தின் துவங்கத்தை குறித்துக்கொண்டார்.. ஜெயலலிதா சேர்ந்தது மிகப்பெரிய அரசியல் பிழை என்பதை தனித்தே களம் கண்டிருந்தால் காலபோக்கில் முன்னேற்றத்தை பெற்றிருக்கமுடியும்
..
வங்கிகடனை கட்ட அவருக்கு கிடைத்த தேர்தலின் போது பாஜக அதிமுகவால் பலகோடிகள் பேரபேசபட்டதாக செய்திகள் வந்ததே அதை வெள்ளையாக்க நடத்தபடும் சிறிய ஒரங்கநாடகம் இது என்கிறார்கள் .. கட்சி நிதியாக ₹20000 வரும் பணத்திற்கு வரி சலுகை உண்டென்ற விதியை காட்டி தொண்டர்களிடமிருந்து திரட்டி கடனை அடைத்ததாக செய்திகள் வரலாம் பெருந்தொகை கைமாறி வெளிநாடுகளில் முதலீடாய் இருப்பதாக உலவும் செய்திகளுக்கிடையில் இங்கே உள்ள கடனை அடைக்க மிக சிறந்தமார்க்கமாக இது இருக்கும்..
வருவாய்க்கு வழியில்லாமல் தின செலவிற்கே திண்டாடுகிற புதிய "ஏழ்மைதாயை" நாடு கண்டிருக்கிறது ..ஆனால் கொடுத்து சிவந்தவரென்ற பழைய பெயரை கெடுத்ததிலும் .. விஜயகாந்தை வியாபார பொருளாக்கி சந்தைபடுத்தியதிலும் அவரின் துணைவியாருக்கு பெரும் பங்குண்டு .. விஜயகாந்தின் உடல்நலிவும் இயலாமையும் பிரேமலதா சதீஷை பிழைக்க அரசியலை பயன்படுத்தாமென்ற முடிவிற்கு வரவைத்துவிட்டது .. விஜயகாந்த் ஒரு பாடம்.. அரசியல் தெளிவற்று.. எதையாவது செய்து எப்படியாவது பதவி சுகத்தை அனுபவிக்கலாம் எந்த மக்கள் பணியும் செய்ய தேவையில்லை நேரடியாக முதல்வர் என கனா காணும் கோமாளிகளுக்கு பாடம் .. அரசியல் உழைப்பவர்களுக்கு உன்னத குறிக்கோளோடு வருபவர்களுக்கு பொதுதொண்டில் நாட்டம் உள்ளவர்களுக்கு சாதி மதமென குறுகிய சிந்தனையற்றவர்களுக்கு நல்பெயரை நன்மதிப்பை தரும் ..மாறாக வியாபாரமாக எண்ணுவோர், உழைப்பின்றி உயரலாம் என நினைப்போர் பணம் பதவிக்காக வருபவர்களை காலம் குப்புறதள்ளி குழிதோண்டி விடும் ..
..
விஜயகாந்தின் நிலை
நட்பின் அருமையும் பொருளும் புரியாதவராக வாழ்வியல் அர்த்தம் தெரியாதவராக
அரசியல் இலக்கணம் அறியாதவராக .. கடைசியில்
பெயர்கெட்டு நன் மதிப்பிழந்த கதையாகிவிட்டது
..
ஆலஞ்சியார்
Thursday, June 20, 2019
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி
இந்தியாவிற்கு சுதந்திரமே வேண்டாமென்ற சொன்ன பெரியாரை பெயரை உச்சரித்ததற்காக கங்கை நீரை கொண்டு நாடாளுமன்றத்தை கழுவவேண்டும். அர்ஜூன் சம்பத்
கங்கையை சுத்தபடுத்த சில ஆயிரம் கோடி செலவு செய்தும் (செய்தார்களா என்பது வேறு விடயம்):
இன்னமும் பிணங்களும் பிணந்திண்ணிகளின் கழிவுகளுமாக தான் இருக்கிறது கங்கை நீரை கொண்டுவந்து நாடாளுமன்றத்தை அசுத்தபடுத்தாமல் இருந்தாலே நல்லது ..
..
பெரியார் ஏன் விடுதலை நாளை கறுப்பு நாள் என்றார் இன்னமும் சனாதனவாதிகளால் .. பாசிச பார்பன வர்க்கத்தால் அடிமைபட்டுகிடக்கிறவனின் ..
விடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்ததாக சொல்வது ஏமாற்றுவேலை என்பதால் சொன்னார்
எல்லோருக்கும் சமஉரிமை பெறாத போது ஏற்றதாழ்வாய் நீதி.. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே எல்லா பலனையும் அனுபவிக்கும் போது
கல்வி வேலைவாய்ப்பில் பார்பனர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் சமமான நீதி கிடைக்காதென்பதால் தாழ்த்தபட்டவருக்கும் பிற்படுத்தபட்டவருக்கும் இன்னமும் உரிமைகள் கிடைக்காத போது பெறும் விடுதலை பயனளிக்காதென்பதால் கறுப்பு தினம் என்றார்.. இன்னும் கொஞ்சகாலம் ஆங்கிலேயனிடத்தில் ஆட்சி இருந்தால் எல்லோருக்கும் சமஉரிமையை நிலைநாட்டி விடலாம் என்ற மானுடபற்றால் சொன்னார் .. இந்திய நாடாளுமன்றத்தில் அவர் பெயரை உச்சரிக்காமல் வேறு யார் பெயரை உச்சரிப்பது ..
..
விடுதலை போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென்றும் ஏன் உங்கள் சக்தியை வீணாக்குகிறீர்கள் முஸ்லிம்கள் கிருஸ்துவர்களுக்கெதிராக போராடவேண்டும் ஆங்கிலேயே ஆட்சி எதிராக அல்ல என்று சொன்ன சர்வாக்கர் என்ற தேசதுரோகியை .. நான் வேடிக்கை பார்க்கவந்தேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மண்டியிட்ட "பாரத ரத்னா" வை (வாஜ்பாய்) ஆங்கிலேயனுக்கு பல்வேறு இழிவான காரியங்களை செய்து பயன்பெற்ற வர்க்கத்தினரை.. வீட்டு பெண்களை அம்மணமாய் ஓடவிட்டு ஊர்களை எழுதி வாங்கிய (கு.கா.பாளையம்) ஆச்சார்யர்களை எல்லாம் கொண்டாடுகிற தேசத்தில்... நாட்டின் மீதும் நாட்டின் மக்கள் மீதும் அவர்கள் உயர்வு பெற வேண்டுமென சதா சிந்தித்த உயர்மகன் பெரியார் .. எனக்கு மதப் பற்றோ சாதிப்பற்றோ இனப்பற்றோ மொழி பற்றோ இல்லை எனக்கிருப்பதெல்லாம் மானுடப்பற்றுதான் என்ற பெருமகன் பெரியாரை கொண்டாடாமல் வேறு யாரை கொண்டாடுவது .. பெரியார் பெயரை உச்சரிக்காமல் வேறு யாருடைய பெயரை உச்சரிப்பது ..
..
உண்மையில் அர்ஜூன் போன்றவர்கள் சொரணையோடு போராடவேண்டும் யாருக்கும் எதற்கும் அடிமையல்ல நீ என புரியவைத்தவர் இன்றைக்கு காஞ்சி சங்காசாரியாரை (கும்பகோணம் மடம் என்பது தான் சரி- சங்காராச்சாரி அல்ல) நீ போய் பார்க்க முடிகிறதே .. இதுவே பூரி சங்கராச்சாரியரை பார்த்துவிட முடியுமா உம்மால்.. மகாராஷ்ட்ராவில் குண்டியில் சுடுதண்ணீர்தான் வரும்.. நீயெல்லாம் இப்படி பேசுவதற்கு உரிமையை பெற்று தந்தவர் பெரியார்
பிராமணீயத்தை உடைத்து உன்னைப் போன்றோரை சுயமரியாதையோடு நடமாடவிட்டவர் இன்றைக்கு வாய்க்குவந்ததை எல்லாம் பேசி திரிகிறீர்களே அந்த கருத்துரிமையை பெற்று தந்ததும் பெரியார்தான் .. சுவாமி என கக்த்தில் வேட்டியோடும் கையில் செருப்பை சுமந்து நின்ற உன்னை மரியாதையோடு நடத்துகிறார்களே .. அதற்கெல்லாம் காரணம் இந்த கிழவன் தான்..
இந்த மண்ணை இந்த மக்களை நேசித்தவர் பெரியார் .. அனைவருக்கும் சமமான நீதி, உரிமை, கல்வி வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டுமென பாடுபட்ட .. தொலைநோக்கோடு கடமையாற்றிய பேராசான் பெரியாரை பற்றி பேசாமல் யாரை பற்றி பேசமுடியும் .. நாடாளுமன்ற மைய்ய மண்டபத்திற்கே பெரியாரின் பெயரை தான் வைக்கவேண்டும்.. நிச்சயம் ஒருநாள் அது நடந்தேறும்.. வடக்கிலும் மேற்கிலும் பெரியார் பேச தொடங்கியிருக்கிறார் .. எச்சரிக்கை வெத்துவேட்டுகளே வீழ்ந்து போவீர்கள் .. சனாதனம் வீழும் சமத்துவமே வெல்லும்..
..
பெரியார் வாழ்க!
அண்ணா வாழ்க!!
கலைஞர் வாழ்க!!!
தமிழ் வாழ்க!!!...
..
ஆலஞ்சியார்
Wednesday, June 19, 2019
திராவிடம் வெல்லும்
நேற்று அடித்த பெருமழையின் ஈரக்காற்று இப்போதும் வீசுகிறது .. மலை உச்சியில் நின்று தூய பிராணவாயுவை சுவாசித்தைப்போல புத்துணர்ச்சி
..நெஞ்சு நிம்மதி அடைகிறது
..பெருங்கிழவனும் பேராசானும் முத்தமிழறிஞரும் விட்டு சென்றது பெரும் திராவிட உணர்வாளர் படை என்ற நிம்மதி முகத்தில் தெரிகிறது இடையில் சில அடிமைகள் பியூட்டிபுல் பாடி அசிங்கபட்டு நின்ற நிமிடங்கள் நெஞ்சில் வந்து போனாலும் எதிரிகளே இதுவரை நீர் பார்த்தது எங்களின் பிழைகள் .. இனி வருவதோ மானம்கொள் மறத்தமிழர் கூட்டம்..
எதற்கும் அஞ்சா திராவிடர் படை தளபதியின் வழிகாட்டலில் திமிரி எழும் தீங்கு கண்டால் எனும் போது எத்தனை ஆனந்தம்..
..
சிலர் தமிழ்வாழ்க! பெரியார் வாழ்க!! கலைஞர் வாழ்க!!! திராவிடம் வெல்க!!! என்றதெல்லாம் அவைக்குறிப்பில் இடம்பெறாதென புளங்காகிதம் அடைகிறார்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை நூற்றாண்டு கண்ட இயக்கத்தை நடத்தும் எங்களுக்கும் தெரியும் ஆனால் நீங்கள் கதறுனீர்கள் அல்லவா அதை உலகமே தமிழனின் தன்மானம் கண்டு வியந்தது பார்த்தீரா .. அது தான் வேண்டும் ஆரிய படைக்கெதிராக .. பாஜகவின் பாசிச பார்பன சித்தாந்தத்திற்கெதிராக .. ஒரே ஒரு படை உண்டு அது திராவிடர்களெனும் மண்ணின் மைந்தர்கள் கூட்டமென அறிந்துக்கொண்டீர்கள் அல்லவா ..
எதற்கெடுத்தாலும் தலையாட்டு குல கோடாரிகள் இல்லை.. மானம் ஒன்றே பெரிதென கொள்ளும் மாந்தழிழர் கூட்டம், சுயமரியாதை சுடரொளிகள்,
எதை எப்படி எங்ஙனம் எதைக்கொண்டு முடிப்பதென எங்கள் கிழவன் எங்களை பயிற்றுவித்திருக்கிறான் .. அதை செயலிலும் செய்துகாட்டி உலகமே வியக்கும் ஆற்றலோடு பயணித்த கலைஞரின் "பயமறியாத" தம்பிகள்
இனியும் பார்க்கதான் போகிறீர்கள் .. தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக .. இந்த மண்ணின் மொழியை .. பன்முகதன்மையும் பழமையும் இலக்கண செழுமையும் நல் இலக்கியமும் கொண்ட உலகின் மூத்த மொழியை அறியணையேற்றுவரை போராடுவோம் இந்திய அரசின் அங்கரீத்த மொழியாக தமிழை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டமென சொல்லிவிட்டு செய்வோம் ..
..
தமிழ் வாழ்க என்றால் பார்பனன் பதறகிறான் அது நமக்கு புரிகிறது .. அவன் எப்போதுமே தமிழோடு பகை கொண்டே நடப்பவர்கள் தங்களையும் தமிழர்களென சொல்லிக்கொண்டே சமஸ்கிருதத்தை தமிழோடு இணைத்து "ஜலமென" கதைப்பவர்கள்
தமிழை நீச பாஷை என சொல்லி செத்ததை (சமஸ்கிருதத்தை) பந்தியில் வைக்க முனைபவர்கள்
திராவிட கலைச்சாரத்தை இந்த மண்ணின் கலைகளை இசையை, பண்பாட்டை மறுதலித்து தங்கள் கலாச்சாரத்தை புகுத்த .. எண்ணுகிறவர்கள்.. எல்லா நிலையிலும் தமிழனின் பண்பாட்டு தொன்மையை அழிக்க நினைக்கிற கூட்டம் அது ..ஆனால் தமிழைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நாதாரிகளும் பதறுகிறார்கள் .. அரைகுறை தெளிவும் பாசிசத்தின் பொருளுக்கு மயங்கி பதவி பணமென திரியும் மூடர்களே பெரியாரை படியுங்கள் தெளிவு பெறுவீர்கள் .. கலைஞரை அண்ணாவை அறிந்தால் திராவிடத்தால் கிடைத்த பாதுகாப்பு புரியும்.. இந்த மண்ணை காக்க .. எம் இனத்தை மொழியை உரிமையை மானத்தை காக்க
திராவிடமே அரணாய் திகழும்
..
திராவிடம் வெல்லும்
..
ஆலஞ்சியார்
Tuesday, June 18, 2019
தமிழ் வெல்லும்
ராமசாமி பேரை கேட்டால் குலை நடுங்குகிறதா ..
நடுங்கும்.. தமிழ்நாடு என் நாடு தமிழ்வாழ்க என மிக பெரிய ஜனநாயக அரங்கில் பாசிசம் நடுங்க எங்களால் உரத்த குரலில் உறுதிமொழி ஏற்கிறோமே இப்போது புரிந்திருக்குமே வந்தவர்கள்
யாரென்று .. பெரியாரின் பேரப்பிள்ளைகள் பெரும்படையாய் வந்திருக்கிறார்கள் .. தமிழ் நை போலே .. நை போலோ என கதறுவது கேட்கிறது .. பெரியார் வாழ்க என்றவுடன் அதுவரை பாரத் மாதாக்கி ஜே சொன்னவன் ஜெய் ராம் என்கிறான்
சங்கிகளே ..ஜெய் ராம் என்றாலும் அது ராமசாமி எனும் பெரியார் தான் .. பொருள் அதுதான்
..
கலைஞர் வாழ்க தமிழ் வாழ்க பெரியார் வாழ்க என வீர முழக்கமிட்டு எங்கள் வீரர்படை கால் பதித்திருக்கிறது .. சிலர் ஏன் அண்ணா பெயரை சொல்லவில்லை என்கிறார்கள் .. பெரியார் பெயரிலேயே எல்லாம் அடக்கம் இன்றைக்கும் தமிழகத்தை பெருங்கிழவன் தான் வழிநடத்துகிறான் .. யார் பெயரை உச்சரித்தால் எதிரி குலை நடுங்குகிறானோ அவனே என் இனத்தின் தலைவன் .. தர்மபுரி டாக்டர் செந்தில் குமார் கருஞ்சட்டையோடு வந்து பெரியார் வாழ்க என்ற போது உண்மையில் கண்களில் நீர் கசிந்தது
..
சரியான நபர்களை தேர்வு செய்திருக்கிறார் தலைவர் தளபதியென வியந்தேன் ..
சரியான காலகட்டத்தில் மிக சரியான நபர்கள் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி மிக இக்கட்டான பாசிசத்தின் பிடியில் ஜனநாயகம் சிக்குண்டு மூர்ச்சையாகி கிடக்கிற சூழலில் ஜனநாயக பெருவெளியின் ஒளிகீற்று நாடாளுமன்றத்தில் படர்கிறது .. எதையும் யாருடைய அனுமதியின்றியும் செய்து முடித்துவிடலாமென்ற எண்ணம் இனி ஈடேறாது .. தமிழகம் இந்தியாவின் கழிவை சுமப்பதற்கான நிலம் அல்ல.. இது அறிவின் சுடரொளியில் ஜொலிக்கும் தேசம் இங்கே அறிவாசான் பெரியாரின் கைத்தடி உண்டு .. பேரறிஞர் போட்ட பாதை உண்டு பேரருளாளன் நடத்திகாட்டிய ஆற்றல் மிகு அடலேறுகளின் படை உண்டு வழிநடத்த.. படையோட்டம் நடத்த தளபதி உண்டு .. கண்ணயர்வின் கதகதப்பில் சிலர் ஊடுருவியதும் அதுவே பூட்டியிட்ட சனாதனத்திற்கு திறவுகோலாய் போனதும் கண்டு எம் மக்கள் யாரை அனுப்பினால் இந்த சனாதனவாதிகளின் கொட்டத்தை அடக்கமுடியுமென அறிந்து அனுப்பியிருக்கிறார்கள் .. ஆரம்பமே புரிந்திருக்குமே ..
..
சிலையை உடைப்போம் என்றவர்களுக்கு .. அவர்கள் பெரும்பான்மை சபையில் சென்று வந்துட்டேன்னு சொல்லு எனும் தைரியம் பெரியாருக்கு மட்டுமே உண்டு. சிலை வெறும் கல் யாருமில்லா வேளையில் உடைக்கலாம் சிதைக்கலாம் ஆனால் எங்கள் சித்தாந்தத்தை வெல்லவோ சிதைக்கவோ முடியாது ..மீறினால் திமிரி எழுந்து அடிக்கும் .. தமிழ் வாழ்க என்றால் உன் தாய் மொழியை வாழ்க என்று சொல் .. உன் மொழிக்கு அங்கீகாரம் இல்லையென்றால் தனியே அழு.. தமிழ் எங்கள் உணர்வோடு உயிரோடு கலந்த மொழி .. பாரத் மாதாக்கி ஜே என்பதலிருந்தே .. தமிழர்கள் இந்தியர்கள் அல்ல அவர்கள் தனி இனம் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் சங்கிகள் ..
முதல்நாளே கதறவிட்டிருக்கிறது தமிழகம் .. ஒரு சொரணையற்ற பிண்டம் வந்து தமிழ்வாழ்க சொல்லாமல் சென்றிருக்கிறது தேனி நிலம் இன்று வெட்கபட்டுநிற்கிறது ..
உலகளவில் #தமிழ்_வாழ்க ஒலி கேட்கிறது ..
நன்றி! பெருமக்களே.. நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றியோடு பணியாற்றுகிறீர்கள்
..
தமிழ் வெல்லும்
..
ஆலஞ்சியார்
Monday, June 17, 2019
பாவம் தமிழிசை ..
வெயில் தாக்கம் ..
தமிழிசை உளறல் கொஞ்சம் தூக்கலாக கேட்கிறது ..
37 பேர் பதவி பிராமணம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சத்தம் அதிகமாய் கேட்கிறது .. வயிற்றெரிச்சல் ..
..
தண்ணீர் பஞ்சம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லையாம் .. அரசியலில் இருக்கவே அருகதையே இல்லாத கலைஞரின் தயவில் படித்து கரையேறியவர் கதைக்கிறார் .. வீராணம் திட்டத்தை நடப்பில் ஆக்கியிருந்தால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்குமாம் .. கலைஞரின் கனவை நசுக்கியதன் விளைவிது .. அன்றைக்கு பயனில்லாத திட்டமென்றவர்கள் இன்று பின்பாட்டு பாடுகிறார்கள் ..
என்னதான் முந்தைய அரசு செயல்படவே இல்லையென்றாலும் அதன் மீதே குறைச்சொல்வதை முதலில் விடவேண்டும் .. கலைஞர் ஆட்சியில் ஏரிகள் தூர்வாரபட்டன நீர் சேகரிப்பிற்கு அதிக அக்கறை செலுத்தபட்டது ஆட்சிவிட்டு வந்து எட்டாண்டு ஆகிறது இன்னமும் இவர்கள் செயல்படவில்லை என்பதைதான் இவர்கள் பேச்சு சொல்கிறது ..ஒன்றரை ஆண்டில் முழு அரசு இயந்திரத்தையுமே மாற்றி செயல்படவைத்திட முடியும் நூறுநாட்கள் தாருங்கள் அழுகிப்போன ஈரலை செப்பனிடுகிறேன் என சொல்லி செயல்படுத்தி காட்டியவர் கலைஞர்..
ஆனால் இன்றும் ஆட்சி செய்பவரை விட .. புறமிருந்து இயக்குகிற கோழைகள் அதிகம் கதைக்கிறார்கள் .. அதிமுகவை நம்பிதான் நின்றோம் அவர்கள் எமக்கு வேலை செய்யவில்லை தோற்கடித்துவிட்டார்கள் அதிமுக ஆதரவின்றி தேர்தலில் நின்றிருந்திருந்தால் கட்டிவச்ச காசு கூட திரும்ப கிடைத்திருக்காது ..இதுதான் உங்கள் நிலமை ..தன் தகுதி அறிந்து பேசவேண்டும் வார்டு கவுன்சிலருக்கு நின்றால் கூட ஓட ஓட விரட்டுவார்கள் தமிழ் மக்கள் ..
இந்த நிலையில் அணுகழிவால் ஆபத்தில்லை என சர்டிபிகேட் வேறு தருகிறார் தமிழிசை .. கர்நாடக எடியூரப்பா இங்கே கொட்ட கூடாதென தான் சார்ந்த மாநில நலனுக்காக பேசுகிறார் ஆனால் தமிழ் மக்களுக்கெதிராக பேசுகிற ஞானசூன்யமாய் குமரியின் மகள் ..வெட்கபடவேண்டும் .. தகுதியில்லாத தரங்கெட்ட செயலை செய்கிறார்
..
அமைச்சர் வேலுமணி .. தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லை வீண் வதந்தி என்கிறார் ஒருவேளை அவர் வீட்டில் அமைச்சர் என்ற அதிகார வரம்பில் தண்ணீர் மிகுதியாய் இருப்பதால் மக்களின் கஷ்டம் புரியவில்லை .. குளித்து சிலநாட்கள் ஆகிறது .. தண்ணீர் குடம் 10/ 20 என விற்கிறது சாமானியர்கள் வாடகை குடித்தனங்கள் உணவு விடுதிகள் தண்ணீர் பறறாக்குறை அமைச்சருக்கு தெரியவாய்ப்பில்லை .. அமைச்சராக இருக்க தகுதியற்றவர் .. தகுதி இல்லாதவர்களை அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு .. அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களெல்லாம் அமைச்சர்களாக்கியது தான் .. லாயக்கற்றவர்களை நாம் கொண்டாடியதுதான் இதற்கெல்லாம் காரணம் சினிமாகாரனை ரசிப்பதோடு நிறுத்தியிருந்தால் இத்தனை இன்னல்கள் வந்திருக்காது ..
..
அதிமுககாரன் திமுகவை குறை கூறுவதில் கூட ஏற்றுக்கொள்ளலாம் .. ஐந்தாண்டு நலத்திட்டங்களை திமுக செயல்படுத்திவிடும் அதைவைத்தே அதிமுக ஐந்தாண்டை கடத்திவிடும்
ஆனால் பாஜகவை சேர்ந்த தமிழிசையும் பொன்னரும் பேசுவதுதான் வேடிக்கை உங்களுக்கு என்ன சம்பந்தம் என்ன தகுதியிருக்கிறது தமிழகத்தில் எக்காலத்திலும் தனித்து நின்று வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாத சாரணர் தேர்தலில் கூட ஓடவிட்டு அடித்துதுவைக்கிற நிலைதான் ..
மைக் கிடைக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறைச்சொல்லலாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் உளறலாம் என்பது .. திராவிடம் தந்த கருத்துரிமை தான் காரணம்.. பிற மாநிலமாக இருந்தால் வாயிலேயே வெட்டுவிழும்
இங்குதான் தாரதரமின்றி விமர்சிக்கமுடியும் யோக்கியதை இல்லாதவன் கூட இங்கே கட்டவழித்துவிட்டவனை போல பேசி திரியமுடியும் ..
எதற்கும் ஒரு அளவுண்டு.. இவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் ஆம்.. அருகதையற்றவர்களோடு கதைப்பது கூட அறிவுடை செயல் அல்ல.. நமக்குதான் இழுக்கு
தகுதியற்றவர்களின் அரசியலால் தரங்கெட்டு போய் கிடக்கிறது தமிழகம்
..
தமிழகத்திலிருந்து இந்த பாசிசத்தின் அடிமைகளும் இன துரோகிகளும் விரட்டபடவேண்டும்,.. திராவிடத்தின் அடலேறுகள் அதை செய்து முடிக்கும் ..
திராவிடமே இந்த மண்ணில் நிலைக்கும்
..
ஆலஞ்சியார்
Saturday, June 15, 2019
ஈத்தரைகள்
சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு.. பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன..
இதில் கொடுமை என்னவெனில் "எலைட்" தலித்கள் என அறியபடுவோர் தான் அதிகளவில் "புறம்"பாடுகின்றனர்.. யாருக்கு கல்வி மறுக்கபட்டு திராவிடத்தால் கிடைத்ததோ அவர்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் இன்று கல்வியில் ஒரளவு சரியான நகர்வை கண்டுவிட்டபிறகு பொருளாதாரத்திலும் நல்ல நிலை வந்தவிட்டபிறகும் சமுதாயத்தின் அங்கீகாரம் என்பது இன்னும் சமூக கலாச்சார மாற்றம் ஏற்படவில்லை என்ற உண்மையை மறுக்கவில்லை .. ஆனால் பிற மாநிலங்களில் இதுபோல "மேம்பாடு " கிடைத்திருக்கிறதா என்ற உண்மை நிலையை உணராமல் பிற்படுத்தபட்ட பிரிவினர்களும் இதே கேள்வியை கேட்கின்றனர்
எதற்கெடுத்தாலும் முன்பே இந்த புரட்சி நடந்திருக்கிறது.. என "புளித்தமாவை"யே திரும்ப திரும்ப சொல்கிறார்கள்
கலைஞர் வந்து தான் செய்தாரென்பதை ஏற்கமுடியாது..
பெரியார் இல்லாவிட்டாலும் படித்திருப்போம்.. இன்றைக்கும் சாதி ஒழிந்துவிட்டதா .. சாதியை வளர்ப்பதே திராவிடம் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள்...
பேசுங்கள் எதையும் அறிந்துக்கொண்டு அறிந்ததை ஆய்ந்து உண்மைதானா என விளங்கி பின் விமர்சனம் செய்யுங்கள்..
..
சாதியை பார்த்துதானே தேர்தலில் ஆளை நிறுத்துகிறார்கள் என கேட்போருக்கு மறுக்கவில்லை.. அந்தந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் அதே சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்துவதென்பது இயல்பான ஒன்று .அதில் கூட சில இடங்களில் பிற சமூகத்தவரை நிறுத்தியிருக்கிறது.. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றி முக்கியம் என்பதும் அதே வேளை கொள்கை சார்ந்தவர்களை நிறுத்தவேண்டியதும் அவசியம்.. குறைகளே இல்லையா என கேட்டால் உண்டு ஆனாலும் பிற கட்சிகளை விட திமுக மிக நேர்மையாக நடந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது..
..
இனம் மொழி கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை காரணம் அடிப்படையிலிருந்து மாறாத கொள்கைப்பிடிப்பே காரணம்.. தமிழ்மொழியை செம்மொழியாக்கியதொன்றே போதும்.. வள்ளுவனுக்கு சிலை வடித்து வானுயர புகழ் சேர்த்தது .. தமிழ்ப்புத்தாண்டை தை மாதமென்ற சட்டமேற்றியது ..பின் வந்த ஆரியமங்கை தான் சார்ந்த இனத்தின் கலாச்சார திணிப்பை மீண்டும் கொண்டுவந்தார்.. தமிழனின் பண்பாட்டை கட்டிகாப்பதில் எப்போதும் திமுக பின்வாங்கியதில்லை..
..
எந்தவொரு திட்டமானாலும் உடனே சில அறிவுஜீவி..?கள் நாங்கள் ஏற்கனவே சிந்தித்தது நாங்கள் சொல்லிதான் செய்தது திமுக என உளற தொடங்கியிருக்கிறார்கள்
ஏன் அதற்கு முன் இருந்த ராஜாஜி பக்தவச்சலம் போன்றவர்களின் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கவேண்டியதுதானே.. அல்லது மகோரா மற்றும் ஜெயா ஆட்சியில் கேட்டு பெற்றிருக்கவேண்டியதுதானே என்றால் பதில் இல்லை .. பதில் வராது.. ஏனெனில் இவர்களையெல்லாம் அருகில் அண்டவிடுவதே இல்லை அல்லது இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அது எந்த சாதி மதத்தினராக இருந்தாலும் கலைஞரை தவிர மற்றவர்கள் நடத்திய விதம் அப்படிதான்..காரணம் சிந்திக்கும் திறனற்ற எடுப்பார்கைப்பிள்ளையை போல அடுத்தவரின் நிழலில் அறிவில் குளிர்காய்கிறவர்களாக இருந்தார்கள் ..
அல்லது அவர்களிடம் கேட்க ஒருவித பயமிருந்தது.. ஆனால் கலைஞர் எல்லோரையும் கடுமையாக எதிர்க்கிறவர்களின் கருத்தையும் உள்வாங்கியகிறவராக அவர்களின் கருத்தை கோரிக்கைகளை ஏற்கிறவராக அதில் நியாமிருந்தால் நடைமுறைபடுத்த தயங்காதவராக இருந்தார்.. இந்திய வரலாற்றில் உச்சபட்ச ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் கலைஞர் மட்டும்தான் ..
..
பெரியார் இல்லையென்றாலும் படித்திருப்போம் .. சரி..
ஆராயிரம் பள்ளிகளை மூடினாரே மூதறிஞர்..? என நம்பபட்ட ராஜாகோபால் (ராஜாஜி) அப்போது அவருக்கெதிராக ஏன் யாரும் அசையவில்லை .. குலக்கல்வி கொண்டுவந்து அவனவன் சாதி தொழிலை செய்யுங்களென சொன்னபோது என்ன புடுங்கி கொண்டிருந்தீர்கள் .. காமராஜரை நிறுத்தி ராஜா கோபாலையை புறமுதுகிட்டு ஓட செய்தது பெரியார் தானே .. ஆராயிரம் பள்ளியை மூடிவிட்டார் நீயாவது திறந்து எம்ம பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய் என்ற கோரிக்கைதானே .. ஊரெங்கும் துவக்கப்பள்ளி வர காரணமாக இருந்தது.. பள்ளி திறந்தும் யாரும் வர மாட்டேங்கிறாங்கய்யா என்ற போது மதிய சோறு போட்டாவது பசங்களை படிக்க வைத்தது திராவிடம்தானே.. மதிய உணவிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லையென்ற போது பணக்காரர்கள் செல்வந்தர்கள் ..என கையேந்தி.. கடைசியில் விவசாயிகளிடம்.. முதல் மரைக்காய சாமிக்கும் இரண்டாவது மரைக்காய ஊர்கோவிலுக்கும் தரிங்க மூணாவது மரைக்காய எனக்கு தாங்க பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்றாரே .. இதற்கெல்லாம் மூலகாரணமாக ராஜாகோபாலையை வீழித்தி நம் குழந்தைகள் படிககணுமென்ற பாடுபட்ட பெரியாரை ..இவர் இல்லாவிட்டாலும் படிச்சிருப்போமென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்.. பெரியாரின் வழிவந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதானே நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தி..படிப்படியாக உயர்நிலை மேல்நிலையென கிராம்தோறும் கொண்டு சேர்த்தார் ..மாவட்டம் தோறும் கலைக்கல்லூரி .. தொழில்நுட்ப கல்லூரியென ..செய்து இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரியை நிறுவியது இந்த பெரியாரின் நேரடி சீடர் கலைஞர் தானே.. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மகளிர் கல்லூரி மாவட்டம்தோறும்.. ஏன் முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணம் இல்லை.
அடுக்கிகொண்டு போகலாம்..
கல்வியில் புரட்சியை செய்தது திராவிடம்தான்..
..
இவையெல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே என்ன செய்தது திராவிடம் என்பவர்களை எப்படி அழைப்பது
ஈத்தரைகள்..
..
ஆலஞ்சியார்
Friday, June 14, 2019
திமுக...எனும் தரு..
எப்படியும் வீழ்த்திவிடவேண்டுமென கங்கணம்கட்டி செயல்பட்டாலும் திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா ..
அடித்தளம் சரியாக கட்டபட்டிருக்கிறதென்றார் அண்ணா..
..
எத்தனை சூதுகள் நயவஞ்சகங்கள் கூடஇருப்போரையே கூர்தீட்டி எம்மிடமே திருப்பிய தந்திரங்கள் தாங்கள் தமிழர்களென எம்மவரை வாயாலேயே சொல்லவைத்து எவ்வளவு பார்த்தாயிற்று .. ஒரு மொழியை அழித்தொழிக்க நினைத்தால் முதலில் பேசும் மக்களிடம் பிரிவினையை உண்டாக்கு .. இனத்தின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தால் முதலில் நூலகத்தை கொளுத்து மக்களிடமிருந்து கல்வியை பிடுங்கு இதைதான் ஆரியம் மிக சாதூர்யமாக நடந்திவந்தது .. திராவிட இயக்கம் தோன்றியதன் பின்னால் தான் மக்களிடையே கல்வியை பற்றிய விழுப்புணர்வும் நமதான உரிமை அது என்ற தெளிவும் வந்தது எங்கே நம்மிடம் உள்ளதெல்லாம் இதுவரை கட்டி காத்ததெல்லாம் நாம் மட்டுமே அனுபவித்ததெல்லாம் போய்விடுமோ என அஞ்சி மெல்ல பழைய நிலைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை படிபடியாக செய்துவருகிறது ஒவ்வொரு முறையும் வெகுண்டெழுந்து போராட வேண்டியிருக்கிறது .. நீட் தேர்விற்கு அனுமதியை ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது துரோகி மாஃபா பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட்டு இன்று அதை நீக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது எதையும் நேரடியாக எதிர்க்க முடியாமல் திரைமறைவிலேயே நகர்த்தும் வேலை தெரிந்தவர்கள் ..
..
இன்றல்ல ஆரம்பம் தொட்டே எல்லாவற்றையும் தமிழர்களுக்கு எதிராகவே செய்பவர்கள் .. தமிழ்நாடு என பெயரிட வேண்டுமென கேட்டபோது
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர்கள் தமிழ் நாடென்று கேட்கிறார்கள் என கு.க.பாளையம் ராஜகோபால்(ராஜாஜி) டெல்லிக்கு தகவல் அனுப்பிய போது
அன்றைக்கு நாட்டிற்குள்ளே நாடா என நாடாளுமன்றம் கேட்டபோது...அண்ணா சொன்னார்
இந்தியாவே நாடு அல்ல துணை கண்டம் .. நாடென்றால் ஒற்றை கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே இனம் மொழி கொண்டதாக இருக்கவேண்டும்
பன்முக தன்மை கொண்ட பல்வேறு இன மொழி கலைச்சாரம் கொண்டது இந்தியா அதில் தமிழர்களுக்கென ஒரு நாடு என்றார் .. எதை செய்தாலும் அதில் தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழிக்கு தீங்கிழைப்பதையே கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு ..
..
மெல்ல திணிக்கலாமென்று எண்ணத்தில் இந்தி ஆங்கிலம் மட்டுமே என்ற சுற்றறிக்கையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறார் திரு.ஸ்டாலின் தமிழகத்தில் எந்தவடிவில் வந்தாலும் நசுக்கபடுவீர்களென எச்சரித்து திமுக தன் கடமையாற்றியிருக்கிறது இந்தி வேண்டுமென பேசிய மாபொசியை கூட கடந்துதான் கரிபூசியிருக்கிறோம் .. எத்தன் வழிகளுண்டோ முயற்சி செய்யுங்கள் .. பேரருளாளன் கலைஞர் மறைந்தவுடன் பெரிய வெற்றிடம் என்றெல்லாம் பேசி திரிந்து யார்யாரையோ மெருகேற்றி வெளிச்சம் போட்டுகாட்டி சாந்துபூசி .. கடைசியில் இங்கு திராவிட இயக்கத்தின் வேர் ஆயிரம் அடி ஆழ சென்று விரிந்து 'தரு' பரந்து விரிந்து நிழல் தருகிறது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் ..
..
திமுக தமிழகம் காக்கும்
..
ஆலஞ்சியார்
Thursday, June 13, 2019
மொழி
இலங்கை முஸ்லிம்கள் எந்த சூழ்நிலையிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அரபு மொழியை பயன்படுத்த கூடாது என்று இலங்கை அரசு ஆணை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது...
..
மிகவும் மடமையான செயல் எந்தவொரு மொழியும்
அதன் வளமும் பிற மக்களோடு தொடர்பினை ஏற்படுத்தவே தவிர மொழி தீவிரவாதமாகாது .. எந்த மொழி திணிப்பையும் எப்படி ஏற்பதில்லையோ அதைப்போல அந்தந்த மொழி அறிந்தோர் அதன் பயன்பாட்டை நிறுத்தவேண்டுமென சொல்வது அறிவுடை செயல் அல்ல.. இஸ்லாம் அரபுமொழி என்றாலே அது தீவிரவாதத்தின் வாசலென கட்டமைக்கபட்டிருப்பதற்கு ஒருவகையில் அந்த மொழி வழக்கை கொண்ட மதபோதகர்களின் செயல்பாடும் இஸ்லாத்தை அரபி மொழியோடு மட்டுமே தொடர்புபடுத்தியதும் அதை ஒரு "புனித" நிலைக்கு கொண்டுபோய் வைத்ததும் காரணம் .. இஸ்லாம் பயங்கரவாதத்தை எங்குமே எடுத்தியம்பாத போது சிலர் தங்கள் அதிகாரவரம்பை நிலைநிறுத்த செய்த செயல்கள் அதற்கு வேதத்தை .. எது எப்போது எந்த காலகட்டத்தில் இறங்கியது எதற்காக அதை செயல்படுத்தபட்டதென்ற அறிவின்மையால் .. நேரடி மொழியாக்கமென்ற பெயரில் அதன் உட்பொருள் அறியாமல் மேலெழுந்தவாரியாக மக்களிடையே திணிக்கப்பட்டதும்.. அதை தீவிரவாத மார்க்கமென வல்லரசுகள் நம்பவைத்ததும் இவர்களின் பழைய "புனித போர்" Holy War வேறொரு பரிணாமத்தை அடைந்து அதில் முஸ்லிம்கள் மீது உலகளாவியளவில் தீவிரவாதிகள் என்ற "அடைமொழி"யை வைத்துவிட்டார்கள் ..பொது சமூகம் ஒருவித பயத்தோடு இஸ்லாமியர்களை காண கூடிய சூழலை உருவாக்கியதில் சில வல்லரசுகளுக்கு உரிய பங்கு எவ்வளவோ அதிலும் சற்றும் குறையாமல் இஸ்லாமிய அமைப்புகளின் மத போதகர்கள் மதத்தை ரட்சிக்கவந்தவர்களென சொல்லிக்கொண்டோரின் பங்கும் உண்டு
..
மொழி என்பது ஒரு ஊடகம் .. சில மொழிகள் செத்தொழிந்து போயின காரணம் எந்தவொரு மொழியும் அதன் சிறப்பு இலக்கணத்தில் இருக்கவேண்டும் மக்கள் மொழியாக இருந்தால் அதை எந்த சக்தியாலும் அழித்திட முடியாது .. தமிழ் நிலைத்து நின்றதற்கு "திணைமரபு " இலக்கணமே காரணம் .. சமஸ்கிருதம் செத்ததற்கு இலக்கணமில்லாததே காரணம் .. தெய்வமொழி என்பதாலோ.. நிலைத்திடாது அரேபிய மொழி அந்த மண்ணின் மொழி அதை மதத்தின் மொழியாக கருதியதால் இந்த இழிநிலை ..
வெகுமக்கள் பேசுகிற மொழியும் கூட..
..
ஜப்பான் மற்றும் சீன நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களில் அரபு மொழி எழுத்துக்களை பயன்படுத்தி சந்தை படுத்தி வருவதை நாம் அறிய முடிகிறது.. 54 நாடுகளில் பேசபடுகிற மொழி கீழைநாடுகளின் ஒருவித மதரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய மொழி பல்வேறு நாடுகளின் அலுவல் மொழியாகவும் இருக்கிற மொழியை இலங்கை போன்ற வளைகுடா பொருளாதாரத்தை பெரிதும்
நம்பியிருக்கிற நாட்டில் தடை என்பது கேலிகூத்காக முடியும்...எந்த ஒரு மொழியும் எப்படி பயங்கரவாத மொழியாக அமைய முடியும் அதற்கான சாத்தியங்கள் எவ்வாறு ஏற்படும் என்கிற சராசரியான அறிவு கூட இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்று தான் நாம் கூற முடியும். இதன் பின்னில் குறிப்பாக சில பௌத்த துறவிகள்..? இது போன்ற வெறுப்பு தன்மைக்கு காரணம் என்று ஸ்ரீ லங்கா மீடியாக்கள் கருத்து தெரிவித்துள்ளன
..
#மொழி
..
ஆலஞ்சியார்
Tuesday, June 11, 2019
காதல்
புரிகிறதா.
என் பேசும் விழியின்
பேசாமொழி..
உனக்கு புரிகிறதா..
கண்களில் காணும்
காதல் பொய்..
கடைவிழி தேடும்..
காமம் பொய்..
காந்த விழிசொல்லும்
கவிதை பொய்..
கள்ளத்தனமாய்..
நீ..
மெல்ல சொல்லும்..
எல்லாம் பொய்..
..
அன்பு வேண்டுமா..
ஆசை வார்த்தையை குறை
அடுக்கடுக்காய்
மாயமொழியின்
உளறலை விடு..
கண்ணி வைத்து
எனை கவிழ்க்கும்
கடைவழியை அடை..
..
அன்பு..
இதயத்தில்
கனிந்ததாய் வேண்டும்
இதழ் வழி வரும்
காய்ந்த மலராய் அல்ல..
..
காதல்..
காதலாய் வேண்டும்..
..
என்ன சொல்லி விட்டேன்
எழுந்து செல்கிறாய்..
..
நியாயமா
பேசவந்ததை
பேசாமலேயே
போகிறாய்..
..
உன் உதடுவரை
வந்த வார்த்தை
மொழியாய் விழாமல்
மௌனிதமாய்
போனதேன்..
..
ஏதேனும்
எதைப்பற்றியேனும்..
எதுவாகினும்..
அல்லது
பொய்யேனும்
பேசியிருக்கலாம்..
..
இதமாய்
இல்லையெனினும்
கொஞ்சம்
கடுத்த வரிகளிலாயினும்
ஏதேனும்
சொல்லி இருக்கலாம்....
..
எனக்கு
பிடிக்காத ..
பொய்யர்கள் மொழியில்
புராண கதையேனும்
சொல்லியிருக்கலாம்..
..
ஏதேனும்...
அருகில் அமர்ந்து
ஆசைமொழி..பேசி
அர்த்தமற்ற சிரிப்பை
அழகாக தந்திருக்கலாம் ..
..
//
என்ன இருக்கிறது
பேசயென்கிறாய்..
அதுவும் சரிதான்..
..
நீயும் நானும்
தனிமையிலெனில்..
பேச என்ன இருக்கிறது..
..
இதயம்
பேசும் மொழி..
வார்த்தையாய்
வந்தால்..
#மெய்யிழக்கும்..
..
ஆலஞ்சியார்
Friday, June 7, 2019
கலைஞர்96
இன்று ..
குவைத் பன்னாட்டு திமுக நடத்தும்
கலைஞர் 96 ..
செம்மொழிநாள் .. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் விழாவில் ..
Banu Iqbal பானு இக்பால் .. மாண்பிமை நாசர் போன்ற ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள்
அவர்கள் முன் ..
நானும் சிறிதாய் முணுமுணுக்க வருகிறேன்
கவிதை இதோ..
இது கவிதையில்லையெனினும் கவலையில்லை ..
பேராற்றல் கொண்டவர்கள் முன் சிறிதாயேனும் பங்கேற்பதில் மகிழ்ச்சி
கலைஞர் அரங்கில் அரங்கேற்றுவதற்கு முன்
இதோ.. இங்கே..
*********************************
#கலைஞர்கருணாநிதி..
..
தமிழகத்தின் தாரக மந்திரம்
எல்லா பண்ணைகளிலும்
விளைச்சல் தரும் வீரியவிதை
எதிரிகளின் ஜீவாதாரம்
உரக்க
உச்சரிக்கவில்லையெனினும்
உதட்டால்
முணுமுணுக்கவாவது
செய்கிறார்கள்
மவுனமாய் மனதுக்குள்
திரும்ப திரும்ப
உச்சரிக்கிறார்கள்
உச்சரித்தால்
சிலருக்கு
சோர்வு போய்
சோறு கிடைக்கிறது..
உரக்க உச்சரித்தவனும்
உள்ளத்தில் பூஜித்தவனும்
கொடூரமாய் கொரித்து
கொட்டியவனும்..
யாராயினும்
சோறு உண்டு ..
..
தமிழகத்தின்
கலை இலக்கியத்தில்
அரசியலில் ..
ஆன்றோர் சபையில்..
கல்வியாளர்கள் ..
கருத்தாளர்கள்..
மறுப்பாளர்கள்..
மதியாளர்கள்..
மகான்மார்..மத்தியில்
இப்பெயர் பிரசித்தம் ..
..
இந்த கிழட்டு சூரியனின்
சுழற்சிதான்..
வக்கற்றவனுக்கு.
அரசியலில்
வக்கற்றவனுக்கும்
வாழ்வு தந்தது
..
எத்தனை அம்புகள்
அத்தனையும்
மாலையாய் கழுத்தில் விழுகிறது
பாவம் எதிரிகள்
சிலர் மூர்ச்சையாகிறார்கள்
..
அரைகுறைகள்..
அறியாதுபோய்..
ஆணியடிக்க நினைக்கிறார்கள்
அடித்தபிறகுதான்..
அவர்களுக்கே புரிகிறது..
தன் கை மாட்டிக்கொண்டது..
பாவம் அறிவிலிகள்
உணர்ச்சியின்..
கொந்தளிப்பில்..
வாய் உளறுகிறார்கள்
..
எங்கிருந்து வந்தது
இவ்வளவும் என்கிறார்கள்
மந்திரிகுமாரியிலேயே..
சில ஆயிரங்களை கண்டவர்..
விமர்சனம் செய்வோர் அறிக
திருட்டுரயிலேறி வந்தாய்
சொல்கிறீர்..
கலைஞரே சொல்கிறார்..
பக்கத்தில் என்னோடு
பயணம் செய்தவன் போல் பேசுகிறார்
பட்டாமிராசு இல்லையென்றாலும்
பரதேசியில்லையென்றார்
போதிய வருவாய் இருந்ததென்றார்
..
தமிழகம்...
கலைஞர் பெயரை
உச்சரிக்காமல்
விடிவதேயில்லை..
மறைந்ததாய்
பொய் சொல்கிறார்கள்
தினம் தினம்
விடியல் தருவதே
இவர் தானே
இவர் பெயரைதான் ..
இந்தியாவே உச்சரிக்கிறது ..
தொலைநோக்கோடு தீட்டியதெல்லாம்
இந்தியாவே கடைபிடிக்கிறது
அரசியலின் அரிச்சுவடியும்
அரசியல் இலக்கணமும் இவன்தான்..
புதியதொரு இந்தியாவை
கட்டமைப்பதாய் சொல்வோரே ..
கலைஞர் 70 களில் கட்டமைத்ததைதான்
இன்று .. கடைபிடிக்கிறீர்
..
கலைஞரே..
எங்கள் கவியே
காவியமே ..
எங்கள் மூச்சே
திராவிடப் பெருவுடையே
நவீன தமிழகத்தின் தந்தையே
சமூகநீதியின் போர்வீரனே..
பெரியாரின் பெருஞ்சீடனே..
பேரறிஞரின் தம்பியே
எம் தலைவ..
உன்புகழ் நிலைத்துநிற்கும்
உன்னைப்போலொருவனை
தமிழகம் கண்டதில்லை
தொட்டதெல்லாம்
தூயபார்வையும் தொலைநோக்கும்
பகுத்தறிவும் பண்பாட்டு சிறப்பும்
கருணையும் கருத்தும்
கண்ணியமும் ஏழைகள்பால் கவலையும்
விளிம்பில் நிற்போரை காத்துநிற்கும் அரணும்
கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும் உரிமையென ஓயாது உழைத்தமையும் ..
ஒவ்வொரு தனிமனிதனும்
உன்னால் உயர்ந்தான்
உன் உழைப்பால்
உன் திறனால்
உன் திட்டத்தால் உயர்ந்தான்
நீரின்றி உலகில்லையென்றார்
நீ யின்றி தமிழகத்தின் உயர்வில்லை
பேராற்றலே
பேரன்பே..
பேரருளே ..
வாழ்க ..நீ..
உன் புகழ் வாழ்க!!
..
ஆலஞ்சியார்
Thursday, June 6, 2019
செம்மொழி தினம்
பார்பனர்கள்கள்_தமிழர்களா
கும்பகோணம் மடத்தின் தலைவர் காஞ்சி பெரியவர்
தமிழை நீசமொழி என்றார் சமஸ்கிருதம் மட்டுமே தெய்வத்தோடு பேசும் மொழி என்றெல்லாம் தெய்வத்தின் குரலில் அளந்தார் .. ஆனால் பார்பனர்கள் தங்களை தமிழர்களாக தேசியளவில் முன்னிறுத்தினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஏச மறப்பதில்லை தமிழர்களை அவர்கள் தங்களின் பிரதான எதிராளியாகவே கருதுகிறார்கள் காரணம் அவர்கள் தங்களின் கோட்பாட்டிற்குள் வருவதில்லை/ அடைக்கமுடியவில்லை
பாஜக வின் ராகவனும் பத்ரியும் தமிழை எப்படி காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் சொல்லலாம் கூடவே எங்கள் #தமிழ்மொழி..என சேர்த்துக்கொள்கிறார்கள்..
..
#பெரியார்
முதலில் மிகதெளிவாக சொன்னார்..
மொழியில் சீர்திருத்தம் செய்யாமல் எந்த மொழியும் வளராது..சமகாலத்திற்கு பொருந்துகிறார்ப்போல் வடிவமைக்கப்படாமல் இருப்பதைதான் பெரியார் குறிப்பிட்டார் ..
பெரியார் சீர்திருத்தம் செய்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் தான் இந்த கணணி யுகத்திலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது..
தமிழைப்படித்து விட்டு சாமியாராக போனவர்கள் அதிகம் பட்டினத்தார் தாயுமானவர், வள்ளலார் போன்றோர்..அதையும் பெரியார் பலஇடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்..
தமிழ் படித்து விட்டு மடமை பேசியவனே அதிகம் யாரும் பகுத்தறிவு பேசவில்லை என்றும் குட்டுவைத்தார் பெரியாரை ஒரு பிரேமிற்குள் அடைத்துவிடமுடியாது அவர் தனக்கு மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுபற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடப்பற்று என்று சொன்னவர்..
விடயத்திற்கு வருவோம்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும் #இனத்தால் ..தமிழனில்லாத ஆரியர்கள்..
வடமொழி கலப்பிலேயே பேசும் சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் தமிழோடு கலக்கும் ..இவர்கள் தமிழர்கள் அல்லர்..
தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே தமிழன் என்று பொருள்கொள்ளமுடியாது..
எனக்கு ..ஆங்கிலம் தெரியும் பிரஞ்சு தெரியும் எனவே நான் ஆங்கிலேயன் பிரஞ்சுகாரன் என ராகவன் கோஷ்டி சொல்லுமா..
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை..
இப்படிதான் பாடினார்..
#அண்டிப்பிழைக்க_வந்தஆரியக்கூட்டம்
#பெரியார் பாப்பான் என்றே அழைக்கவும் சொன்னார் பிராமணன் என்றெழ்த்தால் நாம் அவன் சொல்லும் நால்வர்ண கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவராவோம் அவன்
நம்மவன் இல்லையென்றார்.. தன்னை தமிழனென சொல்லி திரிகிறான் அதிலிருந்து வேறுபட்டு இனங்கானவே திராவிடன் என்ற சொல்லி பயன்படுத்தியதாகவும் சொன்னவர் பெரியார்
..
#பாப்பான்..
தமிழ் இனத்தின் பிரதான எதிரி..
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ..இனத்தின் பெருமைக்கு மிகப்பெரிய இடையூறாய் இருக்கும் இவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்வதும் தங்களை உயர்வாக எண்ணி மகிழ்வதும் ஒருவகை மனநோய்
..
தமிழ் செம்மொழியாவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவனும் பாப்பான் தான்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது தினமலர் இனி விலைவாசி குறைந்து விடும் என கிண்டலடித்தது குறிப்பிடதக்கது செத்த மொழி சமஸ்கிருதத்தை உயர்த்திபிடிக்கவே மும்மொழியென பெயரில் ஏதேனும் ஒன்றை கற்கலாமென சொல்லி .. பிற மொழிக்கு ஆசிரியர் கிடைக்கவில்லையென கதையடித்து சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிற முயற்சிதான் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் ..
அதேபோல்
ஹிந்தி மொழியில் இரண்டே இலக்கியம் தான் ராமாயணமும் ரெயில்வே கைடும் என்றார் அண்ணா.. மொழி வளமில்லாத தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது மற்றும் ஹிப்ரூ மொழி வளத்தை தனக்காக்கி கொண்ட பேசும் மொழி ஒருநாட்டின் பொதுமொழி என்பது கையிருப்பு இல்லாமல் கதையளப்பதைப்போல சிதைந்து போகும் மொழி உயர்ந்ததெனில் விரும்பி கற்பார்கள் பிழைப்பிற்காக எனில் அதில் எந்த பயனும் ஏற்படபோவதில்லை ..
..
தமிழ் மீதும் தமிழர்கள் மீது தீராபகை கொண்டு திரியும் பார்புகளை அறிவுக்கொண்டு வெல்வோம்
#எம்மொழி_செம்மொழி ..
..
ஆலஞ்சியார்
Sunday, June 2, 2019
கலைஞர்
யோசிக்கிறேன்
எண்பதுகளில் திராவிட இயக்க வரலாற்றை நான் படிக்க தொடங்கிய நாட்களில் அப்படியொன்றும் ஈர்ப்பு மு.க.மீது வந்துவிடவில்லை..
பெரியாரிய கருத்துக்களில் எனக்கேற்ப்பட்ட தாக்கம் என்னை செதுக்கிய காலகட்டம் அது....
..
ஒரு முறை தஞ்சைக்கு கலைஞர் வருகிறார் என்றார்கள்..
அதற்கு முந்தைய தினம் என்று நினைக்கிறேன் ..வானொலியில் கலைஞர் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்துகிறார் ..
வித்தியாசமான விடயம்
வாங்காத கப்பலுக்கு பேரமா ..
நான் தான் கப்பலையே வாங்கவில்லையே அதற்குள் கருணாநிதி ஊழல் என்கிறார் என எம்ஜிஆர் பேசிய நேரம்.
..
வானொலியில் விளக்கம் தருகிறார்..
வாங்காத கப்பலுக்கு பேரமா என்கிறார்...
//
அன்றாடம் நீங்கள் ரசிக்கும் திரைப்படம் மூலம் விளக்கம் தர நினைக்கிறேன்..
தன்னந்தனியே ஒருஅழகி தாமரை முகத்தாள் தனியே சென்றிடுவாள் அவளை சில முரடர்கள் வழிமறித்து கற்பை சூறையாட முனைவர் ..
அந்நேரம்..
மரத்திலிருந்தோ, மதில் சுவற்றிலிருந்தோ கதாநாயகன் பொத்தென்று குதிப்பான்..
பின்னர் என்ன நடக்கும் ..
முரடன் ஒருவனுக்கு கால் ஒடியும் ஒருவனுக்கு கை ஒடியும்..
பின் கதாநாயகியை பத்திரமாக அழைத்துச்செல்வார்..
..
அப்போது அடிப்பட்ட முரடர்கள் ஏனப்பா கதாநாயகரே நாங்கள் தான் அவளின் கற்பை சூறையாடவில்லையே ஏன் எங்களை அடித்தாய் என கேட்டால் எப்படி நகைச்சுவையாக இருக்குமோ அப்படித்தான் வாங்காத கப்பலுக்கு பேரமா என்பதும் என சுவையாக பேசினார்..
மறுதினம் அவரின் பேச்சை கேட்க ஆவல் மேலிட தஞ்சை திலகர்திடலுக்கு
சென்றேன்.
அதற்கு பிறகு ஏறகுறைய எல்லா பேச்சுக்களையும் எழுத்தையும் பல வடிவங்களில்..( சிடி ,வானொலி,தொலைகாட்சி) பார்த்து கவனித்து வருகிறேன்..
..
இவரால் மட்டும் எப்படி சுவை மாறாமல் எழுத பேச முடிகிறது.. என்று வியந்ததுண்டு
ஒற்றை வரியில் சிலம்பமாட எப்படிமுடிகிறது
"உணவுக்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்" என்னதொரு உவமை ..
அரசியலில் எதிரிகளின் செயல்பாட்டை...தீர்மானித்து அவர்களை தன்னைச்சுற்றியே தமிழக அரசியல் களத்தை இயக்குகிற..இயங்க வைக்கிற வல்லமை
இந்திய அரசியல் கணிடிராததது
அரசியல் இலக்கணம் இவர்.. இவரின் கொள்கை சார்ந்த பணிகள் செய்திட்ட நலதிட்டங்கள் அதனால் பயன்பெற்றோர் பட்டியல் .. தொலைநோக்கு சிந்தனை காலகடந்தும் இந்தியாவே வியந்து ஏற்கும் பயணிக்கும் இவரது செயல்கள் திட்டங்கள்
வார்த்தையில் வடித்திட முடியாது..
இன்றைய சில்லறைகள் முதல் அரசியலின் பிஎச்டி படித்தவர் வரை
இவரால் மட்டுமே இவரை எதிர்த்து, அல்லது ஆதரித்து செயல்ப்பட்டால் மட்டுமே அரசியல்களத்தில் சிறுதுநேரமாவது நிற்கமுடியும் என்கிற நிலையை கடைசி வரை உருவாக்கியவர்.. மறைந்தும் இவரைச் சுற்றியே அரசியல் இயங்குகிறதே .. ஆம் அரசியல் சூரியன்
..
கலைஞர் அரசியல் வேறல்ல..
இதுவே கலைஞர் என்னும் பெருமகனின் ஆளுமையை ஒருநாளில் எழுதிவிடமுடியாது
இந்திய துணைகண்டம் கண்ட
ஒப்புற்ற ஒளிவீசும் தலைவர் கலைஞர்...
நிறைய விடயங்கள் மிச்சம் இருக்கிறது..
பின்னர் எழுதுகிறேன்..
#கலைஞர்96
..
ஆலஞ்சியார்
Saturday, June 1, 2019
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு
இந்தி திணிப்பு ..
எந்தமொழி மீதும் வெறுப்பில்லை ஆனால் எம் மீது திணிக்கபட்டால் எதிர்ப்பதை தவிர வேறு வழியில்லை திருச்சி சிவா சொன்னதைப்போல கந்தக கிடங்கில் தீவைக்க ஆசைபடுகிறது எரித்து சாம்பலாக்கிவிடும் எச்சரிர்கை ..
மத்திய அரசு பதவியேற்று 48 மணிநேரம் திகைவதற்குள் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது கேபினெட் கூட்டம் முறைப்படி கூடாதபோது எங்கிருந்து தயாரிக்கபட்டது இந்த கொள்கையென அறிவோம் தென்னகம் குறிப்பாக தமிழகம் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளாத போது .. அடிமை அதிமுக அரசை வைத்து காரியம் சாதித்துக்கொள்ளலாமென பாசிச பாஜக நினைக்குமேயானால் எந்த விலைக்கொடுத்தும் திமுக அதை தடுக்கும் ..
..
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் அப்போதுதான் தான்தோன்றிதனமாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் திணிக்கபடும் திட்டங்களும் கொள்கைகளும் தடைய முடியும் ..எதையும் யார் மீதும் திணிப்பதென்பது பாசிசம் .. என்ன உணவு உண்ணவேண்டுமென சொல்வதும் எந்த மொழியை கற்கவேண்டுமென சொல்வதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அதே போல் தமிழை பிற மொழி பேசுவோரிடம் திணித்தாலும் அப்போதும் எதிர்ப்போம் .. மொழி அரசியல் செய்வதாக சில அறிவிலிகள் கூச்சலிடுகிறார்கள் நிச்சயமாக இல்லை...எம் மொழியை இரண்டாந்தரமாக்க முயலும் முயற்சியை முலையிலேயே கிள்ளியெறிகிறோம்,.. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது கூட ஊடகங்கள் கட்டியவை உண்மையில் "இந்தி திணிப்பு எதிர்ப்பு" போராட்டமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கவேண்டும் ..
..
நாடாளுமன்றம் கூடியதுமே திமுக எம்பிகளுக்கு வேலை வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்புவதோடு சபை நடத்தவிடகூடாது எதிரியே தீர்மானிக்கிறான் எதை ஆயுதமாக்கவேண்டுமென்று .. மொழிப்போர் என்பதை விட மொழி திணிப்பு போர் என பிரகடனம் செய்து படையோட்டம் நடத்த வேண்டும் .. தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது ஹிப்ளு மொழி இலக்கணத்தை கொண்ட மொழி 1840 களில் உருதுவிற்கெதிராக வடிவமைக்க பட்ட மொழி .. 1920 கூட அரசாங்கம் வெளியிட்ட ரூபாய் தாளில் இல்லாத மொழி நம் மீது திணித்து .. பல்லாயிரம் ஆண்டாய் இலக்கணம் மாறாமல் .. பன்மொழிகளை கிளை மொழியாய் கொண்ட தாய்மொழி தமிழ் .. "உண்மையில் மொழிகளின் தாய்" எங்கள் தமிழ் மொழி .. உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுதந்த பழைமையான மொழி இருக்க எதற்கு இந்தி
..
பன்மொழி பேசும் நாட்டில் ஒரு மொழியை முன்னெடுப்பது திணிப்பதென்பது சிதைவை ஏற்படுத்தும் .. மராட்டியர்கள் மீது திணிக்கபட்ட இந்து மொழியால் தங்கள் மொழி வளத்தை இழந்தார்கள் அரசில் அலுவல்களில் மராட்டிய மொழியை திரும்பவும் கொண்டுவர போராட வேண்டியிருந்தது அதே நிலை பிற மாநிலங்களுக்கும் வரலாம் எசசரிக்கை
வரும்முன் காப்போம் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)