Thursday, May 31, 2018

நூலகம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் 'மகாத்மா.' கரண்டியைப் பிடுங்கி விட்டுப் புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் 'தந்தை பெரியார்.' தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் 'ஜவஹர்லால் நேரு.' என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் 'பெட்ரண்ட் ரஸல்.' மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.' வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் 'நெல்சன் மண்டேலா.' பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி 'லெனின்' கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம். ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் 'சார்லிசாப்லின்.' ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் 'வின்ஸ்டன் சர்ச்சில்.' பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் 'மார்டின் லூதர்கிங்.' தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் 'பகத்சிங்/' நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றாராம் 'ஆபிரகாம் லிங்கன்.' ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி என்றாராம் 'ஜூலியஸ் சீசர்.' உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்றாராம் 'டெஸ்கார்டஸ்.' போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா, ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு என்றாராம் 'இங்கர்சால்.' சில புத்தகங்களைச் சுவைப்போம் சிலவற்றை அப்படியே விழுங்குவோம் சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம் என்றாராம் 'பிரான்சிஸ் பேக்கன்.' புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றாராம் 'லெனின்.' உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை என்றாராம் 'ஆஸ்கார் வைல்ட்.' உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு என்றாராம் 'சிக்மண்ட் ஃப்ராய்ட்.' பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ என்றாராம் 'மாசேதுங்.' இவர்கள் சொன்ன அனைத்தும் மொத்தமாக ஒரே இடத்தில் பெற வேண்டுமா? கழகத்தின் கொள்கை முரசம் அண்ணன் திருச்சி என் சிவா அவர்களின் உரைகளைக் கேளுங்கள்.

No comments:

Post a Comment