Sunday, May 27, 2018
கோமாளி..
நான்காண்டில் பிரதமர் மோடி..
..
அதிகம் பேசினார் மக்கள் வெளியில் .. நாடாளுமன்ற சபையில் ஊடகங்களில் பேச பயந்தார் ..
சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை .. பொய்யான தகவலை கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் தந்தார் ..அதிக சுற்றுலா என்ற பயண பிரியராய் ..
அய்ரோப்பாவில் யாரேனும் செத்தால் அழுவார் .. இந்தியாவிற்குள் .. சுட்டு செத்தாலும் வாயை திறக்கமாட்டார் .. ஒரே நாளில் ஹீரோவாக நினைத்து பணமதிப்பை செய்து ...அந்த பணத்தைப் போல மதிப்பிழந்துப் போனார்.. குறிப்பாக தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒருவித பதட்டத்தோடு வாழும் சூழல்.. பார்பனர்கள் பதவி உயர்வு 480% விழுக்காடு அதிகரித்திருக்கிறது .. ஆர்எஸ்எஸ் திட்டத்தை முன்னெடுப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறியளவில் கூட சமூகத்தின் ஒடுக்கபட்டவர்களுக்கான திட்டத்தில் முனைப்பு காட்டுவதில்லை.. துறைசார்ந்த வளர்ச்சி பின்னோட்டு செல்கிறது ..அதை சுட்டிகாட்டினால் கோபம் வருகிறது.. நீதித்துறை ஒருவித பதட்டத்தோடு செயல்படுவதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே வாய்விட்டு கதறும் நிலை.. அரசியல் சட்டத்தின் நியாயமான பக்கங்களில் காவி நிழல்படர தொடங்கியிருக்கிறது.. மநுநீதி மட்டுமே பேசபடுகிறது.. தேர்தல் நடைமுறை நம்பிக்கை இழந்து வருகிறது.. தொழில் அதிபர்களின் வாரா கடனுக்காக .. நாடுகடத்தபடுகிறார்கள் ..(ஓடிபோயிட்டாங்கன்னு சொன்னா அசிங்கம்)..
எரிப்பொருள் விலையை கேட்டாலே பற்றி சுவாலையாய் எரிகிறது.. ₹80 தொட்டு நெருங்குது ₹100 என்னவொரு அதிசயதக்க வளர்ச்சி ..
யாருமே கேட்க கூடாது .. மீறி கேட்டால் பக்தர்கள் ஒன்று கூடி தேசவிரோதி பட்டத்தை தருவார்கள் ..
ஜனநாயகம் மெல்ல சாகிறது..
..
கிரிக்கெட் வீரரின் .. உடற்கட்டுற்கு போட்டி போட தெரிந்த பிரதமருக்கு .. பத்திரிக்கைகளை கண்டால் பயம் ஏதாவது சிறிதேனும் நன்மைபயக்குமாயின் அதை பெருமையோடு சொல்லி திரியலாம்.. பொய்யை மட்டுமே நம்பி .. ஆட்சி செய்பவரிடம் எதை எதிர்பார்ப்பது.. ஆரம்பத்தில் மோடிக்கு முட்டு கொடுத்தவர்கள் மெல்ல மெல்ல தெளிந்து தங்களின் கோபத்தை காட்டுகிறார்கள்.. பார்பனர்கள் அவர்களின் அடிவருடிகள் தவிர மற்றவர்கள் மோடி அரசின் மீது கடும் அதிருப்தி .. காங்கிரஸின் மீதான கோபத்தில்
தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள் ..
..
சிறந்த பொருளாதார நிபுணரை வேண்டாமென்று வைத்ததின் விளைவு இப்போது அறுவடை செய்கிறோம்.. ஒரு சில முதலாளிகளின் வளர்ச்சிக்காக மொத்த இந்தியாவும் கசிக்க பிழிய படுகிறது..அரைகுறைகள் நிதித்துறையிலும்
கல்வித்துறையிலும் அமைச்சர்களாக வந்த கொடுமை தீர்வதற்குள் .. சாமியார்கள் நாட்டை ஆளும் கொடுமை.. மாடுகளுக்கு (ஆக்ஸிஷன்) பிராணவாயு தந்து பச்சிங்குழந்தைகளை கொல்கிறார்கள்.. மாட்டுக்காக மனிதனை கொல்வது நீதியென்றானது.. சுவாதிகளுக்காக பொங்கும் நீதி.. அனிதாவிற்கும் ஆஷிபாவிற்கும் பொங்குவதில்லை..
சிறிய குழந்தைகளை தெருவில் விளையாட விட கூட அஞ்சுகிற நிலை .. வார்டு உறுப்பினருக்கு கூட வக்கில்லாத நிலையில் ஆட்சி செய்யும் அராஜகம் .. 21 மாநிலங்களில் ஆட்சியென்று அதிலும் பொய் .. எல்லா நிலையிலும் மதத்தை முன்னிறுத்தும் கேடுகெட்ட நிலை .. ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களை காவு கேட்கும் கொடுமை.. பன்முகம் கொண்ட இந்தியாவை .. பாசிச முகமாக மாற்றும் அயோக்கியத்தனம் .. என் மதிப்பிற்குரிய நண்பர் அக்ரஹாரத்து அதிசய பெண்மணி.. உமா அவர்கள்..
சில தினங்களுக்கு முன் ..Stupid government everywhere.. ரொம்ப பயமா இருக்கு தோழர் என்றார்.. எவ்வளவு சத்தியமான வார்த்தை ..
..
#நவீனகோமாளி..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment