Tuesday, May 22, 2018

தூத்துக்குடி..

குஜராத்தை சேர்ந்த அகர்வாலுக்காக தமிழகத்தை இரத்த கலவரமாக மாற்றியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ஸ்டெர்லைட் உரிமையாளர் அகர்வால் பிரதமர் மோடியின் நண்பர். ..மோடி பிரதமராகப் பதவி ஏற்ற சமயத்தில் தனிப்பட்டு அழைப்பு விடுத்த ஒரு சிலரில் இந்த அகர்வாலும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.. .. மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் இது எந்த அரசியல்கட்சிகளையும் நம்பாமல் .. கட்சிகளை பின்துணையோடு போராடினால் அரசியல் சாயம் பூசிவிடுவார்களென மக்களே ஒருங்கிணைந்து போராடினார்கள்.. லட்சத்திற்கும் அதிகமானோர் கூடிய போராட்டத்தில் .. மாடுகளை அவிழித்துவிட்டது யார்..? கலெக்டர் ஆபிஸ் உள்ளே யாரையும் அனுமதிக்காத போது அங்கே தீ மூட்டியது யார்.. போலீஸ் ஜீப்பை காவலர்களே கொளுத்திவிட்டு துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வாங்கியதாக செய்திகள் வருகின்றன.. அதெப்படி ..போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் கொல்லபட்டிருக்கிறார்கள்.. இந்த போராட்டத்தை ஒடுக்க எங்கிருந்து உத்தரவு வந்தது.. யாரை குஷிபடுத்த இந்த நாசகார செயலை கேடுகெட்ட எடப்பாடி அரசு செய்தது.. மக்களின் உயிரை கொன்று அந்த குருதியை எடுத்து யாருக்கு அபிஷேகம் செய்கிறது இந்த கேவலமான எடப்பாடி அரசு.. தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து போலீஸ் அராஜகம்.. தமிழகத்தை காஷ்மீராக்க முயற்சிக்கிறதா..இந்த பாசிச அரசு.. .. ஊடகங்களுக்கு வாய்பூட்டு போட்டு மக்கள் மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கிறது தமிழக அரசு. இந்த கையாலாகாத அரசால் எந்த உத்தரவையும் போட முடியாதென்று நாம் அறிவோம் .. பிறகு இந்த அரசை இயக்குகிறார்களோ அவர்களே இந்த துப்பாக்கி சூட்டிற்கு மூலக்காரணம்.. போராட்டத்தை சிதறடிக்க கொல்வதுதான் முடிவென்று செயல்பட்டிருக்கிறார்கள்.. இந்த அநீதிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .. மக்களை பலி கொடுத்து ..இந்த ஆலை வேண்டுமா என அரசு முடிவெடுக்கவேண்டும் புரட்சிகர முன்னணி இயக்க தோழர்கள் தமிழரசன், சண்முகம், வினிதா, தங்கையா, கிளாட்சன், ஜெயராமன் என்று 6 பேர் அதிமுக அரசின் ஆணைப்படி போலீசால் படுகொலை. ஒரே இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை திட்டமிட்டு கொன்றதை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்காது.. போலீஸுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வெனிஸ்டா என்ற 17 வயது பள்ளி மாணவியின் வாயிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றசெயல் கொடுமையிலும் கொடுமை.. இது திட்டமிட்ட துப்பாக்கி சூடு.. .. அடிமைகளை வைத்து அடிமைகளுக்கு தெரியாமல் கொலைவெறி தாக்குதலை துப்பாக்கி சூட்டை அரங்கேற்றியது யார்..? துப்பாக்கி சூடு நடந்தது தனக்கு தெரியாதென்கிறார் எடப்பாடி .. தவிர்க்கமுடியவில்லையென்கிறார்.. ஜெயகுமார்.. போராட்டம் கலவரமாக மாறினால் துப்பாக்கி சூடு நடக்குமென்கிறான் எச்சை.. இனியும் இந்த அரசை கலைக்காமல் இருப்பது மக்களுக்கு செய்கிற துரோகம்... எந்த வழியிலாவது அது அறநெறி தவறியசெயலென்றாலும் .. மக்களுக்காக இதை செய்தே தீரவேண்டும்.. கசப்பான மருத்தை உண்பதில்லையா .. கொடிய நோயை விரட்ட ... எதை செய்தாவது .. கேடுகெட்ட துரோகி எட்ப்பாடியை ஆட்சியிலிருந்து விரட்டவேண்டும்.. மக்களை கொல்லும் அரசு தேவையில்லை.. இனியும் பொறுப்பதென்பது நேர்மை நீதி பேசுவதென்பது .. பயனற்ற செயல் .. திமுக உணரவேண்டும்... .. The state of Tamil Nadu must be dissolved.. தமிழக அரசு கலைக்கபடவேண்டும்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment