Saturday, May 26, 2018

குருக்கள் சூழ் உலகு

சாதிவெறியும் இனவெறியும்.. குருவும் குருமூர்த்தியும்.. மறைந்த காடுவெட்டி ..சாதீய தீயில் குளிர்காய்ந்தவரெனில்.. குருமூர்த்தி ஒட்டுமொத்த இனத்தின் மீதான தாக்குதலை மிக எளிதாக செய்யும் சமூகவிரோதி.. தங்களின் இன நலத்திற்காக ஒடுக்கபட்ட சமூகத்தின் மீதான வக்கரமத்தை இடைசாதி மீது திணித்து அது முனை மழுங்கிவிடாமல்.. கூர்த்தீட்டும் சாணன்.. .. குரு.. நிறைய இருக்கிறது பேச.. ஆரம்பத்தில் மீன்சுருட்டி வட்டாரத்தில் அறியபட்ட போக்கிரியாக வலம்வந்தவர்.. கும்பகோணம் வட்டாரபகுதிகளில் காணாமல் போகும் புதிய இருசக்கர வாகனங்கள் மீன்சுருட்டிக்கு சென்றால் மீட்டுவரலாம்.. நம்பிக்கையோடு என்ன ..புதியதின் விலையில் பாதியை தந்தால் உங்களுடைய பொருள் அப்படியே கிடைக்கும்.. மிக நேர்மையோடு எந்த உதிரிபாகங்களையும் கழட்டி விற்காமல் அப்படியே தருவார்கள்.. போலீஸ்காரர் கொண்டு போன வாகனத்தை காவல்நிலையத்தில் மீட்கும் போது ..பாகங்கள் சில காணாமல் போயிருக்குமே அப்படியில்லாமல் நல்ல நிலையில் திரும்ப கிடைக்கும் நல்ல மனிதர்கள்.. இது என் அனுபவத்திலேயே நடந்தது.. திடீரென தன்னை சமூகநீதி காவலராய் காட்டிக்கொண்டு சமூகநீதி சிந்தனையாளர் ராமதாஸோடு நெருக்கமாகி .. வன்னிய சமூகத்தின் காவலராய் பரிணாம வளர்ச்சி பெற்றார்.. கலைஞரின் தலையை விலை பேசும் தகுதி பெற்றார்.. நீ உன் சிறுத்தைகளை அழைத்துவா நான் என் சிங்கங்களை அழைத்து வருகிறேன் என திருமாவிடம் வீர வசனம் பேசி மாவீரரானார்.. மாமல்லபுர சித்ரா பௌணர்மியில் அக்னியோடு வந்து .. சத்ரிய வம்சத்தின் ஆண்ட பரம்பரையானார்.. ஆனால் எப்போதாவது .. மனிதனாவார் என்று பார்த்திருந்த சமூகத்திற்கு கடைசிவரை மௌனமாகி விடைபிரிந்தார்.. ராமசாமி படையாச்சி இருந்த சமூகத்தலைவரின் அறியாசனம் .. கடைசிவரை புனிதபடாமலேயே போனது.. நமக்கு கோபமே வரவில்லை .. தவறின் மீதுநின்று தரிக்கெட்டு ஆடும் நிலை அதனால் பலனின்றி போகுமென்பதை அறிந்திடாமல் போனது வருத்தம்.. ஜெயகொண்டம் மக்கள் ஆரம்பத்தில் தூக்கிவைத்து கொன்டாடியது ஒருவித பயத்திலென்றாலும்.. பிறகு எட்டிக்காயாய் தூக்கியெறிந்தனர்.. நீண்டகாலம் மக்களிடையே பகை உணர்வை தூண்டி வென்றிட முடியாதென்பதை உணராமல் போனதில் வருத்தம்.. சின்னவரும் பெரியவரும்..இனியேனும் சாதி நிலை மறந்து அரசியல் செய்தால் நன்று .. இந்த நிலையிலும் காடுவெட்டியாருக்கு இரங்கல் சொன்ன.. திருமா உயர்ந்து நிற்கிறார் மேன்மக்களாய்.. .. குருமூர்த்தி .. ஏனிந்த ஒப்பீடு.. என எழலாம் வெளிப்படையான ஒருவித திமிர் கலந்த சாதிவெறி அது ராஜ போதையை போன்றது சற்றென்று இறக்கிவிடலாம்.. ஆனால் குருமூர்த்தி போன்றோர் .. புற்றை போன்று அரித்துவிடும் மறைமுக தாக்குதலும் .. அதற்காக நீண்ட திட்டமிடலும் .. இரு பிரிவினரிடையே நீண்ட பகையை வளர்த்து அதை கடைசிவரை நீர்த்துபோக செய்யாமல் ஊதிக்கொண்டே இருக்கும் மநுதர்மத்தின் காவலர்.. படுபயங்தரமாக மனிதகுல விரோத செயல்களை புன்னகையோடு செய்யும் படுநாசகாரர்கள்.. அதை சட்டமென்றும் அதுதான் நீதியென்றும் சொல்லி நம்மை தாழ வைத்திருக்கும் அதி புத்திசாலிகள் ஒரு சமூகம் மேம்பட வேண்டுமெனில் கல்வி தந்தால் போதும்.. ஆனால் அந்த கல்வியை ஒரு குறிப்பிட்ட வர்க்கமே கற்கவேண்டுமெனும் அநீதியை .. நீதியை கொண்டே தடுப்பவர்கள் .. தங்களை மட்டுமே தேசவிசுவாசிகளாய் எண்ணி.. மற்றவர்களை தேசவிரோதிகளை போல ..அதிலும் அதை அவர்களை கொண்டே பேசவைத்து நாடகமாடுபவர்கள்.. குருவின் சாதிவெறி புண்ணை போன்றது கீறி ..மருத்திட்டு ஆற்றிமுடியும்.. குருமூர்த்தி போன்றோரின் இன வெறி.. நம்மை கொண்டே நம் குரல்வலையை அறுத்து கொள்ள செய்யும் தந்திரம் .. படுபயங்கரமான_மனிதகுலவிரோதிகள்.. .. #குருக்கள்_சூழ்உலகு.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment