Tuesday, May 29, 2018
தமிழ்..எங்கள் கலைஞர்
என் தமிழ் ஆசான் #கலைஞர்..
..
இங்கே நிறைய பேருக்கு தமிழாசான் கலைஞர்தான் எனக்கும் கூடதான் ..
இலக்கிய தமிழில் புதிய தோரணையை கட்டி நடனமாடியவர்.. சினிமா கலையில் புதிய உக்திகள் சொல்லும் சொல்லின் பொருள் இருபொருள்பட சொல்வார் அது அரசியலையும் முன்னெடுக்கும் கதாபாத்திரத்தையும் பேசும்.. புரிந்துக்கொள்வார்கள்..
..
இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.. அறிஞர் அண்ணா எழுதிய வசனத்தில் கூட நேரம் கருதி சிலவார்த்தைகளை நீக்கிவிட்டு படமாக்கிவிடலாம் ஆனால் கலைஞரின் வசனத்தில் ஒரு வார்த்தை நீக்கினால் கூட பொருள் மாறிவிடும் அவரை கொண்டே மாற்றி எழுத வேண்டும் .. கலைஞரின் எழுத்து எல்லோரையும் ஈர்க்கும்.. அது கொள்கை வேறுபாடு கொண்டவர்கள் கூட ரசித்து நிற்பர்.. எழுத்தில்/பேச்சில் சிலம்பம்,ஆடுவது அவருக்கு மிக இலகுவாக வரும்..
..
சட்டமன்றத்தில் ரகுமான் கான் போலீஸ் மான்ய கோரிக்கையில் .. பேசிக்கொண்டே இருக்கிறார் சபாநாயகர் ராசாராம் அமர சொல்லியும் கேட்கவில்லை.. உன்னை ஆண்டவன்தான் உட்காரவைக்கணும் என்ற போது .. கலைஞர் எழுந்து உட்கார் என்கிறார்
உடனே அமர்ந்துவிட்டார் ரகுமான்.. கலைஞரை பார்த்து மிக்க நன்றி என்றார் சபாநாயகர்.. உடனே கலைஞர் எழுந்து நீங்கள் தானே ஆண்டவனால் தான் அமரவைக்க முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் .. என்று சிறிது இடைவெளி விட்டு தமிழகத்தை ஆண்டவன்தான் என்ற போது சபை கைத்தட்டி மகிழ்ந்தது..
கலைஞரோடு சொற்போரில் வென்றவரில்லை.. போராட்டத்தில் கைதாகி சிறை சென்று திரும்பி சட்டமன்றம் வந்தபோது .. அனந்த நாயகி உங்க மாமியார்வீடு (சிறைச்சாலையை) எப்படி இருந்தது என்றார் உடனே.. உங்க தாய்வீடு நலம் என்று வாயடைக்க வைத்தார்..
கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா? என்றார் நூர்முகம்மது எம்எல்ஏ.. பதிலளித்த
கலைஞர் குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது.. (6.5.1989).. என்றார்..
அதேபோல் காமாட்சி என்ற உறுப்பினர் மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்றார் பதிலளித்த
கலைஞர் மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! என்றார்..இப்படி நகைச்சுவை குன்றாமல் நயத்தோடு நாகரீகம் கெடாமல் பதிலளிப்பார் ..
..
கண்ணதாசன் வெளிநாடு செல்லும் போது என்ன வாங்கிவர என்றபோது நல்லபெயரை வாங்கிட்டு வா என பொருட்பட சொன்னார்.. தன் தலையை சீவி விடுவதாக வடநாட்டு சாமிகள் சொன்னபோது
என் தலையை நானே சீவி பல நாட்களாகிவிட்டதென சொன்னவர்..
இப்போது கூட உடல் நலிவுற்று காவேரியில் இருந்தபோது செவிலிய பெண்ணிடம் உன்பேர் காவேரியா எனகேட்டு இல்லையென்க தண்ணி கேட்ட இவ்வளவு கம்மியாக கொடுக்குறீயே காவரியான்னு கேட்டேன் என நகைச்சுவையோடு சொன்னவர்..
..
முரசொலி மற்றும் குங்குமத்தில் தான் குறளோவியமும் சங்கத்தமிழும் தொடராக வரும் .. சங்கத்தமிழில்.. அவர் எழுதிய காதல் கவிதைகள்...பழைய நினைவுகளை கிளறும்..
// கண்ணல்லவோ கனியல்லவோ எழுதாத பண்ணல்லவோ என் நெஞ்சம் விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ..என்றென்னை அழைத்திட்ட போது அவன் வடித்திட்ட வார்த்தை அருவித்தவழ் சோலை அழகுமலர்கூட்டம்...:// சங்கத்தமிழில்..சொக்கிப்போவோம்..
..
தமிழ் அவருக்குமட்டுமே கட்டுப்படும்..
அரசியலில்..
சில நேரம் சிலேடைகளோடு எழுதுவார். எம்ஜிஆர் (மகோரா) பற்றி எழுதுவார்..
எல்லோரும் ராமாயணம் என்றிருப்போம்... புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
//
#மானமிகு வாலியை
மறைந்து நின்று தாக்கிய
மான்புமிகு ராமசந்திரனை
மாவீரன் என மகாகவி கம்பனே ஏற்கவில்லை என்பார்..
..
கலைஞர் தமிழ் முன் இதுவரை யாருமே வென்றதில்லை இறுமாப்போடு சொல்வதில்லை உண்மை அதுதான்..
விதவை என்றெழுதும் போது கூட பொட்டுவைக்க முடியவில்லையென இளங்கவிஞன் விகடனில் கவிதை எழுதி கவலையுற்ற போது #கைம்பெண் என்று தமிழில் எழுது ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாமென பொருட்பட பேசியவர் ..
..
கலைஞர் எழுத்து சொல் செயல் எல்லாம் தமிழோடு இணைந்தது தமிழாய் நின்றது..
கலைஞரின் குரலை நேசித்து தமிழை சுவாசித்து வளர்ந்தவர் நாம்.. அந்த பெருமகனோ வாழ்கிறோம் என்பதே பெருமைதான்..
..
#தமிழாசான்_கலைஞர்_பிறந்தநாள்_ஜூன்3
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment