Friday, May 25, 2018

கலைஞரெனும் பேராளுமை

#ஜூன்3.. கலைஞர் பிறந்தநாள் மிக முக்கியமான நாள்.. தமிழர் வரலாற்றில் மிக சிறந்த ஆளுமையாய்.. அரசியல் இலக்கியம் கவிதை..நாடகம் ..என பல்வேறு துறைகளில் நீக்கமற நிறைந்து பங்காற்றிய சமூகநீதியாளன் .. எதையும் தொலைநோக்கோடு கொண்ட பெரியாரின் பார்வையோடு.. பகுத்துணர்ந்து செயலாற்றிய மாமனிதர்.. அரசாள்வோரின் இலக்கணமாய்.. இந்தியாவிற்கே வழிகாட்டிய நடந்து காட்டிய மாபெரும் தலைவர்.. காலம் பல கடந்தும் இவரின் திட்டம் .. இந்தியாவிற்கே பயன்படுகிறது நவீன இந்தியாவைப் பற்றி சிந்திப்போர் முதலில் இந்த மனிதனின் அரசியலை படித்தாலே போதும்.. அரசியல்வாதியின் மூல இலக்கணம்.. .. இரு காரணிகளுக்காக மிகவும் கூர்ந்து கவனிக்கிறது நாடு.. தமிழக அரசியலில் மிக நீண்ட அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல்வேறு பதவிகளிலும் அரசியல் சமூகப்பணி கலைப்பணி, பொதுசேவைகளிலும் கட்சித்தலைமையிலும்.. என்பதாண்டு அரசியலில் அறுபதாண்டு சட்டமன்ற உறுப்பினராக தோற்கடிக்க முடியாதவராக இருக்கும் கலைஞருக்கு நன்றி கூறும் விழா.. புகழ்பாடுதல் என்பதை கடந்து ஒரு எளிய மனிதன்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சமூக அக்கறையோடு கூடிய நெடுவாழ்வில் யாரும் தொட முடியாத இதுவரை யாருமே தொட்டிராத உச்சத்தை தொட்டமைக்கு நன்றி கூறும் நல்விழா.. இந்த நாட்டை சிலர் மட்டுமே ஆண்டும் மற்றவரை அடித்தமர்த்தியும் ஏற்றதாழ்வை சொல்லி ஏமாற்றி வந்த கும்பலை வேரோடு பிடிங்கியெறிய இந்த பெருமகன் பெரியாரின் பார்வையோடு ஆற்றிய அரும்பணிக்கு #நன்றி கூறும் நல்விழா.. ஐம்பதாண்டுகாலம் தன்னை சுற்றியே அரசியலை சுழலவிட்ட ..தான் காட்டும்/பார்க்கும் திசைநோக்கி வெளிச்சத்தை பரடவிட்ட இந்த கிழட்டு சூரியனுக்கு நன்றி கூறும் நல்விழா.. .. மற்றொரு காரணியும் உண்டு இந்த விழாவின் மூலம் நாடு சிக்குண்டு தவிக்கும் தீய மதவெறிகூட்டத்திலிருந்து மீள வழிவகைசெய்யும்/ வழிகாட்டும் புதியபாதையை நோக்கிய பயணத்தின் முதல் படியாய் எப்போதும் சமூகநீதி பேசும் தமிழ் மண்ணிலிருந்து துவக்கம் குறிக்கும் விழா இது.. தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு விடியலை நாடு காத்திருக்கும் வேளையில் இந்த விழா பேருதவிபுரியும்.. தளபதி.மு.க.ஸ்டாலின் புதியதொரு பாதையை வடிவமைக்கிறார்.. நல்லதொரு முயற்சியாய் சரியான ஜனநாயக பாதையை புரிதலோடுகூடிய மக்களின் மனமறிந்து செயலாற்றும் சிறந்த வழியை பின்தொடர்கிறார்.. அது தமிழகமக்களின் நன்மதிப்பை பெறுகிறது .. தளபதி அவர்களை தமிழகம் தாண்டி தேசியளவில் எடுத்துச்செல்ல ..தளபதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் விழா இது.. .. கலைஞரைப்போல தேசிய தலைவர்களை நாடு எப்போதும் கொண்டாட வேண்டும்.. நான் வகுத்த பாதையில் .. அது எத்தகைய எதிர்ப்பை சந்தித்தாலும் .. இறுதியில் அதுவே சரியென எதிர்ப்போரும் .. பாராட்ட வைக்கிற பேராளுமையை இந்த அரசியலில் மிக மிக அரிதாகவே காணமுடியும் .. அது குறிப்பிட்ட துறை சார்ந்து மட்டுமே அந்த காலகட்டத்திற்கு மட்டுமே பொருந்துகிறவர்களாய் இருப்பர்.. ஆனால் பல்வேறு துறைகளிலும் மின்னி.. காலம்கடந்தும் அவரின் செயல்கள் பின்பற்றதக்கவையென நாடே உணர வைத்த தலைவர்கள் இல்லை அதுவும் தான் வாழும் காலங்களிலேயே அதை நிறைவேறியதை காண்பதென்பது இயற்கை தந்த அருட்கொடை.. கலைஞரின் சிறப்பு அந்த பெருமகனின் 95 வது பிறந்தநாள்.. மனமகிழ்ந்து வாழ்த்துவோம்.. வாழ்க பெருமகனே.. வாழ்த்துகள் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment