Monday, May 21, 2018
மக்கள் விரோத அரசு
தமிழக அரசு 800 பள்ளிகளை மூட முயற்சி..
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அடிப்படை உரிமை அதுவும் ஆரம்பகல்வி கட்டாயமாக இலவசமாக வழங்கவேண்டும் ஆனால் 10 க்கும் குறைவான குழந்தைகள் வருகிறார்களென காரணம் காட்டி 1500 பள்ளிகளை மூட தீர்மானித்து முதல்கட்டமாக 800 பள்ளிகளை மூடுவதென இந்த அதிமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது..
..
6000 பள்ளிகளை மூடிய பார்பனன் ராஜாஜியின் செயலை ஒத்ததாக இருக்கிறது.. குறைவாக வருகை பதிவேடெனில் குழந்தைகள் சேர்க்க முயற்சிக்கவேண்டும் தனியார் பள்ளிகளை அதிக எண்ணிக்கையில் அனுமதி வழங்கி LKG க்கு கூட ஆயிரங்கணக்கில் கொள்ளையடிக்க மறைமுகமாக ஆதரவை தந்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை இல்லை மூடுவோம் என்பது கயமைத்தனம்.. உடனடியாக பள்ளிகளை மூடும் செயலை நிறுத்தவேண்டும் .. ஏழை குழந்தைகளின் கல்வி கனவை சிதைக்கும் இந்த செயலை அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் கடுமையாக எதிர்க்கவேண்டும்.
..
குறிப்பாக ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களின் உயர்கல்வி (மருத்துவம் உள்ளிட்ட) கனவை சிதைத்து அவர்களுக்கு எட்டாகனியாக்கியதைப் போல .. அடிப்படை கல்வியை கூட தடுத்து நிறுத்தும் செயலின் பின்னில் யார் .. எந்த சக்தி இருக்கிறதென இனங்காண வேண்டும்...
*************************************
..
யார் கேட்பது..
பெட்ரோல் விலை 80 தாண்டி செல்கிறது .. அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் எரிப்பொருளின் விலையில் அரசு இவ்வளவு கொள்ளையடிக்கலாமா.. வளரும் நாடுகளில் அடிப்படை வசதிகள் இல்லாத ஏழைநாடுகளில் கூட.. பாகிஸ்தான் இலங்கை நம்மிடமிரிந்து இறக்குமதி செய்யும் நேபாளத்தில் கூட இவ்வளவு விலை உயர்வு இல்லை.. வரி உட்பட ₹50 தாண்டாத போது மீதி யாருக்கு போகிறது..?
ஒரு சில எண்ணை நிறுவனங்களுக்காக .. ஒட்டுமொத்த மக்களை சுரண்டுவது அநியாயம்..
காங் கம்யூ...திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து போராடவேண்டும்.. $ 120 டாலர் வரை பேரல் விற்றபோது ₹70 க்கு காங்கிரஸ் தந்தது ..$68 விற்கும் போது ₹84 ..பெட்ரோல் விற்கபடுவது பகல் கொள்ளை..
..
நாங்கள் ஆட்சிக்குவந்தால் ₹40 பெட்ரோலை தருவோமென சொன்ன மோடி ..இப்போது வாயை திறப்பதில்லை .. இதோ ..இப்போது ஆட்சியாளர் பணி தேர்வை நேரடியாக தேர்விலிருந்து மாற்றி 10 பேர் கொண்ட குழுவிடம் தர பிரதமர் அலுவலகம் முயலுவதாக அது .. தலித் மற்றும் பிற்படுத்தபட்டவர்கள் IAS ஆகவதை தடுக்க முயலும் முயற்சி என தளபதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..
..
கல்வியில் வர்ணத்தை புகுத்தும்.. ஏழைகளுக்கு கல்வியை .. உயர்வை தடுக்கும் பாசிச மத்திய அரசும்.. அதன் ஒத்தூதலாய் செயல்படும் மாநில அரசும் விரட்டபடவேண்டியவை..
..
மீட்டெடுப்போம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment