Monday, May 28, 2018
தூத்துக்குடி நடந்த துன்பியல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது போன்று முறையற்ற விதத்தில் துப்பாக்கி சுடு நடத்தப்பட்டதை அவர் தமிழக அதிகாரிகள் இடம் கண்டித்ததாக செய்திகள் உலவுகிறது ஆனால் ஹெச் ராஜா , இல.கணேசன் , தமிழிசை போன்ற காவிகள் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து விட்டதாக உளறி கொட்டுகிறார்கள்.. 13 வயது சிறுமியின் வாயில் சுட்டது ..தீவிரவாதி என்பதாலா.. மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறார்கள் தனியார் முதலாளிக்காக.. போராட்டத்தை திசை திருப்ப சர்ச்சில் இருந்து இந்த போராட்ட ஆலோசனை நடத்தபட்டதாக சொல்பவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட நிகழ்வுகள் கூட தேவாலயங்களின் பங்கு அதிகம் .. இந்த சங்கிகளுக்கு ஒரு கேள்வி.. காஞ்சி சாமியாரை அடிக்கடி பார்த்து வருகிறீர்களே ..காஞ்சி சாமியாரை .. அங்கு தான் எந்த முடிவும் இறுதியாக்கபடுகிறதென பெரும்பாலோனர் நம்புவதால் அந்த சாமியாரை தீவிரவாதியென்றோ ..அன்று தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோதியென்றோ எடுத்துக்கொள்ளலாமா.. மக்கள் போராட்டத்தை அசிங்கபடுத்த அதற்கு மத சாயம் பூசும் இவர்களை என்ன செய்யலாம்..
..
துணை வட்டாச்சியர் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கை.. அவருக்கு அதற்கான அதிகாரமில்லை... கலெக்டர்.. அல்லது வட்டாச்சியர் உத்தரவிடலாம் அதுவும் முதலில் கண்ணீர்புகை .. தடியடி .. பிறகு ரப்பர்குண்டுகளை பயன்படுத்தி முழங்காலுக்கு கீழே சுடவேண்டும் அதற்கு முன்பு வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைக்கவேண்டும்.. இதில் எதுவுமே முறையாக கடைபிடிக்கபடவில்லை.. இந்த சம்பவம் குறித்து முதல்வர் கவனத்திற்கே செல்லவில்லை.. பெரிய தலைகளை காப்பாற்ற துணைவட்டாச்சியர் சுட உத்தரவிட்டதாக சொல்வது ஏமாற்றுவது..
சுடபட்டவர்களில் மிக முக்கியமாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்பதொன்றே இது பக்கா திட்டமிடல் என உறுதிப்படுத்துகிறது..
..
சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளையைப்போல எடப்பாடியும் துரோகி பன்னீரும் எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறார் என்பதால் இந்த பாசிச படை ரொம்ப உக்கிரமாக துள்ளுகிறது.. எரிகிற நெருப்பில் கொள்ளியை பிடிங்கினால் நெருப்பு தானாக அணையும்.. இதுதான் நடக்கபோகிறது.. இந்த கூட்டம் நடக்கமுடியாதவாறு செய்ய போகிறார்கள் மக்கள் .. ஏனெனில் அம்பை நொந்து பலனில்லை .. எய்தவனை.. அதன் காரணகர்த்தாவை .. நூலறுத்த பட்டம் போல் அறுத்தெறிந்தால் தானாக அடங்கி போகும்..
இனியும் நாகரீக அரசியல் பேசி .. கருத்துயுத்தம் நடத்தி ..நேர்மையோடு போராடலாமென்றால் .. எதிரிகள் கொலைவாளுடன் வரும் போது.. நாம் வெறுங்கையோடு நிற்பது யுத்த தர்மமல்ல..
பொறுக்கமுடியாமல் போன போதுதான் பெரியார் கூட மண்ணெண்ணையையும் தீப்பட்டியையும் ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள் சொல்லும் போது கொளுத்தலாம் என்றார் .. காரணம் எதுவும் கைமீறி போகும் போது.. அஹிம்சை பேசி பலனில்லாமல் போகும்... இன்னமும் நம்மை முட்டாளைப்போல எண்ணி தோசை சாப்பிட வரேன் என கிண்டலடிப்போரிடம்.. நம்பிக்கையை எதிர்பார்பது வீண்.. இந்த கேடுகெட்ட துரோகிகள் சொரணையற்ற பிண்டங்களை வைத்து கொண்டு தாயமாடுவது .. நம்மை வீழ்த்ததான்.. கொன்று குவித்து பயத்தோடு வாழ வைக்கும் தந்திரம் பழைய குஜராத் மாடல் இங்கே எடுபடாதென அறிவிப்போம்..
..
எந்த ஆயுதம் எடுக்கவேண்டுமென எம் எதிரியே தீர்மானிக்கிறான்.. சில இன துரோகிகளை வைத்துக்கொண்டு ..மொத்த இனத்தையும் காவு கேட்கும் காவிகளை இந்த மண்ணைவிட்டே விரட்டும் வரை .. கோபம் தனியாமல் .. எரியும் தனலாய் ..இருப்போம்..
..
#கொலைவாளினை_எடடா_மிகுகொடியோன்செயல்தனைஅறவே
..
படம்:
அதிமுககாரனுக்கு கட்டுபோட்டு விசாரிப்பது போல நடிக்கும் துரோகி பன்னீர்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment