Thursday, May 24, 2018
பதவி விலகு
இந்த அரசை கலைக்கும் வரை போராட்டம் தொடரும் தளபதி..
கைது நடவடிக்கையால் அடக்கிவிட முடியாது என்னை சுட்டுக் கொன்றாலும் .. கவலையில்லை நான் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டாலும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து போராடுவார்கள்..
..
தூத்துக்குடி .. முத்து நகர் பெரும் சோகத்தில் மக்களை அடக்குமுறை கொண்டு வீழித்திவிடலாமென்ற கணக்கு பிழைத்தது.. குருதி ஆறாய் மண் சிவந்த போதிலும்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை மக்கள் போராட்டத்திலிருந்து விலகுவதில்லை என்ற நோக்கை .. பாசிச அரசு கொச்சைப் படுத்துகிறது சமுக விரோதிகள் ஊடுறுவி விட்டார்களாம் .. இந்த தமிழ் மண்ணை ஆளும் வக்கற்ற இவர்களை விட தங்களின் உயிருக்காக வருங்கால சந்ததினரின் வாழ்விற்காக உயிரை துச்சமென எண்ணி போராடு இவர்கள் .. துரோகிகளா.. மக்கள் விரும்பாத ஒரு ஆலைக்காக அந்த ஆலை அதிபரின் ஏவலாய் மனிதர்களை விலங்கினும் கீழாய் எண்ணி கொன்று குவித்துவிட்டு.. எனக்கு தெரியாமல் நடந்ததென சொல்ல வெட்கமாக இல்லையா முதல்வர் அவர்களே.. நாடு இதுவரை கண்டிராத புழுவை விட கேவலமானவராய் காட்சியளிக்கிறார்..
..
அடக்குமுறையால் .. ராணுவத்தை காட்டி மக்களை நடுங்க வைத்திடலாமென்றால் அது மிகப்பெரிய இழப்புகளை தரும் அரசாள்வோரை மட்டுமல்ல சமூதத்தையே புரட்டி போட்டுவிடும்.. இந்த நிலையிலும் பாஜகவும்,அதிமுகவும் செய்கிற சொல்கிற விளக்கங்கள் மக்களை மீண்டும் மீண்டும் கோபம் கொள்ள செய்கிறது.. குறிப்பாக பார்பனர்களும் ..பாஜகவிற்கு வெண்சாமரம் வீசும் சில நாடாரிய தலைவர்களும் (பொன்னர்,தமிழிசை) பேசுகிற செயல் வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல மக்கள் உணர்கிறார்கள்.
..
எடப்பாடி பதவி விலகும் வரை .. போராட்டங்கள் தொடரவேண்டும்.. நாடு கண்ட மிக அசிங்கமான முதல்வர் .. அந்த பதவிக்கு கொஞ்சமும் தகுதியற்றவர் சொல்வது செய்யும் பொம்மையை வைத்துக்கொண்டு பாஜக இயக்குகிறது இந்த அரசை கீழிறக்கவேண்டும் .. நாடே கொந்தளிக்கிறது ..அமைச்சர்கள் பூப்பெய்த விழா கொண்டாடத்தில் ..எவ்வளவு கேவலமான மனநிலை... இனி எங்குமே அமைச்சர்களும் .. பாஜக அடிவருடிகளும் நடமாட முடியாது மக்கள் கல்லெறிந்தே கொல்வர் .. அவ்வளவு விசத்தோடு இவர்கள் பேசி வருகிறார்கள்... 144 தடை உத்தரவிற்கு இருக்கும் போது ஸ்டாலின் போனது தவறாம்.. அதனால் தான் முதல்வர் போகவில்லையாம் .. சட்டத்தை மதிப்பவராம். . கூட்டமாக செல்லதானே தடை தனியாக சென்று பார்க்கலாமே.. தடை உத்தரவு அதிகாரிகளை அமைச்சர்களை கட்டுபடுத்தாதென்ற அடிப்படை அறிவுகூட இல்லாத வெல்லமண்டி வெறென்ன சொல்ல..
பயம் செல்ல பயம் மக்கள் பீ..யை அள்ளி முகத்தில் அடிப்பார்களென்ற பயம்..
..
வெருவந்த செய்தொழுகும் வெருகோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்..
என்றான் வள்ளுவன்
குடிமக்கள் அஞ்சும்படியான கொடுங்கோல் அரசு நிச்சயம் விரைந்து வீழுந்தழியும்..
..
ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்,
எடப்பாடியே பதவி விலகு..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment