Wednesday, May 30, 2018

யாரடா..நீ...

யாரடா நீ.. .. ஒத்த குரல் .. வார்த்தைகள் வெவ்வேறாய் வருகிறது ...ஆனால் அவர்களின் மொழி காட்டிக் கொடுத்துவிடுகிறது.. எந்தவொரு மக்கள் விரோத நிகழ்வானாலும் அதற்காக தன்னெழுச்சியாக போராடுகிற தமிழர்கள் அரசியல் கட்சிகளை சாராமல் நீதி வேண்டி போராடுகிற தமிழர்களை .. அவர்தம் போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டி அவர்களை பொறுக்கிகள் என்றான் சு.சுவாமி..ஹெச். ராஜாவோ தேசவிரோதிகள் பட்டம் வழங்குகிறான்..பயங்கரவாதிகளாய் சித்தரிக்க கடும் முயற்சி மேற்கொள்கிறார் .. பொன்னர் .. கடைசியில் திரைப்பட நடிகர் ரஜினி நம்மை பார்த்து சமூக விரோதி என்கிறார் .. அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள்... தமிழர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதில் .. நாம் தான் சாதி பேசி நியாயம் பேசி தமிழ்தேசியம் என உளறிக்கொண்டு அவர்கள் வேலையை சுலபமாக்குகிறோம்.. .. யார் நீங்களென கேட்ட தூத்துக்குடி இளைஞனுக்கு முத்தங்கள்... தன் வலியிலும் வந்தவரை வரவேற்ற விதம் நாடே பார்த்தது .. ஆமாம் யாரிவர் .. எங்கிருந்து வந்தார் ஏன் இந்த வேசம் கட்டு ..படம் ஓடவேண்டுமெனில் எதையும் செய்யும் வியாபாரி .. அவ்வளவுதான் ரஜினியின் கையிருப்பு.. வயதாகி ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் மக்களைப் பற்றி சிந்திப்பாராம் .. மக்களை மகிழ்விக்க வந்த கலைஞனென கூறிக்கொண்டு .. அரிதாரம் பூசாமலும் நடிக்க வந்தவரை தமிழ் இளைஞன் கேட்ட கேள்வி .. ஒட்டுமொத்த தமிழ்நாடே கேட்டதற்கு ஒப்பாகும்... யார் நீங்கள்.. .. ஆம் நூறுநாட்கள் மக்கள் தன்னெழுச்சியாய் போராடி வருகிறார்கள் அப்போதெல்லாம் காலா படப்பிடிப்பில் வேங்கமவன் வசனம் பேசி விட்டு .. துப்பாக்கி சூடு நடந்து 13 உயிர் போன பிறகும்.. இப்போது ஆறுதல் சொல்ல வருவதாக வந்து நாடிபிடித்து பார்க்கும் நயவஞ்சக செயலை எம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.. சட்டமன்றத்தில் பேச கூட அனுமதி மறுத்து.. படுகொலை துப்பாக்கி சூடு என்ற வார்த்தைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கபட்ட நிலையில் சட்டமன்றம் எப்படி நடக்கவேண்டுமென "மாதிரி சட்டமன்றத்தை" நடத்தி காட்டும் நேரத்தில் அதை திசை திருப்ப வேசம் கட்டிவந்த வேங்கைமவனை வார்த்தையால் விரட்டிய செயல் நாடே பார்த்து மகிழ்ந்தது.. யார் நீ... .. விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் போராட்டத்துல நுழைஞ்சுட்டாங்க. அரசாங்கம் இரும்புக்கரத்தோட விஷக் கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்கணும் அரசு இரும்புக்கரத்தோட அடக்கணும் இல்லனா தமிழ்நாட்டுக்கே ஆபத்து தமிழ்நாடு போராட்ட பூமியாயிட்டா எந்த தொழிலும் வராது, இளைஞர்கள் பாதிக்கப்படுவாங்க .. அப்படியே நாக்பூர் எழுதிக் கொடுத்ததை இங்கே வந்து வாந்தியெடுத்துவிட்டு போயிருக்கிறார்.. இப்போது சொல்லுங்கள் .. தமிழர்கள் நம்மை பார்த்து .. பொறுக்கிகள், தேசதுரோகிகள் பயங்கரவாதிகள் சமூகவிரோதிகள் என ஒரே குரலில் பாடுகிறார்கள் .. எப்படியும் தமிழகத்தை கலவர பூமியாக்க வேண்டும் அதைவைத்து குளிர்காய வேண்டுமென்ற பாசிச வர்க்கத்தின் பிரதிநிதியாய் வந்தவரை.. யார் நீ எனக் கேட்து சரிதானே.. .. யார் நீங்க என்ற கேள்வி ரஜினியை கோபம் கொள்ளவைத்திருக்கிறது அதனால் தான் பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக எரிந்துவிழுந்தார்.. ஆழம்தெரியாமல் காலைவிட்டதைப்போல.. நிலை ரஜினிக்கு அரிதாரத்திற்கு மயங்கி நின்ற காலம் மலையேறிவிட்டது இது எழுபதுகள் அல்ல.. 2018 வேறுமாதிரியாக கருவறுக்கும் எச்சரிக்கை.. போராடினால் சுடுகாடாகுமாம்.. போராடாமல்.. குண்டிகாட்டியும்.. காட்டிக்கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் .. உயர்வடைந்தவர்களுக்கு .. போராட்டத்தின் வலிமை நேர்மை தூய்மை தெரியாதுதான்.. போராடி பெறாத எதுவும் நேர்மையாக இராது .. யார் நீங்க.. கேட்டது சரிதான் .. #ஆமாம்_யாரிவன்..?… .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment