Monday, October 24, 2022

எங்கள்_பேராசான்_பெரியார் ..

கல்வி.. குறித்து இப்படிதான் சொன்னார்
// தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக்கொண்டால் இராமாயண பாரதமும் அசோகன் மௌரியன் ஆட்சியும் முஸ்லிம் வெள்ளையர் ஆட்சியும் விளக்கப்படுமேயொழிய சேர சோழ பாண்டியரைப்பற்றியோ திராவிடர்கள் பற்றியோ திராவிடத் தமிழ் என்கிற ஆட்சி பற்றியோ காண்பது அரிதாகும் அவை எந்தவகுப்பிற்கும் பாடமாக இல்லை அப்படி எங்காவது இருந்தாலும் அது வெறும் பித்தலாட்டமாகவும் மோசடியாகவும் காணபடலாமே தவிர யோக்கியமாய் சரித்திர ஆதாரத்தோடு காணபது அரிது..
..
ஆகவே நமது பிள்ளைகள் நம்மைப்பற்றித்  தெரிந்துக்கொள்ள இடமும் இல்லை.. என்றார்..
..
ஆம்.. எவ்வளவு உண்மை..
இவையெல்லாம் புனையபட்டதை நமக்கு போதித்திருக்கிறார்கள்..
உண்மை மீறி வெளிச்சத்திற்கு வரும் போது #கீழடியை ..
மண்ணைக்கொண்டு மூடி விடுவார்கள்..
..
ஆம்  #தஸ்யூக்கள்  அதாவது
திராவிடர்கள் பட்டணங்களில் ஊர்களிலும்  மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளிலும் வாழ்ந்தார்கள் ரதங்கள் குதிரைகள் ஆடுமாடுகள்  என வாழ்ந்தது கண்டு ஆரியர் பொறாமை கொண்டு திராவிட நகரங்களை கொள்ளையடிக்க நினைத்ததாக #யஷூர்  வேதத்திலேயே உள்ளது..
..
வரலாற்றை மண் கொண்டு மூடலாம் ..புராணம் வேதமென  மத நம்பிக்கையை சொல்லி மனிதர்களை கட்டுபடுத்தலாம் ஆனால் காலம் உண்மையை வெகுநாட்கள் புதைத்திருக்காது
ஒரு நாள் வெளிவரும் வந்தே தீரும்..
..
மாபா.பாண்டியராஜன்  தொல்பொருள் அமைச்சர் பதவியேற்கும் போதே
தெரியும் கீழடியை புதைத்துவிடுவார்களென்று...
மீண்டும் நாம் அதிகாரத்திற்கு வரும் போது
கீழடி மட்டுமல்ல.. வரலாற்று திரிபுகளையெல்லாம் சரிச்செய்ய வேண்டும் என சொன்னோம் அதை தான்  திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது..
..
தென்னக மக்களின் வாழ்வியலை பண்பாட்டை கவனித்தாலே போதும்  அவர்கள் மிக பெரிய நாகரீகத்திற்கு சொந்தகாரரன்  என்பதும்.. கடல் அரிப்பில் சிதைந்து கடலுக்கடியில் போனதென்ற உண்மைகளை  வெளிக்கொண்டு வந்தால்..அவனின் தொன்மை கிடப்பதும் புரியும்..
நிச்சயம் ஒரு நாள் வெளிபடும் திராவிடனின் தொன்மையும்.. அவனே உலகின் மூத்தவன் என்ற வரலாறும்.. இருள் கிழித்து கதிரவனின் ஒளி வந்தே தீரும்..

புனை சுருட்டுக்கள் என மகாபாரத்தை சொன்னவுடன் குதிப்பவர்கள் நம் பெருமை வெளிவருவதை கண்டு அதெல்லாம் இந்து அடையாளமாக மாற்ற முடியாமல்  கதறுபவர்கள் .. பண்டு செய்த நரித்தனங்களை இப்போது செய்ய முடியாமல்  ராஜாக்களை அடிமையாக்கி திணித்த அடையாளங்கள் புனைவுகள் ஒவ்வொன்றாய் கிழிந்து தொங்க தொடங்கியதும் கார்டுவெல் என பதறுவது தெரிகிறது .. திருவள்ளுவரை சாயம்பூச பார்த்து முடியாமல் ஆன்மீக அடையாளமாக பிதற்றுவதெல்லாம் இங்கே வேகாது காரணம் பகுத்தறிவின் சுடரொளியில் தமிழ்நாடு விழித்திருக்கிறது.. பாவம் ராசாக்கள் அலறதான் செய்வார்கள் ..

..
#தமிழன்_மூத்தகுடி ..


..
ஆலஞ்சியார்

அண்ணாவை  முட்டாள் என்கிறானே பத்ரி என கோவபடுகிறவர்களுக்கு பாப்பான் படிப்பாளிதான் அறிவாளி கிடையாது என்பார் பெரியார் 

புராணத்தை நம்புகிறவன் 

புரோகிதம் செய்கிறவனுக்கெல்லாம் அறிவாளிகள் கண்டால் கோபம் தான் வரும் .. திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வரும்வரை அவாள்கள் தான் தமிழர் என நம்பவைத்தார்கள் கடைசியில் ஆரியமாயை தந்து முகத்தை கிழித்தார் ..



Saturday, October 22, 2022

எடப்பாடி தூத்துக்குடி துப்பாக்கி சூடு பின்னே பாஜகவும் ..
..
எடப்பாடி பழனிசாமி கோமாளி வேசத்தில் ஒரு கொலைக்காரன்.. 
இவரின் ஆரம்ப அரசியலே கொலையில் தொடங்கியது பங்காளி தகராறில் கொலை செய்துவிட்டு காட்டில் ஒளிந்து வாழ்ந்தவர் பின் அன்றைய அதிமுக அரசியல் பிரபலங்கள் ஈரோடு முத்துசாமியிடம் முறையிட பஞ்சாயத்து செய்யபட்டு வெளிவந்தவர் தொடர்ந்து  சின்னசின்ன ரௌடியிசம் செய்து வளர்ந்தவர் .. காலமும் நேரமும் அவரை முதல்வராக்க தமிழகம் இழந்ததுதான் அதிகம் ..
இதோ முன்னாள் ஆளுநர் எடப்பாடி அரசை துணைவேந்தர் பதவியை விலைபேசி விற்றதாக குற்றம் சொல்கிறார் இதை உடனே விசாரிக்க வேண்டும் .. 
..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ..ஆனால் ஏனோ ஊடகம் பெரிய வெளிச்சம் வராமல் பார்த்துக்கொண்டது கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் காலணியில் ஊடகங்கள் சென்ற பின் அறமிழந்து போனது ..  தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என எடப்பாடி சொல்லும் போதே பின்னில் யார் இருக்கிறார்கள் என தெரியும் .. விசாரணை கமிஷன் அறிக்கையில் ஒவ்வொரு வினாடியும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கபட்டதாக தலைமைச் செயலாளர் கிரிஜா மற்றும் டி ஜி.பி இருவரும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்கள்  இப்போது யார் குற்றவாளி ..
ஆனால் பாஜக அண்ணாமலை எடப்பாடி மீது தவறில்லை என்கிறார் இதிலிருந்து விசாரணை பாஜக மேலிடத்திலும் நடத்தபடவேண்டும் .. அப்பாவி மக்களை கொன்று அரசியல் நடத்துவது பாஜகவின் அடிப்படை கோட்பாடு .. கலவரம் அதைவைத்து அரசியல் என்பது தான் அவர்களின் பாலபாடம் ..
..
தாசில்தார்கள் இடைநீக்கத்தோடு முடிவதல்ல.. விசாரணையை விரிவாக்கி எடப்பாடி உட்பட அன்றைய அரசின் உயரதிகாரிகள் வரை நீதிமன்றத்தில் நிறுத்தபடவேண்டும் .. மக்கள் தான் கல்லெறிந்து கலவரம் செய்தார்கள் என செவிவழி செய்தியை கேட்டு  உரத்த குரலில் பேசி நடித்த ரஜினியும் குற்றவாளியாக்கபட வேண்டும் ..இவர்களெல்லாம் கலவரத்தில் அரசியல் செய்கிற அற்பர்கள் .. உயிர்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல .. போராட்டக்காரர்களை தீவிரவாதிகாளாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மனநோயாளிகள் ..   
பாஜகவின் ஒத்தூதிகள் .. அரைகுறை அரசியலோடு மதத்தையும் சந்தர்ப்ப சூழலையும் கையிலெடுத்து குளிர்காய நினைக்கும் கேடுகெட்டவர்கள் 
..
இந்த துப்பாக்கி சூட்டை நியாயபடுத்தும்  பாஜகவும் சந்தேகநிழலில் சேர்க்கபடவேண்டும் ஒன்றியத்தை ஆள்வோரின் வழிகாட்டல் இருந்ததா வழக்கம் போல் பின்நின்று இயக்கினார்களா என்பதை மக்கள் அறிய வேண்டியது அவசியம் .. மக்களை கேள்வி கேட்க யாருமில்லாத மிருங்களை போல சுட்டுக்கொல்லும் தைரியம் எங்கிருந்து வந்ததென மக்கள் முன் சொல்வது அரசின் கடமை அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது
..
விசாரணை நீதயாக நடந்து இவர்களெல்லாம் தண்டனை பெற வேண்டும் ..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விடயத்தில் எடப்பாடி மீது விசாரணை நடத்துவது குறித்து மாண்பிமை முதலமைச்சர்
Chief Minister of Tamil Nadu  
M. K. Stalin 
முடிவெடுப்பார் 
என மானமிகு Kanimozhi Karunanidhi  அவர்கள் சொல்லியிருக்கிறார்

#ஒருத்தனையும்விடகூடாது..
..
ஆலஞ்சியார்
சேர,சோழ பாண்டிய நாயக்கர்,மன்னர்கள் முகமதியர்,காங்கிரஸ்காரர் இன்னும் எத்தனையோ பேர் ஆண்டிருக்கிறார்கள் 
ஆனால் அண்ணா போன்று சாதிவேண்டாம் மதம் வேண்டாம் சாஸ்திரம் வேண்டாம் என ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை யார் அமைத்தார்கள் ..இது சாதாரண காரியமல்ல பிரமாண்ட சாதனையாகும் .. இது மக்களுக்கு புரிகிறதோ இல்லையோ எதிரிகளுக்கு புரிகிறது .. புத்தனாலும் முடியவில்லை என்னாலும் முடியவில்லை வாய் அளவில்தான் பேசினோம்.. அண்ணா ஒருவர் தான் சாதித்தார்  
பெரியார்..
(01.11.1970  பம்பாய்)..
..
ஆம் எதிரிகள் இப்போதும் கதறுகிறார்களே 
ஒன்றியத்தில் தங்களின் சொல்படி  ஆடும் "பொம்மை " ஆட்சி  இருந்தும் தமிழகத்தில் அடிமைகளை வைத்து ஆடிய ஆட்டம் முடிவுக்கு  வந்ததும் செய்வதறியாது உளறல்களும் உதறல்களும் அதிகம் சத்தத்தில் கேட்கிறது .. பெரியாரும் அண்ணாவும்,கலைஞரும் அந்தளவு செய்துவிட்டு போயிருக்கிறார்கள் ..
..
இன்னும் பத்ரிகளும் பாண்டேக்களும் ராகவன்களும் வரிசை கட்டுவார்கள் மாலன்களும் ஒத்தூதும் சமஸ்களும் வந்துக்கொண்டே தான் இருப்பார்கள் .. காரணம் அந்தளவு எழவே முடியாதளவு ஆப்பு  அடித்திருக்கிறார்கள் .. அமைதியாக இருப்பான்  திருநீறு பூசி தொழுது நிற்பான் ஆனால் தமிழகத்தில் அண்ணாவையோ பெரியாரையோ குறைகூற முயன்றாலே மண்டையிலேயே போடுவான் .. காரணம் இன்றைய வளர்ச்சியும் நிறைவும் மரியாதையும் உயர்வும் இவர்கள் உழைப்பில் வந்ததென அறிவான் .. வடக்கே பிழைக்கவே நாடுவிட வேண்டியிருக்கும் நிலையில் இங்கே நிறைகுறையெனினும் மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடிகிறதே .. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது மெச்ச தகுந்த நிலையில் இருக்கிறோமே .. கல்வி வேலைவாய்ப்பில் எவரும் தொடாத உயரத்தை நோக்கி பயணிக்கிறோமே இவையாவும்  திராவிடத் தலைவர்களால் வந்தது என அறிவான் அதனால் தான் இங்கே உயிர்போடு திராவிட இயக்கம் இருக்கிறது ..
..
தமிழகம் எப்போதும் பாசிசத்திற்கு தலைவணங்காது.  சில சோடைகள் வாழ்வாதாரத்திற்காக கூச்சல் போட்டாலும் அடித்தளம் சரியாக கட்டமைக்கபட்டதால் பாசிசத்தின், பகைவரின் எண்ணம் ஈடேறாது ..
..
ஆலஞ்சியார்

Tuesday, October 18, 2022

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை ..
ஆறுமுகசாமி ஆணையம்  அறிக்கையில் சசிகலா அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் குற்றவாளிகளாக கருதபட்டு விசாரணை மேற்கொள்ள பரிந்துரை ..
..
திமுக ஏற்கனவே சொன்னதுதான் தொடர்ந்து கலைஞர் வலியுறுத்தியும் வந்தார் ஜெயலலிதா சிகிக்சை பெறும் புகைபடம் வேண்டும் என்ற போது "பெண் என்றும் பாராமல்" என கொதித்தவர்கள் இன்றைய விசாரணை கமிஷன் பரிந்துரையை முழுவதுமாக படிக்கவேண்டும் .. ஜெயலலிதா இறந்த தேதியில் கூட குளறுபடிகள் 
மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று அறுவை சிகிச்சை செய்யபடவில்லை .. அப்பலோ எந்த நேரமும் டிஸ்சார்ஜ் செய்யபடலாமென பொய்யான தகவலை தந்திருக்கிறது .. இப்படி நிறைய முன்னுக்கு பின் முரண்.. உண்மைகள் மறைக்கபட்டிருக்கிறது..
..
சசிகலா யார் என இன்று கேட்கும் அதிமுக எடப்பாடி எல்லாம் எப்படி கைகட்டி நின்றார்கள் .. மிக கேவலமாக நடத்தபட்டார்கள்.. அங்கே சுயமரியாதை தெரியாத பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்ட நேர்மையற்றவர்கள், திருடர்கள்,ஊழல் செய்வோர் சுரண்டர்காரர்கள் மட்டுமே உண்டு .. பொதுநலம் மக்கள்  வாழ்வாதாரத்திற்காக சிந்திக்க தெரியாத சினிமா பைத்தியங்கள் மட்டுமே இருந்ததால் தங்கள் தலைவி உடல்நலமில்லாமல்  மருத்துமனையில் இருந்த போது பாஜகவோடு கைகோர்த்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தார்கள் நீட் தேர்வு உட்பட 
..
கொள்ளையடித்த கோடிகளை பாஜக காலில் கொட்டி தப்பித்தவர்கள், கேட்கும் தொகுதியை தாரைவார்த்து பாசிசம் காலூன்ற காரணமானார்கள் .. ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால் இவர்கள் நல்லவர்களாக உருமாறியிருப்பார்கள்..  முறையான விசாரணைக்கு ஏதுவாக வழக்கு பதிவு செய்து துறை செயலாளர் உட்பட அனைவரையும் கைது செய்து விரைந்து விசாரிக்க வேண்டும்
..
சசிகலா அவ்வளவு சக்தி வாய்ந்தவராக அதிமுகவில் வலம் வந்தார் என சொல்வதற்கு ஆணையம் தேவையில்லை நமக்கே அறிந்தவிடயம் தான் ..அம்மாவிற்கு பிறகு நீங்கள் தான் சின்னம்மா என்று காலில் விழுந்த வரலாறு அடிமைகள் எல்லோருக்கும் உண்டு .. எய்ம்ஸ் மருத்துவக்குழுவை அனுமதிக்காத செயல் ஏன் இதுவரை பன்னீர் உட்பட வேகவேகமாக பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் சொல்லவில்லை 
..
ஜெயலலிதா எனும் கிரிமினல் எந்தளவிற்கு கொள்ளையில் ஊழலில் சம்பந்தபட்டிருக்கிறாரோ அதே அளவு 
சசிகலா மற்றும் இன்றைய அதிமுக தலைவர்களுக்கு பங்குண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்கி இவர்கள் நடத்திய "கொள்ளை நாடகம் " ஒவ்வொன்றும் விசாரிக்கபடவேண்டும் ..
காலதாமதபடுத்தாமல் விரைவான விசாரணைக்கு உத்திரவிடவேண்டும் .. பொய்யான தகவலை தந்த அப்பலோ மருத்துமனை நிர்வாகம்
விசாரணை வளையத்தில் ஆணையம் பரிந்துரைவர்கள் மட்டுமல்ல பின்நின்று இயக்கியவர்கள்.. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள், ஜெயலலிதா மரணமடைந்தால் யாருக்கு பயன் என்று விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 
"பலவீனமான" ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையை கொண்டுவரும் பொறுப்பு திமுக அரசிற்கு இருக்கிறது 
அபலைப் பெண் ஜெயலலிதா
..
ஆலஞ்சியார்

Wednesday, October 12, 2022

ஜெயலலிதாவிற்கு உள்ள தைரியத்தில் 1% கூட ஸ்டாலினிடமில்லை ஜெயகுமார் ..
ஜெயலலிதா கண்டால் எல்லோரும் அஞ்சுவார்கள் என சிலர் .. ஜெயலலிதாவின் 
தைரியத்தை 18 ஆண்டு வழக்கை இழுத்தடித்ததிலும் தண்டனையை குறைத்துக்கொடுங்கள் என அழுததிலும் பார்த்தோம் ..
..
திமுக அடிமைகள் கூடாரமல்ல இங்கே பதவியை தோளில் போடும் துண்டாக நினைப்பவர்கள்.. கொள்கை,மானம் இவர்களுக்கு
கட்டும் வேட்டியை போன்றது.. சாலையோரத்தில் தடுப்பிற்கு அப்பால்  நின்று கொண்டு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் பழக்கம் ஜெயகுமாருக்கு இருக்கலாம் இங்கே பொதுக்குழுவில் கூட பேசும் தைரியமும் தவறை சுட்டிகாட்டி மெல்ல கொட்டும் பழக்கமும் உண்டு .. வானத்தை பார்த்து ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரை கும்பிடும் கேனபயல்கள் எங்களுக்கு பாடமெடுக்க கூடாது ..
இங்கே தவறிழைக்கும்  பிள்ளையை  மென்மையாக கண்டிக்கும் தகப்பனைப்போல செயல்படுகிறார் தலைவர் ..அதற்காக தகப்பனுக்கு தைரியமில்லை என்றள்ள பொருள் .. சொல்லி திருத்தும் பாங்கு ..
..
அப்படியொன்றும் தவறிழைத்துவிடவில்லை வீட்டில் சாதாரணமாக அமர்ந்திருப்பதும் பேச்சுவாக்கில் வட்டாரமொழி பேசுவதும் விசமிகளால் தவறாக சித்தரிக்கபடுவதற்கே மனம் கலங்கி நிற்கிறாரெனில் தலைவர் எத்தனை அதிகம் மக்களை நேசிக்கிறார் என்பதை உணர வேண்டும்.. சிறிதாய் கூட ஆட்சிக்கு களங்கம் வரகூடாதென அத்தனை சிரத்தையோடு பணியாற்றுகிறார், அதெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் எங்கள் பங்கை சரியாக தந்துவிட வேண்டுமென நிபந்தனை விதித்து
கொள்ளையடித்து சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவோடு ஒப்பிட கூடாது ..
அரசியலில் அண்டிபிழைத்து புறவழியே நுழைந்தவர்களோடு, ஜனநாயகத்தின் நம்பிக்கையாளர்களை மக்கள் தீர்மானித்து அதிகாரம் தரவேணேடும் எனும் தளபதியோடு ஒப்பிடகூடாது 
..
எடுத்தேன் கவிழ்தேன்  என்பதல்ல ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை உண்டு.. சில நிகழ்வுகளில் தவறென்றே அறியாமல் செய்துவிடுவதுண்டு .. தெரியாமல் செய்வது தவறு தெரிந்தே செய்தால் தப்பு .. இங்கே யாரும் தப்பானவர்கள் இல்லை.. தலைமைக்கு விசுவாசமானவர்கள் தவிர அடிமைகள் அல்ல..
தன் உறவுகளிடம் உரையாடுவதைப்போல தலைவர் கழகத்தினரோடு உரையாடுகிறார் 
தலைவன் தொண்டன் என்பதை தாண்டி குடும்ப உறவுகளைப்போல பிணைந்திருப்பவர்கள்.. உரிமையோடு கண்டிப்பதும் தண்டிப்பதும் 
வள்ளுவன் சொன்னதைப்போல 
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.. என
செயல்படுகிறார் .. 
..
இரத்தத்தில் உயிரில்லாத அடிமைகள் வயதை மீறி காலில் விழுந்து உலகம் பார்க்க கேலியானவர்கள் 
தலைவர் தளபதியை பற்றி பேச அருகதை இல்லை.. 
மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வதெங்கள் பழக்கம் .. மானங்கெட்ட 
கோழைகள் எங்களுக்கு பாடமெடுக்க கூடாது ..
..
குறை இல்லா செல்வம்
நிறைவான ஆளுமை 
அப்பழுக்கற்ற வெளிப்படைதன்மை 
எதையும் நேர்மையோடு நன்னெறியோடும்
அதிகாரமென்பது மக்கள் பணி செய்ய நல்வாய்ப்பு என செயல்படும் எங்கள் 
முதல்வர் 
Chief Minister of Tamil Nadu 
தகத்தாய சூரியன் எங்கள் தலைவர் தளபதி
M. K. Stalin 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்

Sunday, October 9, 2022

கடிதோச்சி மெல்ல எறிந்திருக்கிறார் தலைவர் .. M. K. Stalin ❤️👏
மிக அழகாக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் செயல்களை கண்டித்தும் .. பழி என் மீதுதான் வரும் என்று இளங்கோ அடிகளின் துணைக்கழைத்து வள்ளுவனின் சொல்லை ஏற்று "கடிதோச்சி மெல்ல எறிக" மென்மையாக கண்டித்திருக்கிறார் 
தலைமையின் மாண்பு இது ..
..
இரண்டாம் நிலை தலைவர்கள் அமைச்சர்கள்  வெற்றிக்கு பிறகான அவர்களின் செயல்கள் நடவடிக்கைகள் பேச்சுகள் உடல்மொழிகள் சிலரை புண்படுத்தியிருக்கிறது .. எல்லோரும் இல்லையென்கினும் சிலரின் செயல்பாடுகளும் உடல்மொழியும் திமிரின் வெளிபாடாய் இருந்திருப்பதும் சிலரின் சொல் நகைச்சுவை என்றெண்ணி கேலியாகியிருப்பதும் நாம் அறிந்தது தான் .. சொல் முக்கியம் 
வெல்லும், கொல்லும் என தெளிவாக உணர்ந்து உரையாற்றி 
தலைவராய் உயர்ந்துநிற்கிறார் இது எச்சரிக்கை மணி .. 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
அவர்கள்
அன்பாகவும் சொல்ல தெரியும் தேவைபட்டால் சுழற்றவும் தெரியும் என்பதை பொட்டில் அடித்தாற்போல் பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் .. புரிந்தவர்கள் தெளிந்து உணர்ந்து செயல்பட்டால் நல்லது ..
..
கடிதோச்சி மெல்ல எறியும் குணம் கலைஞரிடத்தில் காணலாம்.. கட்சிகாரர்கள் ஏதேனும் தவறிழைத்துவிட்டு வந்தால் அதை அவர்கள் மனம் புண்படாதவாறு நறுக்கென்று கொட்டி சொல்லி திருத்துவார் .. அதைப்போல தளபதியாரும் மெல்ல கொட்டியிருக்கிறார் .. அமைச்சர்களின் ஆணவம் மூத்த நிர்வாகிகளின் அலட்சிய போக்கு கொள்கை தெளிவற்றவர்களின் 
சமீபகால நடவடிக்கைகள் .. தொண்டர்களை உதாசீனபடுத்தும் நெறிக்கெட்டவர்கள் என தளபதி லட்சியத்திற்கு இடையூறுயாய் நிற்போரை நல்லமொழியில் புத்தி சொல்லியிருக்கிறார் ..
..
இனியேனும் கவனமாய் இருங்கள் 
ஏனெனில் 
stalin is more dangerous than karunanidhi.. பகைவருக்கு மட்டுமல்ல.. கொள்கைபிழைகளுக்கும் அகம்பாவம் கொண்டோருக்கும் 
திமிரோடு திரிபவருக்கும் தொண்டனை கண்டுக்கொள்ளாத பொறுப்பாளர்களுக்கும் தான் 
இது எச்சரிக்கை மணி ..
..
ஆலஞ்சியார்
இவர்தான் பெரியார்,..,
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
"நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும்,
உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில்
ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ள மாட்டேன். 

வலிக்குமென்று அஞ்சிக்கொண்டு இருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவு கடந்து நேசிக்கிறேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டி விடக் கூடாது என்பதற்காகத்தான், உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும் வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும் வரை, பட்டி தொட்டிகளில் எல்லாம் நடப்பேன்.

எனக்கு உண்மையென்று பட்டதை நான் நம்புவதைப் போல, நீங்களும் உங்களுக்கு உண்மையென்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்."
                        - தந்தை பெரியார்.
#Periyar #பெரியார் #dravidianmovememt
கனிமொழி கருணாநிதி ..
Kanimozhi Karunanidhi 
சில தினங்களாக பெரிதும் பேசபடுகிற பெயர் .. திமுக உட்கட்சி
தேர்தல் அதில் துணைச் செயலாளர் பதவியை தரவேண்டும் /தரப்படும்  என செய்தி வலம் வருகிறது ..  மானமிகு சுப்புலெட்சுமி ஜெகதீசன் Jegadeesan Subbulakshmi 
விலகியதை தொடர்ந்து யார் ..? என்ற கேள்வி எழுந்து விடைகாணும் நேரம் இது ..
கனிமொழி மிக தகுதி வாய்ந்தவர் 
மறு கருத்தே இல்லை ..
..
ஆனால் ..
தொடர்ந்து மகளிர்க்காக மட்டும் என்ற சொற்சொடரே சரியானதாக படவில்லை. மகளிருக்கான பிரிவில் தான் என்பது நெருடலை தருகிறது.. பொதுபிரிவில் ஏன் போட்டியிட கூடாதா ..
பொதுச் செயலாளர்  /பொருளாளர் பதவிகள் ஏன் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன.. ஏன் பெண்களை முன்னுறுத்தபடுவதில்லை .. மாவட்டளவில் கூட இன்னமும் நாம் மிகவும் பின்தங்கிதானே இருக்கிறோம் .. அங்கங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியா.. பெண்களின் உரிமைகளை, அவர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டுமென தொடர்ந்து பேசிவரும்  திராவிடஇயக்கம்
அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்க்கவேண்டாமா ..
..
திராவிடர் கழகத்தில் பொருளாளராக பிறைநுதல் செல்வி இருந்தார் அவர் மறைவிற்கு பிறகு அந்த பதவியை பெண்களுக்கு ஒதுக்கபடவில்லை ..
அதை தி.கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்களிடத்தில் கேட்டோம் .. எனது ஆசான் வளைகுடாபெரியார் செல்லபெருமாள் அய்யா அவர்களும் அதை வெகுவாக  பாராட்டினார் அப்போது பதிலளித்த பூங்குன்றனார். .. சரியானவர் கிடைக்கும் போது என்றபோது தகுதியானவர்கள்  இல்லையென்கிறீர்களா நிறைய பேரை அடையாளம்காண முடிகிறதே என்ற போது மழுப்பலான பதிலை தந்தார் .. அப்போது திருக்குறள் மாநாட்டிற்கு வருகை தந்த சென்னை பல்கலைக்கழக அரபுத்துறை பேராசிரியர் திருக்குறளை அரபுமொழியாக்கம் செய்தவருமான டாக்டர். ஜாஹீர்உசேன்
DrJahir Husain Jamia Madras அவர்களும் உடனிருந்தார்.. 
..
விடயத்திற்கு வருவோம் 
பெண்களின் முன்னேற்றம் ,உரிமை சமநீதி சமவாய்ப்பு என பேசி வரும் நாம் பெண்களுக்கான அதிகார வரம்பை ஏன் சுருக்கி வைத்திருக்கிறோம் ..பெரியாரை பேசுகிற நாம், பெரியாரை அடியொற்றி கொள்கைகளை வகுத்து பயணிக்கிற நாம் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதையோ மிகப்பெரிய பொறுப்பில் ஆளுமை செலுத்துவதையோ விரும்புவதில்லை  என்பது கசப்பான உண்மை ..
..
கனிமொழி 
எல்லா தகுதியும் திறமையும் ஆளுமை பண்பும் அரவணைத்து செல்லும் ஆற்றலும் கொண்டவர் ..
துணைச் செயலாளராக அல்ல பொதுச் செயலாளராகவே  வர முழுமையான  தகுதியுடையவர் .. காலம் கனியும் போது வருவார் எல்லாம் சரி .. வாய்ப்புகளை உருவாக்கி பெண்களை பொதுவாழ்வில்  சிறந்து விளக்குவோரை
உரிய முக்கியத்துவம் வழங்கி மின்னும் வைரங்களாய் ஜொலித்திட வகை செய்வோம் 
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என இலக்கியத்தில் புகழ்ந்தால் மட்டும் போதுமா .. இயக்கத்தை, அரசை, நிர்வகிக்கும் நம்மை ஆளும் சிறப்பை, ஆளுமையை பறைச்சாற்ற வாய்ப்பை, வழங்கிட வேண்டாமா.
நிச்சயம் காலம் கனியும் 
..
ஆலஞ்சியார்

Saturday, October 8, 2022

தலைவராகிறார் ..
எம் இனத்தின் காவலர் .. பகைவருக்கோ சிம்மசொப்பனம்,
பகையறிந்து படையோட்டம் நடத்தும் தளபதி.. 
அன்னையைப்போல அன்புகாட்டும் பேருள்ளம்,
மக்களின் மனம் கவர்ந்தவர்..
..
தெளிவான கொள்கை பிரகடனம் 
தெள்ளத் தெளிவாக இதுதான் திராவிட மாடலென சொல்லி அதில் உறுதியோடும், துணிவோடும் ஆட்சி நடத்தும் அழகு ..
அனைவரைக்குமான ஆட்சி.. 
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட கல்வி ஒன்றே வழிசெய்யுமென எல்லோருக்கும் ஏற்றதாழ்வற்று கல்வி கிடைத்திட 
மாநில கல்விக் கொள்கை வகுத்து சமதர்ம சமுதாயம், சமநீதியோடு, சமூகநீதியோடு, கிடைத்திட வேண்டி ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர் .. நம் முதல்வர் 
இரண்டாம் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகிறார் ..
வாழ்த்துகள் ..
..
நல்லவர் கையில் தமிழ்நாடு என மக்கள் நம்பிக்கையோடும்,நிம்மதியோடும் இருக்கிறார்கள் .. கயவர்கள், காட்டிகொடுப்போர்,அடிமைத்தனத்தில் ஊறி,  நாட்டை அடகுவைத்த அயோக்கிய கும்பல், சாதிமத வெறிகளுக்கு ஒத்தூதி அமைதியை கெடுத்தாயினும் தங்களை காத்துக்கொள்ள எண்ணி தமிழ்நாட்டை சீரழித்த எடப்பாடி பன்னீர் எனும் இரட்டையர்களின் துரோகத்தை கண்டு இனியும் விட்டால் கூறுபோட்டுவிடுவார்கள் மதவெறி தலைதூக்கி மனிதம் செத்துவிடுமென அறிந்து ..இதோ மகராசன் வந்துவிட்டான் இனி வல்லூறுகளின் பிடியிலிருந்து காப்பான் என நம்பி அகமழிந்து 
தளபதியை அறியணை ஏற்றினார்கள் .. அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிடாமல் நல்ல விளைச்சலை தருகிறார் ..
தமிழகம் மிளிர்கிறது ..
..
சற்றென்று முளைத்தல்ல.. நேற்றைய மழையில் வந்த காளான் அல்ல.. செம்மை படுத்தி .. நல்ல விதையை நீண்டநாள் காத்து சரியான பருவத்தில் விதைத்திருக்கிறார்கள் மக்கள் ..  
எங்கும் மத விசமம் துவேசம், அடுத்தவரின் நம்பிக்கையை குலைப்பது, மாட்டிற்காக மனிதனை கொல்வது, பிற மத அடையாளங்களை அழிப்பது .. சாதிமதமறியாது அண்ணனாய் தம்பியாய் மாமன் மச்சானாய் வாழ்ந்தவனிடம் வர்ணம் கொண்டு பிரித்து அடித்து கொள் என ஏவிவிட்டு அந்த தீயில் குளிர்காய்ந்து தம் மக்களை உயரத்தில் ஏற  வழிசெய்யும் பாசிசத்தின் செயலை ஒடுக்க கிழக்கில் உதிக்கும் சூரியனாய் வந்தவர் .. அதிகாரத்தின் இருளை அகற்ற வந்த சூரியனாய்  எல்லோருக்கும் வெளிச்சம் தந்து நல்லாட்சி தருகிறார் 
..
இந்திய ஒன்றியத்தின் நம்பிக்கையாய், பாசிச சூழ்ச்சிக்கஞ்சாத நெஞ்சுரம் கொண்ட தலைவனை இந்திய தேசம் வியப்போடு பார்க்கிறது .. திராவிடம் மட்டுமே இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறார்கள் .. யாரை கொண்டு மதவெறியர்களுக்கு கடிவாளம் போட முடியும் .. இந்த தேசத்தின் பன்முகத்தன்மை காக்க திராவிட சித்தாந்தமே சரியானதென நடுநிலையாளர்களும் தேசபிமானிகளும் நாட்டின் மீது தீராத பற்றுக்கொண்டவர்களும் ஸ்டாலின் யாரை முன்னுறுத்துகிறார் என காத்திருக்கிறார்கள் .. பிரதமரை உருவாக்கும் சக்தியாக திகழ்கிறார் ..
.. 
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைவர் 
மாண்பிமை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
திமுகவின் தலைவர் 
நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் ..
நாட்டின் நம்பிக்கை.. 
தமிழர்களின் "வேள்"..
..
ஆலஞ்சியார்

Monday, October 3, 2022

சேரன் சோழன் பாண்டியன் 
எவனுமே மக்களுக்கு நல்லது செய்திடவில்லை .. அரச அதிகார மோகம், பெண் பித்து,மக்களின் உரிமைகளை பறித்தல் .. சகோதர யுத்தம், பெண்களை போதையாக்குவது அடிமைபடுத்துவது, ஆரிய சூழ்ச்சிக்கு அடிமையாவது  மக்களிடம் வரிப்பணத்தை வசூல் செய்து ஆரியனுக்கு தங்கள் புகழ்பாடிகளுக்கு "இனாமாக " வழங்குவது அங்கு வாழும் மக்களை அவர்களுக்கு அடிமைசாசனம் எழுதி தருவது 
யுத்தம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது இதுதான் இவர்களின் வரலாறு ..
..
கோவில்களை கட்டிய அளவிற்கு கல்வியறிவு தந்தானா ..
மக்களுக்கு மருத்துவ வசதிகளை கட்டி இனாமாக தந்தானா .. அந்தரபுரத்தில் "அழகில்" மயங்கி ஊர்ஊராக எழுதி தந்ததை தவிர வேறென்ன செய்தார்கள் .. விளைச்சலுக்காக சில நன்மைகள் அது கூட வரிவருவாய் பெருக வேண்டுமென்பதற்காகவே அன்றி மக்களுக்காக அல்லவே ..
மந்திரம் பூஜை யாகம் என ஆரியத்தின் பிடியில் அழிந்ததை தவிர இவர்கள் வரலாறு அப்படியொன்றும் மக்களுக்கான ஆட்சியாளன் என்றில்லை..
..
இமயம் வரை சென்றான் ..சரி எத்தனை உயிர்கள் போயின .. அங்கிருந்து கல் சுமந்து கோவில் கட்டியதை தவிர .. மக்கள் மடிந்ததும் குலம் அழிந்ததை தவிர..
தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும், மீனாட்சி கோவில் கட்டிட கலையும் தமிழனின் தனித்திறமையை பறைச்சாற்றியும் .. உலக அதிசயமாக கொண்ட முடியாமல் போனது இவை மதத்தின் அடையாளமாக போனதால் தான்.. சீனப் பெருஞ்சுவரை போல தாஜ் மஹல் (காதல்)போல பொதுவானதாக இல்லை ..
தமிழ் மன்னர்கள் பிராமணீய மதத்தை வளர்த்த அளவிற்கு தமிழ்த் தொண்டெல்லாம் செய்யவில்லை என்பது தானே வரலாறு ..
..
ராஜராஜன் ஆட்சி மநுநீதியின் அடிப்படையிலானது.. குறைந்தபட்சம் நெடுஞ்செழியன் ஆட்சி போல் கூட இல்லை .. ஜனநாயகன் என தம்பட்டம் அடித்தாலும் மக்களுக்காகவோ மண்ணுக்காகவோ தமிழுக்காகவோ ஆட்சி நடத்தவில்லை .. அப்படியிருந்தால் "கல்கி" கும்பல் கொண்டாடியிருக்காது.. 
"பிராமண" மதத்தை நம்மீது திணக்கவும் அதை கொண்டாடவும் நடைமுறைபடுத்தவும் பயன்பட்டதே தவிர வேறொன்றுமில்லை 
..
ஆலஞ்சியார்