Thursday, March 31, 2022

டெல்லி 
இந்திரபிரஸ்தத்தில் எங்கள் ராவணன் ..  
..
தமிழ்நாடு முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைநகரில் ராவணகோட்டையை திறக்க சென்றிருக்கிறார் .. பகைவர்கள் நிலைகுலைய ,எதிரிகளோ வாய்கிழிய உளறுகிறார்கள் ..
..
அடிமைதிலகம் எடப்பாடி  துபாய் முதலீடு குறித்து குடும்பம் சென்றதேன் என விளக்கமளிக்க கால்பிடிக்க சென்றதாக டயரை நக்கியே பழகப்பட்டவர் பழக்கதோசத்தில் பிதற்றுகிறார் .. பிரதமரோடு தமிழர் தலைவன் அமர்ந்திருக்கும் திமிர் ஒன்றே சொல்லும் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவரென்று .. திராவிட இயக்கம் அறிவை மானத்தை உரிமையையே தரும்..
மானம் ஒன்றே பெரிதென கொண்ட வாழ்ந்த சமூகம் தமிழ் சமூகமென உணர்த்தும் .. இடையில் வழிகெட்டவர்கள் பிழையில் பிறந்தவர்களால் அவமானமே வந்தது அதைவைத்து ஒட்டுமொத்த தமிழினத்தை எடைபோட கூடாது .. எடப்பாடி பழனிசாமி போன்ற சொரணை கெட்டதுகள் தமிழினத்தின் கலப்பட வித்துகள் .. வழி தவறிய ஆடுகள், காலத்தின் கேடுகள்..
..
டெல்லி சபையில் மதிக்கதக்கோர் தேடிவந்து கரம்பிடித்து மகிழ்கிறார்கள் .. இது அரசுமுறை பயணம் மட்டுமல்ல .. எங்கள் இனத்தின் அடையாளமாய் இயக்கத்தை பறைசாற்ற எழுந்தருளி நிற்கும் அறிவாலயம் 
அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்புவிழா .. அறிவுடை சமூகத்தின் திறவுகோலாய், எம் இனம் மொழிகாக்கும் படைத்தளமாய் .. மாநில சுயாட்சி கேட்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சபையாய் திகழபோகிறது .. பிற மொழி பேசுவோர், தங்கள் மாநிலத்தில் சுயமரியாதையோடு செயல்பட தலைவரை கண்டு படிக்க வருகிறார்கள் .. உழைப்பால் உயர்ந்த உன்னதரை கண்டு மகிழ்கிறார்கள் .. அருகில் அமர்ந்து புகைபடமெடுத்து வரலாற்றில் பதிகிறார்கள் ..
..
இனி..
தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தை ஒருங்கிணைக்கும் வழிகாட்டும், பாசிசத்தை வேரறுக்க படையோட்டும், தங்கதளபதி கண்ணசைவுக்காக காத்திருக்கிறது தேசம் .. 
வீணர்களே ..
ஓரமாய் ஒதுங்கி நில்லுங்கள் .. 
இந்திய ஒன்றியத்தை புதிதாய் வடிவமைக்க தெற்கிலிருந்து 
உதய சூரியன் வருகை தந்திருக்கிறது ..  நன்னெறியோடு நேர்மையாய் நல்லாட்சி தந்து மக்கள் விரும்பும் முதல்வராய் .. இந்திய ஒன்றியமே ஏங்கி நிற்கும் மகத்தான தலைவர் எங்கள் இனத்தின் காவலன் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  டெல்லி 
..
ஆலஞ்சியார்

Tuesday, March 29, 2022

மாபெரும் பின்னடைவு ..
ஹிஜாப் அணிந்ததால் தேர்வெழுத மறுக்கபட்டநிலையில் 20,000த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பத்தாமாண்டு தேர்வெழுத முடியவில்லை.. 
சட்டம் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் பாசிசத்தின் கோரபற்களில் சிக்கி எதிர்காலம் ..? கேள்விக்குறியாகி நிற்பது நாட்டிற்கே தலைகுனிவு ..
..
ஒரேயொரு மாணவிக்காக ரயில்நிலையத்தை மூடாத நாடுண்டு.. இங்கே பல்லாயிரக்கணக்கானோரின் கல்வியை நிறுத்தி மதம் சிரிக்கிறது ..நோக்கம் வென்றதாக
நினைக்கலாம் நாடு சர்வதேசத்தின் முன் குனிந்து நிற்கிறது .. கல்வி மறுக்கபடுவதைவிட கொடுமை ஏதுமில்லை .. சமூகம் மடைமையாககூட இருக்கட்டும் அடிப்படைவாதம் பேசட்டும், முட்டாள்தனமாக கூட சிந்திக்கட்டும் .. அதைமாற்ற கல்வி அவசியம் கல்விமட்டுமே புராதனங்களை, பொய்மைகளை, மதங்களை கடந்து மனிதம் வளர பயன்படும்
..
முஸ்லிம் சமூகம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ..ஹிஜாப் அணிந்தே ஆகவேண்டுமென பத்வாக்கள் வரலாம்,இன்னமும் அதே நிலைப்பாட்டோடு இருக்க போகிறோமா என மார்க்க பெரியவர்கள் முடிவெடுக்க வேண்டும் .. எப்பாடுபட்டாயினும் கல்வி கற்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்திட வேண்டும் .. கல்வி நிலையங்களில் மத அடையாளம் தேவையில்லை என்பது எல்லோருக்கும் பொறுந்துமெனில் இந்துமத அடையாளங்கள் அழிக்கபடவேண்டிய கட்டாயத்திற்கு காலம் நகர்த்தும் ..
அவரவர் மத நம்பிக்கைகளை கடந்து கல்வியைப் பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் என உரக்க சொல்லவேண்டியது நமது கடமை ..
..
எப்பாடுபட்டாயினும் கல்வியை விட்டுவிடாதீர்கள் குழந்தைகளே 
உன்சாத்திரத்தை விட 
உன் முன்னோரைவிட  
வெங்காயம் விளக்காமாத்தை விட உன் அறிவு பெரிசு என்றார் பெரியார் .. ஆம் அறிவை தேடு அதற்கான தடைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் தூக்கிபோடு .. 
உச்சநீதிமன்றத்தில் உன் விரும்பம் நியதி மறுக்கபடலாம் ஆனால் உன் கல்வி எனும் உரிமையை மறுக்க யாராலும் எந்தசக்தியாலும் முடியாது .. அதற்கான தடைகளை உன் உணர்வுகளை தூண்டி மதவெறி என்ற முத்திரையை குத்தி தனிமைபடுத்த பார்க்கும் அயோக்கியத்தனத்தை அனைவரும் சேர்ந்து எதிர்ப்போம் .. 
நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது சட்ட போராட்டத்தின் மூலம் விடியலை பெற தொடர்ந்து முயற்சிக்கிறது அதுவரை தேர்வை எழுதாதீர்கள் என முட்டாள்தனமான முடிவை எடுக்கவில்லை .. உரிமை போராட்டம் தொடரும் அதுதான் சிறந்த முடிவு இதை உணர்ந்து முஸ்லிம்கள் முடிவெடுக்கவேண்டும்..
..
இறுதியாய் எந்த இடைஞ்சல் வந்தாலும் கல்வியை விடாதே அறிவை தேடு அதுமட்டுமே தெளிவை தரும்.. மூட பழக்கங்களிலிருந்து உன்னை காக்கும் .. பாசிசத்தை வீழ்த்த உன் கல்வி மட்டுமே கை கொடுக்கும் 
..
ஆலஞ்சியார்

Monday, March 21, 2022

உங்களில் ஒருவன் 
..
தமிழ்நாடு முதலமைச்சர் 
முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்கள் எழுதிய நூல் உங்களில் ஒருவன் வெளியீட்டுவிழா 
அயலக தி.மு.க. குவைத்  Non residents Tamil Indian association நடத்திய விழாவில் 
நூலை வெளியிட்டு பேசினேன் ..
முதல் பிரதியை உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் நண்பர் மானமிகு.சித்தா்த்தன் பெற்றுக்கொண்டார் 
விழாவில் பள்ளி மாணவச் செல்வங்களில் தனித்திறன் போட்டிகளும் பரிசளிப்பும் நடந்தது .. 
பெரியாரை, பேரறிஞரை,முத்தமிழறிஞரை, காயிதெமில்லதை சிறுவர் பேச கேட்க மனம் மகிழ்ந்தது ..
நாளைய தலைமுறைக்கு நல்லதை விதைக்கிறோமென்ற மனதிருப்தி ..
..
தன் வரலாறு நூல் குறித்து சிறிய உரை நிகழ்த்தினேன் .. நூல் நெடுக சாமானியனின் மொழியில் தலைவர் கதைத்திருத்தார்  . எழுத்தாளுமை மிக்க சொல்லாடல்கள் இல்லையெனினும் ,பக்கத்துவீட்டுகாரன் திண்ணையில் அமர்ந்து பழங்கதை பேசுவதை போல அமைந்திருந்தது தளபதியாரின் 
உங்களில் ஒருவன் ..
..
அண்ணா குறித்து அவர் எழுதும் போது  "அப்பனைப் போல பிடிவாதகாரன்" என்றதை பெரும்பேறாக கருதுகிறார் ஆம் கலைஞர் பிடிவாதகாரன் தான் ..67ல் ராமநாதபுரம் தொகுதிக்கு ஆள்கிடைக்கவில்லை மாவட்ட செயலாளர் தென்னரசு யாரும் ராஜாவை எதிர்க்க முன்வரவில்லை என அண்ணாவிடமே சொன்னதையும், கலைஞர் ஆளிருக்கிறார் தங்கப்பன் குதிரை வண்டிக்காரர் என்ற போது எல்லோரும் அச்சத்தை வெளிபடுத்த வென்று காட்டுகிறேனென 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ததையும் நினைவுகூர்ந்து .. 
ஆம் கலைஞர்  பிடிவாதகாரர் தான் கொள்கை பிடிவாதம் நிறைய உண்டு..
..
எம்ஜிஆரை நினைவுகூர்ந்திருப்பார்.. அதில் அப்பனை போலவே முகமூடியை கிழித்தெறிகிறார் என கூறி 
அமைச்சர் கோவிந்தசாமி மறைந்த பிறகு குடும்பநிதி வசூலுக்காக கோபாலபுரம் கிளைக் கழகம் சார்பில் 
எம்ஜிஆரின் "நாடோடி மன்னன் " படத்தை #பகல்காட்சி திரையிட முடிவு செய்த போது எம்ஜிஆர் திரையரங்க மேலாளரை மிரட்டியதையும் தளபதியாரே நேரில் பேசியபோது கோபம் அடைந்ததையும் குறிப்பிட்டிருப்பார் .. அதைச்சொல்லி எம்ஜிஆர் நல்ல வியாபாரி அரசியல்வாதியல்ல தன் இமேஜ் பகல்காட்சியில் திரையிட்டால் கெடும் என்பதை உணர்ந்தே கோபட்டதை சுட்டிகாட்டி பேசினேன் .. போகிறபோக்கில் லாவகமாக எம்ஜிஆரின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார் என்றேன் ..
சிறை குறித்து அவரது அனுபவங்கள் 
நாளை உன் பிள்ளையை காண நீயும் இங்கு வரகூடும் .. பொதுவாழ்வு பூங்காவனம் அல்ல என்ற மேற்கோளை சுட்டிகாட்டிய கலைஞரின் கடிதம் பல நினைவுகளை வரவழைத்தது ..
நிறைய விடயங்கள் நிகழ்வுகள் நூலில் இடம்பெறவில்லை அடுத்தடுத்த பாகங்களில் பதிவு செய்யவேண்டும் ...
..
அதோடு..
மிக முக்கியமாக அயலக அணி தேர்வை சுட்டிகாட்டி உழைப்பவனுக்கு பொறுப்பை தர வேண்டுமென்ற கருத்த பதிவு செய்ய தவறவில்லை .. இந்த இயக்கதிற்கு வண்டிக்காரர்கள் தேவை எனச் சொல்லி,  திராவிட இயக்கம் சிகை அலங்கார நிலையங்களிலும் திண்ணை, தெருமுனை பிரச்சாரங்களில் வளர்நதது .. இயக்கத்திற்கு இன்றைய தேவை வைரவியாபாரிகள் அல்ல 
வண்டிக்காரர்கள் என்ற போது அரங்கம் கைத்தட்டி வரவேற்றது 
..
வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் 
நல்ல நல்ல விதைகளை தேடி விதைத்துக்கொண்டே இருப்போம் .. 
திராவிடம் வாழும் ஆளும்..
..
ஆலஞ்சியார்

Friday, March 18, 2022

சர்க்காரியா கமிஷன் முன்பு எம்ஜிஆர் எனும் மாயமுகமூடி சொன்ன அதே வார்த்தையை 
இன்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு பன்னீர் செல்வம் சொல்கிறார் 
"எனக்கு எதுவும் தெரியாது"..
..
சேலம் கண்ணன் சொன்னதை வைத்து குற்றம்சாட்டியதாக (எம்ஜிஆர்) மகோரா எனும் மடையன் சொன்னாரே அதைப்போல முன்பு முதல்வராக இருந்தவர், விசாரணை கமிஷன் முன்பு தெரியாதென சொல்லி தப்பிக்க பார்க்கிறார்.. இவர்தான் 
விஜயபாஸ்கர் 7 ஆள்களை நிறுத்தி வந்துபோவரை கணக்கெடுக்கிறார் என்றவர் .. நாளை நீதிவிசாரணை வந்தால் உள்ளே போகபோவது விஜய்பாஸ்கரன் என பொதுக்கூட்டங்களில் பேசியவர்
..
ஜெயலலிதாவிற்கு என்ன நோய் என்று கூட தெரியாதாம் .. என்ன மாதிரி சிகிச்சை அளிக்கபட்டதும்
தெரியாது.. அவரை மருத்துமனையில் பார்க்கவே இல்லை .. என்ன நடந்ததென தெரியாது .. இவர் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவர் .. பொருளாளராக இருந்தவர் முன்னாள் முதல்வர் .. இவர் வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ள பொய் சொல்வது தெரிகிறது.. 9 மாதமாக விசாரணைக்கு ஆஜராகாத உத்தமர் பிடி இறுகுவதால் வந்தார் மேலும் பிடி இறுகும் என அறியாமல் உண்மையை மறைக்கிறார்..
..
யாரை காப்பாற்ற என்ற கேள்வி எழுகிறது .. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடந்த சமூக நீதிக்கெதிரான நடவடிக்கைகள்,  ஜெயலலிதா இருந்தவரை நடப்பிலாக்க  முடியாமல் போன திட்டங்கள் விரைந்து விவாதமின்றி யாரும் அறியாமல் கையெழுத்தானதே.. ஏன்? .. நீட் உட்பட ஒன்றிய அரசின் திட்டங்களும் CAA போன்ற சட்டங்களும் அதிமுக துணையோடு அரங்கேறியதே .. இதற்கெல்லாம் தடையாக இருந்த ஜெயலலிதா மரணம் மர்மம் நிறைந்ததை வெளிகொணர வேண்டாமா .. சசிகலாவை தவிர யாருக்கும் எதுவும் தெரியாதென்றால் ஐயம் வருகிறதே.. 
..
ஜெயலலிதா மீதான நமது பார்வை கருத்து அரசியல் எதிர்மறையானது ..அரசியலில் ஜெயலலிதா உண்மையான "தீயசக்தி " என்பதில் மாற்றுகருத்தில்லை ஆனால் அவரது மரணம் மர்மங்கள் நிறைந்ததாக இருப்பது கவலை தருகிறது .. விரைந்து விசாரணை கமிஷன் அறிக்கையை பெற்று வழக்கு தொடரவேண்டும்  அதை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி கூட்டுகளவாணிகளை தண்டிக்கவேண்டும் .. முன்னாள் முதல்வருக்கு பெட்டி தயார் செய்தவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..
..
ஓ.பன்னீர் செல்வம்.. 
நம்பிக்கை துரோகி மட்டுமல்ல பரம அயோக்கியர் ..  விசதாரி .. தர்மயுத்தம் பெயரில் நாடகமாடிய நயவஞ்சகர்..
சட்டத்தின் முன் நிறுத்தபடவேண்டியவர்களில் முதன்மையானவர்
..
பெருங்கள்ளன் 
..
ஆலஞ்சியார்

Thursday, March 17, 2022

#DravidianBudget2022..
..
திறமையானவர்கள் கைகளில் அதிகாரம் கிடைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கு சான்றாய் தமிழகம் திகழ்கிறது ..
நீங்கள் கோவில் கட்டுங்கள் நாங்கள் புத்தக பூங்கா அமைக்கிறோம் .. 
..
நல்ல தலைவன் கைகளில் நாடு 
பெண்கள் கல்வி குறித்து அதிகம் கவலைப்பட்டார் பெரியார் .. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கென்ற மூளையில் மதம் குடிகொண்டு நாட்டை சீரழித்தகூட்டம் இன்று திராவிடமாடல் கண்டு விழித்துக்கொள்கிறது .. கலைஞர் பெருமகன் பெண்கள்
திருமண உதவித்திட்டத்தை எட்டு வரை படித்தால் என தொடங்கி பிறகு பன்னிரண்டாக்கினார்  இன்று திராவிடத்தின் நான்காம் தலைமுறைத்தலைவன் தளபதியார்
அரசுப் பள்ளியில் படித்து உயர்க்கல்விக்கு சென்றால் மாதம் ₹1000 உதவித்தொகை எனொ அறிவித்து மகளிர் கல்வியை உறுதி செய்கிறார்..
..
ஐஐடி ல் சேரும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்கிறார் .. பெரியார் நூல்கள் 21 மொழிகளில் வெளியிடப் படும் இந்திய ஒன்றியத்திற்கு தேவை பெரியாரின் சமூகப் பார்வை என்பதை உணர்ந்து நம் முதல்வர் செயல்படுகிறார்..
..
பழங்குடியினத்தை சேர்ந்த மாணவிகள்  கல்விகற்பதை ஊக்குவிக்கும் NSIGSE திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது ஆனால் திமுக அரசு பழங்குடியினர் கல்வி அக்கறை செலுத்துகிறது.. கல்வி வேளாண்மை, மருத்துவம் மதம்சார்ந்த நம்பிக்கை அறிவியல்,சமூகநலன் என எல்லாவற்றிலும் அக்கறையோடு திட்டம் தீட்டி நிதிஒதுக்கி நல்ல முன்னுதாரணமாக ஒன்றியத்திற்கு வழிகாட்டியிருக்கிறது
..
சமூகநலத் திட்டங்களுக்கு முன்னுரிமை என
தமிழ்நாடு நிதியமைச்சர் சொன்னதிலிருந்தே சரியான பாதையில் திராவிட அரசை செலுத்துகிறார் நம் முதலமைச்சர்
பன்முக தன்மையை அழிக்க நினைக்கும் பாசிசசக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை கலாச்சாரத்தை பண்பாட்டை காக்கும் பொறுப்பு நம் அரசிற்குள்ளதென தெளிவாக பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இது திராவிட மாடல் என பகைவர்களுக்கு புரியவைத்திருக்கிறார்..
..
"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்றான் வள்ளுவன் 
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசனுக்குரிய தகுதிகளாகும்.. அந்த தகுதியை
பெற்ற தலைவராய் நம் 
தமிழ்நாட்டு முதல்அமைச்சர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் திகழ்கிறார் ..
..
நாடு ஒளிருமென நம்பிக்கை பிறக்கிறது
#திராவிடமாடல்
#DravidianBudget2022
#TNBudget2022 
..
ஆலஞ்சியார்

Tuesday, March 15, 2022

ஹிஜாப் தடை செல்லும் ..
மாநில அரசு தடைவிதித்தது செல்லும் .. மாணவர்கள் சீருடையில் Uniform
இருக்கவேண்டும் என்ற கருத்தையொட்டி தீர்ப்பெழுதியிருக்கிறார்கள் ..
ராமர் கோவில் விடயத்தில் நம்பிக்கை சார்ந்து தீர்ப்பளித்த நீதிமன்றம் இங்கே கல்வி மாணவர்கள் சீருடையென
என காரணம் காட்டுகிறது.. 
..
ஹிஜாப் கட்டாயமா என கேள்வி எழுப்பி சிலர் முஸ்லிம் பெண்கள் சரிபாதிக்கும்மேல் ஹிஜாப் அணிவதில்லை என பதில் தருகிறார்கள் .. ஆனால் உடை விடயத்தில் கேள்வி கேட்கவில்லை பள்ளிக்கு ஒரே சீருடையோடுதான் வரவேண்டும். பொட்டு வைத்துக்கொள்ளலாம் பூணூல் அணியலாம் அவை மத அடையாளமாக பார்க்க தேவையில்லை
 அவை கட்டாயமாக்கபட்டதென விளக்கங்கள் வருகின்றன.. உடை சுதந்திரம் பொதுவெளியில் தானே தவிர கல்விநிலையங்களில் அல்ல என்பவர்கள் 
நாமம் போட்டுக்கொண்டு உத்திராட்சம் அணிந்துக்கொண்டு வருவது இதில் சேராது .. முகத்தை மறைப்பதல்ல ஹிஜாப் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை..
..
முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வி முக்கியம் இத்தடைகள்யாவையும் புறந்தள்ளி, கல்வி ஒன்றே மடமையிலிருந்தும், மூடபழக்கங்களிலிருந்தும் காக்கும் என்பதை உணர்ந்து கற்க முன்வேண்டும் .. அடிப்படைவாதிகள் இருசாராரும் பெண்கல்வியில் பிற்போக்குத்தனமானவர்கள் .. எப்படியேனும் கல்விக்கு தடை போட துடிப்பவர்கள் அவர்கள் அதற்கு அற்பமான ஆயுதங்களை (ஹிஜாப்) முன்நிறுத்துவார்கள்  கவனம் தேவை குழந்தைகளே!..
..
பாசிச ஆர்எஸ்எஸ் திட்டங்கள் ஒவ்வொன்றும் மெல்ல அரங்கேற தொடங்கியிருப்பது ஆபத்தானது ஐந்துமாநில வெற்றிக்காக காத்திருந்து தீர்ப்பு வந்திருக்கிறது .. சிறு சிறு தடைகள் நம் பயணத்தில் களைப்பை தரலாம் ஆனால் துணிந்து போடா மயிரு என தூக்கியெறிந்துவிட்டு நம் கல்வியை உறுதி செய்வோம் .. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் 
கொந்தளிக்காமல் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பள்ளி கல்லூரிக்கு அனுப்புவதை திருத்தாமல் இருக்கவேண்டும் ..
..
இந்திய நீதிகள் நூல்களால் ஆனது .. ஆகமவிதியென தங்களுக்கு சாதகமானவற்றை சேர்த்து, தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக எதையும் செய்பவர்கள், மதம் என்ற பெயரில் தலையிட கூடாதென ஒப்பாரி வைப்பவர்கள் .. தலையில் துணியை கட்டிக்கொள்வதில் என்ன தவறைக் கண்டார்கள் .. சீக்கிய மதத்தவர்கள் டர்பன் அணியலாம் அது விதிமீறலில் வராது .. சீருடை என்பது எல்லோரும் ஒரே வண்ணத்தில் வேண்டும் , ஏற்றதாழ்வற்ற மனப்பான்மையோடு சமமென உறுதிபடுத்ததான் .. மத அடையாளமற்ற நிலையில் யாருமில்லை .. குறிப்பிட்ட மதத்தவர் மீது மட்டும் இதுபோன்ற தாக்குதல் நடத்தபடுவதன்  மதவெறியை ஏற்படுத்தி வேற்றுமையை உருவாக்கி  கலவரத்தோடு இந்த மண்ணை வைத்திருக்கவேண்டுமென்பதை தவிர வேறில்லை ..
இன்று அறுதிப் பெரும்பான்மை 
ஆட வைக்கும் ..
ஆனால் விழும் போது எழவே முடியாமல் போகும் .. இந்த தேசம் பன்முகத்தை இன்முகத்தோடு ஏற்கும் பண்பாடு நிறைந்தவர்களை கொண்டது 
எச்சரிக்கை..
..
ஆலஞ்சியார்

Saturday, March 12, 2022

ஐந்து மாநில  தேர்தலில் பாஜக வெற்றி, அதுகுறித்து எதிர்க்கட்சி கவலையும் ..
..
எதிர்க்கட்சிகள் காங்கிரஸோடு இணைந்து செயல்பட தயாரென பேச தொடங்கியிருப்பதே ஜனநாயகத்தின் மிச்சமிருக்கும் நம்பிக்கை ஒளி.. முதலில் காங்கிரஸ் மேலாதிக்கவாதிகளிடமிருந்து விடுதலை பெறவேண்டும், ஜமீன்களும் பெருந்தனக்காரர்களும் பாப்பனீய சிந்தனாவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கவேண்டும் .. இன்னமும் நிறைய #பிரணாப்முகர்ஜிகள் காங்கிரஸில் உண்டு 
கார்த்திக் சிதம்பரம் போன்ற மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட உதவாகரைகளும் அரசியல் அறிவற்றவர்களும்  நிறைய காணலாம் அவர்களை களையெடுக்கவேண்டியது அவசியம் .. இவர்களை வெளியேற்றிவிட்டு சாமானிய மக்களிடம் செல்லவேண்டும் அங்கிருந்து தலைவர்களை உருவாக்க சிலகாலம் பிடிக்கும் அதை இப்போதே துவங்கவேண்டும் ..அதுவரை ராகுல் தூய்மைவாதம் பேசி எந்த பலனுமில்லை..
..
பாஜக எதிர்க்கட்சிகளை பிரிப்பதில் அவர்களை ஒன்று சேரவிடாமல் தொடர்ந்து ஊடகத்துணையோடும் காங்கிரஸில் இருக்கும் கருப்பாடுகளின் துணையோடு சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறது .. மிக குறைவான வாக்கு விகிதம் என்றாலும் தேர்தலில் வெற்றி என்பதொன்றே அதிகாரத்தில் அமர்த்தும் அதை  மிக சரியாக செய்கிறது .. பஞ்சாப்பில் காங்கிரஸ் தேர்தல் நெருங்கிற நேரத்தில் தலைமையை மாற்றியது அங்கே பலவீனபட காரணம் .. எதை எப்போது செய்யவேண்டும் என்பதில் இருக்கிறது அரசியல்வெற்றி.. பஞ்சாப் மக்கள் காங்கிரஸை வீழ்த்த நினைக்கவில்லை மாறாக பாஜகவை அழிக்க நினைத்து அதற்கு மாற்றான காங்கிரஸ் பலவீனபட்ட நிலையில் ஆம் ஆத்மியை அறியணையேற்றியிருக்கிறார்கள்.. காங்கிரஸ் இதை உணராதவரை இழப்பு இந்திய மக்களுக்குதான் 
..
தமிழகத்தைப்போல மிக தெளிவாக திட்டமிடலோடு தேர்தலை சந்திக்கவேண்டும், திமுக தோழமைகளை அரவணைத்து சென்று எதிரியை வீழ்த்தியதை தளபதியின் அணுகுமுறை அரசியல் முதிர்ச்சி 
நுட்பமான உத்தி இவைகள் அரசியல் இலக்கணம் .. 
மம்தா காங்கிரஸோடு இணைந்து செயல்பட தயார் என்ற அறிவிப்பை "நல்நோக்கமாக" கருதி இந்திய ஒன்றியத்தின் மாநிலத் தலைவர்கள் தங்கள் தலைக்கனத்தை அகங்காரத்தை தூக்கெறித்துவிட்டு  ஒன்றிணைந்தால் நாட்டில் இரண்டாவது விடுதலை போர் என வரலாறு பேசும்..
..
இப்போது இந்திய ஒன்றியத்திற்கு தேவை " திராவிட மாடல்" அதை அனைத்து மாநில தலைவர்களும் உணர தொடங்கியிருப்பதாக  வரும் செய்திகள் நம்பிக்கை தருகிறது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்(தேசிய கட்சிகள்) தங்கள் பலம் என்னவென்று அறிந்திருக்கும் .. அந்தந்த  மாநில கட்சிகளோடு இணைந்து பாசிச பாஜகவை வீழ்த்த முன்வரவேண்டும் .. இடதுசாரிகளிலும் ஆர்எஸ்எஸ் கருப்பாடுகள் உண்டு அவை மெல்ல தலைகாட்டி மீண்டும் உருமாறிக் கொள்ளும்..  
..
தேசத்தின் தலைவராக யாரை முன்னிறுத்தலாமென சண்டை மூட்ட பாசிசம் முயலும்.. இவையெல்லாம் பாஜகவிற்கு துணை சேர்க்க கைக்கூலிகள் செவ்வனே செய்வார்கள் .. இன்றைக்கு இந்திய ஒன்றியத்திற்கு
நம்பிக்கை தரும் தலைவராக தளபதியார் மிளிர்கிறார் .. மாநிலகட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் பாசிசத்தை வேரறுக்கவேண்டியதும் அவர் அறிவார் .. குறுகிய எண்ணங்களிலிருந்து மீண்டு நல்ல மீட்சி வேண்டி மாநிலத்தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் அதன் முன்னெடுப்பை 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செய்யவேண்டும் .. அதன் அவசியத்தை/அவசரத்தை உணர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்..
..
நல்லதை விதைப்போம்
..
ஆலஞ்சியார்

Wednesday, March 9, 2022

"தமிழ்நாடு அரசு” வாதத்தினை ஏற்று பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..
 இந்திய ஒன்றிய அரசு கடுமையாக எதிர்த்தும், பரோலில் நன்னடத்தையை கருத்தில் கொண்டும்,  தமிழக அரசு எழுவர் விடுதலை ஆவதை விரும்புகிறதென்பதை மேற்கோள்காட்டியும் பிணை வழங்கியிருக்கிறது ..
கூடவே ஆளுநர் காலதாமதபடுத்த அதிகாரம் இல்லை தனியாக முடிவெடுக்க கூடாது அமைச்சரவையின் தீர்மானத்தை உடன் பரிசீலித்திருக்கவேண்டும் என கோடுட்டுகாட்டி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் ..
..
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பேரறிவாளன் பரோலில் இருக்கிறார் எட்டுமாதங்கள் தொடர்ந்து பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு புதிய உதாரணம் படைத்திருக்கிறது .. ராஜீவ் கொலையில் நமக்கு உடன்பாடில்லை அதற்காக திமுக சூறையாடபட்டதும் தொடர்ந்து பாசிச சக்திகள் திமுக அதிகாரத்திற்கு வருவதை தடுக்க "புலிகள்தொடர்பு" என்று கதைகட்டியதும் அதனால் திமுக இழந்ததை விட தமிழ்நாடு இழந்தது அதிகம் 
..
பேரறிவாளன் நீண்ட சிறைவாசம் இளமையை இழந்து நோய்வாய்பட்டு பெற்றோர்களுக்கு கடமைகூட செய்யமுடியாமல், அவர்களுக்கு பாரமாக இருந்தது தான் மிச்சம்.. தூக்குதண்டனையை விட கொடுமையான சிறைத்தண்டனை காலம் மிகசிறந்த படிப்பினையை தந்திருக்கிறது .. இளைஞர்கள் வழிகேட்டில் செல்லாமல் மதம் சாதி இனம் மொழியென வெறிக்கொண்டு தவறான பாதையில் செல்லாமல் எதையும் ஜனநாயக முறைப்படி அணுகவேண்டும், சிறு தவறுகூட மிகப்பெரிய தண்டனையைதந்துவிடும் என பாடம் போதித்திருக்கிறது .. நீண்டநாள் சிறைவாசிகள் நிலைமை அது மதமேறிய செயல்களால் ஏற்பட்டிருந்தாலும் விளைவு கொடுமையான பாடத்தை நமக்கு கற்பிக்கும்..
..
பிணையில் இருக்கும் பேரறிவாளனுக்கு, இனியேனும் தமிழ் தேசியம் பேசும் போலிகளை நம்பாதீர்கள்.. இப்போது கூட திருமுருகன் போன்ற ஈழத்தை வைத்து வயிறுவளர்க்கும் அயோக்கிய கூட்டம் ஜாமீனின் வந்ததை மக்கள் போராட்டமென திசை திருப்ப முயல்கிறது கவனம் தேவை ..  வழக்கிலிருந்து முழுமையாக விடுதலையாகும் வரை போலிகளிடம் அடைக்கலமாகாமல் இழந்தை வாழ்வை மீட்க முயலுங்கள் .. காலம் முழுவதும் கண்ணீரோடு கடந்த தாயை உடனிருந்து கவனித்துக்கொள்ளுங்கள் .. அரசியல் கடந்து நிறைய இருக்கிறது வாழ என்பதை அறிந்து புதிய வாழ்க்கையை வாழ முயலுங்கள் ..தவறு செய்திருந்தாலும் இல்லையெனினும காலம் தந்த பாடம் வரலாற்றில் பலருக்கு நிறைய செய்தியை சொல்லும்.. 
புதியவாழ்வை தொடங்குங்கள் தோழரே..
..
ஆலஞ்சியார்

Tuesday, March 8, 2022

 உலகப் பெண்கள் தினம் 
..
நீண்ட நாட்களாக என்னை துரத்திக்கொண்டிருந்த கேள்வி 
ஏன் அதிகாரமிக்க பதவிகளில் 
பெண்களை திராவிட இயக்கங்கள் அமர்த்தவில்லை 
(அதிமுகவை திராவிடக்கட்சியாகவே கருதவில்லை அது ஆர்எஸ்எஸ் உருவாக்கிய மாற்றுபாதை)
கேள்வி இன்னும் முடியவில்லை 
அதற்கான தகுதியானவர் கண்டெத்தமுடியவில்லயா ..
..
திராவிடக் கழகத்தின் பொருளாளராக மானமிகு. டாக்டர்  ஈரோடு பிறைநுதல் செல்வி கௌதமன்  இருந்தார் அவர் விபத்தில் மரணமடைந்த பிறகு அப்பதவிக்கு பெண்கள் யாரும் நியமனம் செய்யபடவில்லை .. இதுகுறித்து உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் நடத்திய  "திருக்குறள்"மாநாட்டிற்கு வருகை தந்த தி.கழகத்தின் துணைத்தலைவர் மானமிகு.கலி.பூங்குன்றனாரிடம் கேட்டேன்
அப்போது உடனிருந்து ஊக்கம் தந்தவர் 
ஆசான் மறைந்த மானமிகு.செல்லபெருமாள் அய்யா அவர்கள்
அதற்க கலி.பூங்குன்றனார்
அதற்கான தகுதியுடையவர்கள் வரும் போது கிடைக்கும் என மழுப்பலான பதிலை தந்தார் .. நிறைய பேர் இருக்கிறார்களே என்ற போது மௌனம் பதிலாக வந்தது அந்த திருக்குறள் மாநாட்டில் குறளின் அரபி மொழிப்பெயர்ப்பு 
வெளியிடபட்டது நெஞ்சைவிட்டு அகலாத மகிழ்வான நிகழ்வு ..
..
திராவிட முன்னேற்ற கழகத்தில் 
பேரறிஞர் அண்ணா, நாவலர், பேராசிரியர், துரைமுருகன் என செயலாளர்கள் தொடர்கிறார்கள்,பொருளாளர்களாக
மதியழகன்,எம்ஜிஆர்,பேராசிரியர்,சாதிக்பாட்சா,ஆற்காடுவீராசாமி தளபதியார்,துரைமுருகன், டி.ஆர்.பாலு என பொறுத்தமானவர்களை நம்மால் கண்டெடுக்க முடிகிறது ஆனால் 
"பெண்கள்" இந்த பதவிகளை ஆளுமை செலுத்த வாய்ப்புகளை தராமலேயே தவிர்த்து வருகிறோம்.. நிறைய காரணங்களை தேடுகிறோம் எல்லா நேரங்களிலும் பணியாற்ற முடியாதென அபத்தங்களை பாதுகாப்பை வைத்திருக்கிறோம்.. வாய்ப்புகளை தந்து அவர்கள் திறமையை வெளிகொணர மறுப்பது திராவிட சித்தாந்ததிற்கு எதிரானது..
பெண்கள் உயர் பதவிகளில் வரவேண்டும் ஆணுக்கு பெண் சமம் என கொள்கையை பாட்டில் வைத்த கைதட்டி மகிழ்கிறோம் 
பெரியாரின் கனவை நினைவாக்க முயன்றுக் கொண்டிருக்கும் நாம் திராவிட  இயக்க பதவிகளிலும் நிகழ்த்தி முன்உதாரணம் ஆகவேண்டாமா..
..
தகுதியானர்கள் கிடைக்கவில்லை என்ற சப்பை வாதம் தேவையில்லை திராவிட இயக்க வரலாற்றை படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்ற பெயரில் என்னால் 10 பேரை அடையாளம் காட்டமுடியும்.. கடைசிவரை துணைப் பொதுசெயலாளர் பதவியிலேயே கடந்துவிட போகிறோமா.. அல்லது மகளிர் தலைவி என பாலின வேறுபாட்டை நாமும் தொடர்ந்து  கடைப்பிடிக்க போகிறோமா .. அல்லது திட்டங்களுக்கு பெயர் சூட்டினோம் பெருந்தகையாளர்களை புகழ்ந்தோம், நலத்திட்டங்களை செய்தோம் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைத்தோமென நம்மை நாமே ஏமாற்றி காலம் கடத்த போகிறோமா.. பெண்களுக்கு சலுகை தந்தோமே என மகிழ போகிறோமா.. இயக்க செயல்பாடுகளில் உயர்பொறுப்புகளை  தந்து உரிமையை நிலைநாட்ட வேண்டாமா..
..
"திராவிட மாடல்"  புதிய வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் தலைவர் தளபதியார் 
இயக்கத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே தலைவராக மதிக்கபடுகிறார்
The Leader of Tamil Nadu மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறார் .. மகளிர்  என்ற குறுகிய நிலையிலிருந்து மாறும் காலம் வந்துவிட்டது ..
இயக்கங்களின் உயர் பொறுப்புகளிலே அமர்த்துவோம் புதியதொரு சமுதாயம் படைப்போம் ஏற்றதாழ்வற்ற பாலின பாகுபாடற்ற நிலை உருவாகும் போதே திராவிட சித்தாத்தத்தின் வெற்றி என பறைசாற்றமுடியும் ..
..
நம் தலைவர் 
செய்வார் 
செயல் தலைவர் தளபதியார்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
தமிழகம் கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் .. 
..
மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது ..
பெண்கள் நாள் வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

Saturday, March 5, 2022

தலைவன்..
கட்டுபாடோடு கட்சியை வழிநடத்தவேண்டுமென்று தன் தொண்டர்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு மீறியவர்கள் பதவி விலகிவிட்டு தன்னை சந்திக்க வரவேண்டுமென்ற உத்தரவிட்டு உயர்ந்து நிற்கும் தலைவன் 
அரசியலில் புதியதொரு வழிதடத்தை உருவாக்கி நேர்மையோடு வழிநடத்தி பெரும்படையோடு காலத்தில் என்றும் நிலைத்துநிற்கிறார்..
..
உள்ளாட்சிகளில், கட்சி அரசியலை மீறி, சாதிய பின்னணி, தெரிந்தமுகம், வேண்டியவர், ஊர்காரர்,என எப்போதும் நடக்கும் விடயத்தில் தான் "ஒழுங்கு " செய்திருக்கிறார்.. உண்மை அப்பகுதியில் செல்வாக்கோ பலமோ இல்லாத கட்சிகளுக்கு ஒதுக்கியதில் நேர்ந்த தவறுகள், நீண்டகாலமாக அரசியல்  செய்துவந்தவர்கள், மக்களோடு பழகியவர்கள்,தங்களுக்கான அங்கீகாரம் மறுக்கபட்டதும், வெற்றிபெறமுடியும் என்றவுடன் மீறி செயல்பட்டதறிந்து தலைவர் சாட்டையை சுழற்றியிருக்கிறார்.. சில இடங்களில் பெரும் தொகை செலவு செய்தும் வென்றவர்கள் கட்டுபாடு மீறினால் கட்டம் கட்டபடுவீர்கள் என்ற எச்சரிக்கை செலவு செய்தால் அதிகாரம் பதவி கிடைக்கும் என்ற நினைப்பில் வெந்நீர் ஊற்றியிருக்கிறார்..
..
உள்ளாட்சிதானே நடந்ததென அலட்சியம் செய்யாமல் வருந்தி 
"கூனி குறுகி" நிற்கிறேன் என்ற அறிக்கை இந்திய அரசியலுக்கு புதிது.. கட்சிகாரன் தானே வென்றிருக்கிறான் கட்சி பலம் கூடும் என்றிராமல் தலைமை பொறுப்போடு கட்சியினருக்கு ஒழுங்கு முக்கியம் என "பறைச்சாற்றி" உயர்ந்துநிற்கிறார் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
.. 
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை நல்ல தலைவனை கண்டிருக்கிறது ..
தலைவனின் தலைமைப்பண்பும், தோழமை உணர்வு, நம்பிவந்தவர்களுக்கு தந்த உறுதியை காக்கவேண்டுமென்பதில் உண்மையாகவும் இருந்து மக்கள் மனங்களில் உயர்ந்துநிற்கிறார்..
மிகச் சிறந்த தலைவர்களை உலகம் கண்டிருக்கிறது அந்த உன்னதர்கள் வரிசையில் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இடம்பெறுகிறார்..
..
அரசியலில் புதிய இலக்கணம் படைக்கிறார் நீதி தவறா எம் தலைவர் ..
பழுத்த அனுபவமும், பெருந்தலைவர்களோடு நின்று பயின்ற அனுபவமும் காலம் தந்த அனுபமும் மெருகேற்றி நல்லதலைவராய்  நம்முன் நிறுத்தியிருக்கிறது .. அவரது கரத்தை
பற்றிப்பிடித்துக் கொள்வோம்
நல்ல தலைவனை பெற்றிருக்கிறோம் எனப் பெருமைக் கொள்வோம் ..
வாழ்த்தி மகிழ்வோம் ..
..
ஆலஞ்சியார்

Thursday, March 3, 2022

கவனித்தீர்களா..
பெண்களை அதிகளவில் அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்க்கிறது திராவிடமாடல்
இதைதான் பேராசான் பெரியார் சொன்னார்.. பேரறிஞர் கனவுகண்டார் முத்தமிழறிஞர் தொடங்கிவைத்தார் இன்று முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் படையோட்டம் நடத்தியிருக்கிறார்..
11மாநகராட்சிகளில் பெண்கள் 
"மாநகரத் தாயாக" உயர்வு பெறுகிறார்கள் .. நல்ல தொடக்கம்..
..
கும்பகோணம் காங்கிரஸூக்கு வழங்கியதில் எமக்கும் கோபமுண்டு .. ஆனால் அங்கே ஆட்டோ டிரைவர் மேயராகிறார் இதற்குதானே திராவிடப் பெரியவர்கள் பாடுபட்டார்கள்
கோயம்புத்தூர் மேயர்  கல்பனா ஆனந்தகுமார் மிக எளிமையான குடும்பத்தை சார்ந்தவர் வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல்வரை சந்திக்க பேருந்தில் சென்னைக்கு வந்து சென்றவர்.. தாம்பரம் மேயர் தொழிலாளியின் மகள், 
சாமானியர்கள் அதிகாரமிக்க அமர்த்துவதே நாம் கொண்ட கொள்கையில் சரியாக பயணிக்கிறோம் என்பதற்கான சாட்சி.. கோவை போன்ற வணிக நகரில் செல்வந்தர்களும், செல்வாக்குள்ளவர்களும்,  அழுத்தம் தந்தும் தலைவரின் முடிவு சிலருக்கு அதிர்வை தந்தாலும் பயணம் சரியான திசையில் செல்வதை உணர்த்துகிறது..
..
மாநகராட்சி,நகராட்சி,பேரூர் தலைவர்களாக புதியவர்கள் அதிகளவில் இடம்பெறுவது நல்ல தொடக்கம் .. சில வருத்தங்கள் வரும் போகும் .. கொள்கையில் உறுதிக் கொண்டவர்கள் தலைவரின் தேர்விற்கு தலையசைப்பதை காணமுடிகிறது.. சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை என குரல் உயர்வதை அறிகிறோம் பேரூராட்சிகளில் 20 பேர் தேர்வென்பது கூட ஆறுதல் தரகூடிய விடயமல்ல .. சமுதாயம் முத்துபேட்டை நகராட்சியில் பிரிந்துநின்று தோற்றதை கணக்கில் கொள்ளவேண்டும்..
மேலூர் எந்த வார்டில் ஹிஜாப் கழட்ட சொன்னார்களே அங்கிருந்தே தலைவர் முகமது யாசின்தேர்வு செய்திருப்பதிலிருந்தே பகைவர்க்கு சேதி சொல்கிறார் தலைவர் ..
..
உள்ளாட்சிகளில்தான் உண்மையான சனநாயகம் இருக்கிறது .. பொறுப்பிற்கு வருபவர்கள் அதை உணர்ந்து செயல்படவேண்டும் ஏனெனில் 
Stslin is More Dangerous .. எதிரிகளுக்கு மட்டுமல்ல தவறு செய்பவர்களுக்கும் தான் .. நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது 
மக்கட்பணி செய்ய , அதை உணர்ந்து செயல்படுங்கள் 
பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்