எங்கும் அல்லாஹூ அக்பர் என உரக்க கேட்கிறது.. சங்கிகள் திட்டம் போட திருப்பி அடிக்கிறார்கள் இந்து பெருமக்கள் .. தங்கள் மகள்களுக்கு சகோதரிகளுக்கு ஹிஜாப் அணிவித்து மகிழ்கிறார்கள்.. எதை தொடவேண்டுமென தெரியாமல் சங்கிகளும்.. தொட்டுபாரென பொது சமூகமும் களமறங்கி பாஜக ஆர்எஸ்எஸ் திட்டத்தை போட்டு உடைக்கிறார்கள்.. பிராமண சகோதரர் என் மகன் திருநீறு பூசிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான் தடுப்பீர்களா என கேள்வி எழுப்புவது இந்திய சமூகம் வேற்றுமையில் ஒற்றுமையில் நிற்பதன் அடையாளம் ..
..
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவதும் எதோ இப்போதுதான் நடப்பதைப்போல பேசுவது கவலையளிக்கிறது.. திடீரென தடுப்பதும் அதை கல்லூரி முதல்வரே சொல்வதும் காரணம் புரியாமல் இல்லை .. ஹிஜாப் அணிவதால் எந்த தொந்தரவும் இல்லை என்கிறபோது அதை காரியமாக்க தேவையில்லை.. உடனடியாக செய்யவேண்டியது முதல்வரை நீக்குவதும் கல்வித்துறையில் பணிபுரிய வாழ்நாள் தடைசெய்வதும் தான்.. சில நடுநிலைகள் முற்போக்கு பேசும் சங்கிகள் அவரும் அல்லாஹூ அக்பர் என்றுதானே சொன்னார் அதைதான் அவர்களும் எதிர்பார்த்தார்கள் என்கிறார்கள்.. ஜெய்ராம் என கத்தி கூச்சல் போட்டு பயமுறுத்த நினைத்தால் திருப்பி அல்லாஹூ அக்பர் என முழங்கி தான் கொண்ட நெறியை விளக்கியிருக்கிறார் .. சிறு கூட்டத்தை கண்டு பயந்தோ அல்லது ஒழிக என எதிர்முழக்கமோ செய்யாமல் தேவையில்லாத ரோமத்திற்கு தரும் மதிப்பை கூட தரமறுத்து நடைபோட்டு இந்திய ஒன்றியத்தையே துணைநிற்கவைத்ததுதான் இந்திய பெண்களுக்கே உள்ள மனஉறுதி..
..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நேர்மையோடு அதை சொல்லி அல்லாஹூ அக்பர் என எழுதுகிறார்கள் .. அந்த பெண்ணின் உறுதியையும் அஞ்சாமையையும் தங்கள் மகளுக்கு கற்றுகொடுக்கவேண்டும் என்கிறார்கள் .. அல்லாஹூஅக்பர் என்பது இறைநம்பிக்கையிலிருந்து மாறி அது எதற்கும் தளர்ந்துவிட கூடாது என்பதற்கும் .. எத்தனை பகை நேர்நின்றாலும் உறுதிகுலையாமல் துணிந்து செல் என்பதையும் .. உன் உரிமையை விட்டுகொடுக்காதே அச்சுறுத்தலுக்கு அஞ்சாதே எதற்கும் எவனுக்கும் எக்காரணம் கொண்டும் அடிபணியாதே என கற்றுகொடுத்திருக்கிறது ..
..
அறிவிலிக்கூட்டம் கத்துகிறது
அறிவுடை சமூகமோ அறம் சார்ந்த அந்த மகளின் கூட நிற்கிறது ..
இந்திய சமூகத்தின் வேர் பன்முகதன்மையின் சாற்றில் பட்டுபோகாமல் நிற்கும்..
..
ஜெய்ராம் என கூச்சலிட்டவன் வெளியில் நிற்கிறான் .. ஆனால்
மகளோ அஞ்சாமல் வகுப்பறைக்குள் நுழைகிறாள் ..
தடையை உடை
எது தடுத்தாலும் கல்வியை விடாதே அது கரை சேர்க்கும்
என்ற உண்மையை உணர்த்துகிறது அந்த காட்சி..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment