வெகுமக்களிடையே அதிகார பகிர்வை தரவேண்டியும் மக்களே தங்களின் தேவைகளை உணர்ந்து அதை சரிசெய்யவும் மக்களாட்சி எனும் ஜனநாயக மாண்பின் அடிப்படை கூறுகளை உள்ளடைக்கிய தேர்தல் .. பலம், தெரிந்த முகம், சாதிய வேர்களின் பிடிமானம், கட்சி அரசியல், இவையெல்லாம் தாண்டி மக்களாட்சியை உறுதிசெய்யும் மகத்தான தேர்தல்
இங்கே சாதி கோரதாண்டவமாடும் பணமும் செல்வாக்கும் அதிகாரதிமிரும் நடனமாடும் ஆனாலும் மக்களின் தேர்வுகள் ஜனநாயகத்தை உரக்க சொல்லி வேர்கள் அழுகிவிடாமல் காத்துநிற்கும்..
..
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சில சம்பவங்கள் முகம் சுளிக்கவைத்தாலும் பெருவாரியமக்களின் மனம் சரியானதையே தேர்வு செய்யும் .. சின்னசின்ன சேதிகள் வரம்புமீறியதாகவும் பாழாய்போன மத சாதிய வெறியாட்டம் அடுத்தவரின் உரிமையை பறிப்பதாகவும் இருப்பது கவலைக்குரியது ஆரம்பத்திலேயே களையவேண்டியவைகள் .. வேலூர் சொல்லும் சேதி ஒரு எச்சரிக்கை மணி .. தெரிந்த முகம் நீண்டநாட்களாக பழகிய முகம் தன் கொடூரத்தை காட்ட தொடங்கியிருப்பது எந்தளவு மதவெறியர்கள் மெல்ல ஊடுறுவியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.. பணம் பதவிஆசை செய்த தப்பிலிருந்து பாதுகாப்பு தொடர்ந்து கொள்ளையடிக்க ஏன் கொலை கூட செய்தாலும் சட்டத்தின் முன் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை ஆபத்தான பாதையை உருவாக்கியிருக்கிறது .. கடந்த நான்காண்டில் அடிமைகள் செய்த தீமைகள் இன்று ஒவ்வொன்றாய் கோரமுகத்தை காட்ட தொடங்கியிருக்கிறது .. பயிரை காக்க களையெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது..
..
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் யார் நமக்கானவர் யாரை நம்பவேண்டும் .. யாருக்கு வாக்களித்தால் நம் வருங்காலம் ஆபத்திலிருந்து காக்கபடும் .. நமது பிள்ளைகள் எதிர்கால கனவுகள் நிறைவேறவேண்டும் அதற்கு யாரெல்லாம் எதிரானவர்கள், யாரால் முடியுமென்று அறிவார்கள் .. சாதியோ சமயமோ மதமோ தங்களை காக்காதென அறிவார்கள் .. எதையும் பகுத்தாயும் அறிவும் அது தரும் தெளிவும் தான் சனாதனவாதிகளை கலங்கடிக்கிறது .. அவர்கள் பொய்கள் வடமாநிலத்தில் கைகொடுப்பதைப்போல இங்கே நடப்பதில்லை நொடியில் அவர்களின் முகம் கருத்துபோகிறது முகமூடிகள் கிழிக்கபடுகின்றன ..
திராவிடப் பேராசான்கள் தமிழ்நாட்டை சரியான பாதையை வகுத்துதந்ததே காரணம் .. பாரினிலே
"நல்ல நாடு" தமிழ்நாடென ஒன்றியம் வியக்கிறது ..
..
நல்லதை விதைப்போம் ..
இடையிடையே வளரும் களைகளை பிடிங்கியெறிவோம்
நல்ல விளைச்சலை அறுவடைச் செய்வோம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment