அரசின் கட்டைவிரலின் கீழ் கோவில்கள் இருக்கவேண்டுமா என பாலசந்தர் படத்தை மேற்கோள்காட்டி தீர்பெழுதும் சுவாமிநாதன் சொல்கிறார்.. அறநிலையதுறை என்பது எதற்காக கொண்டுவரபட்டதென்பதை நம்மைவிட "அவர்கள்" அறிவார்கள் .. திமுகவின் முதல் அறநிலையத்துறை பொறுப்புவகித்த நடமாடும் பல்கலைகழகம் நாவலர்
கொடுக்கும் 6 மரக்காலில் 2மரக்கால் குருக்கள் வீட்டுக்கு செல்லாமல் தடுக்கதான் அறநிலையத்துறை என்றார்..
..
கோவில் சிலைகள் திருட்டில் கோவில் சொத்தை அத்துமீறி அனுபவிப்பதில் கொள்ளையடிப்பதில் பெரும்பங்கை சாமி மீது "பாசம்" காட்டும் "தெய்வீக"பக்தர்கள் தான் அதிகம் .. நாத்திகம் பேசுபவன் கோவில் சொத்தை கொள்ளையடித்ததாகவோ சிலை திருட்டில் ஈடுபட்டதாகவோ காட்டமுடியுமா .. மதம் தலைக்கேறியவர்கள் கையில் போனால் "அறம்" சிதைந்துபோகும்..
..
நாகூர் தர்கா முழுவதுமாக வக்ப் கட்டுபாட்டில்வந்திருக்கிறது நல்ல முடிவு .. எந்தமதமாகினும் அது வருவாய் தரும் ஆலயமெங்கில் அதில் குளறுபடிகளும் கொள்ளைகளும் விரும்பதகாத செயல்களும் அரங்கேறதான் செய்யும் .. தடுப்பது அரசின் கடமைகள் அரசு நம்பிக்கை உரியவர்களுக்கும்தான் அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது கடமையும் கூட
..
அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி நடத்தலாமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர் .. கொள்கை முரண் என தாளிக்கின்றனர் .. உண்மை கேலி கூத்துகளும் ஆட்டம்பாட்டமும் பெரும் கொள்ளையும் சிவராத்திரி என்றபெயரில் கார்ப்பரேட் சாமிகளின் அட்டுழியங்களும் நடப்பதைதான் கண்டிருக்கிறோம்.. இம்முறை அரசுவிழாவில் சமய சொற்பொழிவுகள் பக்திபாடல்கள் ஒலிக்கட்டுமே .. நம்பிக்கை உள்ளவர்கள் செல்லட்டுமே, இதில் அரசின் நிலைபாடு சரிதான் .. கடவுள் நம்பிக்கையாளர்களும் சேர்த்துதான் அரசு அவர்களும் வாக்களித்துதான் அரசு அமைந்தது ..
நம் கொள்கைகளை பரப்புவதிலோ எடுத்துரைப்பதிலோ நாம் எப்போதும் தயக்கம் கொள்ள போவதில்லை .. மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிப்போம்..
அதுவே அறம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment