Tuesday, February 22, 2022

வெற்றி!..
மகத்தான வெற்றியை மக்கள் தந்திருக்கிறார்கள் .. நல்ல தலைவன் நாடு பெற்றிருக்கிறென்ற  நிம்மதியோடு தளபதியார் கரத்தை பலபடுத்தியிருக்கிறார்கள் .. இழிசொல் இல்லை, பொய் இல்லை ,வீண் புகழாரமில்லை, விரயமில்லை .. சொன்னதை செய்யும் திறனும் நல்லதை செய்வாரென்ற நம்பிக்கையும் 
மாபெரும் வெற்றிக்கு வித்தாகியிருக்கிறது..
..
தலைவனின் பெருங்குணம் 
மக்களுக்காக உழைத்தல், மக்களை கூர்ந்து கவனித்தல், மக்களுக்கு தலைவணங்குதல் 
இவை உயரத்தில் நிறுத்தியிருக்கிறது .. 
பகையறிந்து  போரிடும் பேராற்றல், எளியவரிடம் காதோர்க்கும் நற்குணம் .. செயல் ஒன்றே கரைசேர்க்கும் என்ற தெளிவு ஒரு தலைவனை கொண்டாட வைத்திருக்கிறது..
அதிகம் பேசுவதில்லை அளவோடு கதைத்தாலும் மக்கள்தொண்டில் குறைவைப்பதில்லை .. அண்ணாவைப்போல் கலைஞரைப்போல பேச்சாற்றல் இல்லை ஆனால் உழைப்பு உண்டு தொண்டாற்றும் எண்ணமுண்டு .. 
அரசியல் முதிர்வும் நீண்ட அனுபவமும் இயக்கத்தை கட்டிக்காக்கும்  என்ற நம்பிக்கை மக்களிடையே வியந்து பார்க்கவைத்திருக்கிறது ..
..
திமுக மக்களுக்கான இயக்கம் அதன் தலைவராய் வருகிறவர் சமநீதி கொண்ட காவலனாய் இருத்தல் வேண்டும்.. எதிரிக்கும் வாழ்வளிக்கும் குணம் வேண்டும் ஜனநாயக மாண்பை எப்போதும் உயர்த்திபிடித்திட வேண்டும் நம் தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அனைத்தும் ஒருங்கேபெற்றவராய் திகழ்கிறார்..
கொள்கை தெளிவுண்டு பகையறிந்து படையோட்டம் நடத்தும் ஆற்றலுண்டு, பகைக்கஞ்சா திமிருண்டு எதிரிக்கு தலைவணங்காத போர்குணம் ..மக்கள் முன் வணங்கிநிற்கும் பேரரசனாய் எம் தலைவர் இருக்கிறார்..
..
நல்லாட்சிக்கு மக்கள் தந்த ஒப்புதல் .. இப்படியொரு தலைவனைதாம் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தோம் என சொல்லாமல் சொன்ன சேதி.. தமிழர் நலன், தமிழ்மண் வளம்,
இனப்பற்று,சமூகநீதி, உரிமையை விட்டுகொடுக்காமல், எதற்கும்அஞ்சாமல், தாழ்பணிந்துநிற்காமல், தமிழனின் தன்மானத்தை உயர்த்தி பிடித்து இந்திய ஒன்றியமே வியக்கும் ஒப்பற்ற ஆட்சியை தந்து வழிகாட்டும் விளக்காய் திகழும் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் தந்த வரவேற்பு ..எதிரிகளே வேறுவழியில் செல்லுங்கள் .. பகையே ஓடி ஒளிந்துக்கொள்
..
திராவிட மாடல் ஆட்சி அதுவே 
இந்திய ஒன்றியத்திற்கு தேவை அதற்கான முன்னெடுப்பை செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் .. 
காலம் தந்த மாபெரும் தலைவர் 
மு.க.ஸ்டாலின் 
நேர்மை,நெஞ்சுரம்,அஞ்சாமை ,அரசியல் முதிர்ச்சி, திறனறிந்து செயலாற்றும் அறிவு, அனைவரையும் அரவணைக்கும் மாண்பு, கொண்டகொள்கையில் உறுதி, மக்களின் பேரன்பு இவையாவும் ஒருங்கேபெற்ற உன்னத தலைவர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்..
கரத்தை பற்றிக்கொள்வோம் 
நாடு செழிக்கும் மக்கள் வாழ்வும் செழிக்கும்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment