Wednesday, February 2, 2022

சாம்ராஜ்யங்களால் எங்களை ஆள முடியாது பேரறிஞர் அண்ணா .. அதைதான் ராகுலின் நாடாளுமன்ற உரையில் பார்க்கமுடிந்தது.. ஆம் அண்ணா எனும் தீர்க்கமான அரசியல்வாதியை இந்திய ஒன்றியம் இதுவரை கண்டதில்லை.. தெளிவு நேர்த்தியான உரை அனைவரையும் அரவணைக்கும் மாண்பு .. மக்களிடமே அதிகாரத்தின் சாவி இருக்கிறதென்ற உண்மையை உணர்த்தி மக்களிடமே செல் அவர்களோடு பழகு அவர்களிடமே கற்றுக்கொள் என்ற பொதுவாழ்வின் இலக்கணத்தை தெளிவாக உள்வாங்கி செயல்படுத்தி அனைவருக்கும் பாடமாய் வாழ்ந்துகாட்டியவர்.. 
..
அண்ணா எனும் மந்திரகோல் செய்த /செய்யும் லீலைகளை 
வடவருக்கு என்றைக்கும் பயத்தை பீதியைதான் தரும் .. 
அண்ணா சமகாலத்தில் வாழ்ந்த அறிவுசார் அரசியல்வாதிகளின் 
களஞ்சியம் .. உண்மை உழைப்பு நம்பிக்கை கொள்கை தெளிவு
இயல்பாகவே அமைந்த "பெருந்தகை" அண்ணாவை மறந்து மறுத்து இங்கு எவராலும் அரசியல் செயதிட இயலாது ..
அண்ணா எனும் மக்கள் தலைவன் இனி உருவாகுவது எளிதல்ல.. ஆனால் அண்ணாவை முழுமையாக உள்வாங்கி அவர் தந்த வழியில் பயணித்தாலே  லட்சியத்தை அடையலாம் ..அதை தான் கலைஞர் எனும் பேரரக்கன் செய்தார் அதன் தொடர்ச்சியாய் தளபதி ஸ்டாலின்..
அதனால் தான் இந்திய ஒன்றியத்தை ஒருங்கிணைக்க முடிகிறது ..  அண்ணாவை சரியாக உள்வாங்கியதால் தான்  
தலைமைத்துவம் வந்தது ..
..
அண்ணாவை எளிதாக அணுக முடிந்தது .. திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக சொன்னபோது அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களால் நேர்நின்று கேள்வி கேட்கமுடிந்தது.. ஆம் 
எளியவர்களின் குரல் கேட்க ஒருவரிருக்கிறாரென்ற நம்பிக்கையை விதைத்தார்.. இன்று அதேபோல் தளபதி விதைக்கிறார்..
சாலையில் நின்று CM Sir Help me என்று கேட்கவும்  அதற்கு செவிசாய்க்கவும் துயர் களையவும்  தளபதி 
நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை விதைக்கிறார் ..
இப்போதும் அண்ணாதான் ஆள்கிறார்..
..
ஜனநாயகம் ஒரு அரசுமுறை மட்டுமல்ல வாழ்க்கை  நெறி 
மேம்பாடு உடையதாக்கவல்ல மார்க்கம் என தன் தம்பிகளை நெறிபடுத்தினார் ..
அதனால் தான் கலைஞரால் வாழ்நாள் முழுவதும் ஜனநாயகதன்மையோடு அரசியல் செய்யமுடிந்தது 
இன்றும் தளபதியார் 
ஜனநாயகத்தின் வேர் அழுகாமல் காத்து கட்சியை இயக்கத்தை காத்துநிற்கிறார் ..
பேரறிஞர் அண்ணாவை
தமிழ்நாடு என்றும் நன்றியோடு நினைவு கூறும் ..
அரசியல் ஆட்சி அதிகாரம் என எதிலும் நேர்மை எளிமை ஜனநாயம் என வாழ்ந்துகாட்டி 
நமக்கெல்லாம் ஆசானாய் அறிவு சுரங்கமாய் அமைந்த அண்ணா 
காலம் உள்ளவரை தமிழர் நெஞ்சில் நிலைத்திருப்பார்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment