Tuesday, February 15, 2022

சமீபத்திய எ.பழனிசாமியின் பேச்சுக்கள் விரக்தியை காட்டுகிறது .. ஜனநாயக நடைமுறைகளை கற்றோ தெரிந்தோ அரசியலுக்கு வந்தவரில்லை.. ஒரு கொலைவழக்கு அதை தொடர்ந்து ஈரோடு முத்துசாமியின் தயவு அவரை அரசியலுக்கு கொண்டுவந்தது .. 
விசுவாசமாக இருப்பதைப்போல நடித்து கொள்ளையடித்ததை சரியாக உடையவரிடம் ஒப்படைத்து காத்திருந்து காலில் விழுந்த விபத்தாய் முதல்வராகி செய்த தப்பிற்கு தண்டனைக்கு பயந்து முழுமையாக தன்னை அடிமைபடுத்திக்கொண்டு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கூட செய்ய தயங்கியதை நிறைவேற்றி பாஜகவின் கடைக்கண்ணில் தப்பித்துநிற்கிறவர் .. எங்கே எப்போது சிறைகதவுகளில் அடைபட நேரிடுமோ என்ற அச்சஉணர்வுமேலிட உளறுகிறார்..
..
அமாவாசைகள் வந்துபோகும் இனி நிரந்தரம் என்ற சொல்லின் பொருள் விளங்கும் .. ஒரே நாடு ஒரே தேர்தல் என அரசியல் அறியாமையில் இருக்கிறார்.. திமுகவின் வரலாற்றை ஒருமுறை படிக்கலாம் .. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவனென்ற தற்பெருமைபேசி திரியும் சேக்கிழாரின் கம்பராமாயணத்தை கற்ற ஞானி  வரலாற்றை தெரிந்துக்கொள்வது நல்லது .. கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத இயக்கமிது கொஞ்சம் கண்சிமிட்டினால் போதும் அனைத்தும் கிடைக்கும் ஆனால் சமூகநீதியை அடகுவைத்து பெற தேவையில்லை என்ற நேர்மை .. இல்லாதோர்கான இயக்கமிது .. வண்டிகாரன் கூட மன்னரை வீழ்த்த முடியுமென்ற வரலாற்றை எழுதிய இயக்கம் .. 
carry on but remember people is watching you என நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா முழங்கிய வரலாறு உண்டு..  சமூகநீதி என்பது அடித்தட்டுமக்களுக்கும் சரியான உரிமையை பெற்றுதருவதில் இருக்கிறதென அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு தந்து அதை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறேன் என கலைஞரால் சபையில் உரக்க ஒலிக்க முடிந்தது ..
..
திமுகவிற்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல பழனிசாமி அவர்களே.. நாங்கள் இனபகையோடு மோதிக்கொண்டிருப்பவர்கள் சாக்கடைப் புழுக்களை கண்டுக்கொள்வதில்லை.. ஆனால் சமூகம் நாற்றடிக்க கூடாதென்பதற்காக சுத்தம் செய்யவேண்டிவரும் .. எச்சரிக்கை .. இனபகைவரோடு கைகோர்த்து நிற்பதால் உளறிக்கொட்டுகிறீர் .. நிற்பதற்கு காலில்லாதவன் அதிமுகவெனும் பொய்காலில் ஆடுகிறான் உண்மையில் அதிமுகவின் கால்கள் வலுவிழக்க காரணமாவதும் காலொடிந்து போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிற உண்மை  விளங்குகிறபோது சிறையில் காலம்கழிப்பீர் ..
..
எச்சரிக்கை எடப்பாடி.பழனிசாமியே.
கழிவுகளை காலம் சுமப்பதில்லை..
நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கை தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்கள் வீழ்வதில்லை..
ஆம் 
 #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்.. 
நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கை தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்..
என்றும் 
அறம் வெல்லும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment