கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு..
பிறருக்கு உதவுவதிலும் நதியைப் போல் இரு.
என்றார் மௌலானா ரூமி ..
..
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தை கூறிய தமிழ்நாட்டின் தலைவர்
மாண்பிமை முதலமைச்சர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் தராமல் வாக்களித்தவர்களுக்கு உழையுங்கள் .. தவறு செய்தால் தூக்கியெறியபடுவீர் சும்மா இருக்கமாட்டேன் எச்சரித்திருக்கிறார்..
நாடாளும் தலைவரின் உயர்நோக்கை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் செயலாற்றவேண்டும்..
ஆம் நதியைப்போல..
..
நேற்றைய தினம் ஒரு புகைப்படம் தூங்கவிடாமல் செய்தது .. பேரறிஞருக்கு மாலை அணிவித்துவிட்டு பெண்கள் இறங்கும் காட்சி .. இதைதான் பேராசான் பெரியார் கனவுகண்டார் .. பெண்களும் அதிகாரத்தில் வரவேண்டும் தீட்டென்று ஒடுக்கிவைத்த காலம் போய் அதிகாரத்தில் அமர்கிறார்கள் .. பெண்களுக்கெதுக்கு அரசியல் என்கிற நிலையை மாற்றி இதோ பெரும் எண்ணிக்கையில் பெண்கள் வரிசைகட்டி வருகிறார்கள் .. தெருவிற்குள் நடமாடவே கூடாதென்ற தடுத்து நிறுத்தி வேறுவழியில் செல் என அகங்காரத்தோடு ஆச்சாரத்தோடு குரலுயர்த்தியவர்கள் இதோ மேயராகி செங்கோலோடு வரும் போது எழுந்துநின்று வணக்கம் வைக்க செய்ததே அதுதான் திராவிடம் இம்மண்ணின் நிறைந்து நிலைத்து நிற்பதற்கு காரணம்
..
இளம் வயதினர் பலர் களம்கண்டு வென்றிருக்கிறார்கள் புதியதொரு தொடக்கம் இது ..
பொதுவாழ்வில் புதிய இரத்தம் சமூகத்தை படிப்பதற்கும், பணிசெய்வதற்கும் படிப்பினைப் பெறுவதற்கும், திராவிடப் பெருஞ்சுவராய் காத்துநின்ற பேராசான்களின் எண்ணத்தை நிறைவேற்றிடவும், பொதுவாழிவில் தூய்மை நேர்மை எளியவர்களுக்கு உதவும் தொண்டு என அறம்சார்ந்து கற்றுக்கொள்ள பலனளிக்கும்.. நிறைய படிகள் உண்டு உண்மையாய்,கடுமையாய்,நேர்மையாய், உழைத்தால் விண்ணை தொடலாம் .. கொள்கை தெளிவோோடு சமூகநீதியை நிலைநாட்ட நெஞ்சுறுதியோடு செயல்படுங்கள் .. வேறெங்கும் காண தேவையில்லை நம் தலைவர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்கிறார் ,அவரை கண்டு படியுங்கள் ஒய்வில்லா உழைப்பு நல்லதை செய்திடவேண்டும் அதை காலம்தாழ்த்தாமல் செய்திடவேண்டும் நேர்மையோடு அப்பழுக்கற்று செய்திடல் வேண்டும், அனைவரையும் அரவணைக்கும் உயர்பண்பு , எனக்கு வாக்களிக்காதவர்களும் சேர்ந்தே உழைக்கிறேன் அவர்கள் வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருந்துமளவிற்கு உழைப்பேன் அவர்களும் எனக்கு வாக்களிப்பார்கள் என்றார்..
அதுதான் நடந்தது..
..
வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை மாறாக பொறுப்பு கூடி இருக்கிறதை உணர்கிறேன் மேதகு.மு.க.ஸ்டாலின்..
ஆம்
கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இருந்தார்
தமிழ்நாட்டின் தலைவர் தளபதியார்..
அவரிடம் கற்றுக்கொள்ள நிறையிருக்கிறது ..
இளம்படையே ..
தளபதியை பார்
அவரைப் படி
அவரை பின் தொடர்
நிச்சயம் உயரத்தை தொடலாம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment