Saturday, February 5, 2022

நீட் தேர்வு திரும்ப பெற வலியுறுத்தும் மசோதாவை திருப்பி அனுப்பி ஆளுநர்.. செய்தது தவறென பலரும் சரியென சிலரும் நிலைபாட்டை எடுத்தபோது ஒரு அடிமைக் கூட்டம் கள்ளமௌனம் காத்து மிகப்பெரிய துரோகத்தை மீண்டும் செய்திருக்கிறது .. நாடாளுமன்ற மேலவையில் எதிர்த்து வாக்களித்திருந்தாலே நீட் வந்திருக்காது .. அன்று செய்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வந்தும் அடிமை அதிமுக மீண்டும் வரலாற்றுப்பிழையை செய்திருக்கிறது ..
..
அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக அடிமைகளும் பாஜகவிலிருக்கும் தமிழர்துரோகிகளும் கலந்துக்கொள்ளாமலேயே சட்டமன்ற அவசரக்கூட்டத்தை வரும் 8ந்தேதி கூட்டி மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கபடும் இம்முறை திருப்பி அனுப்ப முடியாது .. ஆளுநர் திருபிபி அனுப்பியதில் இவர்கள் நிஜம் மக்களுக்கு விளங்கியிருக்கிறது .. அடிமைஅதிமுகவின் துரோகம் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் ..
..
வானதி சீனிவாசன் கவர்னரென்ன தபால்காரரா என்கிறார் .. ஆம் தபால்காரர்தான் ..  தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டங்களை இந்திய குடியரசு தலைவருக்கு கொண்டு செல்லும் ஊழியர் .. அவ்வளவு தான் அவரது அதிகார வரம்பு வேலை .. அதனால் தான் ஆட்டிற்கு தாடி எதற்கு  என அண்ணா கேட்டார் .. ஓய்வு பெறும் வயதில் பகட்டான வாழ்வு வாழ ஒரு பதவி அவ்வளவுதான் ..  இன்னொரு கூமுட்டை  2010 டிசம்பர் 21 ல் காந்திசெல்வன் நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாக உளறுகிறது .. நாடாளுமன்றம் நடக்காத தேதியில் நடந்ததாக சொல்வதும் அதை ஊடகம் வெளியிடுவதும் காலக்கொடுமை (ஜூனியர்விகடன்)..
..
எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட் தேர்விற்கு எதிரான போரில் தமிழகம் வெல்லும் என மாண்பிமை முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார் .. நிச்சயம் தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு  ஸ்டாலின் பின்னே செல்லும் .. பகைவரும் துரோகிகளும் மக்கள் முன்  உரிக்கபடுவார்கள்.. ஜெயலலிதா நோயுற்றுயிருந்தபோது யாருக்கும் அறிவிக்காமல் நீட் தேர்விற்கு ஆதரவான கையெழுத்திட்டதால் வந்தவினை .. அடிமைகளால் ஏற்பட்ட அழிவை சரிசெய்ய போராடவேண்டியிருக்கிறது .. 
..
சமரசமில்லை என உறுதியோடு சண்டைபோடுவோம் .. வெற்றி பெறும் வரை போராடுவோம்.. ஸ்டாலின் எனும் கேடயம் தமிழ்நாட்டை காக்கும் .. கரம் கோர்ப்போம் ஸ்டாலின் கரத்தை பற்றிக்கொள்வோம் பலப்படுத்தோம் வெற்றி பெறுவோம்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  நமக்கான தலைவர் நமக்கான பாதுகாவலர்.. ஆம் நமக்கானவர் ..
..
ஆலஞ்சியார் 

No comments:

Post a Comment