பெருமையாக இருக்கிறது திறமையாளர்கள் கையில் தமிழ்நாடு .. சரியானவர்களை தேர்வு செய்து கூடநிறுத்தி சரியான திசையில் ஆட்சியை நடத்தினால் உலகம் உற்றுபார்க்கும் .. எப்படி சாத்தியமானதென இந்திய ஊடகங்கள் வியக்கின்றன இன்றைய பேசுபொருளாக தமிழ்நாடு அரசின் பொருளாதார நிபுணர்கள் குழு ..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிக சிறந்த முதல்வர்களில் ஒருவராக வரலாறு பதிவு செய்யும் ..
முதல் சட்டமன்ற கூட்டதொடர்
ஆளுநர் உரையில் தமிழ்படித்தவர்களுக்கு தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என கடந்தகால தவறுகளை சரிசெய்யபடும் என்பதை எடப்பாடி உணர்ந்தாரா என தெரியவில்லை ஆளுநர் உரையை ஒன்றுமில்லை என்கிறார்.. தலையில் ஒன்றுமில்லாதவர்களுக்கு ஆளுநர் உரையில் ஒன்றுமில்லைதான்
பெரியாரின் சமூக நீதி தத்துவத்தின் அடிப்படையில் இந்த அரசு இயங்கும் என்பதாவது எடப்பாடிக்கு புரியுமா என்ன..?
..
இந்திய ஒன்றியத்தில் உள்ள எந்தவொரு மாநில அரசாங்கமும் இது போன்றதொரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டதில்லை.... மிக சிறப்பான திட்டமிடல் ஒரு அரசின் பயணத்தில் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பொருளாதார துறையில் தமிழகத்தின் அடுத்த நகர்வை கருத்தில் கொண்டு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலர்,எஸ்.நாராயணன்,
முன்னாள் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைகழக பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ என நிதியமைச்சர்
சரியானவரை தேர்வு செய்து கொண்டுவந்து புதிய தொடங்கத்தை தொடங்கி இந்திய ஒன்றியத்திற்கு பாடமெடுத்திருக்கிறார்..
..
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நிபுணர் குழு அமைக்கபடும் என்பது தமிழகத்தில் நலிவுற்று தொழில் துறையை மீட்டெடுக்கும்.. முதலாளியாக இருந்தவர்கள் தொழிலாளியான துயரங்கள் இனி நடக்காது இன்றைய அறிவிப்புகள் ஒவ்வொன்றும் தொலைநோக்கோடு வகுக்கபட்டிருக்கிறது .. இதெல்லாம் அடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை .. தமிழகத்தின் வருவாய் ஈட்டிப்பை 35 லட்சமாக உயர்த்த தமிழ்நாடு முதல்வர் உறுதியோடு செயல்படுகிறார்
..
"வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!" என தமிழ்நாடு ஆளுநரை
கொண்டே சொல்லவைத்தது ஒன்றிய அரசிற்கு பாடமெடுத்த அழகு திராவிடம் தளபதியை சரியாக செதுக்கியிருக்கிறது ..
நல்ல அரசை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.. இனி தமிழகம் வளர்ச்சிபாதையில் ..
நல்லவர் ,நமக்கானவர் இனத்தை மொழியை காக்கும் வல்லமை பெற்றவர் ஒன்றியத்தின் எதிர்பார்பாய் விளங்கும் எமது முதல்வர் நல்லாட்சி தருவார்..
எதிர்க்கட்சிகள் வாய்மூடி மௌனம் காக்கவும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment