திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் முதல்வரின் செயல்பாடுகள் எப்படி இருக்குறதென கேள்வியே எழவில்லை.. ஒவ்வொரு நொடியும் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அரசு அமைந்தது நல்வாய்ப்பு .. நெருக்கடியான சூழலில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தவர் முன்பிருந்த ஆட்சியை குறை கூறிக்கொண்டிருக்காமல் தன் சகாக்களை களநிலவரத்தை அறிந்து செயலாற்ற பணித்து படைவீரர்களை வழிநடத்தும் தளபதியாய் கூட இருந்து கவனம் செலுத்தி ஒவ்வொரு செயலும் மக்களுக்கு இடையூறில்லாமல் அவர்களுக்கு பயனுள்ளதாக்கி ஒரு அரசு இடர்காலங்களில் எப்படி செயல்படவேண்டுமென பாடம் நடத்தியிருக்கிறார்..
..
முன்பு இருந்த அடிமைகளால் நிர்வாக சீர்கெட்ட நிலை .. உயிர்வளி oxygen தட்டுபாடு படுக்கைகள் இல்லை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி நேரம் மிக சிறந்த களப்பணியாளர்கள் மா.சு. செந்தில் பாலாஜி தங்கம் தென்னரசு என களமிறக்கி படுக்கை எண்ணிக்கை போர்கால அடிப்படையில் உயர்த்தி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து காலி சிலிண்டர் கண்டெய்னர் என வரவழைத்து அதிவேகமாக விநியோகம் செய்து சில நாட்களிலேயே படுக்கைகள் காலி என்ற நிலையை ஏற்படுத்தி சிறந்த அரசாய் மக்கள் கொண்டாடுகிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்..
..
அறநிலைய துறை சரியான திசையில் பயணிக்கிறது .. கோவில் நிலங்கள் மீட்கபடுகிறது ..
எவ்வளவு நிலம் இருக்கிறதென வெளிப்படையாக அறிந்துக்கொள்ள இணைய தளத்தில் வெளியீடென பட்டைய கிளப்புகிறது .. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக 100 நாட்களில் பணி நியமனம் என்றவுடன் வழக்கம்போல் பார்பனர்கள் தங்கள் பணியாட்களை வைத்து கூவ ஆரம்பித்திருக்கிறார்கள் .. எல் முருகன் நான் ஏன் கருவறைக்குள் போகவேண்டும் என்கிறார்.. முருகன் அவர்களே உங்களுக்கு விரும்பமில்லாமல் இருக்கலாம் ஆனால் இன்னமும் பீ அள்ளி கொண்டிருக்கும் எம் சகோதரன் பறையடித்து கொண்டிருக்கும் தோழன், செருப்புதைக்கும் என் நண்பன் கருவறைக்குள் வர விரும்புகிறான் அதற்காக தன் தகுதியை வளர்த்து படித்து முடித்து காத்திருக்கிறான் .. அவன் வரவிற்காக நடராஜரும், ஸ்ரீரங்கத்து ரங்கராஜரும் காத்திருக்கிறார்கள் முருகன் .. உங்களுக்கு விருப்பமில்லை என்பதற்காக மற்றவர்கள் விருப்பத்தை தடுப்பது என்ன நியாயம்..
..
நீட் தேர்வால் பாதிக்கபட்டவர்கள், அதை தடுக்க என்னென்ன வழிகள் எனஅறிய நீதிபதி ராஜன் நியமித்தவுடன் சிலருக்கு எரிகிறது,
எக்காரணம் கொண்டும் நீட்டை அனுமதிக்க முடியாதென்று பள்ளிகல்விதுறை அமைச்சர் தெளிவாக இருக்கிறார் .. ஒன்றிய அரசு செயலாளர் அளவிலான கூட்டத்தை புறக்கணித்து மாநில சுயாட்சி பாடமெடுக்கிறார் ..
GST கூட்டத்தில் மண்டையில் அடித்து விளக்கம் தருகிறார் PTR ..
எவன் அப்பன் வீட்டு காசு மக்கள் வரிப்பணம் அதிலிருந்து மக்களுக்கு செலவழிக்க என்ன தயக்கமென குரலெழுப்புகிறார் .. படித்தபடிப்பிற்காக சான்றிதழை கூட காட்ட முடியாதவர் நீட் தேர்வு வைக்கிறாரென கிடுக்கி போடுகிறார் GST அடிப்படையே தவறு என ஆணியடிக்கிறார் ..
..
இப்படி தன் சகாக்களோடு முதல்வர் தளபதி ஸ்டாலின் வெற்றிபடிக்கட்டில் .. நல்லாட்சி என்பது மக்கள் துயரங்களில் கூடஇருக்கிறது அரசு என்ற நம்பிக்கையை விதைப்பது .. சரியான தளபதிகள் படை சூழ பாதுகாப்பது .. நல்லவன் நாட்டை ஆள்கிறாரென மக்கள் நிம்மதியடைவது .. எல்லாருக்கும் எல்லாம் சமநிலையென நலிந்தோரைைைையும் விளிம்புநிலைமக்களையும் உயர்த்தில் ஏற்றி சமநீதி வழங்கி "நல்காவலன்" எம் தலைவன் என நாடே கொண்டுகிறது .. எதிர்த்தோரும் வரகூடாதென வஞ்சனை செய்தோரும் வாயடைத்து நிற்கின்றனர் ..
..
திராவிடப் பெருஞ்சுவராய் பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளனும் காத்து நின்றனர்
அந்த வரிசையில் தளபதி தமிழகத்தின் தமிழ்மக்களின் இனத்தின் "காவல்அரணாய்" திகழ்கிறார் .. பிறமொழி பேசும் மக்களும் நெகிழ்வோடு பார்க்கிறார்கள் .. இந்தியாவின் நம்பிக்கை ஒளி தமிழகத்திலிருந்து ஒளிர்கிறது ..
..
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment