Wednesday, June 23, 2021

தலைவர்..
எந்த சூழலிலும் என்னை தனிப்பட்டமுறையில் புகழ்ந்து பேசகூடாது .. புகழ் போதை மனிதனை தவறில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அறிந்தவர் .. நேர்மையாளர் பொய்யுரையை புகழ்ச்சியை விரும்புவதில்லை தன் சகாக்களிடம் உங்கள் உழைப்பை நேர்மையாக தாருங்கள் அதுவே நம் ஆட்சிக்கு சிறப்பை சேர்க்குமென அறிந்தவர்.. நல்ல தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார்.. உழைப்பு நேர்மை அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்லும் பாங்கு.. பகைவருக்கும் அருளும் பேருள்ளம், சிறந்த,வெளிப்படையான நிர்வாகம், எந்த சூழலிலும் கொள்கைமாறா உறுதி  என தளபதியார் தனித்துவமாக திகழ்கிறார்..
..
ஒன்றியம் 
பல தேசிய இனங்களின் ஒன்றியமே இந்தியா என்றார் பேரறிஞர் .. இந்தியாவிற்கென்று தனி கலாச்சாரமோ மொழியோ இல்லை பல்வேறு இனம் வாழும் நாட்டில் ஒரு மொழி ஒரு பண்பாடு கலாச்சாரம் என்பது பொய்.. ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே கலை பண்பாடு மொழி வாழ்வியல் என தொகுப்பு உண்டு அவரவர் இனத்தின் பெருமையை காவு கொடுத்துவிட்டு பொய்யாய் பேசி திரிவது கெடுதலையே தரும் .. அதனால் தான் இந்தியா என்பது நாடல்ல துணைகண்டம் என்கிறோம் .. பல்வேறு இனங்கள் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துவதே ஒன்றியத்தின் சிறப்பு .. அதனால் தான் முதல்வர் தெளிவாக யாரும் மிரள வேண்டாம் ஒன்றியம் என்றுதான் சொல்வோம்  அழைப்போமென தெளிவுபடுத்தியிருக்கிறார் 1957 ல் தேர்தல் அறிக்கையிலேயே பயன்படுத்தினோம் இனியும் பயன்படுத்துவோம்  ஒன்றியம் என்ற சொல்லில் தான் கூட்டாச்சி தத்துவம் அடங்கியிருக்கிறது
என பாடமெடுத்திருக்கிறார்..
..
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எப்படி மாநிலம் செயல்படவேண்டுமென சொல்லிதந்தவர் இப்போது ஒன்றியத்திற்கே வகுப்பெடுக்கிறார்.. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாடு தனக்கான தலைவனை செதுக்கிகொள்கிறது..
பண்பட்ட தலைவர்களை காலம் உருவாக்கிறது .. இந்திய ஒன்றியத்திற்கு நல்ல தலைவர்களை தமிழ்நாடு வழங்கிக்கொண்டுதானிருக்கும் ..
பேராசான் பெரியார், காயிதெமில்லத், பேரறிஞர் அண்ணா,பேரருளாளன் கலைஞர் என தொடர்ந்துக்கொண்டே இருக்கும் .. அவ்வரிசையில் நேர்மையும் நெஞ்சுரமும் அஞ்சாத வீரமும் அன்பும் அடக்கமும் தெளிவான பார்வையும் கொண்டகொள்கையில் உறுதியும் கொண்ட பண்பாளர் தளபதி .. 
 தமிழ்நாட்டின் முதல்வராய் வந்தது காலம் தந்த நல்வாய்ப்பு ..
..
இரையை கொத்தி தின்னும் கோழியல்ல.. 
"முட்டையை அடைகாக்க அமரும் கோழியைபோல " தமிழ்நாட்டை காத்து வருகிறார்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment