எதுவரை உன் கை நீளவேண்டுமென நீ முடிவு செய் ஆனால் என் மூக்கை தொடகூடாது .. விமர்சனம் கருத்துவேறுபாடு எல்லாம் ஜனநாயகத்தின் கூறுகள் எவருடைய செயல்பாட்டையும் எதிர்க்க ஆதரிக்க உரிமையுண்டு..
பொதுவாழ்விற்கு வந்தவர்கள் விமர்சனங்களுக்கு பயந்தொடுங்குவது சரியல்ல ஆனால் எது விமர்சனம் என்பதில் எல்லையுண்டு .. அரசியல்ரீதியாக சமூகத்தில் அவரின் செயல்பாட்டில் குறையிருப்பினும் உமது கொள்கையிலிருந்து வேறுபட்டிருப்பினும் கடுமையாக எதிர்க்க உரிமையுண்டு ஆனால் கேவலமாக சித்தரிப்பதும் தனிநபர் விடயங்களில் மூக்கை நுழைப்பதும் தனக்குதான் எல்லாம் தெரியும் என்கிற ரீதியும் தான் மட்டுமே யோக்கியன் என்கிற நிலைபாடும் சருக்கலையே தரும்..
..
கலைஞரை விமர்ச்சிக்கிறேன் என்ற பெயரில் அவர் குடும்பத்தை பொதுவாழ்வில் அவரோடு பயணித்தவர்களோடு தகாத உறவுண்டு என இட்டுகட்டி பிரச்சாரம் செய்தல் அவரை சமூகவலைதளங்களில் வைரலாக்கி தன்மேட்டிமையை காட்ட நினைத்தால் இனியும் பொறுத்துபோக முடியாது .. அதேபோல் அரசை விமர்சனம் செய்யலாம் அது சரியாக இருக்கும்பட்சத்தில் பொது சமூகம் உடன்வரும் இல்லையெனில் புறந்தள்ளும் ஆனால் தனிப்பட்டவரை இகழ்வாக சித்திரித்தால் சட்டம் தன் "சாட்டையை" சுழற்றும்..
..
இந்த அரசு பொறுப்பேற்று ஒருமாதமே முடிந்தநிலையில் அதிலும் கொரோனா தொற்றும் வேகமாக பரவிவந்த சூழலில் இத்தனை வேகமாக இந்திய ஒன்றியத்தில் வேறெந்த அரசு இப்படி செயல்பட்டதில்லை .. இரு வாரங்களுக்கு முன்பு படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸ் காத்துநின்றதும் உயிர்வளி OXYGEN கிடைக்காமல் மக்கள் அல்லாடியதையும் மாற்றி இன்று 50,000 படுக்கைகள் காலி என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பாராட்ட மனமில்லையெனும் குறைகூறுவதை நிறுத்திக்கொள்ளலாம்..
"மாவீரன் மாசு" சக்கரம் கட்டியதைப்போல் வேகமாக இயங்குகிறார் எல்லாவற்றிலும் நேர்மையான போக்கை வெளிப்படையாக செயல்பாட்டில்
சிறந்த அமைச்சராக திகழ்கிறார்..
ஒவ்வொரு அமைச்சர்களும் பொறுப்புணர்ந்து வேகமாக நேர்மையான செயல்பாடுகளால் மிளிர்கின்றனர் ..PTR தன் நிதி ஆளுமையால் இந்திய ஒன்றியத்திற்கு பாடமெடுக்கிறார்
P.K சேகர்பாபு கோவில் நிலங்களை மீட்டு "புதிய சரித்திரம் " படைக்கிறார் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை தொடர்ந்து "பெண்கள்" அர்ச்சகராகலாம் அதற்காக பயிற்சி அளிக்க அரசு தயார்.. பெரியார் நெஞ்சிலே தைத்த "முள்" எடுக்கபடுகிறது.. பெண்களை அர்ச்சகர்களாக்கி " புதிய வரலாறு" படைக்க தளபதி படை தயாராகிறது
..
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவைத்திருக்கிறார் .. இதிலென்ன இருக்கிறது .. சடங்குகள் வைதீகமுறையில் நடத்தபடவில்லை மலர் தூவி விதைநெல்லை தெளித்து தஞ்சை கழனி செழிக்க புறப்பட்டாள் காவிரி.. இன்னும் நிறைய இருக்கிறது தோண்ட தோண்ட குப்பைகளாய் இருக்கும் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யவேண்டும் ஊழலில் திளைத்து கொழுத்த "அம்மாவின் பிள்ளைகளை" வரிசைகட்டி சிறைக்கனுப்பும் மகத்தான பணி காத்திருக்கிறது
கொரோனாவை வென்று தமிழகத்தை "புதிய பாதை"யில் செலுத்தவேண்டும்..
பத்தாண்டாய் தமிழ்நாட்டில் படிந்த அழுக்கை கழுவ சில காலம் தேவை ஆனாலும் விரைந்து விடியலை தருவார் நம் தளபதி
காத்திருப்போம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment