எடப்பாடி முதல்வராக இருக்கமட்டுமல்ல எதிர்க்கட்சி தலைராகவும் இருக்க தகுதியில்லாதவர் .. ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் வாக்குறுதி என்னானதென கேள்வி எழுப்பி வழக்கம் போல் தானொரு முட்டாளென்பதை சபையிலேயே நிரூபித்துக்கொண்டார் .. நீட் தேர்வு தடை என்னானது என கேள்வி எழுப்பி ஜெயலலிதா இருந்த போது அனுமதிக்காத நீட் தேர்வை எடப்பாடி பழநிசாமி தான் கொண்டுவந்தாரென சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சு பேசிய போது அசடு வழிந்தது ..
..
அவசரமாய் என்னானது என கேட்க
ஊழல்தடுப்பு துறை டிஜிபி கந்தசாமி முதல்வரோடு ஒருமணிநேரம் கலந்தாய்வு செய்தாரென செய்தி அதிமுக அமைச்சர்கள் உதவியாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது ..
முதல்வர் மிக தெளிவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார் அவசரம் காட்டுவதில்லை மிக தெளிவாக அதே நேரம் பிடி பலமாக இருக்கிறது .. அதிமுகவை மெல்ல சிதைக்க வேண்டிருப்பதின் அவசியம் உணர்ந்து அது பாசிச பாஜகவிற்கு பலனளிக்காமல் இருக்கவேண்டும் என்ற நோக்கோடு செயல்படுவது தெரிகிறது .. கோவை பகுதியின் அதிமுகவினர் திமுகவை நோக்கி வருவதும் அதேவேளை திமுகவில் செயல்படாத மேனி அலுங்காமல் செயல்படுவோரை கலையவும் திட்டம் தீட்டி திமுக வரும்காலங்களில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்க முயற்சியெடுக்கிறார்
..
ஒன்றிய அரசு என அழைப்பது கூடாதென சேக்கிழார் எழுதிய கம்பராயணத்தை படித்த அண்ணாவிற்கு பிறகு அதிக நூல்கள் படித்த கடைசியாக படித்த நூல் எதுவென்றால் அது.. அதுவந்து.. என முழிக்கும் எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியல் அமைப்பு என்ன சொல்லியிருக்கிறதென அறிந்தவர்களிடம் கேட்டறிந்து பேசவேண்டும் .. நீங்கள் முதல்வராய் தொடர அனுமதித்தது நீட் போன்று தாங்கள் நினைப்பதை தடையேதுமின்றி நடத்திட ஒரு அடிமை தேவை என்பதால் அதிலும் கொள்ளையடித்து ஊழல் செய்து சிக்கி கொண்ட எலி என்பதால், தலையாட்டி பொம்மையை போல ஆட்டுவைத்தால் ஆடும் என்பதால் வைத்திருந்தார்கள் இல்லையென்றால் நோட்டாவை தாண்ட முடியாதவர்களெல்லாம் சுமக்க வேண்டி வருமா..
..
திமுகவிற்கெதிராக அவதூறு பரப்புவோர் மீது இனியும் பழையபடி கனிவோடு நடந்துக்கொள்ள தேவையில்லை அதேவேளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டுமென தெளிவான உத்தரவு .. உண்மையில் இனியும் வாய்க்குவந்ததை பேசி திரிய முடியாது விமர்சனங்கள் வரவேற்கபடும் அதில் உண்மை இருக்கவேண்டும் பொய் பழிச்சொல் வதந்தியென பாஜகவின் அஜெந்தா இனி எடுபடாது .. உடனுக்குடன் உண்மையை வெளியிட்டு மூக்குடைத்தாலும் வைரலாகி திமுகவிற்கு அவபெயரை தருவதை ஏற்க இயலாது .. சட்டம் தன் கடமையை செய்யட்டும் .. விமர்சனம் செய்வோர் தங்களை அதிமேதாவி என எண்ணிக்கொண்டு சேற்றை வாரியிறைக்க முடியாது .. சரியான பார்வையோடு கூடிய விமர்சனங்கள் மதிப்பளிக்கபடும்..
..
திராவிட இயக்கத்தின் தளபதி சரியான திசையில் பயணிக்கிறார்
தன்னை வரைந்த சிறுவனிடம் பெரியாரை தந்து .. எங்கிருந்து தொடங்கவேண்டும் என பறைசாற்றியிருக்கிறார் .. பெரியாரை அறிய தொடங்கினால் அதனுள் அண்ணாவை கலைஞரை சமூகநீதியை சமத்துவத்தை புரிய தொடங்கும் .. தொடக்கம் சரியாக அமைந்தால் நல்ல சமூகத்தை உருவாக்கிவிடலாம் .. வரும் தலைமுறை பெரியாரிலிருந்தே தொடங்க வேண்டுமென்ற முதல்வர் திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைக்கு மட்டுமல்ல ஐந்தாம் தலைமுறைக்கும் வழிகாட்டுகிறார் வழிநடத்துகிறார்..
இதெல்லாம் சுட்டுபோட்டாலும் பழனி பன்னீருக்கும் வராது .. காரணம் கொள்கை வழி வந்தவர்கள் அல்ல
கொள்ளையடிக்க வந்த கூட்டம் ..
அரைகுறைகளோடு ஆட்சி நடத்தி எம்ஜிஆரின் தொடர்ச்சியாக ஜெயலலிதா எனும் தீமை இவர்களை அடிமாடுகளைப்போல
நடத்தி தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை தந்தது .. நல்ல மேய்ப்பன் இல்லாத ஆடுகள் கடைசியில் பட்டியில் அடைபடும்..
ஆக சிறந்த அறிவிலிகள் அதிமுக அடிமைகள்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment