வழக்கம் போல் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காரணம் என சொல்லி பார்த்தார்கள் .. எடுபடவில்லை .. இவர்கள் பேச்சை மக்கள் கேட்பதில்லை
..
நீட் தேர்விற்கெதிராக அமைக்கபட்ட குழுவை கலைக்க வேண்டுமாம் .. உயர்நீதிமன்றத்தில் இடைசாதிகாரனை கொண்டு வழக்கு போடுவார்கள் .. சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் சொல்வோமென பட்டியலினத்தவரை கொண்டு பூச்சாண்டி காட்டுவார்கள் பின்னில் யார்உண்டென்பதை அறிவோம் .. ஒன்றிய அரசென அழைக்க கூடாதென ஆளுநருக்கு கடிதமெழுத கிருஷ்ணசாமிகள் கிடைப்பார்கள் .. காலில் செருப்பணிய மாட்டேன் என பார்த்தாலே தீட்டானவனை கொண்டு சொல்லவைப்பார்கள் .. செருப்பணிந்து தெருவில் நடக்ககூடாதென்ற அதிகாரதிமிரை ஆணவபோக்கை உடைத்தெறிந்த தமிழகத்தில் அவர்களை கொண்டே பேச செயல்பட வைப்பதென்பதில் இருக்கிறது அவர்களின் தந்திரம்..
..
நீட் தேர்விற்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜகவை இதுவரை அதிமுக கண்டிக்கவில்லையே .. ஏன் இன்னும் என்ன பயம் .. இனி காப்பாற்ற முடியாது .. தடுப்பணைகள் உடைந்ததைப்போல அவர்களால் உங்களை காப்பாற்ற முடியாது தடுப்பணை ஊழல் வருகிறது இனி ஒவ்வொருவராக சிறை செல்ல வேண்டி வரும் .. ஜெயலலிதாவை காப்பாற்றியதை போல எடப்பாடி பன்னீர் வகையறாவை பாஜக காப்பாற்றாது .. அதற்கெல்லாம் நூல் பந்தம் வேண்டும் .. ராகவனைப்போல உடன் பறந்து தடுப்பாட்டம் ஆட முடியாது .. கடைசியில் களி தின்னவேண்டும்
பகிரங்கமாக பொதுவெளியில் அதிமுக நீட் தேர்வை ஆதரிப்பதாக கூறவேண்டும் ..பாஜக தன்நிலைபாட்டை அறிவித்ததைப்போல அதிமுகவும் ஆதரித்து பேசட்டும் ..
..
+2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்த்தால் "சாதாரணமானவர்கள்" மருத்துவராகிவிடுவார்கள் என்கிறார் கரு.நாகராஜன்
சாதாரணமானவர்கள் மருத்துவர் ஆக கூடாதென்கிறாரா.. அல்லது பழையபடி சமஸ்கிருதம் படித்தவன் அறிவாளி என்கிற நிலையை கொண்டுவரவேண்டும் என்கிறாரா.. சாதாரணமானவர்கள் தான் இவர்கள் கூட இருக்கும் ராமதாஸும் கிருஷ்ணசாமியும் .. இருவரும் பொய் பித்தலாட்டம் செய்தாலும் மத சாதிவெறியர்களாக இருப்பதால் சரி என்கிறாரா.. மிக சாதாரணமானவர்கள் படிக்கதான் தமிழ்நாடு மருத்துவகல்லூரிகளை மாவட்டம்தோறும் கட்டியிருக்கிறது அதில் படித்தவர்கள் தான் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் பணிபுரிகிறார்கள் .. இந்தியாவிலேயே தமிழகம் தான் மருத்துவதுறையில் சாதனை படைத்திருக்கிறது இவை இவர் சொல்லும் சாதாரணமானவர்கள் சாதித்தது ..
..
எதிர்கட்சியாக கூட இருக்க தகுதியில்லாத கட்சிகள் பாஜக அதிமுக..
மக்கள் விரோதிகள் .. சுயநலபேய்கள் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் கேடு..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment