தலைநகரில் ..
தமிழ்நாடு தலைநிமிர்ந்தது இழந்த தன்மானத்தை மீட்டது .. கழிசடைகள் கால் நழுவி நின்று கொத்தடிமையாய் சேவகம் செய்திட்ட இழிசெயல் இனி இல்லை .. தமிழ்நாட்டின் தேவைகள் எதையும் சமரசம் செய்திடாமல் எந்த உரிமைகளையும் இழந்திடாமல், எம் இனத்தின் பெருமை சிதைந்திடாமல் மக்களாட்சியின் மகிமையை ஒன்றியத்திற்கு உணர்த்தி
எம் முதல்வர் ராஜங்கம் நடத்திருக்கிறார்..
..
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய பிரதமர் மோடியிடம்
முக்கியமான கோரிக்கைகள் வலியுறுத்தினார்..
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறவேண்டும்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்..
குடியுரிமை திருத்தச் சட்டம் , வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.. இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை..
மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது GST நிலுவை தொகையை உடனே தரவேண்டும்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
மிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகள்..
இப்படி ஒரு சிறப்பான முதல்வரை துணிவோடு பேசும் முதல்வரை
தமிழர் நலம் தமிழ்நாட்டின் நலன் காக்கும் முதல்வரை
பெற்றதற்காக
ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும்..
..
அடிமை எடிப்பாடி தலையாட்டி ஏற்றுக்கொண்ட திட்டங்களை எல்லாம் எங்களால் ஏற்க முடியாதென ஒன்றிய தலைமையமைச்சரிடமே நேரடியாக சொல்லும் துணிவு .. எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கு இழப்பை ஏற்படுத்த முடியாது உரிமைகளை விட்டுதந்து
ஜால்ரா போட முடியாது எமது உரிமைக்கு குரல் கொடுப்போம் என சொல்லியவிதம் தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் தலைநிமிர செய்திருக்கிறது ..
..
டெல்லி சென்றவுடன் நேரடியாக அறிவாலய பணியை பார்வையிட்டு கட்சி முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார்..
இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதி அளவுகோலை மாநில அரசுகளே நிர்ணயம் செய்யும் அதிகாரம் வேண்டும் என்பது திராவிட இயக்கம் தன் கொள்கைகளை தளர்த்தி கொள்ளாது சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்பதை ஒன்றிய பிரதமருக்கு பாடம் எடுத்து புரியவைத்திருக்கிறார்
..
எழுவர் விடுதலை தொடர்பாக மிக முக்கிய நகர்வை தளபதி சாதித்துகாட்டிருக்கிறார்
சட்டச் சிக்கல் காரணமாக எழுவரையும் விடுதலைசெய்வதற்குப் பதிலாக கால வரம்புகள் இல்லாத நீண்டகால பரோலில் விட ஒன்றிய அரசு ஒப்புதல்..
இந்தியர்கள் மூவரும் தங்கள் வீடுகளில் இருக்கலாம். மற்ற நால்வரும் இலங்கை நாட்டினர் என்பதால் அகதிகள் மறுவாழ்வுமையத்தில் தங்கியிருக்க வேண்டும்..
தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான
தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..
ஒரு முதல்வரால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் முதல்வர் மக்களின் தேர்வாக இருந்தால் ஒன்றியம் தலையாட்டும் என்பதையும் இந்த நிகழ்வு சொல்கிறது ..
..
வாழ்த்துகள் முதல்வரே ..
நன்றியும்
மகிழ்வும்
கொஞ்சம் பெருமையோடும்
கர்வத்தோடும்
தமிழனாய் தலை நிமிர்கிறோம்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment