ஸ்டாலின் ஆட்சியில் அண்ணாவின் நிர்வாகத் திறமையையும் கலைஞரின் உழைப்பையும் காண்கிறேன்.. தராசு ஷியாம்..
..
அண்ணாவின் நிர்வாக திறமை கலைஞருக்கும் இருந்தது அண்ணாவிற்கு காலம் வாய்ப்பை தரவில்லை ஆனால் கலைஞருக்கு நல்வாய்ப்பாய் நீண்டகால முதல்வர் என்ற தகுதியை வழங்கியது அதுவே தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து தனித்துவமாக திகழ காரணமானது .. கலைஞரின் உழைப்பு ஈடுசெய்ய முடியாதது .. அவரின் பன்முகதன்மையின் ஒருங்கிணைக்க அவரது உழைப்பு மிக காரணியாக அமைந்தது தொலைநோக்கு சிந்தனை பெரியாரிடமிருந்தும், அரசியலில் எதிரிகளையும் கையாளும் திறன், யாரை எப்படி நடத்துவது சுயமரியாதையை கைவிடாமல் அரசை நடத்துவதெப்படியென அண்ணாவிடமும் கற்றவர் கலைஞர் ..
..
கலைஞர் திராவிட சித்தாந்தத்தை சிறிதும் பிசறாமல் கட்சி அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் நடத்திகாட்டியவர் .. இன்று சங்பரிவார் நடத்தும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் குத்துவிளக்கு ஏற்றுவதெல்லாம் பார்க்க நேரிடுகிறது .. கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பணிமாற்றம் செய்யபட்டதோடு கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் அழைத்து கண்டிக்கபட்டிருக்கிறார்கள் .. எங்கிருந்து வந்தோம் நம் கொள்கைவழி பயணம் எது என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல திமுகவினரும் கடைபிடிக்கவேண்டும் மத நம்பிக்கை வேறு மதவெறிகூட்டத்தோடு கூலாவுது என்பது வேறு ..
..
அண்ணாவையும் கலைஞரையும் உள்வாங்கி பேராசான் வகுத்த சமூநீதி பாதையில் பயணிக்கிறார் தளபதி அவர்கள் .. மக்கள் துயர்படும் நேரத்தில் அறியணை ஏறியபோதும் கொஞ்சம் மகிழ்வு கொள்ள இடம் தராமல் மக்கள் மகிழ்ச்சியுறும் நாளே நன்னாள் என சுழன்று இயங்கும் தலைவர் ..
அண்ணா காலத்தில் ஜனநாயக மரபுகளை மதிக்க தெரிந்த எதிரிகள் இருந்தார்கள் .. கலைஞரே காலத்தை பகைமை தலைக்கேறியவர்கள் இருந்தார்கள் ஆனால் தளபதி காலத்தில் அடிமைகளும் விவரகேடுகளும் பொய்யர்களும் புளுத்துநிற்கிறார்கள் .. அரசியல் புரிதலற்ற வீணர்கள் மதவெறியர்கள் சாதிவெறி மூடர்கள் என வரிசைகட்டுகிறார்கள் .. ஊடகங்கள் தங்கள் கடமையை மறந்து விலைபோன காலத்தில்
நேர்மை என்றைக்கும் விழாது என்ற நம்பிக்கையோடு உழைப்பு உயர்வை தருமென நம்பி .. மக்களின் சிரிப்பில் தான் அரசின் சிறப்பிருக்கிறதென தன் சகாக்களோடு ஆட்சி செய்கிறார்..
..
விமர்சனம் என்ற பெயரில் சில கூமுட்டைகள் ஒன்றுக்கும் உதவாதவற்றை கையிலெடுத்து கதைத்துக்கொண்டிருக்கிறார்.. வீணர்களே..
நீங்கள் சாதியையும் மதத்தையும் அடிமைத்தனத்தையும் கொண்டாடிக்கொண்டிருங்கள் ..
மக்கள் தெளிவாக தங்களுக்கான தலைவனை கொண்டாடுகிறார்கள் இனி தளபதியே தமிழகத்தின் தன்நிகரற்ற தலைவர் .. அவரது ஆட்சி பொற்காலத்தின் துவக்கம்
பொதுவாழ்வில் "தனலாபம்" பார்க்க வரவில்லை மக்கள் தனத்தோடு வாழும் சிரிப்பே மக்களாட்சியின் சிறப்பு ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment