ஆம் தமிழகத்தை இருள் நீக்க உதயமான சூரியன் ஓய்வில்லாமல் சுழன்று ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது .. அதிகாலையிலேயே அமைச்சர்கள் அழைக்கபடுவதும் அதிகாரிகள் சுழன்று பணி செய்வதும் கடந்த பத்தாண்டாய் படு உறக்கத்திலிருந்த அரசு இயந்திரம் ஜெட் வேகத்தில் பயணிப்பது சிலருக்கு வியப்பை தருகிறது .. உண்மையில் திமுக ஆட்சிக்கு வந்தாலே அமைச்சர்கள் அதிகாரிகள் உழன்று கொண்டே இருப்பார்கள் .. கலைஞர் பெருமகன் ஒவ்வொரு நொடியும் தமிழகம் நலன் சார்ந்து விரைந்து செயலாற்றியதை அறிந்தது தான்..
அதிமுக ஆட்சியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிவர்க்கம் சுறுசுறுப்பாக சுழலும்
..
ஒரு உதாரணம்..
இருளர் இனத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு ஐந்தாண்டுகளாகப் போராடி பார்த்தார்கள் ஒரு அசைவும் இல்லை விடியல் தந்த ஒளி அவர்களுக்கு வீட்டுமனை கிடைத்தது ..
முதல்வரின் தனி கவனத்தில் பெறபட்ட மனுக்கள் விரைந்து தீர்வாகிறதாக எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்களே வெளிப்படையாக சொல்வதை காணமுடிகிறது.. பெருந்தொற்றின் அலை கோரதாண்டவம் ஆடிய காலகட்டத்தில் அறியணையேறிய நம் "காவலன்" மக்களை காக்க அனைத்து அமைச்சர் பெருமக்களையும் மாவட்டவாரியாக செயல்பட வைத்து மக்கள் நல்வாழ்வுதுறையை சரியாக வழிநடத்தி துரிதமாக போதாமைகளை(உயிர்வளி படுக்கை) சரிசெய்ய போர்காலமென செயலாற்றி விரைந்து இயல்புநிலைக்கு திரும்பியதை கண்டு இந்திய ஒன்றியமே வியந்து நிற்கிறது வெளிப்படையான செயல்பாடுகள் தடுப்பூசி இல்லையென்றால் இல்லை வந்தவுடன் எவ்வளவு வந்திருக்கிறதென உடன் அறிவித்து மாவட்டவாரியாக பிரித்து பகிர்ந்தளித்து ஒரு ஆட்சியாளன் எப்படி செயல்படவேண்டுமென உலகிற்கு உணர்த்துகிறார் ஒப்பற்ற முதல்வர்
..
PMCARE போல "மர்மநிதி" அல்ல முதல்வர் நிவாரணநிதி எவ்வளவுவந்திருக்கிறது எவ்வளவு செலவு செய்யபட்டிருக்கிறதென மக்கள் அறிவது கடமையென செயல்படும் அரசு .. மோடி அரு வசூலித்த பேரிடர் நிதி ("மர்ம நிதி") என்னானதென யாரும் கேட்ககூடாதென அரசே சொல்வது எவ்வளவு அயோக்கியதனமென ஊடகங்கள் பொதுவெளியில் யாரும் பேசுவதில்லை .. எதிர்கட்சிகள் அரசியல் செய்ய பொருள் " இன்றி தவிக்கிறார்கள்
பிரதமரை சந்தித்து ஜெய்ஹிந்த் விவகாரம் தான் பேச முடிகிறது.. கோவில்நிலத்தில் மயிலாப்பூர் மாமாக்கள் "பார்" நடத்தியதை பேச முடியவில்லை ஐஐடி யில் பார்பன மேலாதிக்க குறித்து வாய் திறக்கவில்லை .. துணை ஒருங்கிணைப்பு எதையாவது சொல்ல நினைத்து "செங்கல்பட்டு"
தலை உடைந்தது தான் மிச்சம் ..
சேக்கிழார் மின்சாரம் தாக்கியதில் மூர்ச்சையாகிப் போனார் .. பிரபாகர பிம்பம் இங்கே சுக்குநூறாக உடைத்தெறியபடுகிறது .. தமிழகம் சார்ந்து பேசவோமென விழிப்பணர்வு வருகிறது .. பிரபாகரன் நிழற்படத்தை கூட இலங்கை மண்ணில் வெளியிட முடியவில்லை இங்கே திரைபடமே வெளியிட முடிகிறது .. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கழிசடைகளை கண்டதையும் பேசி தனிநபரை கிண்டல் கேலி நையாண்டி செய்துகாட்டிய "மேதாவி"யாக நினைத்தால் புழல் வரவேற்கும் என புரிய தொடங்கியிருக்கிறது ..
..
தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக்க முதல்வர் உறுதிபூண்டுயிருக்கிறார்
பின்தங்கிய மாவட்டம் பின்தங்கிய சமூகம் பின்தங்கிய மக்கள் என்ற இருக்க கூடாது என்ற அறைகூவலோடு பயணிக்கிறார்..
மாநிலத்தில் வளர்ச்சி ஏற்றுமதி இறக்குமதியில் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்கவேண்டும்
தமிழ்நாடு இனி உலக நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடவேண்டும்..
இந்திய ஒன்றிய அரசின் தலைவரைப்போல "வாய்சவடால்" இல்லை இங்கே "எல்லாம் செயல்"
பல்துறை நிபுணர்கள் சிறந்த அமைச்சர்கள் என ஓய்வில்லாமல் உழன்று உழைத்து தமிழகத்திற்கு "புத்தொளி"யை தந்துக்கொண்டிருக்கும் உதயசூரியன் ..
#தளபதி
#StalinEra
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment