Thursday, May 31, 2018

நூலகம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் 'மகாத்மா.' கரண்டியைப் பிடுங்கி விட்டுப் புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் 'தந்தை பெரியார்.' தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் 'ஜவஹர்லால் நேரு.' என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் 'பெட்ரண்ட் ரஸல்.' மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.' வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் 'நெல்சன் மண்டேலா.' பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி 'லெனின்' கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம். ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் 'சார்லிசாப்லின்.' ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் 'வின்ஸ்டன் சர்ச்சில்.' பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் 'மார்டின் லூதர்கிங்.' தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் 'பகத்சிங்/' நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றாராம் 'ஆபிரகாம் லிங்கன்.' ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி என்றாராம் 'ஜூலியஸ் சீசர்.' உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்றாராம் 'டெஸ்கார்டஸ்.' போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா, ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு என்றாராம் 'இங்கர்சால்.' சில புத்தகங்களைச் சுவைப்போம் சிலவற்றை அப்படியே விழுங்குவோம் சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம் என்றாராம் 'பிரான்சிஸ் பேக்கன்.' புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றாராம் 'லெனின்.' உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை என்றாராம் 'ஆஸ்கார் வைல்ட்.' உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு என்றாராம் 'சிக்மண்ட் ஃப்ராய்ட்.' பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ என்றாராம் 'மாசேதுங்.' இவர்கள் சொன்ன அனைத்தும் மொத்தமாக ஒரே இடத்தில் பெற வேண்டுமா? கழகத்தின் கொள்கை முரசம் அண்ணன் திருச்சி என் சிவா அவர்களின் உரைகளைக் கேளுங்கள்.

கங்கு அணையாமல் ..

சாதுவேடத்தில் வந்தவர்களால் தான் பல சாம்ராஜ்யங்கள் அழிந்திருக்கின்றன.. கலைஞர் ... .. தமிழகம் வேறுமாதிரி என்பதை சிவாஜிராவ் அறிந்திருக்கவில்லை.. மாயஜால வேசம் கைகொடுக்குமென பழைய வித்தையை கையிலெடுத்து ஆர்எஸ்எஸ் ஆட்டுவித்த குரங்கு கடைசியில் கல்லடிபட்ட கதையானது. ஒவ்வொரு வியர்வை துளிக்கும் தங்ககாசு தந்தவன் இன்று முகத்துக்கு நேரே .. யார் நீ என கேட்கிறான்..இந்த தைரியம் ஒருநாளில் வந்ததல்ல.. நெடுகாலமாய் இனமானத்தோடும் தன்மானத்தோடு வாழ காலமெல்லாம் போராடிய தந்தை பெரியார் கற்று தந்த சுயமரியாதையின் #அறசீற்றம் இது .. சினிமாவெனும் மதி மயக்கும் அரிதார நிழல்கதையில் கதாநாயகன் வேசம் கட்டியதை.. கைதட்டி ரசித்தவன் அதை ஒரு கேளிக்கையாக கொண்டவன் கலை நாடகத்தில் அதீத மயக்கம் கொண்ட தமிழ் மரபினன்.. ஆனால் தன்மானத்திற்கு இழுக்கென்றவுடன் சீறிவரும் சிம்மமானான்.. .. ஆரியர்கள் எத்தனை வேசம் கட்டுகிறார்கள்.. எத்தனை பேரை களமிறக்குகிறார்கள் சூது சூழ்ச்சி ..மது மாது..கவர்ச்சி என வரிசையாக இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் மிரட்டிபார்த்தார்கள் மசியவில்லையென்றவுடன்..மயிலிறகால் வருட பார்க்கிறார்கள்.. எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்த அதே நடைமுறையை .. இப்போது கையிலெடுக்க அது பழைய கெட்டுபோனது செல்லாதென.. ஒரு சம்பவம் மூலம் அறிவித்துவிட்டான் தமிழன் .. எம்ஜிஆர் ஒரு நீண்டகால திட்டமிடல்.. ரஜினி குறுகில கால வார்ப்பு பல்லிளித்துவிட்டது மெல்ல கட்சிக்குள் புகுத்தி மாய பிம்பத்தை கட்டியமைத்து .. தன்னை நியாயவானாக காட்டி நடித்து ஏதோ அவதாரபுருஷன் போல் காட்டி .. மிக நீண்டகால திட்டத்தின் பலன் எம்ஜிஆருக்கு கிடைத்தது.. அதோடு திமுகவினரின் பலம் .. ஆனால் இந்த #வெத்துமகன் திடீரென ஒருநாள் வருவாராம் மக்களுக்காக சேவைசெய்ய வந்ததாக சொல்லிக் கொள்வாராம் ‍.. இந்த ஈயம் போன பித்தளையாக பல்லிளிக்க வைத்துவிட்டான்.. .. இனி தான் மிக கவனமாக திட்டமிடல் வேண்டும் மக்களை நோக்கி மட்டுமே நமது பயணம் இருத்தல் வேண்டும்.. இந்த சொரணையற்றவர்களோடு மோதி எந்த பலனுமில்லை இவர்கள் கொஞ்சம் காசு கிடைத்தால் எதுவானாலும் செய்வார்கள் .. பார்பனர்கள் அடிமையாக இருந்திருந்து .. காட்டியும் கூட்டியும் கொடுக்க பழகிவிட்து எதற்கும் தயங்கமாட்டார்கள் .. ஆனால் இவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்துவிட்டார்கள்.. இனி திமுக எனும் மாபெரும் இயக்கத்தை மட்டுமே நம்பியிருக்கிற மக்களை திசை திருப்ப .. கவர்ச்சி,காசு, மதம்,சாதியென பல அடுக்கு போரை துவங்கியிருக்கிறார்கள்.. இதற்கெல்லாம் சிறந்த பதிலடியை தர மக்களை சந்தித்து மக்களோடு மக்களாக பயணித்து மிகப்பெரிய ஆபத்திலிருந்து தமிழகத்தை காக்கும் பெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதென்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம்.. .. ஆன்மீக அரசியல் பேசி வந்தவனை மக்கள் செய்த விதம் நன்று.. இப்போது கலைஞர் வசனம் ஞாபகம் வருமே.. சாது வேடத்தில் வந்தவன் தமிழனை தவறாக எடைப்போட்டுவிட்டான்.. சாது வேடம்கட்டியவனை ஆன்மீக அரசியலை நம்பாதே என்று 54 லேயே எங்களுக்கு ஆசான் சொல்லி தந்திருக்கிறார் ..என்பது புரியாமல் போலிஆன்மீக பேசி வந்த விவர கேட்டை நேற்று செய்த சம்பவம் ..இன்னமும் சுயமரியாதை எனும் #கங்கு அணையாமல் இருக்கிறதென்பதை உணர்த்தியது.. ... #கியாரே_வெத்துமகனே_நடையைகட்டு .. ஆலஞ்சியார்

Wednesday, May 30, 2018

யாரடா..நீ...

யாரடா நீ.. .. ஒத்த குரல் .. வார்த்தைகள் வெவ்வேறாய் வருகிறது ...ஆனால் அவர்களின் மொழி காட்டிக் கொடுத்துவிடுகிறது.. எந்தவொரு மக்கள் விரோத நிகழ்வானாலும் அதற்காக தன்னெழுச்சியாக போராடுகிற தமிழர்கள் அரசியல் கட்சிகளை சாராமல் நீதி வேண்டி போராடுகிற தமிழர்களை .. அவர்தம் போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டி அவர்களை பொறுக்கிகள் என்றான் சு.சுவாமி..ஹெச். ராஜாவோ தேசவிரோதிகள் பட்டம் வழங்குகிறான்..பயங்கரவாதிகளாய் சித்தரிக்க கடும் முயற்சி மேற்கொள்கிறார் .. பொன்னர் .. கடைசியில் திரைப்பட நடிகர் ரஜினி நம்மை பார்த்து சமூக விரோதி என்கிறார் .. அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள்... தமிழர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்பதில் .. நாம் தான் சாதி பேசி நியாயம் பேசி தமிழ்தேசியம் என உளறிக்கொண்டு அவர்கள் வேலையை சுலபமாக்குகிறோம்.. .. யார் நீங்களென கேட்ட தூத்துக்குடி இளைஞனுக்கு முத்தங்கள்... தன் வலியிலும் வந்தவரை வரவேற்ற விதம் நாடே பார்த்தது .. ஆமாம் யாரிவர் .. எங்கிருந்து வந்தார் ஏன் இந்த வேசம் கட்டு ..படம் ஓடவேண்டுமெனில் எதையும் செய்யும் வியாபாரி .. அவ்வளவுதான் ரஜினியின் கையிருப்பு.. வயதாகி ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் மக்களைப் பற்றி சிந்திப்பாராம் .. மக்களை மகிழ்விக்க வந்த கலைஞனென கூறிக்கொண்டு .. அரிதாரம் பூசாமலும் நடிக்க வந்தவரை தமிழ் இளைஞன் கேட்ட கேள்வி .. ஒட்டுமொத்த தமிழ்நாடே கேட்டதற்கு ஒப்பாகும்... யார் நீங்கள்.. .. ஆம் நூறுநாட்கள் மக்கள் தன்னெழுச்சியாய் போராடி வருகிறார்கள் அப்போதெல்லாம் காலா படப்பிடிப்பில் வேங்கமவன் வசனம் பேசி விட்டு .. துப்பாக்கி சூடு நடந்து 13 உயிர் போன பிறகும்.. இப்போது ஆறுதல் சொல்ல வருவதாக வந்து நாடிபிடித்து பார்க்கும் நயவஞ்சக செயலை எம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.. சட்டமன்றத்தில் பேச கூட அனுமதி மறுத்து.. படுகொலை துப்பாக்கி சூடு என்ற வார்த்தைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கபட்ட நிலையில் சட்டமன்றம் எப்படி நடக்கவேண்டுமென "மாதிரி சட்டமன்றத்தை" நடத்தி காட்டும் நேரத்தில் அதை திசை திருப்ப வேசம் கட்டிவந்த வேங்கைமவனை வார்த்தையால் விரட்டிய செயல் நாடே பார்த்து மகிழ்ந்தது.. யார் நீ... .. விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் போராட்டத்துல நுழைஞ்சுட்டாங்க. அரசாங்கம் இரும்புக்கரத்தோட விஷக் கிருமிகளை, சமூக விரோதிகளை அடக்கணும் அரசு இரும்புக்கரத்தோட அடக்கணும் இல்லனா தமிழ்நாட்டுக்கே ஆபத்து தமிழ்நாடு போராட்ட பூமியாயிட்டா எந்த தொழிலும் வராது, இளைஞர்கள் பாதிக்கப்படுவாங்க .. அப்படியே நாக்பூர் எழுதிக் கொடுத்ததை இங்கே வந்து வாந்தியெடுத்துவிட்டு போயிருக்கிறார்.. இப்போது சொல்லுங்கள் .. தமிழர்கள் நம்மை பார்த்து .. பொறுக்கிகள், தேசதுரோகிகள் பயங்கரவாதிகள் சமூகவிரோதிகள் என ஒரே குரலில் பாடுகிறார்கள் .. எப்படியும் தமிழகத்தை கலவர பூமியாக்க வேண்டும் அதைவைத்து குளிர்காய வேண்டுமென்ற பாசிச வர்க்கத்தின் பிரதிநிதியாய் வந்தவரை.. யார் நீ எனக் கேட்து சரிதானே.. .. யார் நீங்க என்ற கேள்வி ரஜினியை கோபம் கொள்ளவைத்திருக்கிறது அதனால் தான் பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக எரிந்துவிழுந்தார்.. ஆழம்தெரியாமல் காலைவிட்டதைப்போல.. நிலை ரஜினிக்கு அரிதாரத்திற்கு மயங்கி நின்ற காலம் மலையேறிவிட்டது இது எழுபதுகள் அல்ல.. 2018 வேறுமாதிரியாக கருவறுக்கும் எச்சரிக்கை.. போராடினால் சுடுகாடாகுமாம்.. போராடாமல்.. குண்டிகாட்டியும்.. காட்டிக்கொடுத்தும் கூட்டிக் கொடுத்தும் .. உயர்வடைந்தவர்களுக்கு .. போராட்டத்தின் வலிமை நேர்மை தூய்மை தெரியாதுதான்.. போராடி பெறாத எதுவும் நேர்மையாக இராது .. யார் நீங்க.. கேட்டது சரிதான் .. #ஆமாம்_யாரிவன்..?… .. ஆலஞ்சியார்

Tuesday, May 29, 2018

தமிழ்..எங்கள் கலைஞர்

என் தமிழ் ஆசான் #கலைஞர்.. .. இங்கே நிறைய பேருக்கு தமிழாசான் கலைஞர்தான் எனக்கும் கூடதான் .. இலக்கிய தமிழில் புதிய தோரணையை கட்டி நடனமாடியவர்.. சினிமா கலையில் புதிய உக்திகள் சொல்லும் சொல்லின் பொருள் இருபொருள்பட சொல்வார் அது அரசியலையும் முன்னெடுக்கும் கதாபாத்திரத்தையும் பேசும்.. புரிந்துக்கொள்வார்கள்.. .. இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.. அறிஞர் அண்ணா எழுதிய வசனத்தில் கூட நேரம் கருதி சிலவார்த்தைகளை நீக்கிவிட்டு படமாக்கிவிடலாம் ஆனால் கலைஞரின் வசனத்தில் ஒரு வார்த்தை நீக்கினால் கூட பொருள் மாறிவிடும் அவரை கொண்டே மாற்றி எழுத வேண்டும் .. கலைஞரின் எழுத்து எல்லோரையும் ஈர்க்கும்.. அது கொள்கை வேறுபாடு கொண்டவர்கள் கூட ரசித்து நிற்பர்.. எழுத்தில்/பேச்சில் சிலம்பம்,ஆடுவது அவருக்கு மிக இலகுவாக வரும்.. .. சட்டமன்றத்தில் ரகுமான் கான் போலீஸ் மான்ய கோரிக்கையில் .. பேசிக்கொண்டே இருக்கிறார் சபாநாயகர் ராசாராம் அமர சொல்லியும் கேட்கவில்லை.. உன்னை ஆண்டவன்தான் உட்காரவைக்கணும் என்ற போது .. கலைஞர் எழுந்து உட்கார் என்கிறார் உடனே அமர்ந்துவிட்டார் ரகுமான்.. கலைஞரை பார்த்து மிக்க நன்றி என்றார் சபாநாயகர்.. உடனே கலைஞர் எழுந்து நீங்கள் தானே ஆண்டவனால் தான் அமரவைக்க முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் .. என்று சிறிது இடைவெளி விட்டு தமிழகத்தை ஆண்டவன்தான் என்ற போது சபை கைத்தட்டி மகிழ்ந்தது.. கலைஞரோடு சொற்போரில் வென்றவரில்லை.. போராட்டத்தில் கைதாகி சிறை சென்று திரும்பி சட்டமன்றம் வந்தபோது .. அனந்த நாயகி உங்க மாமியார்வீடு (சிறைச்சாலையை) எப்படி இருந்தது என்றார் உடனே.. உங்க தாய்வீடு நலம் என்று வாயடைக்க வைத்தார்.. கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா? என்றார் நூர்முகம்மது எம்எல்ஏ.. பதிலளித்த கலைஞர் குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது.. (6.5.1989).. என்றார்.. அதேபோல் காமாட்சி என்ற உறுப்பினர் மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்றார் பதிலளித்த கலைஞர் மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! என்றார்..இப்படி நகைச்சுவை குன்றாமல் நயத்தோடு நாகரீகம் கெடாமல் பதிலளிப்பார் .. .. கண்ணதாசன் வெளிநாடு செல்லும் போது என்ன வாங்கிவர என்றபோது நல்லபெயரை வாங்கிட்டு வா என பொருட்பட சொன்னார்.. தன் தலையை சீவி விடுவதாக வடநாட்டு சாமிகள் சொன்னபோது என் தலையை நானே சீவி பல நாட்களாகிவிட்டதென சொன்னவர்.. இப்போது கூட உடல் நலிவுற்று காவேரியில் இருந்தபோது செவிலிய பெண்ணிடம் உன்பேர் காவேரியா எனகேட்டு இல்லையென்க தண்ணி கேட்ட இவ்வளவு கம்மியாக கொடுக்குறீயே காவரியான்னு கேட்டேன் என நகைச்சுவையோடு சொன்னவர்.. .. முரசொலி மற்றும் குங்குமத்தில் தான் குறளோவியமும் சங்கத்தமிழும் தொடராக வரும் .. சங்கத்தமிழில்.. அவர் எழுதிய காதல் கவிதைகள்...பழைய நினைவுகளை கிளறும்.. // கண்ணல்லவோ கனியல்லவோ எழுதாத பண்ணல்லவோ என் நெஞ்சம் விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ..என்றென்னை அழைத்திட்ட போது அவன் வடித்திட்ட வார்த்தை அருவித்தவழ் சோலை அழகுமலர்கூட்டம்...:// சங்கத்தமிழில்..சொக்கிப்போவோம்.. .. தமிழ் அவருக்குமட்டுமே கட்டுப்படும்.. அரசியலில்.. சில நேரம் சிலேடைகளோடு எழுதுவார். எம்ஜிஆர் (மகோரா) பற்றி எழுதுவார்.. எல்லோரும் ராமாயணம் என்றிருப்போம்... புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். // #மானமிகு வாலியை மறைந்து நின்று தாக்கிய மான்புமிகு ராமசந்திரனை மாவீரன் என மகாகவி கம்பனே ஏற்கவில்லை என்பார்.. .. கலைஞர் தமிழ் முன் இதுவரை யாருமே வென்றதில்லை இறுமாப்போடு சொல்வதில்லை உண்மை அதுதான்.. விதவை என்றெழுதும் போது கூட பொட்டுவைக்க முடியவில்லையென இளங்கவிஞன் விகடனில் கவிதை எழுதி கவலையுற்ற போது #கைம்பெண் என்று தமிழில் எழுது ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாமென பொருட்பட பேசியவர் .. .. கலைஞர் எழுத்து சொல் செயல் எல்லாம் தமிழோடு இணைந்தது தமிழாய் நின்றது.. கலைஞரின் குரலை நேசித்து தமிழை சுவாசித்து வளர்ந்தவர் நாம்.. அந்த பெருமகனோ வாழ்கிறோம் என்பதே பெருமைதான்.. .. #தமிழாசான்_கலைஞர்_பிறந்தநாள்_ஜூன்3 .. ஆலஞ்சியார்

Monday, May 28, 2018

தூத்துக்குடி நடந்த துன்பியல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது போன்று முறையற்ற விதத்தில் துப்பாக்கி சுடு நடத்தப்பட்டதை அவர் தமிழக அதிகாரிகள் இடம் கண்டித்ததாக செய்திகள் உலவுகிறது ஆனால் ஹெச் ராஜா , இல.கணேசன் , தமிழிசை போன்ற காவிகள் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து விட்டதாக உளறி கொட்டுகிறார்கள்.. 13 வயது சிறுமியின் வாயில் சுட்டது ..தீவிரவாதி என்பதாலா.. மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறார்கள் தனியார் முதலாளிக்காக.. போராட்டத்தை திசை திருப்ப சர்ச்சில் இருந்து இந்த போராட்ட ஆலோசனை நடத்தபட்டதாக சொல்பவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட நிகழ்வுகள் கூட தேவாலயங்களின் பங்கு அதிகம் .. இந்த சங்கிகளுக்கு ஒரு கேள்வி.. காஞ்சி சாமியாரை அடிக்கடி பார்த்து வருகிறீர்களே ..காஞ்சி சாமியாரை .. அங்கு தான் எந்த முடிவும் இறுதியாக்கபடுகிறதென பெரும்பாலோனர் நம்புவதால் அந்த சாமியாரை தீவிரவாதியென்றோ ..அன்று தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோதியென்றோ எடுத்துக்கொள்ளலாமா.. மக்கள் போராட்டத்தை அசிங்கபடுத்த அதற்கு மத சாயம் பூசும் இவர்களை என்ன செய்யலாம்.. .. துணை வட்டாச்சியர் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கை.. அவருக்கு அதற்கான அதிகாரமில்லை... கலெக்டர்.. அல்லது வட்டாச்சியர் உத்தரவிடலாம் அதுவும் முதலில் கண்ணீர்புகை .. தடியடி .. பிறகு ரப்பர்குண்டுகளை பயன்படுத்தி முழங்காலுக்கு கீழே சுடவேண்டும் அதற்கு முன்பு வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைக்கவேண்டும்.. இதில் எதுவுமே முறையாக கடைபிடிக்கபடவில்லை.. இந்த சம்பவம் குறித்து முதல்வர் கவனத்திற்கே செல்லவில்லை.. பெரிய தலைகளை காப்பாற்ற துணைவட்டாச்சியர் சுட உத்தரவிட்டதாக சொல்வது ஏமாற்றுவது.. சுடபட்டவர்களில் மிக முக்கியமாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்பதொன்றே இது பக்கா திட்டமிடல் என உறுதிப்படுத்துகிறது.. .. சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளையைப்போல எடப்பாடியும் துரோகி பன்னீரும் எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறார் என்பதால் இந்த பாசிச படை ரொம்ப உக்கிரமாக துள்ளுகிறது.. எரிகிற நெருப்பில் கொள்ளியை பிடிங்கினால் நெருப்பு தானாக அணையும்.. இதுதான் நடக்கபோகிறது.. இந்த கூட்டம் நடக்கமுடியாதவாறு செய்ய போகிறார்கள் மக்கள் .. ஏனெனில் அம்பை நொந்து பலனில்லை .. எய்தவனை.. அதன் காரணகர்த்தாவை .. நூலறுத்த பட்டம் போல் அறுத்தெறிந்தால் தானாக அடங்கி போகும்.. இனியும் நாகரீக அரசியல் பேசி .. கருத்துயுத்தம் நடத்தி ..நேர்மையோடு போராடலாமென்றால் .. எதிரிகள் கொலைவாளுடன் வரும் போது.. நாம் வெறுங்கையோடு நிற்பது யுத்த தர்மமல்ல.. பொறுக்கமுடியாமல் போன போதுதான் பெரியார் கூட மண்ணெண்ணையையும் தீப்பட்டியையும் ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள் சொல்லும் போது கொளுத்தலாம் என்றார் .. காரணம் எதுவும் கைமீறி போகும் போது.. அஹிம்சை பேசி பலனில்லாமல் போகும்... இன்னமும் நம்மை முட்டாளைப்போல எண்ணி தோசை சாப்பிட வரேன் என கிண்டலடிப்போரிடம்.. நம்பிக்கையை எதிர்பார்பது வீண்.. இந்த கேடுகெட்ட துரோகிகள் சொரணையற்ற பிண்டங்களை வைத்து கொண்டு தாயமாடுவது .. நம்மை வீழ்த்ததான்.. கொன்று குவித்து பயத்தோடு வாழ வைக்கும் தந்திரம் பழைய குஜராத் மாடல் இங்கே எடுபடாதென அறிவிப்போம்.. .. எந்த ஆயுதம் எடுக்கவேண்டுமென எம் எதிரியே தீர்மானிக்கிறான்.. சில இன துரோகிகளை வைத்துக்கொண்டு ..மொத்த இனத்தையும் காவு கேட்கும் காவிகளை இந்த மண்ணைவிட்டே விரட்டும் வரை .. கோபம் தனியாமல் .. எரியும் தனலாய் ..இருப்போம்.. .. #கொலைவாளினை_எடடா_மிகுகொடியோன்செயல்தனைஅறவே .. படம்: அதிமுககாரனுக்கு கட்டுபோட்டு விசாரிப்பது போல நடிக்கும் துரோகி பன்னீர் .. ஆலஞ்சியார்

Sunday, May 27, 2018

கோமாளி..

நான்காண்டில் பிரதமர் மோடி.. .. அதிகம் பேசினார் மக்கள் வெளியில் .. நாடாளுமன்ற சபையில் ஊடகங்களில் பேச பயந்தார் .. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை .. பொய்யான தகவலை கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் தந்தார் ..அதிக சுற்றுலா என்ற பயண பிரியராய் .. அய்ரோப்பாவில் யாரேனும் செத்தால் அழுவார் .. இந்தியாவிற்குள் .. சுட்டு செத்தாலும் வாயை திறக்கமாட்டார் .. ஒரே நாளில் ஹீரோவாக நினைத்து பணமதிப்பை செய்து ...அந்த பணத்தைப் போல மதிப்பிழந்துப் போனார்.. குறிப்பாக தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒருவித பதட்டத்தோடு வாழும் சூழல்.. பார்பனர்கள் பதவி உயர்வு 480% விழுக்காடு அதிகரித்திருக்கிறது .. ஆர்எஸ்எஸ் திட்டத்தை முன்னெடுப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறியளவில் கூட சமூகத்தின் ஒடுக்கபட்டவர்களுக்கான திட்டத்தில் முனைப்பு காட்டுவதில்லை.. துறைசார்ந்த வளர்ச்சி பின்னோட்டு செல்கிறது ..அதை சுட்டிகாட்டினால் கோபம் வருகிறது.. நீதித்துறை ஒருவித பதட்டத்தோடு செயல்படுவதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே வாய்விட்டு கதறும் நிலை.. அரசியல் சட்டத்தின் நியாயமான பக்கங்களில் காவி நிழல்படர தொடங்கியிருக்கிறது.. மநுநீதி மட்டுமே பேசபடுகிறது.. தேர்தல் நடைமுறை நம்பிக்கை இழந்து வருகிறது.. தொழில் அதிபர்களின் வாரா கடனுக்காக .. நாடுகடத்தபடுகிறார்கள் ..(ஓடிபோயிட்டாங்கன்னு சொன்னா அசிங்கம்).. எரிப்பொருள் விலையை கேட்டாலே பற்றி சுவாலையாய் எரிகிறது.. ₹80 தொட்டு நெருங்குது ₹100 என்னவொரு அதிசயதக்க வளர்ச்சி .. யாருமே கேட்க கூடாது .. மீறி கேட்டால் பக்தர்கள் ஒன்று கூடி தேசவிரோதி பட்டத்தை தருவார்கள் .. ஜனநாயகம் மெல்ல சாகிறது.. .. கிரிக்கெட் வீரரின் .. உடற்கட்டுற்கு போட்டி போட தெரிந்த பிரதமருக்கு .. பத்திரிக்கைகளை கண்டால் பயம் ஏதாவது சிறிதேனும் நன்மைபயக்குமாயின் அதை பெருமையோடு சொல்லி திரியலாம்.. பொய்யை மட்டுமே நம்பி .. ஆட்சி செய்பவரிடம் எதை எதிர்பார்ப்பது.. ஆரம்பத்தில் மோடிக்கு முட்டு கொடுத்தவர்கள் மெல்ல மெல்ல தெளிந்து தங்களின் கோபத்தை காட்டுகிறார்கள்.. பார்பனர்கள் அவர்களின் அடிவருடிகள் தவிர மற்றவர்கள் மோடி அரசின் மீது கடும் அதிருப்தி .. காங்கிரஸின் மீதான கோபத்தில் தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள் .. .. சிறந்த பொருளாதார நிபுணரை வேண்டாமென்று வைத்ததின் விளைவு இப்போது அறுவடை செய்கிறோம்.. ஒரு சில முதலாளிகளின் வளர்ச்சிக்காக மொத்த இந்தியாவும் கசிக்க பிழிய படுகிறது..அரைகுறைகள் நிதித்துறையிலும் கல்வித்துறையிலும் அமைச்சர்களாக வந்த கொடுமை தீர்வதற்குள் .. சாமியார்கள் நாட்டை ஆளும் கொடுமை.. மாடுகளுக்கு (ஆக்ஸிஷன்) பிராணவாயு தந்து பச்சிங்குழந்தைகளை கொல்கிறார்கள்.. மாட்டுக்காக மனிதனை கொல்வது நீதியென்றானது.. சுவாதிகளுக்காக பொங்கும் நீதி.. அனிதாவிற்கும் ஆஷிபாவிற்கும் பொங்குவதில்லை.. சிறிய குழந்தைகளை தெருவில் விளையாட விட கூட அஞ்சுகிற நிலை .. வார்டு உறுப்பினருக்கு கூட வக்கில்லாத நிலையில் ஆட்சி செய்யும் அராஜகம் .. 21 மாநிலங்களில் ஆட்சியென்று அதிலும் பொய் .. எல்லா நிலையிலும் மதத்தை முன்னிறுத்தும் கேடுகெட்ட நிலை .. ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களை காவு கேட்கும் கொடுமை.. பன்முகம் கொண்ட இந்தியாவை .. பாசிச முகமாக மாற்றும் அயோக்கியத்தனம் .. என் மதிப்பிற்குரிய நண்பர் அக்ரஹாரத்து அதிசய பெண்மணி.. உமா அவர்கள்.. சில தினங்களுக்கு முன் ..Stupid government everywhere.. ரொம்ப பயமா இருக்கு தோழர் என்றார்.. எவ்வளவு சத்தியமான வார்த்தை .. .. #நவீனகோமாளி.. .. ஆலஞ்சியார்

Saturday, May 26, 2018

குருக்கள் சூழ் உலகு

சாதிவெறியும் இனவெறியும்.. குருவும் குருமூர்த்தியும்.. மறைந்த காடுவெட்டி ..சாதீய தீயில் குளிர்காய்ந்தவரெனில்.. குருமூர்த்தி ஒட்டுமொத்த இனத்தின் மீதான தாக்குதலை மிக எளிதாக செய்யும் சமூகவிரோதி.. தங்களின் இன நலத்திற்காக ஒடுக்கபட்ட சமூகத்தின் மீதான வக்கரமத்தை இடைசாதி மீது திணித்து அது முனை மழுங்கிவிடாமல்.. கூர்த்தீட்டும் சாணன்.. .. குரு.. நிறைய இருக்கிறது பேச.. ஆரம்பத்தில் மீன்சுருட்டி வட்டாரத்தில் அறியபட்ட போக்கிரியாக வலம்வந்தவர்.. கும்பகோணம் வட்டாரபகுதிகளில் காணாமல் போகும் புதிய இருசக்கர வாகனங்கள் மீன்சுருட்டிக்கு சென்றால் மீட்டுவரலாம்.. நம்பிக்கையோடு என்ன ..புதியதின் விலையில் பாதியை தந்தால் உங்களுடைய பொருள் அப்படியே கிடைக்கும்.. மிக நேர்மையோடு எந்த உதிரிபாகங்களையும் கழட்டி விற்காமல் அப்படியே தருவார்கள்.. போலீஸ்காரர் கொண்டு போன வாகனத்தை காவல்நிலையத்தில் மீட்கும் போது ..பாகங்கள் சில காணாமல் போயிருக்குமே அப்படியில்லாமல் நல்ல நிலையில் திரும்ப கிடைக்கும் நல்ல மனிதர்கள்.. இது என் அனுபவத்திலேயே நடந்தது.. திடீரென தன்னை சமூகநீதி காவலராய் காட்டிக்கொண்டு சமூகநீதி சிந்தனையாளர் ராமதாஸோடு நெருக்கமாகி .. வன்னிய சமூகத்தின் காவலராய் பரிணாம வளர்ச்சி பெற்றார்.. கலைஞரின் தலையை விலை பேசும் தகுதி பெற்றார்.. நீ உன் சிறுத்தைகளை அழைத்துவா நான் என் சிங்கங்களை அழைத்து வருகிறேன் என திருமாவிடம் வீர வசனம் பேசி மாவீரரானார்.. மாமல்லபுர சித்ரா பௌணர்மியில் அக்னியோடு வந்து .. சத்ரிய வம்சத்தின் ஆண்ட பரம்பரையானார்.. ஆனால் எப்போதாவது .. மனிதனாவார் என்று பார்த்திருந்த சமூகத்திற்கு கடைசிவரை மௌனமாகி விடைபிரிந்தார்.. ராமசாமி படையாச்சி இருந்த சமூகத்தலைவரின் அறியாசனம் .. கடைசிவரை புனிதபடாமலேயே போனது.. நமக்கு கோபமே வரவில்லை .. தவறின் மீதுநின்று தரிக்கெட்டு ஆடும் நிலை அதனால் பலனின்றி போகுமென்பதை அறிந்திடாமல் போனது வருத்தம்.. ஜெயகொண்டம் மக்கள் ஆரம்பத்தில் தூக்கிவைத்து கொன்டாடியது ஒருவித பயத்திலென்றாலும்.. பிறகு எட்டிக்காயாய் தூக்கியெறிந்தனர்.. நீண்டகாலம் மக்களிடையே பகை உணர்வை தூண்டி வென்றிட முடியாதென்பதை உணராமல் போனதில் வருத்தம்.. சின்னவரும் பெரியவரும்..இனியேனும் சாதி நிலை மறந்து அரசியல் செய்தால் நன்று .. இந்த நிலையிலும் காடுவெட்டியாருக்கு இரங்கல் சொன்ன.. திருமா உயர்ந்து நிற்கிறார் மேன்மக்களாய்.. .. குருமூர்த்தி .. ஏனிந்த ஒப்பீடு.. என எழலாம் வெளிப்படையான ஒருவித திமிர் கலந்த சாதிவெறி அது ராஜ போதையை போன்றது சற்றென்று இறக்கிவிடலாம்.. ஆனால் குருமூர்த்தி போன்றோர் .. புற்றை போன்று அரித்துவிடும் மறைமுக தாக்குதலும் .. அதற்காக நீண்ட திட்டமிடலும் .. இரு பிரிவினரிடையே நீண்ட பகையை வளர்த்து அதை கடைசிவரை நீர்த்துபோக செய்யாமல் ஊதிக்கொண்டே இருக்கும் மநுதர்மத்தின் காவலர்.. படுபயங்தரமாக மனிதகுல விரோத செயல்களை புன்னகையோடு செய்யும் படுநாசகாரர்கள்.. அதை சட்டமென்றும் அதுதான் நீதியென்றும் சொல்லி நம்மை தாழ வைத்திருக்கும் அதி புத்திசாலிகள் ஒரு சமூகம் மேம்பட வேண்டுமெனில் கல்வி தந்தால் போதும்.. ஆனால் அந்த கல்வியை ஒரு குறிப்பிட்ட வர்க்கமே கற்கவேண்டுமெனும் அநீதியை .. நீதியை கொண்டே தடுப்பவர்கள் .. தங்களை மட்டுமே தேசவிசுவாசிகளாய் எண்ணி.. மற்றவர்களை தேசவிரோதிகளை போல ..அதிலும் அதை அவர்களை கொண்டே பேசவைத்து நாடகமாடுபவர்கள்.. குருவின் சாதிவெறி புண்ணை போன்றது கீறி ..மருத்திட்டு ஆற்றிமுடியும்.. குருமூர்த்தி போன்றோரின் இன வெறி.. நம்மை கொண்டே நம் குரல்வலையை அறுத்து கொள்ள செய்யும் தந்திரம் .. படுபயங்கரமான_மனிதகுலவிரோதிகள்.. .. #குருக்கள்_சூழ்உலகு.. .. ஆலஞ்சியார்

Friday, May 25, 2018

கலைஞரெனும் பேராளுமை

#ஜூன்3.. கலைஞர் பிறந்தநாள் மிக முக்கியமான நாள்.. தமிழர் வரலாற்றில் மிக சிறந்த ஆளுமையாய்.. அரசியல் இலக்கியம் கவிதை..நாடகம் ..என பல்வேறு துறைகளில் நீக்கமற நிறைந்து பங்காற்றிய சமூகநீதியாளன் .. எதையும் தொலைநோக்கோடு கொண்ட பெரியாரின் பார்வையோடு.. பகுத்துணர்ந்து செயலாற்றிய மாமனிதர்.. அரசாள்வோரின் இலக்கணமாய்.. இந்தியாவிற்கே வழிகாட்டிய நடந்து காட்டிய மாபெரும் தலைவர்.. காலம் பல கடந்தும் இவரின் திட்டம் .. இந்தியாவிற்கே பயன்படுகிறது நவீன இந்தியாவைப் பற்றி சிந்திப்போர் முதலில் இந்த மனிதனின் அரசியலை படித்தாலே போதும்.. அரசியல்வாதியின் மூல இலக்கணம்.. .. இரு காரணிகளுக்காக மிகவும் கூர்ந்து கவனிக்கிறது நாடு.. தமிழக அரசியலில் மிக நீண்ட அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல்வேறு பதவிகளிலும் அரசியல் சமூகப்பணி கலைப்பணி, பொதுசேவைகளிலும் கட்சித்தலைமையிலும்.. என்பதாண்டு அரசியலில் அறுபதாண்டு சட்டமன்ற உறுப்பினராக தோற்கடிக்க முடியாதவராக இருக்கும் கலைஞருக்கு நன்றி கூறும் விழா.. புகழ்பாடுதல் என்பதை கடந்து ஒரு எளிய மனிதன்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சமூக அக்கறையோடு கூடிய நெடுவாழ்வில் யாரும் தொட முடியாத இதுவரை யாருமே தொட்டிராத உச்சத்தை தொட்டமைக்கு நன்றி கூறும் நல்விழா.. இந்த நாட்டை சிலர் மட்டுமே ஆண்டும் மற்றவரை அடித்தமர்த்தியும் ஏற்றதாழ்வை சொல்லி ஏமாற்றி வந்த கும்பலை வேரோடு பிடிங்கியெறிய இந்த பெருமகன் பெரியாரின் பார்வையோடு ஆற்றிய அரும்பணிக்கு #நன்றி கூறும் நல்விழா.. ஐம்பதாண்டுகாலம் தன்னை சுற்றியே அரசியலை சுழலவிட்ட ..தான் காட்டும்/பார்க்கும் திசைநோக்கி வெளிச்சத்தை பரடவிட்ட இந்த கிழட்டு சூரியனுக்கு நன்றி கூறும் நல்விழா.. .. மற்றொரு காரணியும் உண்டு இந்த விழாவின் மூலம் நாடு சிக்குண்டு தவிக்கும் தீய மதவெறிகூட்டத்திலிருந்து மீள வழிவகைசெய்யும்/ வழிகாட்டும் புதியபாதையை நோக்கிய பயணத்தின் முதல் படியாய் எப்போதும் சமூகநீதி பேசும் தமிழ் மண்ணிலிருந்து துவக்கம் குறிக்கும் விழா இது.. தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு விடியலை நாடு காத்திருக்கும் வேளையில் இந்த விழா பேருதவிபுரியும்.. தளபதி.மு.க.ஸ்டாலின் புதியதொரு பாதையை வடிவமைக்கிறார்.. நல்லதொரு முயற்சியாய் சரியான ஜனநாயக பாதையை புரிதலோடுகூடிய மக்களின் மனமறிந்து செயலாற்றும் சிறந்த வழியை பின்தொடர்கிறார்.. அது தமிழகமக்களின் நன்மதிப்பை பெறுகிறது .. தளபதி அவர்களை தமிழகம் தாண்டி தேசியளவில் எடுத்துச்செல்ல ..தளபதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் விழா இது.. .. கலைஞரைப்போல தேசிய தலைவர்களை நாடு எப்போதும் கொண்டாட வேண்டும்.. நான் வகுத்த பாதையில் .. அது எத்தகைய எதிர்ப்பை சந்தித்தாலும் .. இறுதியில் அதுவே சரியென எதிர்ப்போரும் .. பாராட்ட வைக்கிற பேராளுமையை இந்த அரசியலில் மிக மிக அரிதாகவே காணமுடியும் .. அது குறிப்பிட்ட துறை சார்ந்து மட்டுமே அந்த காலகட்டத்திற்கு மட்டுமே பொருந்துகிறவர்களாய் இருப்பர்.. ஆனால் பல்வேறு துறைகளிலும் மின்னி.. காலம்கடந்தும் அவரின் செயல்கள் பின்பற்றதக்கவையென நாடே உணர வைத்த தலைவர்கள் இல்லை அதுவும் தான் வாழும் காலங்களிலேயே அதை நிறைவேறியதை காண்பதென்பது இயற்கை தந்த அருட்கொடை.. கலைஞரின் சிறப்பு அந்த பெருமகனின் 95 வது பிறந்தநாள்.. மனமகிழ்ந்து வாழ்த்துவோம்.. வாழ்க பெருமகனே.. வாழ்த்துகள் .. ஆலஞ்சியார்

Thursday, May 24, 2018

பதவி விலகு

இந்த அரசை கலைக்கும் வரை போராட்டம் தொடரும் தளபதி.. கைது நடவடிக்கையால் அடக்கிவிட முடியாது என்னை சுட்டுக் கொன்றாலும் .. கவலையில்லை நான் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டாலும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து போராடுவார்கள்.. .. தூத்துக்குடி .. முத்து நகர் பெரும் சோகத்தில் மக்களை அடக்குமுறை கொண்டு வீழித்திவிடலாமென்ற கணக்கு பிழைத்தது.. குருதி ஆறாய் மண் சிவந்த போதிலும்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை மக்கள் போராட்டத்திலிருந்து விலகுவதில்லை என்ற நோக்கை .. பாசிச அரசு கொச்சைப் படுத்துகிறது சமுக விரோதிகள் ஊடுறுவி விட்டார்களாம் .. இந்த தமிழ் மண்ணை ஆளும் வக்கற்ற இவர்களை விட தங்களின் உயிருக்காக வருங்கால சந்ததினரின் வாழ்விற்காக உயிரை துச்சமென எண்ணி போராடு இவர்கள் .. துரோகிகளா.. மக்கள் விரும்பாத ஒரு ஆலைக்காக அந்த ஆலை அதிபரின் ஏவலாய் மனிதர்களை விலங்கினும் கீழாய் எண்ணி கொன்று குவித்துவிட்டு.. எனக்கு தெரியாமல் நடந்ததென சொல்ல வெட்கமாக இல்லையா முதல்வர் அவர்களே.. நாடு இதுவரை கண்டிராத புழுவை விட கேவலமானவராய் காட்சியளிக்கிறார்.. .. அடக்குமுறையால் .. ராணுவத்தை காட்டி மக்களை நடுங்க வைத்திடலாமென்றால் அது மிகப்பெரிய இழப்புகளை தரும் அரசாள்வோரை மட்டுமல்ல சமூதத்தையே புரட்டி போட்டுவிடும்.. இந்த நிலையிலும் பாஜகவும்,அதிமுகவும் செய்கிற சொல்கிற விளக்கங்கள் மக்களை மீண்டும் மீண்டும் கோபம் கொள்ள செய்கிறது.. குறிப்பாக பார்பனர்களும் ..பாஜகவிற்கு வெண்சாமரம் வீசும் சில நாடாரிய தலைவர்களும் (பொன்னர்,தமிழிசை) பேசுகிற செயல் வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல மக்கள் உணர்கிறார்கள். .. எடப்பாடி பதவி விலகும் வரை .. போராட்டங்கள் தொடரவேண்டும்.. நாடு கண்ட மிக அசிங்கமான முதல்வர் .. அந்த பதவிக்கு கொஞ்சமும் தகுதியற்றவர் சொல்வது செய்யும் பொம்மையை வைத்துக்கொண்டு பாஜக இயக்குகிறது இந்த அரசை கீழிறக்கவேண்டும் .. நாடே கொந்தளிக்கிறது ..அமைச்சர்கள் பூப்பெய்த விழா கொண்டாடத்தில் ..எவ்வளவு கேவலமான மனநிலை... இனி எங்குமே அமைச்சர்களும் .. பாஜக அடிவருடிகளும் நடமாட முடியாது மக்கள் கல்லெறிந்தே கொல்வர் .. அவ்வளவு விசத்தோடு இவர்கள் பேசி வருகிறார்கள்... 144 தடை உத்தரவிற்கு இருக்கும் போது ஸ்டாலின் போனது தவறாம்.. அதனால் தான் முதல்வர் போகவில்லையாம் .. சட்டத்தை மதிப்பவராம். . கூட்டமாக செல்லதானே தடை தனியாக சென்று பார்க்கலாமே.. தடை உத்தரவு அதிகாரிகளை அமைச்சர்களை கட்டுபடுத்தாதென்ற அடிப்படை அறிவுகூட இல்லாத வெல்லமண்டி வெறென்ன சொல்ல.. பயம் செல்ல பயம் மக்கள் பீ..யை அள்ளி முகத்தில் அடிப்பார்களென்ற பயம்.. .. வெருவந்த செய்தொழுகும் வெருகோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.. என்றான் வள்ளுவன் குடிமக்கள் அஞ்சும்படியான கொடுங்கோல் அரசு நிச்சயம் விரைந்து வீழுந்தழியும்.. .. ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும், எடப்பாடியே பதவி விலகு.. .. ஆலஞ்சியார்

Wednesday, May 23, 2018

கோபத்தை சேர்த்துவை

மக்கள் பாஜகவை ஆதரிக்காததே 10 பேர் பலி ஆக காரணம்.. பொன்னர்... வேறென்ன சொல்வார் இந்த ராதா கிருஷ்ணன்.. சொரணையற்ற பின்னணியிலிருந்து வந்தவரிடம் மானம் ரோசம் .. இதெல்லாம் எதிர்பார்ப்பது நமது தவறுதான்.. குமரி மக்கள் இந்த பொன்னரை பொன் என்று நம்பியது எவ்வளவு பெரிய இழுக்கை தேடி தருகிறது.. குறிப்பாக பார்பான்கள்.. சந்தோஷ மிகுதியில் ஆடுகிறார்கள்... போர் என்றாலே சாகதான் செய்வார்கள் என்றாளே பாப்பாத்தி அப்போது முகத்தை கிழித்து தோல்வியை தந்திருந்தால் இன்று .. எம் மக்கள் இத்தனை பேர் பலியாகி இருக்கமாட்டார்கள்.. இந்த பார்ப்பன கூட்டம் கொக்கரிக்கிறது.. இவர்களுக்கு அமைந்த அடிமைகள் .. அவர்களை பொம்மையாக்கி வைத்து ஆடுகிற ஆட்டம் .. ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. 1965 க்கு பிறகு துணை ராணுவத்தை கிரிஜா வைத்தி அழைத்திருக்கிறார்.. கக்கன் அமைச்சராக இருந்த போது பக்தவச்தலம் 300 மாணவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதற்கு பிறகு.. இப்போது என்ன நடக்குமோ .. சில பார்பன அடிமைகள் மக்கள் போராட்டத்தை திசை திருப்பி அவர்கள் தேவாலயத்தில் கலந்தாலோசித்தார்கள் என மத மோதலை உண்டாக்க பார்க்கிறார்கள் .. அதில் சில சாண நாய்கள் பின்னிருந்து செயல்படுகிறார்கள்.. .. திரு.ராகுல் மிக சரியாக .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்காத தமிழகத்தை கொலை களமாக மாற்ற பாஜக முயல்வதாக சொல்லியிருக்கிறார்.. அவர் கருத்தை ஒட்டியே பொன்னரின் கருத்துமிருக்கிறது.. தமிழர்களின் உணர்வுகளை நசுக்கமுடியாது.. மானமுள்ள தமிழர்கள்.. மண்டியிடுவதில்லை.. மானகெட்ட காசுக்கு பீ திங்கும்.. எடப்பாடிகளும் பொன்னர்களும் இம் மண்ணில் விரட்டபடுவார்கள் அப்போது தெரியும் மக்களின் மௌனமும் அழுகையும் சொல்லும் சேதி.. ஒரு பார்பனர் இறந்தால் தாமாக கூடி விசாரிக்க உத்தரவிடும் மநுநீதி மன்றம் .. இத்தனை பேர் சுட்டு இறந்தும் ஏன் மௌனமானது.. இது SLR-7.62 mm, assault rifle (Self Loading Rifle) இந்த துப்பாக்கியால், முட்டிக்கு கீழே சுட்டாலும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குமாம்.. இதை பயன்படுத்த யார் உத்தரவிட்டது.. குஜராத் அனில் அகர்வாலுக்காக தமிழனின் உயிரை பறிக்க யார் காரணம்.. சுட்டவன் தேவையில்லை அவன் அடிமை போலிஸ் .. உயிர் அதிகாரிகளின் காலை நக்க சொன்னால் கூட செய்வான் .. வீட்டு கக்கூஸை கூட கழுவிவிடுவான் .. .. எடப்பாடியை சும்மா வைத்துக்கொண்டு .. கிரிஜா உத்தரவுகளை பிறபிக்கிறார்.. இது மக்கள் அரசு தானா அல்லது ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா.. இனியும் இந்த மூதேவிகளை ஆட்சியில் வைத்திருக்கவேண்டுமா.. இவர்கள் பதவி விலகுவதே தமிழ்நாட்டிற்கு நல்லது.. இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் பார்பன சக்திகள் ஆட்சியை கலைக்க ஓலமிட்டிருக்கும்.. இதிலிருந்தே தெரியும் கலவரத்தை யார் தூண்டிவிடுகிறார்களென்று.. 144 தடை உத்தரவை மீறியதால் சுட்டாத சொல்லும் அரச விசுவாசிகளே.. 144 தடை உத்தரவை மீறி சென்ற ரத யாத்திரையின் போது ஏன் சுடவில்லை.. இது திட்டமிட்டது .. யார் திட்டமிட்டார்கள் எதற்காக இந்த கொலைவெறி என்பதை காலம் உணர்த்தும்.. என்ன சொன்னாலும் அரசின் செவிகளை அடையாது .. எதிர்க்கட்சிகளின் போராடதான் முடியும் .. அதுவும் முறியடிக்கபடும்,..ஒரே வழி இந்த அரசை நீக்க ஒருங்கிணைவது.. சில அறிவிவிகள் இதிலும் இன மொழி மத சாதியை கொண்டுவந்து ரத்தம் குடிக்க பார்க்கிறது .. சிலர் இதை நியாயபடுத்தி எதிர்கட்சியை திட்டுவதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.. அது அரசை ஆதரிப்பதற்கு சமம்.. ..இனி.. கோவத்தை சேமித்துவை.. ஒருநாள் இந்த அரசையும் இந்த அரசை வைத்து நம்மை கொன்று அதன் மீது நின்று கொக்கரிக்கும் பாசிசத்தையும் வேரோடு பிடிங்கியெறியும் வரை .. உன் கோபத்தை சேர்த்துவை.. இனி... எந்த காலத்திலும் தலை தூக்காத வண்ணம் புதைத்துவிடுவோம்.. இதுவரை நீறுபூத்தநெருப்பாய்.. இரு.. .. ஆலஞ்சியார்

Tuesday, May 22, 2018

தூத்துக்குடி..

குஜராத்தை சேர்ந்த அகர்வாலுக்காக தமிழகத்தை இரத்த கலவரமாக மாற்றியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ஸ்டெர்லைட் உரிமையாளர் அகர்வால் பிரதமர் மோடியின் நண்பர். ..மோடி பிரதமராகப் பதவி ஏற்ற சமயத்தில் தனிப்பட்டு அழைப்பு விடுத்த ஒரு சிலரில் இந்த அகர்வாலும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.. .. மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் இது எந்த அரசியல்கட்சிகளையும் நம்பாமல் .. கட்சிகளை பின்துணையோடு போராடினால் அரசியல் சாயம் பூசிவிடுவார்களென மக்களே ஒருங்கிணைந்து போராடினார்கள்.. லட்சத்திற்கும் அதிகமானோர் கூடிய போராட்டத்தில் .. மாடுகளை அவிழித்துவிட்டது யார்..? கலெக்டர் ஆபிஸ் உள்ளே யாரையும் அனுமதிக்காத போது அங்கே தீ மூட்டியது யார்.. போலீஸ் ஜீப்பை காவலர்களே கொளுத்திவிட்டு துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வாங்கியதாக செய்திகள் வருகின்றன.. அதெப்படி ..போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் கொல்லபட்டிருக்கிறார்கள்.. இந்த போராட்டத்தை ஒடுக்க எங்கிருந்து உத்தரவு வந்தது.. யாரை குஷிபடுத்த இந்த நாசகார செயலை கேடுகெட்ட எடப்பாடி அரசு செய்தது.. மக்களின் உயிரை கொன்று அந்த குருதியை எடுத்து யாருக்கு அபிஷேகம் செய்கிறது இந்த கேவலமான எடப்பாடி அரசு.. தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து போலீஸ் அராஜகம்.. தமிழகத்தை காஷ்மீராக்க முயற்சிக்கிறதா..இந்த பாசிச அரசு.. .. ஊடகங்களுக்கு வாய்பூட்டு போட்டு மக்கள் மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கிறது தமிழக அரசு. இந்த கையாலாகாத அரசால் எந்த உத்தரவையும் போட முடியாதென்று நாம் அறிவோம் .. பிறகு இந்த அரசை இயக்குகிறார்களோ அவர்களே இந்த துப்பாக்கி சூட்டிற்கு மூலக்காரணம்.. போராட்டத்தை சிதறடிக்க கொல்வதுதான் முடிவென்று செயல்பட்டிருக்கிறார்கள்.. இந்த அநீதிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .. மக்களை பலி கொடுத்து ..இந்த ஆலை வேண்டுமா என அரசு முடிவெடுக்கவேண்டும் புரட்சிகர முன்னணி இயக்க தோழர்கள் தமிழரசன், சண்முகம், வினிதா, தங்கையா, கிளாட்சன், ஜெயராமன் என்று 6 பேர் அதிமுக அரசின் ஆணைப்படி போலீசால் படுகொலை. ஒரே இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை திட்டமிட்டு கொன்றதை பற்றி எந்த ஊடகமும் வாய் திறக்காது.. போலீஸுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வெனிஸ்டா என்ற 17 வயது பள்ளி மாணவியின் வாயிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றசெயல் கொடுமையிலும் கொடுமை.. இது திட்டமிட்ட துப்பாக்கி சூடு.. .. அடிமைகளை வைத்து அடிமைகளுக்கு தெரியாமல் கொலைவெறி தாக்குதலை துப்பாக்கி சூட்டை அரங்கேற்றியது யார்..? துப்பாக்கி சூடு நடந்தது தனக்கு தெரியாதென்கிறார் எடப்பாடி .. தவிர்க்கமுடியவில்லையென்கிறார்.. ஜெயகுமார்.. போராட்டம் கலவரமாக மாறினால் துப்பாக்கி சூடு நடக்குமென்கிறான் எச்சை.. இனியும் இந்த அரசை கலைக்காமல் இருப்பது மக்களுக்கு செய்கிற துரோகம்... எந்த வழியிலாவது அது அறநெறி தவறியசெயலென்றாலும் .. மக்களுக்காக இதை செய்தே தீரவேண்டும்.. கசப்பான மருத்தை உண்பதில்லையா .. கொடிய நோயை விரட்ட ... எதை செய்தாவது .. கேடுகெட்ட துரோகி எட்ப்பாடியை ஆட்சியிலிருந்து விரட்டவேண்டும்.. மக்களை கொல்லும் அரசு தேவையில்லை.. இனியும் பொறுப்பதென்பது நேர்மை நீதி பேசுவதென்பது .. பயனற்ற செயல் .. திமுக உணரவேண்டும்... .. The state of Tamil Nadu must be dissolved.. தமிழக அரசு கலைக்கபடவேண்டும்.. .. ஆலஞ்சியார்

Monday, May 21, 2018

மக்கள் விரோத அரசு

தமிழக அரசு 800 பள்ளிகளை மூட முயற்சி.. ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அடிப்படை உரிமை அதுவும் ஆரம்பகல்வி கட்டாயமாக இலவசமாக வழங்கவேண்டும் ஆனால் 10 க்கும் குறைவான குழந்தைகள் வருகிறார்களென காரணம் காட்டி 1500 பள்ளிகளை மூட தீர்மானித்து முதல்கட்டமாக 800 பள்ளிகளை மூடுவதென இந்த அதிமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. .. 6000 பள்ளிகளை மூடிய பார்பனன் ராஜாஜியின் செயலை ஒத்ததாக இருக்கிறது.. குறைவாக வருகை பதிவேடெனில் குழந்தைகள் சேர்க்க முயற்சிக்கவேண்டும் தனியார் பள்ளிகளை அதிக எண்ணிக்கையில் அனுமதி வழங்கி LKG க்கு கூட ஆயிரங்கணக்கில் கொள்ளையடிக்க மறைமுகமாக ஆதரவை தந்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை இல்லை மூடுவோம் என்பது கயமைத்தனம்.. உடனடியாக பள்ளிகளை மூடும் செயலை நிறுத்தவேண்டும் .. ஏழை குழந்தைகளின் கல்வி கனவை சிதைக்கும் இந்த செயலை அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் கடுமையாக எதிர்க்கவேண்டும். .. குறிப்பாக ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களின் உயர்கல்வி (மருத்துவம் உள்ளிட்ட) கனவை சிதைத்து அவர்களுக்கு எட்டாகனியாக்கியதைப் போல .. அடிப்படை கல்வியை கூட தடுத்து நிறுத்தும் செயலின் பின்னில் யார் .. எந்த சக்தி இருக்கிறதென இனங்காண வேண்டும்... ************************************* .. யார் கேட்பது.. பெட்ரோல் விலை 80 தாண்டி செல்கிறது .. அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் எரிப்பொருளின் விலையில் அரசு இவ்வளவு கொள்ளையடிக்கலாமா.. வளரும் நாடுகளில் அடிப்படை வசதிகள் இல்லாத ஏழைநாடுகளில் கூட.. பாகிஸ்தான் இலங்கை நம்மிடமிரிந்து இறக்குமதி செய்யும் நேபாளத்தில் கூட இவ்வளவு விலை உயர்வு இல்லை.. வரி உட்பட ₹50 தாண்டாத போது மீதி யாருக்கு போகிறது..? ஒரு சில எண்ணை நிறுவனங்களுக்காக .. ஒட்டுமொத்த மக்களை சுரண்டுவது அநியாயம்.. காங் கம்யூ...திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து போராடவேண்டும்.. $ 120 டாலர் வரை பேரல் விற்றபோது ₹70 க்கு காங்கிரஸ் தந்தது ..$68 விற்கும் போது ₹84 ..பெட்ரோல் விற்கபடுவது பகல் கொள்ளை.. .. நாங்கள் ஆட்சிக்குவந்தால் ₹40 பெட்ரோலை தருவோமென சொன்ன மோடி ..இப்போது வாயை திறப்பதில்லை .. இதோ ..இப்போது ஆட்சியாளர் பணி தேர்வை நேரடியாக தேர்விலிருந்து மாற்றி 10 பேர் கொண்ட குழுவிடம் தர பிரதமர் அலுவலகம் முயலுவதாக அது .. தலித் மற்றும் பிற்படுத்தபட்டவர்கள் IAS ஆகவதை தடுக்க முயலும் முயற்சி என தளபதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.. .. கல்வியில் வர்ணத்தை புகுத்தும்.. ஏழைகளுக்கு கல்வியை .. உயர்வை தடுக்கும் பாசிச மத்திய அரசும்.. அதன் ஒத்தூதலாய் செயல்படும் மாநில அரசும் விரட்டபடவேண்டியவை.. .. மீட்டெடுப்போம்.. .. ஆலஞ்சியார்

Sunday, May 20, 2018

ஈழமெனும் ...

இனவாதமும் மதவாதமும் .. திருச்சி விமான நிலையத்தில் வைகோவிற்கெதிராக நாம் தமிழர் பாய்ஸ் கலாட்டா செய்ய மதிமுகவினர் தாக்க தொடங்கினர்.. சீமானின் தம்பிகள் தலைத்தெறிக்க ஓடதொடங்கினர் .. இது திட்டமிட்ட செய்யபடுவது.. சீமானின் ஈழம் பல்லிளிக்க தொடங்கியதும் ...சீமான் இதுவரை சொல்லிவந்த பொய்களை திரு.வைகோ ஒவ்வொன்றாக வெளியிட்டு சீமானின் சில்லறைத்தனத்தை போட்டுடைத்தவுடன் .. எங்கே முழுவதுமாக புறக்கணிக்கபடுவோமே என்று இதுபோன்ற தாக்குதலை தூண்டிவிடுகிறார்.. .. வைகோவை தெலுங்கர் வந்தேறி என கதைக்க தொடங்கும் போது அவர்களின் நோக்கம் நமக்கு புரிகிறது .. பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து வந்து ..திராவிட அரசியலில் உழன்று .. தமிழ் மீது தமிழர் மீது தீராத காதல் கொண்டவர் .. தன்னை தமிழனாகவே அடையாளம் காட்டிக்கொண்டவர் .. இன்றைக்கு ஈழத்தை வைத்து வியாபாரம் செய்து வயிற்றுப்பிழைப்பு நடத்துவோர் மத்தியில் .. நீண்டகாலமாக ஈழத்தின் .. ஈழவிடுதலையின் தமிழக முகமாகவே இருந்தவர்.. அதற்காக தான் வளர்ந்த சூழலை மறந்து தன்னை வளர்த்த திமுக ஆட்சிக்குவந்த சில நாட்களிலேயே .. அதற்கு மத்திய அரசின் அழுத்தம் வருமென தெரிந்திருந்தும் .. ஈழ பயணத்தை மேற்கொண்டவர் .. ஈழத்தலைவர் பிரபாகரனோடு தோளின் மீது கையை போட்டும் பேசும் அதிகாரம் கொண்டவர் .. ஈழ விடயமாக மற்றவர்களை விட அதிகம் அறிந்தவர்.. கடைசிக்கட்ட போரின் போது .. ப.சிதம்பரம் நேரடியாகவே ஈழத்தலைமை பிரபாகரனோடு பேசி போரை நிறுத்துங்கள் .. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு முடிவுக்கு வரலாமென்ற போது .. வைகோவிடம் கேட்டுவிட்டு பதலிளிக்கிறேன் என்றுதான் சொன்னாரே ..தவிர.. இந்த சில்லறைகளையெல்லாம் கணக்கிலேயே கொள்ளவில்லை.. அன்று வைகோ எடுத்த முடிவு தவறானது வேறுவிடயம்.. வாஜ்பாய் வந்துவிடுவாரென தவறான கணக்கு பிழைத்தது.. இந்தியாவிடனான எந்தவொரு விடயமானாலும் வைகோவிடம் யோசனை கேட்காமல் எல்டிடிஈ இருந்ததில்லை.. அத்தகைய மனிதரைதான் தமிழன விரோதி போல சித்தரிக்க முயலும் சீமானின் பின்னால் இருக்கும் திட்டம் தெரிகிறது.. .. யார் இவர்கள் ..மக்களிடம் செல்வாக்கில்வாதவர்கள் ஊடக வெளிச்சத்திற்காக திரும்ப திரும்ப கதைப்பதும் ..பொதுமேடைகளில் கத்துவதும் இவர்களை பிரபலமாக்குகிறது.. திராவிட கட்சிகளின் செயல்பாட்டால் காலூன்ற முடியாமல் தவிக்கும் ஆரிய கும்பல் .. தங்கள் ஊடகத்தை வைத்து இவர்களை முன்னிருத்துகிறதே தவிர .. யாரும் இவர்களை சட்டைசெய்வதில்லை.. மொழிஇனம் மத வேசம் கட்டுகிறார்கள் ..முஸ்லிம்களை தமிழர்கள் இல்லையென்பதும் எதிர்ப்பு பலமானதும் உரூது முஸ்லிம்களென மாற்றிக்கொள்வதும்.. கலைஞரை வடுக வந்தேறியென்பதும் சின்னமேளம் பிரிவினர் தமிழ்மரபினர் என்ற ஆதாரத்தை தந்ததும் பம்முவதும்... மதத்தை சாதி உணர்வை தூண்டுவதும் ..இதெல்லாம் பார்பனர்களுக்காக இவர் செய்கிறார்களென்பதும் ..பாவம் இவர் பின்னால் நிற்கும் விடலைகளுக்கு தெரியாது.. விவர போதாமை.. .. திமுகவினர் ஈழமக்களுக்காக வழங்கிய உதவிகள் .. என்பதுகளின் இறுதியில் அகதிகளாய் கீழிதஞ்சை மாவட்டங்களில் வந்தபோது.. உறுதுணையாக இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை .. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலர் கோ.சி.மணி அவர்கள் எல்லா கிளைக்கழகத்தினருக்கும் உதவி செய்ய உத்தரவிட்ட போது எங்கிருந்தார்.. அடையாற்றியில் பிரபா தங்கியிருந்தபோது அவர் மீது எம்ஜிஆர் அரசு தொடர்ந்த வழக்கை எதிரித்து வாதாடியது திமுக வழக்கறிஞர் அணி.. ராதா கிருஷ்ணன் தலைமையில் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிறைந்து நின்றதெல்லாம் .. இன்றைக்கு ஈழம்பேசுவோருக்கு தெரியவாய்ப்பில்லை.. .. ராஜீவ் படுகொலை வழக்கில் நளினிக்காக யாருமே வாதாட முன்வராதபோது தி.க.துரைசாமியை அனுப்பிவைத்தவர் கலைஞர்.. 89 ல் பத்மநாபாவை கொலை செய்த போது .. தமிழக காவல்துறையால் பிடிக்கபட்ட ஈழத்தலைவரை கலைஞரின் கருணை தான் தப்பிக்க வைத்தது .. இல்லையேல் இந்திய சிறைகளிலேயே ஈழகனவு சிதைந்து போயிருக்கும்..இதெல்லாம் இன்றைய தம்பிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. .. இப்படி நிறைய .. ஈழத்திற்காக திராவிட இயக்கம் செய்த தியாகங்களும் இழப்புகளும் .. அரசை அதிகாரத்தை கூட இழந்தது .. இனியும் இவர்களின் பொய் பிரச்சாரத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டால் இவர்கள் தான் ஈழத்தையே மீட்க போராடினார்களென ஆமைகதைகளை தொடர்வார்கள்... .. திருச்சி சம்பவம் தொடக்கம் தான்.. #எச்சரிக்கை .. ஆலஞ்சியார்

Saturday, May 19, 2018

சனநாயகம் வென்றது

சனநாயகம்.. போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது.. காட்டுமிராண்டிகள் கையில் நாடு சிக்கி சீரழியும் நிலையிலும் தென்னகம்.. இந்த திராவிட நாடு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது.. உண்மையில் ஒரு ராயல் சல்யூட்.. 221 சட்டமன்ற உறுப்பினரும் சபைக்கு வந்ததும் விலைபோக மனநில்லாமல் கொஞ்சம் நேர்மையாய் நடந்துக்கொண்டதும் மகிழ்ச்சியை தருகிறது.. சுயமரியாதையை கற்பித்த தமிழ் மண் .. இன்று நல்ல பாடத்தை கருநாடகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். மானத்தை அடகுவைத்து பதவிக்காக விலைபோகாமல் உரத்துநின்றார்கள் பாருங்கள் அதை தமிழக அதிமுக அடிமைகள் உணரவேண்டும்.. ₹150 கோடி அமைச்சர்பதவி தருவதாக சொல்லியும் அசைய மறுத்தவர்கள்.. அதிமுகஅடிமைகளுக்கு ₹10 கோடிக்கே நாக்கை தொங்கபோட்டு அலைவார்கள்.. மோடியின் காலை நக்கிப்பிழைப்பவர்கள்.. சுயமரியாதை என்னவென்று இதையெல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.. அதிமுகவின் அடிமைகளே.. .. மிக தெளிவாக காய் நகர்த்தினால் சனநாயகமும் சட்டமும் வகுத்து தந்த நெறிமுறைகளிலிருந்து மாறாமல் நின்று எதிர்த்தால் இந்த பாசிச பழைமையை காட்டுமிராண்டிகளை விரட்டிவிடலாமென்று உணர்த்தியிருக்கிறது.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதை உணர வேண்டும்..மிக சாதூர்யமாக நம்மில் பிரிவை.. பேதத்தை உண்டாக்கி சாதிவெறியர்களாய் நிற்கவைத்து ..வெறியேற்றி வெறியேற்றி நம்மை குலைக்கவைத்து.. ஏதோ தேசபிமானிகள் போல வேடமணிந்து நம்மை கடித்து குதறும் ஓநாய்களாய் பாசிச ஆரியகும்பல் நிற்கிறது.. தொடர்ந்து நம் உரிமைகளை பறித்து.. உயர்பதவிகள் ஆக்ரமித்து.. நீதிபரிபாலசபை வரை தன் கோரபற்களை நீட்டி எல்லா நன்மைகளையும் நலன்களையும் குறிப்பிட்ட மூன்று விழுக்காட்டிற்கு கொண்டு சேர்க்கும் ஒரு குறிகோளோடு ஆர்எஸ்எஸ் இயங்குகிறது அதன் சொற்படி ஆடும் அடிமைகளை ..அதிகாரிகளாக்கி நினைத்ததை சாதிக்க நினைக்கும் ..ஆனால் அதற்கு தென்னகம் பேரிடைஞ்சலையாய் இருக்கிறது.. .. இன்றைய தினம் இந்திய சனநாயகம் மீண்டும் எழுந்தது.. மூர்ச்சையாகி கிடந்த நிலையிலிருந்து .. மறுத்தெழுந்தது.. உச்சநீதிமன்றம் இந்த விடயத்தில் நேர்மையாக செயல்பட்டது .. சபாநாயகரை நம்பாமல் சட்டமன்ற அதிகாரிகள் கணக்கெடுக்கவேண்டுமென்றும்.. நேரலையென்றும் உத்தரவிட .. 200 மேற்பட்ட கேமெராக்கள் .. வேறுவழியின்றி .. ஓடிப்போனார்.. தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் தேசபக்தகட்சியினர் வெளியேறினர்.. .. கர்நாடகம் உணர்த்தும் செய்தி .. ஒன்றுபடு.. இல்லையேல் இரத்தவெறிக்கொண்டு அலையும் பாஜகவிடம் சிக்கி சின்னாபின்னமாக வேண்டிவரும் .. நாட்டை சூறையாடிவிடுவார்கள்.. எதற்கும் அஞ்சாத கயமைகுணம் கொண்டவர்களிடமிருந்து .. தென்னத்து நுழைவுவாயில் அடைக்கபட்டது .. Grand entry என்ற பலே அடிமை பன்னீரின் ஆசை நிராசையானது.. கர்நாடகம் தப்பித்தது .. இனி இந்திய தேசம் .. .. ஆலஞ்சியார்

Friday, May 18, 2018

சனநாயகம்

India Today.. கர்நாடகவில் மிரட்டல்,கடத்தல், ஊழல்.. மாஃபியா ...இது போன்ற அரசியல்தான் நடைபெற்று வருவதாக தற்போது செய்தி வெளியிட்டிருக்கிறது பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங் பாஜகவால் கடத்தபட்டு டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. பாஜக வின் எம் எல் ஏ ராமூலு எம்எல்ஏக்கள் நாளை நடைபெறும் மெஜாரிட்டி நிருபிக்கும் சட்ட மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கவேண்டுமென பகிரங்கமாக எச்சரிக்கிறார்.. வெளிப்படையாகவே மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது ஆஷிபாவை எட்டுநாள் கோயிலில் வைத்து கற்பழித்தது தெரியுமில்லே என காங் ,ஜனதாதள எம்எல்ஏக்கள் மிரட்டபடுவதாக அதிர்ச்சியூட்டும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தொடங்கியிருக்கிறது.. இது ஒரு வெளிப்படையான மிரட்டல் .. மற்றவர்களுக்கு தரப்படும் எச்சரிக்கை.. பாஜகவால் இந்திய அரசியல் மேன்மையை முழுவதுமாக சீரழித்து விட்டது குறைந்தபட்ச நியாயம் தர்மங்கள் கூட கடைப்பிடிக்கபடுவதில்லை அதிகார போதையில் என்ன செய்கிறோமென தெரிந்தும் அந்தளவு கீழே செல்கிறார்கள்.. சனநாயகம் மிக ஆபத்தான காலத்தின் அருகில் நிற்கிறது இந்திய ஜனநாயகத்தின் குரல் வலை முழுவதும் நெறிக்கும் பட்டு விட்டது. இந்தியா எனும் தேசம் உலகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்கியது இப்போது இந்த கயவர்களால் வெட்கி தலைகுனிவை சந்திக்கிறது.. .. நாளை எதுவும் நடக்கலாம் .. ரகசிய வாக்கெடுப்பை ஏற்காத உச்ச நீதிவான்கள்.. கையை உயர்த்தி ஆதரவை எதிர்ப்பு/ஆதரவு தரவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள்.. பாஜக வழக்கறிஞர் முகில் ரோஹகத்கி .. காங்.ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என்பதிலிருந்தே இவர்கள் சதி நமக்கு புரியும்.. வெளிப்படையான மரபுகள் மீறபடும்.. ஆட்சி அதிகார போதையில் எல்லைமீறிய செயல்கள் அரங்கேற்றபடலாம்.. நாளைய நிகழ்வு அது எந்த நிலைபாடாக இருந்தாலும் .. அனைத்து அட்டூழியங்கள் செய்து வெற்றிபெற்றாலும் அறநெறியோடு எடியூரப்பாவை தோற்கடித்தாலும் .. நிச்சயம் சரித்திரத்தில் நிச்சயம் இடம்.. .. நேர்மையான அரசியலை செய்து ஆட்சிக்குவர எந்தகாலத்திலும் விரும்பாத இயக்கம் ஆர்எஸ்எஸ் .. அனைத்து உயர்பதவிகளும் ஊடுறுவி உள்ள ஆர்எஸ்எஸ் .. இந்திய ஜனநாயக மாண்புகளின் குரல்வலையை கடித்து குதறுகிறது .. உச்சபட்ச நீதிபீடம் முதல் அனைத்தும் சொல்பேச்சை கேட்க வைத்திருக்கிறது.. பாஜகவின் அத்துமீறல்களும் அடாவடிகளும் ..மிரட்டல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியவைத்தல் .. மீறுகிறவர்களை .. எதிர்பாளர்களை முற்போக்கு பேசுவோரை கொலை செய்தல் .. அடிபணிய மறுத்தல் வருமானவரித்துறை காவல்த்துறை மூலம் மிரட்டல் என ஆடுகிற பேயாட்டம் மக்களிடத்தில் பெரும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.. இவர்களின் செயல்கள் மாபெரும் மக்கள் புரட்சியை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்கிறது . .. சனநாயகத்தின் சுவாசத்தை நிறுத்த முயலும் இந்த பாசிசவாதிகளை ..இந்திய அரசியல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் நாளே உண்மையான விடுதலை நாள்.. ..நாளை ஒருவேளை தோற்க்கலாம் .. ஆனால் பாசிசத்தின் கொடூர பற்கள் நம்மை கடித்து குதறிக்கொண்டே இருக்கும்.. அதன்பற்களை பிடிங்கியெறி வேண்டும்.. அதன் தொடக்கமாக நாளை பெங்களுரூ விதான்சபா..இருக்கட்டும்.. .. சனநாயகம் .. ஆலஞ்சியார்

Wednesday, May 16, 2018

பாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு.. .. நீண்ட நாட்களாக பேசபடும் விடயம் இது எனினும் எந்த அமைப்பினரும் இது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கென்று இருந்து விட்டார்களா அல்லது .. நோக்கமே அதுதானே என்று மௌனிக்கிறார்களா.. இஸ்லாமியர்களிடையே பிரிவை ஏற்படுத்தினால் அது யாருக்கு பலன் சேர்க்குமென அறிந்திராத மழலைகளா இவர்கள்.. இல்லை இவர்களுக்கு வழங்கபட்ட Assignment வேலையே அதுதானா.. .. ஆர்எஸ்எஸ் மிக அருமையாக யாரை எப்படி பயன்படுத்தினால் வாக்குகள் சிதறுமென அறிந்து அவர்களின் திட்டங்களை செயல்களை கடுமையாக எதிர்ப்பார்கள் அப்போதுதான் .. அந்த சமூகத்தின் இளந்தாரிகள் ஒருவித மோகத்தோடு சிந்தனை திறனின்றி அவர்களோடு கைகோர்த்து தனித்து களம்காண்பர் .. அது இயற்கையாகவே பலனை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட கட்சிக்கு அல்லது அவர்களை ஆதரிக்கும் கட்சிக்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் நடுநிலைவாதிகளென சொல்லி திரிபவரின் கட்சிக்கு பலன் சேர்க்கும்.. .. வாக்கு அரசியலே வேண்டாமா அல்லது நாம் ஏன் தொடர்ந்து ஒரு கட்சியை ஆதரிக்கவேண்டும் அவர்களால் நமது தேவைகள் சமூகத்திற்கு பலனை பெற முடியவில்லையே.. நமது பலத்தை காட்டினால் தான் நமக்குரிய பங்கை உரிமையை பெற முடியுமென மூளைசலவை செய்கிறார்கள்.. யார் வந்தாலும் நமக்கான உரிமையை அவ்வளவுமிகவும் சீக்கிரம் பெற முடியாது .. அதேவேளை நமக்கானதை பெற தடுத்து நிறுத்த முடியாது.. இஸ்லாமிய இயக்கங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்ற வழிவகை செய்யவேண்டும் .. பொது சமூகத்தோடு கல்வி வேலைவாய்ப்பில் போட்டிநிலையை உருவாக்க வேண்டும் நமக்கான இடத்தில் நம் சமுதாயமக்கள் பயன்பெறாமல் காலியாக எத்தனை இடங்கள் இருக்கிறது தெரியுமா.. அதை கண்டறிந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம் .. .. தேர்தல் அரசியல் நமக்கானதை பெற ஏன் பிறரை நம்பி செயல்படவேண்டும் நமது உழைப்பு விழலுக்கு இரைத்த நீராக போகிறதே என்போருக்கு.. ஒருவகையில் இஸ்லாமியர்களின் வாக்குகளால் தொடர்ந்து காங் திமுக போன்ற கட்சிகள் பயனடைந்தன .. அதேவேளை இன்றைக்கு இஸ்லாமிய சமூக அடைந்த உரிமைகளில் பலவற்றை அந்த கூட்டணியால் தான் சாத்தியமாயிற்று ஆனாலும் அது போதாமையை தருவதை மறுப்பதற்கில்லை.. அது மிகப்பெரிய பாதுகாப்பை தந்ததையும் மறுக்கமுடியாது ஆனால் சமூகத்தின் வாக்குகள் .. பிரிக்கபட்டு வேறு வழிகளில் செல்வதால் அது வீணாய் போவதோடு .. இஸ்லாமியர்களை பிரதான பகையாய் கருதுகிறவர்களுக்கு பயனை தருகிறது.. .. உ.பி யில் உவைஸியின் கைங்கரியத்தால் பாஜக வெற்றியை எளிதாக்கிய இடங்கள் 19.. சில இடங்களில் சமாஜ்வாடியின் வெற்றிக்கு நெருக்கடியை தந்தது.. அதேபோல இப்போது கருநாடகாவில் sdpi செய்த புண்ணியத்தில் சில தொகுதிகளை காங்கிரஸ் இழந்தது.. சில இடங்களில் தேவகவுடா ஜனதா கட்சிக்கு இழப்பை உவைசி கட்சியும் sdpi ம் தந்திருக்கிறது பாஜக வெற்றிபெற வசதியாக இஸ்லாமிய இயக்கங்கள் செயல்படுவது வெளிப்படையாக தெரிந்தும் அது குறித்து அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் நோக்கம் இஸ்லாமியர்களிடையே தங்களுக்கு ஆதரவிருப்பதை காட்டிக்கொள்ளவேண்டும் அதை வைத்து வசூல் வேட்டை நடத்தலாம் அவ்வளவுதான்.. ஆரிய கைகூலிகள் என்றழைத்தால் அது கொஞ்சம் சங்கடமாக தெரியும்.. முஸ்லிம்களை காட்டிகொடுப்பவர்கள் என்றழைக்கலாம் அது அவ்வளவு ரசகரமாக இல்லை .. ஆனால் ரோஜாப்பூ கொடுத்து பாஜக B அணி என அழைக்கலாம் .. இவர்களை ..இந்த இயக்கங்களை சொல்கிறேன் .. இஸ்லாமியர்களின் மேம்பாடெல்லாம் இது போன்ற இயக்கங்களின் செயல்பாட்டால் சாய்ந்துபோகிறது.. ஒற்றுமையெனும் கயிறை பலமாக பிடித்துங்களென என வேதம் சொல்கிறது.. இவர்களோ .. கயிறை அறுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் .. ஓரணியில் இணையாதவரை.. பாசிசத்திற்கெதிரானவர்களை ஆதரித்து நிற்காதவரை இனியும் நிறைய இழப்பை தருவார்கள்.. இவர்கள் நோக்கம் பாஜக ஆட்சி அமைக்க வழியமைப்பது .. #இஸ்லாமியசமுதாயத்திற்குமட்டுமல்ல_பொதுசமூகத்திற்கும் கேடுவிளைக்கும் கொடியவர்கள்.. .. ஆலஞ்சியார்