Monday, June 28, 2021

பெட்ரோல் விலை ₹100 தொட்டுவிட்டது முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யபோகிறார் வானதி சீனிவாசன் .. உண்மையில் வெட்கமே இல்லையா அறிவில்லை என்பது தெரியும் அடிமுட்டாள்கள் கூட விலையேற்றம் மோடி அரசின் பகல்கொள்ளை என அறிவார்கள் ஆனால் அதையெல்லாம் மறந்து இவரும் அறிக்கை தருகிறார் ..
வழக்கம் போல் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காரணம் என சொல்லி பார்த்தார்கள் .. எடுபடவில்லை .. இவர்கள் பேச்சை மக்கள் கேட்பதில்லை 
..
நீட் தேர்விற்கெதிராக அமைக்கபட்ட குழுவை கலைக்க வேண்டுமாம் .. உயர்நீதிமன்றத்தில் இடைசாதிகாரனை கொண்டு வழக்கு போடுவார்கள் .. சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் சொல்வோமென பட்டியலினத்தவரை கொண்டு பூச்சாண்டி காட்டுவார்கள் பின்னில் யார்உண்டென்பதை அறிவோம் .. ஒன்றிய அரசென அழைக்க கூடாதென ஆளுநருக்கு கடிதமெழுத கிருஷ்ணசாமிகள் கிடைப்பார்கள் .. காலில் செருப்பணிய மாட்டேன் என பார்த்தாலே தீட்டானவனை கொண்டு சொல்லவைப்பார்கள் .. செருப்பணிந்து தெருவில் நடக்ககூடாதென்ற அதிகாரதிமிரை ஆணவபோக்கை உடைத்தெறிந்த தமிழகத்தில் அவர்களை கொண்டே பேச செயல்பட வைப்பதென்பதில் இருக்கிறது அவர்களின் தந்திரம்..
..
நீட் தேர்விற்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜகவை இதுவரை அதிமுக கண்டிக்கவில்லையே .. ஏன் இன்னும் என்ன பயம் .. இனி காப்பாற்ற முடியாது .. தடுப்பணைகள் உடைந்ததைப்போல அவர்களால் உங்களை காப்பாற்ற முடியாது தடுப்பணை ஊழல் வருகிறது இனி ஒவ்வொருவராக சிறை செல்ல வேண்டி வரும் .. ஜெயலலிதாவை காப்பாற்றியதை போல எடப்பாடி பன்னீர் வகையறாவை பாஜக காப்பாற்றாது .. அதற்கெல்லாம் நூல் பந்தம் வேண்டும் .. ராகவனைப்போல உடன் பறந்து தடுப்பாட்டம் ஆட முடியாது .. கடைசியில் களி தின்னவேண்டும் 
பகிரங்கமாக பொதுவெளியில் அதிமுக நீட் தேர்வை ஆதரிப்பதாக கூறவேண்டும் ..பாஜக தன்நிலைபாட்டை அறிவித்ததைப்போல அதிமுகவும் ஆதரித்து பேசட்டும் .. 
..
+2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்த்தால் "சாதாரணமானவர்கள்" மருத்துவராகிவிடுவார்கள் என்கிறார் கரு.நாகராஜன்
சாதாரணமானவர்கள் மருத்துவர் ஆக கூடாதென்கிறாரா.. அல்லது பழையபடி சமஸ்கிருதம் படித்தவன் அறிவாளி என்கிற நிலையை கொண்டுவரவேண்டும் என்கிறாரா.. சாதாரணமானவர்கள் தான் இவர்கள் கூட இருக்கும் ராமதாஸும் கிருஷ்ணசாமியும் ..  இருவரும் பொய் பித்தலாட்டம் செய்தாலும் மத சாதிவெறியர்களாக இருப்பதால் சரி என்கிறாரா.. மிக சாதாரணமானவர்கள் படிக்கதான் தமிழ்நாடு மருத்துவகல்லூரிகளை மாவட்டம்தோறும் கட்டியிருக்கிறது அதில் படித்தவர்கள் தான் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் பணிபுரிகிறார்கள் .. இந்தியாவிலேயே தமிழகம் தான் மருத்துவதுறையில் சாதனை படைத்திருக்கிறது இவை இவர் சொல்லும் சாதாரணமானவர்கள் சாதித்தது ..
..
எதிர்கட்சியாக கூட இருக்க தகுதியில்லாத கட்சிகள் பாஜக அதிமுக.. 
மக்கள் விரோதிகள் .. சுயநலபேய்கள் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் கேடு..
..
ஆலஞ்சியார்

Saturday, June 26, 2021

எடப்பாடி முதல்வராக இருக்கமட்டுமல்ல எதிர்க்கட்சி தலைராகவும் இருக்க தகுதியில்லாதவர் .. ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் வாக்குறுதி என்னானதென கேள்வி எழுப்பி வழக்கம் போல் தானொரு முட்டாளென்பதை சபையிலேயே நிரூபித்துக்கொண்டார் .. நீட் தேர்வு தடை என்னானது என கேள்வி எழுப்பி ஜெயலலிதா இருந்த போது அனுமதிக்காத நீட் தேர்வை எடப்பாடி பழநிசாமி தான் கொண்டுவந்தாரென சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சு பேசிய போது அசடு வழிந்தது ..
..
அவசரமாய் என்னானது என கேட்க 
ஊழல்தடுப்பு துறை டிஜிபி கந்தசாமி  முதல்வரோடு ஒருமணிநேரம் கலந்தாய்வு செய்தாரென செய்தி அதிமுக அமைச்சர்கள் உதவியாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது ..
முதல்வர் மிக தெளிவாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார் அவசரம் காட்டுவதில்லை மிக தெளிவாக அதே நேரம் பிடி பலமாக இருக்கிறது .. அதிமுகவை மெல்ல சிதைக்க வேண்டிருப்பதின் அவசியம் உணர்ந்து அது பாசிச பாஜகவிற்கு பலனளிக்காமல் இருக்கவேண்டும் என்ற நோக்கோடு செயல்படுவது தெரிகிறது ..  கோவை பகுதியின் அதிமுகவினர் திமுகவை நோக்கி வருவதும் அதேவேளை திமுகவில் செயல்படாத மேனி அலுங்காமல் செயல்படுவோரை கலையவும் திட்டம் தீட்டி திமுக வரும்காலங்களில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய ஒன்றியத்தில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்க முயற்சியெடுக்கிறார்
..
ஒன்றிய அரசு என அழைப்பது கூடாதென சேக்கிழார் எழுதிய கம்பராயணத்தை படித்த அண்ணாவிற்கு பிறகு அதிக நூல்கள் படித்த கடைசியாக படித்த நூல் எதுவென்றால் அது.. அதுவந்து.. என முழிக்கும் எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியல் அமைப்பு என்ன சொல்லியிருக்கிறதென அறிந்தவர்களிடம் கேட்டறிந்து பேசவேண்டும் .. நீங்கள் முதல்வராய் தொடர அனுமதித்தது நீட் போன்று தாங்கள் நினைப்பதை தடையேதுமின்றி நடத்திட ஒரு அடிமை தேவை என்பதால் அதிலும் கொள்ளையடித்து ஊழல் செய்து சிக்கி கொண்ட எலி  என்பதால், தலையாட்டி  பொம்மையை போல ஆட்டுவைத்தால் ஆடும் என்பதால் வைத்திருந்தார்கள் இல்லையென்றால் நோட்டாவை தாண்ட முடியாதவர்களெல்லாம் சுமக்க வேண்டி வருமா..
..
திமுகவிற்கெதிராக அவதூறு பரப்புவோர் மீது இனியும் பழையபடி கனிவோடு நடந்துக்கொள்ள தேவையில்லை அதேவேளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டுமென தெளிவான உத்தரவு .. உண்மையில் இனியும் வாய்க்குவந்ததை பேசி திரிய முடியாது விமர்சனங்கள் வரவேற்கபடும் அதில் உண்மை இருக்கவேண்டும் பொய் பழிச்சொல் வதந்தியென பாஜகவின் அஜெந்தா இனி எடுபடாது .. உடனுக்குடன் உண்மையை வெளியிட்டு மூக்குடைத்தாலும் வைரலாகி திமுகவிற்கு அவபெயரை தருவதை ஏற்க இயலாது .. சட்டம் தன் கடமையை செய்யட்டும் .. விமர்சனம் செய்வோர் தங்களை அதிமேதாவி என  எண்ணிக்கொண்டு சேற்றை வாரியிறைக்க முடியாது .. சரியான பார்வையோடு கூடிய விமர்சனங்கள் மதிப்பளிக்கபடும்..
.. 
திராவிட இயக்கத்தின் தளபதி  சரியான திசையில் பயணிக்கிறார்
தன்னை வரைந்த சிறுவனிடம் பெரியாரை தந்து .. எங்கிருந்து தொடங்கவேண்டும் என பறைசாற்றியிருக்கிறார் .. பெரியாரை அறிய தொடங்கினால் அதனுள் அண்ணாவை கலைஞரை சமூகநீதியை சமத்துவத்தை புரிய தொடங்கும் .. தொடக்கம் சரியாக அமைந்தால் நல்ல சமூகத்தை உருவாக்கிவிடலாம் .. வரும் தலைமுறை பெரியாரிலிருந்தே தொடங்க வேண்டுமென்ற முதல்வர் திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைக்கு மட்டுமல்ல ஐந்தாம் தலைமுறைக்கும் வழிகாட்டுகிறார் வழிநடத்துகிறார்..
இதெல்லாம் சுட்டுபோட்டாலும் பழனி பன்னீருக்கும் வராது .. காரணம் கொள்கை வழி வந்தவர்கள் அல்ல
கொள்ளையடிக்க வந்த கூட்டம் ..
அரைகுறைகளோடு ஆட்சி நடத்தி எம்ஜிஆரின் தொடர்ச்சியாக ஜெயலலிதா எனும் தீமை இவர்களை அடிமாடுகளைப்போல 
நடத்தி தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை தந்தது .. நல்ல மேய்ப்பன் இல்லாத ஆடுகள் கடைசியில் பட்டியில் அடைபடும்..
ஆக சிறந்த அறிவிலிகள் அதிமுக அடிமைகள்..
..
ஆலஞ்சியார்

Wednesday, June 23, 2021

தலைவர்..
எந்த சூழலிலும் என்னை தனிப்பட்டமுறையில் புகழ்ந்து பேசகூடாது .. புகழ் போதை மனிதனை தவறில் கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அறிந்தவர் .. நேர்மையாளர் பொய்யுரையை புகழ்ச்சியை விரும்புவதில்லை தன் சகாக்களிடம் உங்கள் உழைப்பை நேர்மையாக தாருங்கள் அதுவே நம் ஆட்சிக்கு சிறப்பை சேர்க்குமென அறிந்தவர்.. நல்ல தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார்.. உழைப்பு நேர்மை அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்லும் பாங்கு.. பகைவருக்கும் அருளும் பேருள்ளம், சிறந்த,வெளிப்படையான நிர்வாகம், எந்த சூழலிலும் கொள்கைமாறா உறுதி  என தளபதியார் தனித்துவமாக திகழ்கிறார்..
..
ஒன்றியம் 
பல தேசிய இனங்களின் ஒன்றியமே இந்தியா என்றார் பேரறிஞர் .. இந்தியாவிற்கென்று தனி கலாச்சாரமோ மொழியோ இல்லை பல்வேறு இனம் வாழும் நாட்டில் ஒரு மொழி ஒரு பண்பாடு கலாச்சாரம் என்பது பொய்.. ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே கலை பண்பாடு மொழி வாழ்வியல் என தொகுப்பு உண்டு அவரவர் இனத்தின் பெருமையை காவு கொடுத்துவிட்டு பொய்யாய் பேசி திரிவது கெடுதலையே தரும் .. அதனால் தான் இந்தியா என்பது நாடல்ல துணைகண்டம் என்கிறோம் .. பல்வேறு இனங்கள் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துவதே ஒன்றியத்தின் சிறப்பு .. அதனால் தான் முதல்வர் தெளிவாக யாரும் மிரள வேண்டாம் ஒன்றியம் என்றுதான் சொல்வோம்  அழைப்போமென தெளிவுபடுத்தியிருக்கிறார் 1957 ல் தேர்தல் அறிக்கையிலேயே பயன்படுத்தினோம் இனியும் பயன்படுத்துவோம்  ஒன்றியம் என்ற சொல்லில் தான் கூட்டாச்சி தத்துவம் அடங்கியிருக்கிறது
என பாடமெடுத்திருக்கிறார்..
..
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எப்படி மாநிலம் செயல்படவேண்டுமென சொல்லிதந்தவர் இப்போது ஒன்றியத்திற்கே வகுப்பெடுக்கிறார்.. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாடு தனக்கான தலைவனை செதுக்கிகொள்கிறது..
பண்பட்ட தலைவர்களை காலம் உருவாக்கிறது .. இந்திய ஒன்றியத்திற்கு நல்ல தலைவர்களை தமிழ்நாடு வழங்கிக்கொண்டுதானிருக்கும் ..
பேராசான் பெரியார், காயிதெமில்லத், பேரறிஞர் அண்ணா,பேரருளாளன் கலைஞர் என தொடர்ந்துக்கொண்டே இருக்கும் .. அவ்வரிசையில் நேர்மையும் நெஞ்சுரமும் அஞ்சாத வீரமும் அன்பும் அடக்கமும் தெளிவான பார்வையும் கொண்டகொள்கையில் உறுதியும் கொண்ட பண்பாளர் தளபதி .. 
 தமிழ்நாட்டின் முதல்வராய் வந்தது காலம் தந்த நல்வாய்ப்பு ..
..
இரையை கொத்தி தின்னும் கோழியல்ல.. 
"முட்டையை அடைகாக்க அமரும் கோழியைபோல " தமிழ்நாட்டை காத்து வருகிறார்..
..
ஆலஞ்சியார்

Monday, June 21, 2021

பெருமையாக இருக்கிறது திறமையாளர்கள் கையில் தமிழ்நாடு .. சரியானவர்களை தேர்வு செய்து கூடநிறுத்தி சரியான திசையில் ஆட்சியை நடத்தினால் உலகம் உற்றுபார்க்கும் .. எப்படி சாத்தியமானதென இந்திய ஊடகங்கள் வியக்கின்றன இன்றைய பேசுபொருளாக தமிழ்நாடு அரசின் பொருளாதார நிபுணர்கள் குழு .. 
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிக சிறந்த முதல்வர்களில் ஒருவராக வரலாறு பதிவு செய்யும் ..
முதல் சட்டமன்ற கூட்டதொடர் 
ஆளுநர் உரையில் தமிழ்படித்தவர்களுக்கு தமிழ்நாட்டினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என கடந்தகால தவறுகளை சரிசெய்யபடும் என்பதை எடப்பாடி உணர்ந்தாரா என தெரியவில்லை ஆளுநர் உரையை ஒன்றுமில்லை என்கிறார்.. தலையில் ஒன்றுமில்லாதவர்களுக்கு ஆளுநர் உரையில் ஒன்றுமில்லைதான் 
பெரியாரின் சமூக நீதி தத்துவத்தின் அடிப்படையில் இந்த அரசு இயங்கும் என்பதாவது எடப்பாடிக்கு புரியுமா என்ன..?
..
இந்திய ஒன்றியத்தில் உள்ள எந்தவொரு மாநில அரசாங்கமும்  இது போன்றதொரு  தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டதில்லை....  மிக சிறப்பான திட்டமிடல் ஒரு அரசின் பயணத்தில் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பொருளாதார துறையில் தமிழகத்தின் அடுத்த நகர்வை கருத்தில் கொண்டு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலர்,எஸ்.நாராயணன்,
முன்னாள் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைகழக பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ என நிதியமைச்சர் 
சரியானவரை தேர்வு செய்து கொண்டுவந்து புதிய தொடங்கத்தை தொடங்கி இந்திய ஒன்றியத்திற்கு பாடமெடுத்திருக்கிறார்.. 
..
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க நிபுணர் குழு அமைக்கபடும் என்பது தமிழகத்தில் நலிவுற்று தொழில் துறையை மீட்டெடுக்கும்.. முதலாளியாக இருந்தவர்கள் தொழிலாளியான துயரங்கள் இனி நடக்காது இன்றைய அறிவிப்புகள் ஒவ்வொன்றும் தொலைநோக்கோடு வகுக்கபட்டிருக்கிறது .. இதெல்லாம் அடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை .. தமிழகத்தின் வருவாய் ஈட்டிப்பை 35 லட்சமாக உயர்த்த தமிழ்நாடு முதல்வர் உறுதியோடு செயல்படுகிறார்
..
"வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!" என தமிழ்நாடு ஆளுநரை
கொண்டே சொல்லவைத்தது  ஒன்றிய அரசிற்கு பாடமெடுத்த அழகு திராவிடம் தளபதியை சரியாக செதுக்கியிருக்கிறது ..
நல்ல அரசை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.. இனி தமிழகம் வளர்ச்சிபாதையில் ..
நல்லவர் ,நமக்கானவர் இனத்தை மொழியை காக்கும் வல்லமை பெற்றவர் ஒன்றியத்தின் எதிர்பார்பாய் விளங்கும் எமது முதல்வர் நல்லாட்சி தருவார்..
எதிர்க்கட்சிகள் வாய்மூடி மௌனம் காக்கவும் ..
..
ஆலஞ்சியார்

Thursday, June 17, 2021

தலைநகரில் ..
தமிழ்நாடு தலைநிமிர்ந்தது இழந்த தன்மானத்தை மீட்டது .. கழிசடைகள் கால் நழுவி நின்று கொத்தடிமையாய் சேவகம் செய்திட்ட இழிசெயல் இனி இல்லை .. தமிழ்நாட்டின் தேவைகள் எதையும் சமரசம் செய்திடாமல் எந்த உரிமைகளையும் இழந்திடாமல், எம் இனத்தின் பெருமை சிதைந்திடாமல் மக்களாட்சியின் மகிமையை ஒன்றியத்திற்கு உணர்த்தி 
எம் முதல்வர் ராஜங்கம் நடத்திருக்கிறார்..
..
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் 
ஒன்றிய பிரதமர் மோடியிடம் 
முக்கியமான  கோரிக்கைகள் வலியுறுத்தினார்..

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறவேண்டும்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்..
குடியுரிமை திருத்தச் சட்டம் , வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.. இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை..
மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது GST நிலுவை தொகையை உடனே தரவேண்டும் 
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
மிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகள்..
இப்படி ஒரு சிறப்பான முதல்வரை துணிவோடு பேசும் முதல்வரை 
தமிழர் நலம் தமிழ்நாட்டின் நலன் காக்கும் முதல்வரை
பெற்றதற்காக 
ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும்..
..
அடிமை எடிப்பாடி தலையாட்டி ஏற்றுக்கொண்ட திட்டங்களை எல்லாம் எங்களால் ஏற்க முடியாதென ஒன்றிய தலைமையமைச்சரிடமே நேரடியாக சொல்லும் துணிவு .. எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கு இழப்பை ஏற்படுத்த முடியாது உரிமைகளை விட்டுதந்து
ஜால்ரா போட முடியாது எமது உரிமைக்கு குரல் கொடுப்போம் என சொல்லியவிதம் தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் தலைநிமிர செய்திருக்கிறது ..
..
டெல்லி சென்றவுடன் நேரடியாக அறிவாலய பணியை பார்வையிட்டு கட்சி முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார்..
இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதி அளவுகோலை மாநில அரசுகளே நிர்ணயம் செய்யும் அதிகாரம் வேண்டும் என்பது திராவிட இயக்கம் தன் கொள்கைகளை தளர்த்தி கொள்ளாது சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்பதை ஒன்றிய பிரதமருக்கு  பாடம் எடுத்து புரியவைத்திருக்கிறார்
..
எழுவர் விடுதலை தொடர்பாக மிக முக்கிய நகர்வை தளபதி சாதித்துகாட்டிருக்கிறார்
சட்டச் சிக்கல் காரணமாக எழுவரையும் விடுதலைசெய்வதற்குப் பதிலாக கால வரம்புகள் இல்லாத நீண்டகால பரோலில் விட ஒன்றிய அரசு ஒப்புதல்..
இந்தியர்கள் மூவரும் தங்கள் வீடுகளில் இருக்கலாம். மற்ற நால்வரும் இலங்கை நாட்டினர் என்பதால் அகதிகள் மறுவாழ்வுமையத்தில் தங்கியிருக்க வேண்டும்..
தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான
தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. 
ஒரு முதல்வரால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் முதல்வர் மக்களின் தேர்வாக இருந்தால் ஒன்றியம் தலையாட்டும் என்பதையும் இந்த நிகழ்வு சொல்கிறது ..
..
வாழ்த்துகள் முதல்வரே ..
நன்றியும் 
மகிழ்வும் 
கொஞ்சம் பெருமையோடும் 
கர்வத்தோடும் 
தமிழனாய் தலை நிமிர்கிறோம்..
..
ஆலஞ்சியார்

Tuesday, June 15, 2021

ஸ்டாலின் ஆட்சியில் அண்ணாவின் நிர்வாகத் திறமையையும் கலைஞரின் உழைப்பையும் காண்கிறேன்.. தராசு ஷியாம்..
..
அண்ணாவின் நிர்வாக திறமை கலைஞருக்கும் இருந்தது அண்ணாவிற்கு காலம் வாய்ப்பை தரவில்லை  ஆனால் கலைஞருக்கு நல்வாய்ப்பாய் நீண்டகால முதல்வர் என்ற தகுதியை வழங்கியது அதுவே தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து தனித்துவமாக திகழ காரணமானது .. கலைஞரின் உழைப்பு ஈடுசெய்ய முடியாதது .. அவரின் பன்முகதன்மையின் ஒருங்கிணைக்க அவரது உழைப்பு மிக காரணியாக அமைந்தது தொலைநோக்கு சிந்தனை பெரியாரிடமிருந்தும், அரசியலில் எதிரிகளையும் கையாளும் திறன், யாரை எப்படி நடத்துவது சுயமரியாதையை கைவிடாமல் அரசை நடத்துவதெப்படியென அண்ணாவிடமும் கற்றவர் கலைஞர் .. 
..
கலைஞர் திராவிட சித்தாந்தத்தை சிறிதும் பிசறாமல் கட்சி அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் நடத்திகாட்டியவர் .. இன்று சங்பரிவார் நடத்தும் நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் குத்துவிளக்கு ஏற்றுவதெல்லாம் பார்க்க நேரிடுகிறது .. கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பணிமாற்றம் செய்யபட்டதோடு கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் அழைத்து கண்டிக்கபட்டிருக்கிறார்கள் .. எங்கிருந்து வந்தோம் நம் கொள்கைவழி பயணம் எது என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல திமுகவினரும் கடைபிடிக்கவேண்டும் மத நம்பிக்கை வேறு மதவெறிகூட்டத்தோடு கூலாவுது என்பது வேறு ..
..
அண்ணாவையும் கலைஞரையும் உள்வாங்கி பேராசான் வகுத்த சமூநீதி பாதையில் பயணிக்கிறார் தளபதி அவர்கள் .. மக்கள் துயர்படும் நேரத்தில் அறியணை ஏறியபோதும் கொஞ்சம் மகிழ்வு கொள்ள இடம் தராமல் மக்கள் மகிழ்ச்சியுறும் நாளே நன்னாள் என சுழன்று இயங்கும் தலைவர் .. 
அண்ணா காலத்தில் ஜனநாயக மரபுகளை மதிக்க தெரிந்த எதிரிகள் இருந்தார்கள் .. கலைஞரே காலத்தை பகைமை தலைக்கேறியவர்கள் இருந்தார்கள் ஆனால் தளபதி காலத்தில் அடிமைகளும் விவரகேடுகளும் பொய்யர்களும் புளுத்துநிற்கிறார்கள் .. அரசியல் புரிதலற்ற வீணர்கள் மதவெறியர்கள் சாதிவெறி மூடர்கள் என வரிசைகட்டுகிறார்கள் .. ஊடகங்கள் தங்கள் கடமையை மறந்து விலைபோன காலத்தில் 
நேர்மை என்றைக்கும் விழாது என்ற நம்பிக்கையோடு உழைப்பு உயர்வை தருமென நம்பி .. மக்களின் சிரிப்பில் தான் அரசின் சிறப்பிருக்கிறதென தன் சகாக்களோடு ஆட்சி செய்கிறார்..
..
விமர்சனம் என்ற பெயரில் சில கூமுட்டைகள் ஒன்றுக்கும் உதவாதவற்றை கையிலெடுத்து கதைத்துக்கொண்டிருக்கிறார்.. வீணர்களே..
நீங்கள் சாதியையும் மதத்தையும் அடிமைத்தனத்தையும் கொண்டாடிக்கொண்டிருங்கள் ..
மக்கள் தெளிவாக தங்களுக்கான தலைவனை கொண்டாடுகிறார்கள் இனி தளபதியே தமிழகத்தின் தன்நிகரற்ற தலைவர் .. அவரது ஆட்சி பொற்காலத்தின் துவக்கம் 
பொதுவாழ்வில் "தனலாபம்" பார்க்க வரவில்லை மக்கள் தனத்தோடு வாழும் சிரிப்பே மக்களாட்சியின் சிறப்பு ..
..
ஆலஞ்சியார்

Saturday, June 12, 2021

எதுவரை உன் கை நீளவேண்டுமென நீ முடிவு செய் ஆனால் என் மூக்கை தொடகூடாது .. விமர்சனம் கருத்துவேறுபாடு எல்லாம் ஜனநாயகத்தின் கூறுகள் எவருடைய செயல்பாட்டையும் எதிர்க்க ஆதரிக்க உரிமையுண்டு..
பொதுவாழ்விற்கு வந்தவர்கள் விமர்சனங்களுக்கு பயந்தொடுங்குவது சரியல்ல ஆனால் எது விமர்சனம் என்பதில் எல்லையுண்டு .. அரசியல்ரீதியாக சமூகத்தில் அவரின் செயல்பாட்டில் குறையிருப்பினும் உமது கொள்கையிலிருந்து வேறுபட்டிருப்பினும் கடுமையாக எதிர்க்க உரிமையுண்டு ஆனால் கேவலமாக சித்தரிப்பதும் தனிநபர் விடயங்களில் மூக்கை நுழைப்பதும் தனக்குதான் எல்லாம் தெரியும் என்கிற ரீதியும் தான் மட்டுமே யோக்கியன் என்கிற நிலைபாடும் சருக்கலையே தரும்..
..
கலைஞரை விமர்ச்சிக்கிறேன் என்ற பெயரில் அவர் குடும்பத்தை பொதுவாழ்வில் அவரோடு பயணித்தவர்களோடு தகாத உறவுண்டு என இட்டுகட்டி பிரச்சாரம் செய்தல் அவரை சமூகவலைதளங்களில் வைரலாக்கி தன்மேட்டிமையை காட்ட நினைத்தால் இனியும் பொறுத்துபோக முடியாது ..  அதேபோல் அரசை விமர்சனம் செய்யலாம் அது சரியாக இருக்கும்பட்சத்தில் பொது சமூகம் உடன்வரும் இல்லையெனில் புறந்தள்ளும் ஆனால் தனிப்பட்டவரை இகழ்வாக சித்திரித்தால் சட்டம் தன் "சாட்டையை" சுழற்றும்..
..
இந்த அரசு பொறுப்பேற்று ஒருமாதமே முடிந்தநிலையில் அதிலும் கொரோனா தொற்றும் வேகமாக பரவிவந்த சூழலில் இத்தனை வேகமாக இந்திய ஒன்றியத்தில் வேறெந்த அரசு இப்படி செயல்பட்டதில்லை .. இரு வாரங்களுக்கு முன்பு படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸ் காத்துநின்றதும்  உயிர்வளி OXYGEN  கிடைக்காமல்  மக்கள் அல்லாடியதையும் மாற்றி இன்று 50,000 படுக்கைகள் காலி என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பாராட்ட மனமில்லையெனும் குறைகூறுவதை நிறுத்திக்கொள்ளலாம்..
"மாவீரன் மாசு" சக்கரம் கட்டியதைப்போல் வேகமாக இயங்குகிறார் எல்லாவற்றிலும் நேர்மையான போக்கை வெளிப்படையாக செயல்பாட்டில் 
சிறந்த அமைச்சராக திகழ்கிறார்..
ஒவ்வொரு அமைச்சர்களும் பொறுப்புணர்ந்து வேகமாக  நேர்மையான செயல்பாடுகளால் மிளிர்கின்றனர் ..PTR தன் நிதி ஆளுமையால் இந்திய ஒன்றியத்திற்கு பாடமெடுக்கிறார் 
P.K சேகர்பாபு கோவில் நிலங்களை மீட்டு "புதிய சரித்திரம் " படைக்கிறார் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை தொடர்ந்து "பெண்கள்" அர்ச்சகராகலாம் அதற்காக பயிற்சி அளிக்க அரசு தயார்.. பெரியார் நெஞ்சிலே தைத்த "முள்" எடுக்கபடுகிறது.. பெண்களை அர்ச்சகர்களாக்கி " புதிய வரலாறு" படைக்க தளபதி படை தயாராகிறது
..
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவைத்திருக்கிறார் .. இதிலென்ன இருக்கிறது .. சடங்குகள் வைதீகமுறையில் நடத்தபடவில்லை மலர் தூவி விதைநெல்லை தெளித்து தஞ்சை கழனி செழிக்க புறப்பட்டாள் காவிரி.. இன்னும் நிறைய இருக்கிறது தோண்ட தோண்ட குப்பைகளாய் இருக்கும் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யவேண்டும் ஊழலில் திளைத்து கொழுத்த "அம்மாவின் பிள்ளைகளை" வரிசைகட்டி சிறைக்கனுப்பும் மகத்தான பணி காத்திருக்கிறது 
கொரோனாவை வென்று தமிழகத்தை "புதிய பாதை"யில் செலுத்தவேண்டும்.. 
பத்தாண்டாய் தமிழ்நாட்டில் படிந்த அழுக்கை கழுவ சில காலம் தேவை ஆனாலும் விரைந்து விடியலை தருவார் நம் தளபதி 
காத்திருப்போம் 
..
ஆலஞ்சியார்

Wednesday, June 9, 2021

திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் முதல்வரின் செயல்பாடுகள் எப்படி இருக்குறதென கேள்வியே எழவில்லை.. ஒவ்வொரு நொடியும் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அரசு அமைந்தது நல்வாய்ப்பு .. நெருக்கடியான சூழலில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தவர் முன்பிருந்த ஆட்சியை குறை கூறிக்கொண்டிருக்காமல் தன் சகாக்களை களநிலவரத்தை அறிந்து செயலாற்ற பணித்து படைவீரர்களை வழிநடத்தும் தளபதியாய் கூட இருந்து கவனம் செலுத்தி ஒவ்வொரு செயலும் மக்களுக்கு இடையூறில்லாமல் அவர்களுக்கு பயனுள்ளதாக்கி ஒரு அரசு இடர்காலங்களில் எப்படி செயல்படவேண்டுமென பாடம் நடத்தியிருக்கிறார்..
..
முன்பு இருந்த அடிமைகளால் நிர்வாக சீர்கெட்ட நிலை .. உயிர்வளி oxygen தட்டுபாடு படுக்கைகள் இல்லை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி நேரம் மிக சிறந்த களப்பணியாளர்கள் மா.சு. செந்தில் பாலாஜி தங்கம் தென்னரசு என களமிறக்கி படுக்கை எண்ணிக்கை போர்கால அடிப்படையில்  உயர்த்தி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து காலி சிலிண்டர் கண்டெய்னர் என வரவழைத்து அதிவேகமாக விநியோகம் செய்து சில நாட்களிலேயே படுக்கைகள் காலி என்ற நிலையை ஏற்படுத்தி சிறந்த அரசாய் மக்கள் கொண்டாடுகிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்..
..
அறநிலைய துறை சரியான திசையில் பயணிக்கிறது .. கோவில் நிலங்கள் மீட்கபடுகிறது .. 
எவ்வளவு நிலம் இருக்கிறதென வெளிப்படையாக அறிந்துக்கொள்ள இணைய தளத்தில் வெளியீடென பட்டைய கிளப்புகிறது .. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக 100 நாட்களில் பணி நியமனம் என்றவுடன் வழக்கம்போல் பார்பனர்கள் தங்கள் பணியாட்களை வைத்து கூவ ஆரம்பித்திருக்கிறார்கள் .. எல் முருகன் நான் ஏன் கருவறைக்குள் போகவேண்டும் என்கிறார்.. முருகன் அவர்களே உங்களுக்கு விரும்பமில்லாமல் இருக்கலாம் ஆனால் இன்னமும் பீ அள்ளி கொண்டிருக்கும் எம் சகோதரன் பறையடித்து கொண்டிருக்கும் தோழன், செருப்புதைக்கும் என் நண்பன் கருவறைக்குள் வர விரும்புகிறான் அதற்காக தன் தகுதியை வளர்த்து படித்து முடித்து காத்திருக்கிறான் .. அவன் வரவிற்காக நடராஜரும், ஸ்ரீரங்கத்து ரங்கராஜரும் காத்திருக்கிறார்கள் முருகன் .. உங்களுக்கு விருப்பமில்லை என்பதற்காக மற்றவர்கள் விருப்பத்தை தடுப்பது என்ன நியாயம்..
..
நீட் தேர்வால் பாதிக்கபட்டவர்கள், அதை தடுக்க என்னென்ன வழிகள் எனஅறிய  நீதிபதி ராஜன் நியமித்தவுடன் சிலருக்கு எரிகிறது,
எக்காரணம் கொண்டும் நீட்டை அனுமதிக்க முடியாதென்று பள்ளிகல்விதுறை அமைச்சர் தெளிவாக இருக்கிறார் .. ஒன்றிய அரசு செயலாளர் அளவிலான கூட்டத்தை புறக்கணித்து மாநில சுயாட்சி பாடமெடுக்கிறார் .. 
GST கூட்டத்தில் மண்டையில் அடித்து விளக்கம் தருகிறார் PTR ..
எவன் அப்பன் வீட்டு காசு மக்கள் வரிப்பணம் அதிலிருந்து மக்களுக்கு செலவழிக்க என்ன தயக்கமென குரலெழுப்புகிறார் .. படித்தபடிப்பிற்காக சான்றிதழை கூட காட்ட முடியாதவர் நீட் தேர்வு வைக்கிறாரென கிடுக்கி போடுகிறார் GST அடிப்படையே தவறு என ஆணியடிக்கிறார் ..
..
இப்படி தன் சகாக்களோடு முதல்வர் தளபதி ஸ்டாலின் வெற்றிபடிக்கட்டில் .. நல்லாட்சி என்பது மக்கள் துயரங்களில் கூடஇருக்கிறது அரசு என்ற நம்பிக்கையை விதைப்பது .. சரியான தளபதிகள் படை சூழ பாதுகாப்பது .. நல்லவன் நாட்டை ஆள்கிறாரென மக்கள் நிம்மதியடைவது .. எல்லாருக்கும் எல்லாம் சமநிலையென நலிந்தோரைைைையும் விளிம்புநிலைமக்களையும் உயர்த்தில் ஏற்றி சமநீதி வழங்கி "நல்காவலன்" எம் தலைவன் என நாடே கொண்டுகிறது .. எதிர்த்தோரும் வரகூடாதென வஞ்சனை செய்தோரும் வாயடைத்து நிற்கின்றனர் ..
..
திராவிடப் பெருஞ்சுவராய் பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளனும் காத்து நின்றனர் 
அந்த வரிசையில் தளபதி தமிழகத்தின் தமிழ்மக்களின் இனத்தின் "காவல்அரணாய்" திகழ்கிறார் .. பிறமொழி பேசும் மக்களும் நெகிழ்வோடு பார்க்கிறார்கள் .. இந்தியாவின் நம்பிக்கை ஒளி தமிழகத்திலிருந்து ஒளிர்கிறது ..  
..
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்..
..
ஆலஞ்சியார்

Saturday, June 5, 2021

மத்தியம் ஒன்றியம் இரண்டிற்கும் பெரிய வேறுபாடெல்லாம் இல்லை 
மத்தியம் என்றால் ஒரே இடத்தில் அதிகார குவியல் ..ஒன்றியம் என்றால் அதிகார பரவல் ஒருங்கிணைந்து செயல்படல் இப்போது புரியும் ஏன் பதறுகிறார்கள்.. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதெல்லாம் பன்முகதன்மை கொண்ட தேசத்தில் சாத்தியமில்லை என்பதை  அறிவார்கள் ஆனாலும் மாநில அதிகார வரம்பை சுருக்குவது அவர்களின் நோக்கம்
அதன் ஒருவடிவம் தான் ஒரே கார்டு ஒரே ரேஷன் .. 
..
ஒன்றியம் பற்றிய கேள்விக்கு எடப்பாடியின் பதில் சிரிப்பை தரவில்லை அவரிடம் போய் கேள்வி கேட்டவர்களின் "திறமையை" கண்டு சிரிப்பு வந்தது .. சேக்கிழார் எழுதிய ராமாயணம் என்ற போதே தெரிந்திருக்கவேண்டும் இவர் அறிவு சூன்யம் என்று ..பிறகெப்படி முதல்வராக இருந்தார் என்ற கேள்விக்கான விடை அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஆனால் அனைத்தும் அவரை கொண்டு நடத்திகொண்டார்கள் பாஜகவினர் குறிப்பாக பார்பனர்கள்..
..
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டுமென்பதை கலைஞரின் ஆட்சியை பார்த்து கற்றுக்கொள் என  ராஜசேகர் ரெட்டி சொன்னாரென ஆந்திர முதல்வர் ஜெகன் சொன்னார் .. ஆம் கலைஞர் சாமானியர்களுக்காக சிந்தித்தவர் அவர் வழி வந்த தளபதி.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக வந்த பிறகு ஒரு மாதத்திற்குள் தன் சகாக்களோடு நடத்தி காட்டிய அரசு இயக்கம் வரலாற்று ஆவணம் .. படை நடத்தும் தளபதி முன் நின்று இயக்குவதை போல யாரை எந்த பதவிக்கு எப்படி பயன்படுத்த வேண்டுமென சரியாக முடிவெடுத்து செயல்படுகிறார்.. 
ஒவ்வொரு நியமனமும் எதிரிகளும் வாயடைத்து நிற்கிறார்கள் ..
ஒவ்வொரு முடிவும் ஜனநாயக மரபுகளோடு ஆலோசித்து எடுக்கபடுகிறது +2 மாணவர்களுக்கு தேர்வில்லை என்பதை சில வேறு பார்வையில் சிலர் பார்த்த போதும் 18 வயதை நிரம்பாத இளம்பிள்ளைகளுக்கு தடுப்பூசி சாத்தியமில்லை அவர்களின் உயிர் முக்கியமென எண்ணி அதேவேளை அவர்கள் பாதிக்க கூடாதென்பதற்காக கல்வியாளர்களை கொண்டு மதிப்பெண் வழங்க பரிந்துரை தேடி நீட் தேர்வை நடத்த கூடாதென்பதற்கு செக் வைத்திருக்கிறார் .. ஒவ்வொரு அசைவும் சமூகநீதி மக்கள் நலன் நேர்மையோடு கூடிய செயலாய் இருத்தல் வேண்டுமென பயணிக்கிறார்..
..
பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சரியான நபர்களை நிதியமைச்சர் திட்டக்குழுத் துணைத்தலைவர்(வளர்ச்சி குழு) தேர்வு செய்து இந்தியாவிற்கே வகுப்பெடுக்கிறார் .. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்
பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்காளான வழக்கு குறித்து PSBB பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் கைது குறித்து 
சினிமாவிற்கு அழைத்து போனேன் சக ஆசிரியர்களுக்கு வாட்ச்ஆப்பில் படங்களை பகிர்ந்தேன் மிரட்டி கருகலைப்பு செய்தேன் என வாக்கு மூலம்  தந்த அயோக்கியனை பற்றி அந்த நிர்வாகத்தை பற்றி பத்திரிக்கை நிருபர் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் நழுவுகிறார் .. வளர்மதி இதெல்லாம் கேள்வியா என்கிறார் இனியும் பாஜகவிற்கு குண்டி கழுவி நிற்கும் இந்த கொடியவர்களை என்னவென்பது.. 
..
நல்வாய்ப்பாய் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நமக்கு முதலமைச்சராய் வந்தார் இனி நல்லதே நடக்கும் .. ஒவ்வொரு செயலும் தமிழர்களின் நலன் சார்ந்தும் தமிழ்நாட்டின் பலன் சார்ந்தும் இருக்கும் .. முத்துவேல் படை தமிழ்நாட்டை உயர்த்தி காட்டும் .. இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் ..
..
ஆலஞ்சியார்