Monday, April 27, 2020

வரனெ அவெசமுண்டு

"வரனெஅவேசமுண்டு"..
மலையாள திரைப்படம் நேற்றுதான் பார்த்தேன் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம்.. சுரேஷ்கோபி ஷோபனா துல்கர் காய்த்ரி பிரியதர்ஷன் (இயக்குநர் பிரயதர்ஷனின் மகள் அவருக்கு மலையாளத்தில்  முதல்படம்) 
"சிலப்போ நமக்கு முன்பே அம்மே விவாகம் கழிக்கும் " என மகள் தன் காதலனோடு சொல்வாள்..
விவாகரத்து பெற்ற தாய் தனக்கு இயல்பாக எழும் காதலை மிக அழகாக படமாக்கியிக்கிறது மலையாள கரை ..
நிம்மி என்ற நாயின் பெயர் .. நல்ல பழகிட்டா எந்த பெயரை சொல்லி அழைத்தாலும்வரும் என சிறுவன் சொல்ல பிரபாகரா என சுரேஷ் கோபி அழைக்க ஓடிவருகிறது .. 
எப்படி பிரபாகரன் பெயரை வைக்கலாம் என சிலர் பொங்குகிறார்கள் .. சாதாரணமாக கடந்து போகவேண்டிய விடயத்தை பெரிதாக்கி நல்ல விளம்பரம் தந்திருக்கிறார்கள் .. 
சீமான் போன்றவர்கள் காட்சியை நீக்கவேண்டுமென எச்சரிக்கிறார்கள் .. இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள் கொரோனா தொற்று மிகப்பெரிய அழிவை சமூகத்திடையே,ஏற்படுத்துகிறது பசியால் வாடுகிற மக்களை காக்கவோ அவர்களுக்கு உதவவோ செய்யாமல் இலங்கை பிரபாகரனின் பெயர் ஒருபடத்தில் வைத்ததற்கு இங்கே வீறுகொள்கிறார்கள் .. 
..
திரௌபதி படத்தில் ஆணவ கொலை செய்யும் பாத்திரம் கூட "பிரபாகரன்" பெயரில் தான் அப்போதெல்லாம் எங்கே போனார்கள் ..  இலங்கை அரசியல் தமிழகத்தில் நீர்த்துபோய் பலகாலமாகிவிட்டது இங்கே யாரும் இலங்கை தமிழர்களைப்பற்றி கவலைக் கொள்வதில்லை.. இலங்கை தமிழ்மக்கள் மெல்ல இயல்புவாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் .. புலிகள் இயக்கம் மிகப்பெரிய கட்டுமானம் ஆனால் தங்களின் அகந்தையால் சிதறிப்போனது விவேகமற்ற செயல்,யாரை நம்புவதென்று கூட தெரியாத தெளிவற்ற பார்வை .. உலகமே விழித்துக்கொண்டு தீவிரவாத செயலுக்கு எதிராக போர்குணம் கொண்டபோது போராட்டகளத்தை ஜனநாயகபடுத்தாமல் வீம்புக்கு எதிர்த்து நின்று கடைசியில் மனித கேடயங்கள் வீழ்ந்த போது அதுவரை கட்டிகாத்தெல்லாம் தகர்ந்தது ..
சிலர் தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் என்கிறார்கள்.. இலங்கை மலையக தமிழர்கள் கூட பிரபாகரனை தலைவனாக ஏற்கவில்லை .. 
சிலர் அண்ணாவோடு ஒப்பிட்டு தங்களை சிறுமைபடுத்திக்கொள்கிறார்கள் .. #பேரறிஞர்அண்ணா மிக சிறந்த ஜனநாயகவாதி மாபெரும் அரசியல் ஆளுமை விவேகமுள்ள தலைவர் ஒப்பற்ற தலைவரோடு "சிலதுகளை"
ஒப்பிடாதீர்கள்
..
மலையாளிகள் பிரபாகரன் என்கிற பெயரை அதிகளவில் வைத்துக்கொள்வார்கள் 
இதில் என்ன தவறை கண்டார்கள் .. இனியும் புலிகள் பிரபாகரன் ஈழமென கதைத்துக்கொண்டிருந்தால் நிலைகுலைந்து போகவேண்டிவரும் .. தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை எல்லாம் தராது மக்கள் தெளிவுபெற தொடங்கிவிட்டார்கள் .. ஈழத்தை சொல்லி பிழைக்கிறவர்கள் வன்மதில்களுக்குள் வாழ்கை நடத்துவதை அறிவார்கள் இலங்கை போராடியவர்கள் சோத்திற்கு வழியின்றி வழக்கு சிறை என காலம்கழிக்கும் போதும் இங்கே ஈழ வியாபாரிகள் நல்ல லாபம் பார்த்தார்கள் ..
..
சினிமாவில் பெயரிடுவதற்கே போராடுகிறளவில் தான் இவர்களின் அறிவும் அரசியலும் .. 
ஈழப்போருக்குப் பிறகு பெருமளவில்
தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் யாரும் மத்திய மாநுல அரசின் தமிழ்விரோதபோக்கை கண்டுக்கொள்வதில்லை.. ஈழம் காசு மணி துட்டு இவ்வளவுதான் இவர்கள் அறிந்தது..
 #விவரகேடுகள்..
..
ஆலஞ்சியார்

Saturday, April 18, 2020

எது அரசியல்

எது அரசியல் ..
அரசு இதுவரை என்ன செய்தது செய்ய தவறியது எது என சுட்டிகாட்டி கொட்டி திருத்துவது எதிர்க்கட்சியின் கடமை .. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என முதல்வர் புலம்புவது ஏன் .. முன்னுக்குபின் முரணாக பேசுவதும் வாய் திறந்தால் பொய் மட்டுமே சொல்வதும் செய்யாததை செய்துவிட்டதாகவும் 
நடக்காத ஒன்றை நடத்துவிட்டதாகவும் தொடர்ந்து பொய்யை தவறான தகவலை தருவது அரசுதானே தவிர திமுக அல்ல..
கொரோனா பரிசோதனைக்கு ராபிட்கிட் போன மாதமே வந்துவிடும் என சொன்னது என்னானது.. சீனாவிலிருந்து வந்ததா. சட்டீஸ்கர் அரசு வெளிப்படையாக 
ரேப்பிட் டெஸ்ட்  கிட்  விலை ₹355+ GST அறிவித்திருக்கிறது அதைபோல் தமிழக அரசு அறிவிக்கலாமே.. எதிர்க்கட்சிதலைவர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அனுமதி மறுத்தீர்கள் சரி .. தலைமை செயலகத்தில் அதிகாரி மத "பெரியவர்கள்" எல்லாம் கலந்துக்கொண்டு கலந்துரையாடியது ஏன் .. 
மதுரையில் இறந்த ஜல்லிகட்டு மாட்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துக்கொண்டு "சமூகவிலகலை" கடைப்பிடித்தார்களே அதெல்லாம் எதில் வரும் இந்த ஆட்சியின் பெருமையிலா.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே நோய் பரப்புகிறார்களென பாசிச பாஜகவின் குரலை சுகாதாரத்துறை செயலரே ஓங்கி ஒலித்தாரே இதையெல்லாம் முதல்வர் எடப்பாடி அறிவோடுதான் நடந்ததா ..இதுவரை சரியான புள்ளிவிபரங்களை தர மறுப்பது ஏன் .. மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் மருத்துவர்கள் மரணம் இதெல்லாம் கண்டிக்காமல் கடந்துபோக வேண்டுமா ..
உண்மையில் ஸ்டாலின் சரியாக வழிநடத்துகிறார் ரேப்பிட் கிட் எவ்வளவுக்கு வாங்கினீர்கள் என்ற பதில் அளிக்க அஞ்சிதான் ஸ்டாலினுக்கு பதில் அளிக்க போவதில்லை என்கிறீர் ..எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் தர மறுப்பது மக்களுக்கு உண்மையை சொல்ல மறுப்பதற்கு சமம்.. மக்கள் தேர்ந்தெடுத்து  முதல்வராக வரவில்லை அதனால் எதைப்பற்றி கவலைபடாமல் வாய்க்கு வந்ததை பேசி 
எஜமான் மோடிக்கு விசுவாசமாய் தமிழர்நலனை தமிழக நலனை அடகுவைத்து வாழ்கிறீர் ..
அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் சறுகுகள் கூட வரும் ஆனால் கலசம் ஆகமுடியாது .. 
..
பிரதமரின் தொகுதியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோர் பேருந்துகளில் அனுப்பிவைக்கபட்டுள்ளார்கள் நல்லது இதே போல் வீடு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மும்பையில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம் .. தன் தொகுதியில் தத்தளித்தவர்களை உதவியது போல் அனைவருக்கும் உதவினால் தான் தான் பொதுவானவன் என அறியபடுவீர்கள் .. அதிகம் பேசுகிற செயல்படுவதில் மந்தநிலையில் தான் பிரதமரை சர்வதேசம் காண்கிறது .. தொடர்ந்து ஊரடங்கு செயல்படுத்துவதில் தவறில்லை ஆனால் தின வருவாயில் குடும்பம் நடத்துவோரைப் பற்றி பிரதமர் கவலைபட்டதாக தெரியவில்லை .. உலக சந்தையில் எரிப்பொருள் விலை வீழ்ச்சியடைந்தும் சில பெருமுதலாளிகளுக்காக விலைகுறைப்பு செய்யாமல் இருப்பதிலிருந்தே இந்த அரசு சாமனிய மக்களுக்கானதில்லை என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.. தமிழக அரசிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றிய அரசிற்கும் கூட சிறந்த எதிர்க்கட்சி தலைவராக திகழ்கிறார்
மாநில அரசிற்கு ஆலோசனையை வழங்கி இந்திய ஒன்றிய அரசிடம் வாதிடுவதற்கு பெயர் அக்கறை.. இதெல்லாம் புரிந்தால் நல்ல நிர்வாகத்தை தரலாம் தொடர்ந்து தவறுகளை சுட்டிகாட்டியும் ஆரம்பம் முதலே மறுத்தும் பின் கடைபிடித்தும் ஸ்டாலின் சொன்னதுதான் சரியென கடைசியல் நிரூபணம் ஆகிறது .. மருத்துவ உபகரணங்களே போதிய அளவில் இன்னும் தட்டுபாடுகள் என்ற நிலையில் மூன்று நாட்களில் கொரோனாவை ஒழித்துவிடுவோம் என முதல்வர் சொல்வதற்கு பெயர் தான் அரசியல் உளறல் .. பொய்கணக்குகளை சொல்லாதீர் தவறான புள்ளிவிபரங்களை சொல்லாதீர் பரிசோதனையை அதிகபடுத்துங்கள் என ஸ்டாலின் சொல்வது அரசியல் செய்வதல்ல
..
#இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்..
(குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்) என்ற குறளுக்கொப்ப மத்திய மாநில அரசை தொடர்ந்து எச்சரித்தும் கண்டித்தும் பாராட்டியும் கவனத்திற்கு கொண்டுவந்தும் தன் கடமையை சரியாக செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் தளபதி.ஸ்டாலின் .. நல்ல தலைவராக நாட்டின் மீதும் நாட்டுமக்களின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட தலைவராக திகழ்கிறார் 
#தளபதி_ஸ்டாலின்
..
#தலைவர்

Thursday, April 16, 2020

கருப்பு

கருப்புச்சட்டை போட்டால் பகுத்தறிவு என்று எந்த சயின்ஸ் புக்ல இருக்கு என கேட்கிறார்கள் .. அத்திவரதர் வந்தால் நல்லது நடக்கும் என்றீர்களே நடந்ததா என சுப.வீ. அய்யா கேட்கிறார் விஐபி டிக்கெட் எடுத்து தரிசித்தார்களென கேள்வி எழுப்பியிருக்கிறார்.. காங்கிரஸ் திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொல்லபடவில்லாயா என புலம்பிதீர்த்திருக்கிறார்.. தினகூலிண்னே நாங்க என்ன செய்யமுடியும் பிழைப்புக்கு என்ன வழி..
ஏதாவது பாஜக திட்டம் இருக்கா என கேட்டவருக்கு எல்லாத்திற்கும் காரணம் தேசதுரோகி ஈவேரா
என புலம்புகிறார்கள்
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என நண்பர்கள் கேள்வி எழுப்பினர் .. அறியாமையில் திரிகிறவர்களை நல்வழிபடுத்தல் கூட அறம் தான் ..
..
பகுத்தறிவு என்பது எதுவென அவர் புரிந்துக்கொள்ள எளிதான விளக்கம் தரலாம் மாட்டுக்கறி சாப்பிடுவது புரோதம் அதிகரிக்கும்
மாட்டு மூத்திரம் குடித்தால் கிருமிகள் வரும் என்பது தான் பகுத்தறிவு ..ராமர் சிலை வைத்தால் குற்றம் ஆனால் மற்றவர்களுக்கு சிலை வைத்தால் அது பகுத்தறிவா என கேட்கிறார் .. ராமர் சிலையைச் சொல்லி பிழைப்பு நடத்தாதே என சொல்வது கூட அறிவார்ந்த விடயம்தான் .. "கும்பிடுகிறேன் சாமி" ன்னு சொல்லாதே
சொல்றது கூட பகுத்தறிவுதான்
ஈரோட்டில் பெரியார் சிலை திறப்பில் அய்யா உங்களை போல சிலை இல்லையென சிலர் சொன்னபோது ..மேலே ஏன் பாக்குற கீழ பாரு என்ன எழுதியிருக்கு கடவுள் இல்லை கற்பித்தவன் முட்டாள் வணங்குகிறவன் காட்டுமிராண்டி .. அதை தான் தேவை முகம் தெளிவல்ல.. அதை எழுதாமல் போனால் வள்ளலாரைப்போல சாமி ஆக்கிவிடுவார்கள் என்றாரே அது தெளிவு பகுத்தறிவு .. கருப்புசட்டை ஏன் தெரியுமா .. துக்கத்திற்கான உடையாக இந்த சமூகம் கருப்பை கொண்டிருந்தது உழைக்கிறவன் சுரண்டபடுகிறான் உழைப்பை சுரண்டுகிறவன் செமையா வாழ்கிறான் இது மாறுகிறவரை கருப்பை அணியவேண்டும்.. நிறத்தில் (கலர்) கூட அரசியல் இருப்பதை அறிவாரா..
..
இலங்கை தமிழர் பிரச்சனையில் நிறைய விளக்கம் கொடுத்தாயிற்று .. வெளிநாட்டில் விவகாரத்தில் மாநில கட்சியால் செய்ய முடிகிற அனைத்தையும் செய்தது திமுக .. கடைசி போரில் புலிகளின் கணக்குகள் தட்டியதும் மனித கேடயமும் அறிவார்ந்த ஆலோசனையை புறக்கணித்ததும். ப.சிதம்பரம் எவ்வளவோ சொல்லியும்  கடைசிவரை தமிழகத்தின் ஆதரவாளர்களை நம்பியதும் பேரழிவை தந்தது .. தோக்கு தூக்கியவன் அழிவு தோக்கால் என்பதை போல கடைசியில் விவேகமற்ற போராட்டம் சகோதர பகை ஜனநாயக பாதையை நோக்கி நகராமை இப்படி நிறைய பின்னடைவுகள் இவையெல்லாம் நிறைய விவாதித்தாயிற்று அப்போதெல்லாம் மனநல சிகிச்சையில் இருந்தாரா..
அத்திவரதரை சென்று பார்த்தவர்களில் திராவிட குடும்பங்களும் உண்டு யாரை நிர்பந்திப்பதல்ல அவரவர் உரிமையை நம்பிக்கையை ,கருத்தை, சுதந்தரத்தை எதையாவது சொல்லி நசுக்குவதல்ல .. எதிர்கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது அதற்கு வாய்பளிப்பது கூட கடமை என்று சொல்வது திராவிடம் ..
..
பெரியார் பெயரை கேட்டாலே கதறுகிறார்கள் என்றால் எந்தளவு பார்பனீயத்தை அடித்து துவசம் செய்திருப்பார் .. கல்வி வேலைவாய்ப்பில் தாங்கள் மட்டுமே சிறந்தவர்கள் தங்களுக்குமட்டுமே எல்லா தகுதியுமிருக்கிறது என்று காலகாலமாய் ஏமாற்றி வந்தவர்களுக்கு இடைசாதி கடைசாதிகாரனெல்லாம் படித்து "உத்யோகம்" பார்க்க வந்ததில் எரிச்சல் இவர்களின் பேச்சில் தெரிகிறது .. பாசிசம் அதிகாரத்திற்கு வந்ததற்கு பிறகு இவர்களின் திமிர் வெளிப்படையாக தெரிகிறது தாங்கள் சொல்வதை கேட்கும் ஆட்சி, அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஊழல்வாதிகள் பதவி சுகம் கொண்டு தலையாட்டும் இவர்களால் எதை பேசினாலும் கேட்க மாட்டார்களென்ற எண்ணமும் இப்படி உளறவைக்கிறது .. ஆனால் ஒவ்வொருமுறையும்  அறிவுடைசமூகம் இவர்கள் முகத்தை கிழித்தெறிகிறது ..
இங்கே பெரியாரை பேசாமல் கலைஞரை பேசாமல் எதுவும் நடக்காது .. வெளிச்சம் தேவையென்றால் கூட திராவிட பேரரக்கர்களைப் பற்றி தான் பேசவேண்டும் ..
..
ஆனால்

Wednesday, April 15, 2020

ஸ்டாலின்

பிரதமருக்கு சில கேள்விகள்..? திரு.ஸ்டாலின் .. ஆனீலி
அதற்கான பதிலை இதுவரை பிரதமர் அலுவலகமோ பாஜகவோ தரவில்லை ..
எழு அறிவுரைகளை சொன்னதோடு முடிந்து போனதா ..அவர்கள் எதிர்பார்பது அறிவுரைகளை அல்ல பேருதவிகளை உணவு பணம் பொருளுதவிகள் இவைகளுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை மத்திய பட்ஜெட்டில் இருக்கும் 30 லட்சம் கோடியில் 65,000 கோடியை மக்களுக்கு 5000 வீதம் பகிர்ந்தளிக்கலாம் என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனை பிரதமருக்கு புரியவில்லையா.. உயிர்காக்கும் கருவிகளை மாநிலங்களுக்கு எப்போது தரபோகிறீர்..
என அடுக்கடுக்காய் கேள்வியை எழுப்பி 
அறிவுரையை அல்ல ஆறுதல் உரையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்..
#தளபதி_ஸ்டாலின் கேள்விகளில் அக்கறையும் 
இந்த அரசின் கையாலாகாதனமும் வெளிச்சம் போட்டுகாட்டுகிறது ..    
..
ஜார்கண்டிலிருந்து 1500பேர் 28 பேருந்துகளில் குஜராத்திற்கு செல்கிறார் .. மும்பை பந்த்ராவில் ஆயிரம்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல குவிந்தனர் .. ஆனால் மோடி நம்மை பார்த்து உலகம் வியக்கிறதென வழக்கம் போல் "பொய்" பேசுகிறார் .. சரியான திட்டமிடல் இல்லாமல் திடீரென ஒருநாள் ஊடரங்கென அறிவித்து அதை 21 நாட்கள் என்றும் பிறகு நீட்டி மே 3 வரை என்றால் அன்றாடம்காய்ச்சிகள் வருவாய் இன்றி பெருநகரங்களில் தவிப்பது எப்படி முடியும் இதற்கெல்லாம் என்ன நிவாரணத்தை வைத்திருக்கிறார் பிரதமர் .. வாய்ச்சொல்லில் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் இல்லையென்றால் காங்கிரஸ் ஆட்சியில் என திசை திருப்பலாம் கொரோனை தொற்றே முஸ்லிம்களால் தான் என "சாயம்" பூசலாம் இதை தவிர ராமாயணமும் மகாபாரதமும் பார்த்துக்கொண்டிருந்தால் பசி மறந்து போகும் .. 
எதாவது நல திட்டங்கள் இந்த அரசு செய்ததுண்டா .. தொலைநோக்கு பார்வையில் கடந்த ஐந்து வருடங்களில் செய்ததுண்டா ..? திலகருக்கு சிலை வைக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவம் கல்வி கட்டமைப்பை இன்னும் பலப்படுத்த யோசனையாவது உதித்ததுண்டா ..?  இவர்கள் ஆளும் மாநிலங்களில்  மருத்துவ கட்டமைப்பு Clinical structure பரிதாபகரம் என்பதை மறைக்கமுடியாமல் திணறுவதையும் திராவிட இயக்கம் குறிப்பாக திமுக ஆட்சியில் கலைஞரின் தொலைநோக்கு மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரியென இந்தியாவிற்கே வழிகாட்டி விடிவெள்ளியாக திகழ்கிறதே இதையெல்லாம் கண்டு படிக்கவேண்டாமா..
..
மதமும் சாதியும் கலவரமும் மட்டுமே சிந்தனையில் இருந்தால் இந்தியாவை வளர்ச்சிபாதையில் எப்படி கொண்டுசெல்லமுடியும்.. புராணம் சமயம் நம்பிக்கை என்பதெல்லாம் தனிநபர் நம்பிக்கை அதை வைத்து அரசியல் செய்வதும் அதிகாரம் செய்வதும் நாட்டை முன்னேற்றத்திற்கு எடுத்துச்செல்லாது ..கடவுள் நம்பிக்கையற்ற #கலைஞர் அவர்களின் #கருணைதான் இன்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலையை மெச்சபடுத்திக்கொண்டிருக்கிறது .. எல்லா மதங்களும் தங்கள் கோட்பாடிலிருந்து விலகி வரதொடங்கியிருக்கிறது.. இதுவரை கட்டிசமைத்த முடநாற்றங்களை மெல்ல தூக்கியெறிய தொடங்கியிருப்பது புதியதொரு உலகம் சமைக்க உதவும் ..இயற்கையின் பேரழகு புதிய தொடக்கத்தை குறிக்கலாம் ..
சமயம் சடங்கு வேதம் வழிபாடெல்லாம்  மனஅழுத்தத்தை வேறுபாட்டை விதைக்கவே பயன்பட்டதே தவிர மனிதநேயத்தை மக்களிடம் பேரன்பை ஒற்றுமையை .. மனிதில் மனிதத்தை விதைக்க மறந்து போனது ..
..
இந்த மத்திய மாநில அரசுகளை இயக்க 
விழிப்புணர்வை தந்திட ..எச்சரிக்கை செய்ய .. செயல்பட வைக்க ..திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவன் அயராமல் இயங்கிக்கொண்டிருப்பது ஒருவித ஆசுவாசம்..நிம்மதி..
ஒன்றுபட்டு பெருந்தொற்றை வென்றுகாட்டுவோம் .. எளியவர்க்கும் வறியவருக்கும் நம்மால் ஆனதை தந்துதவி மனிதம் வளர்ப்போம் ஆட்சியும் அரசும் ஆள்வோரும் அலட்சியபடுத்தினாலும், நாம் மீண்டுவருவோம் .. 
#புதியவார்ப்புகளாய்  
..
ஆலஞ்சியார்

Monday, April 13, 2020

திமுகவின் செயல்பாடுகள்

தன்னார்வர்கள் உதவிகள் வழங்க தடையில்லை..  நேற்று தடை செய்துவிட்டு திமுக 
வழக்கு பதிவு செய்தவுடன் தடையில்லையென பின்மாறுகிறது .. சுயம் இல்லை தானாக முன்கூட்டியே திட்டமிடும் திறன் இல்லை ..பிறமாநில அரசுகளைபோல தானாக முடிவெடுக்கு அதிகாரமில்லை .. எல்லாவற்றுக்கும் மத்திய அரசின் கட்டளைக்கு காத்திருக்கும் அவலம் .. சுயமரியாதையை, மாநிலகளுக்கு அதிகாரத்தை வழங்கிட வேண்டும் என்ற திராவிட இயக்கத்தில் மூல கொள்கையான "சுயாட்சியை" தூக்கி குப்பையில் போட்டுவிட்டு பதவி சுகத்திற்காக பரத்தையை போல மானங்கெட்டு நிற்பது படுகேவலம் ..
..
28-04-74 அன்று மயிலை பொதுக்கூட்டத்தில் #பேரருளாளன்_கலைஞர் பேசியபோது 
“நீ மாநில சுயாட்சி கேட்கிறாய் ஆகவே உன் அரசாங்கத்தைக் கலைக்கிறேன்” என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால் , அதைவிட என்னுடைய வாழ்க்கையிலே "புனிதமான வரலாற்று நிகழ்வு" வேறு எதுவுமே இருக்க முடியாது” .. பத்தாண்டுகளுக்கு  முழு அதிகாரத்தையும் கொடுத்து பாருங்கள் .. இந்த சுயாட்சி அதிகாரத்தை எல்லா மாநிலங்களுக்கும் தான் கேட்கிறோம்  என்றார் 
இன்று கல்வி, மொழி, கலை,நிதி, என எல்லாவற்றிலும் சுயத்தை இழந்து நிற்கிறோம்,
இதற்கு நாமும் ஒரு காரணம் என்றே சொல்லவேண்டும் .. நேர்மை பேசி  மக்கள் ஆதரவோடு தான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டுமென காத்திருந்தது பேராபத்தை தந்திருக்கிறது .. நேர்மையாக ஆட்சிக்கு வராதவர்களை அதே சூழ்ச்சியில் வீழ்த்துவது கூட "அறம்"என்று  அறியாமல் போனது அபத்தமாகிவிட்டது .. மக்களுக்கு பெருந்துயரை தரும் ஆட்சியை தொடரவிட்டதும் கூட நம் மீது பழியாகிப்போனது .. வரலாற்று பிழை ..
..
மத்திய மாநில அரசுகள் இது போன்ற பேரிடர் காலங்களில் கூட மத அரசியலை முன்னெடுப்பது கண்டிக்கதக்கது .. ஒரு முறை அமித்ஷா எங்களால் ஒரு விடயத்தை வைரலாக்க முடியும் அதற்கான IT கட்டமைப்பு எங்களிடம் உண்டு என்றார் அதைதான் மிக கச்சிதமாக செய்துவருகிறது ..கொரோனா பாதித்தவர்களை நோயாளியாக பார்க்காமல் மதம் சாயம் பூசி அதை சுகாதாரத்துறை செயலரை கொண்டே பரப்பவதுதான் ஹைலைட் .. இதெல்லாம் வேறெந்த மாநிலத்திலும் நடக்கவில்லை ஆர்எஸ்எஸை கௌண்டு மாநகராட்சி உதவிகளை வழங்குவதெல்லாம் இங்குதான் நடக்கிறது ..
தன்னார்வு நிறுவனங்கள் உதவிகரம் நீட்டுவது 
ஆளும்தரப்பை அவ்வளவாக பாதிக்காது ஆனால் திமுகவின் செயல்பாடுகள் .. விரைந்து நிவாரணபொருட்களை அதிலும் ஸ்டிக்கர் ஒட்டாமல் வழங்குவது அதிமுகவை அரசை கதிகலங்க செய்திருக்கிறது .. அதனால் தான் தடை என அறிவித்து பின் வழக்கென்றவுடன் பின்மாறியது ..
..
திமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது 
ஆரம்பத்திலிருந்தே முககவசம் கையுறை போதிய அளவில்லை  என்ற எச்சரிக்கை செய்ததும் ,தனித்திருக்கும் அவசியத்தை சட்டமன்றத்தில் எடுத்துரைத்ததும், வரும் முன்காப்பதே சாலசிறந்ததென்ற அறிவுரை .. தமிழக அரசு செயல்படவில்லையென்றால் செயல்பட வைக்கும் என்ற தளபதியின் எச்சரிக்கையையும் பலன் தந்தது திமுக இணையத்தள அணி தன்னார்வு தொண்டர்கள் கட்சிகள் உதவுவதை தடுக்க நினைத்ததை அரசின் கையாலாகாத செயலை  மக்களிடம் உடன் கொண்டு சேர்த்ததும் அரசு இறங்கிவரவேண்டிருந்தது .. திமுகவின் செயல்பாடு மெச்சதகுந்தது .. அது தொடரவேண்டும் .. இந்த கேடுகெட்ட பாஜக பினாமிகளை அடிமைகளை மக்களிடத்திலிருந்தே/ அதிகாரத்திலிந்து கீழிறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.. அடிமைத்தனம் ஒழிந்து அறநெறியோடு கூடிய சுயாட்சி மலரந்திடும் வரை போராடிக்கொண்டே இருப்போம்
.. 
ஆலஞ்சியார்

Saturday, April 11, 2020

மதுவந்தி..

மதுவந்தி
கருப்புச்சட்டைகாரர்கள் தான் தேவைபடுகிறார்கள்.. என்னை விமர்சித்து பிரபலபடுத்திய கருப்புச்சட்டைகாரர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் .. மொட்டை பாப்பாத்தி என்ற நிலை இல்லாமல் செய்ததில், விதவை மறுமணத்தை  செய்துகாட்டி பார்பனீய சமூக பெண்களை #புதியவார்ப்புகள் ஆக்கியதில் 
பெரும்பங்கு திராவிட இயக்கத்திற்குண்டு..
..
வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரிகளென்ற ஜகத்குரு பெரியவா அருளுரையையெல்லாம் கிடப்பில் போட்டு .. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுகிடக்கிறதென்ற நாற்றமெடுத்த சிந்தனையை தூரிவீசி .. பள்ளியின் தாளாளராக மதுவந்தியும் இருப்பதற்கும் கருப்புச்சட்டைதான் உதவியது ..
அரைகுறை அறிவும் தன் குலம் காக்கும் என்ற திமிரும் வழக்கு விசாரணை தீர்ப்பென வந்தாலும் "பாப்பாத்தி" என்ற நிலை காக்குமென நாமெல்லாம் கண்டதுதான் அதனால் தான் உளறியவுடன் மன்னிப்பும் கூடவே அவர் உளறவில்லையா இவர் என்னசெய்தார் ..மன்னிப்பு கேட்டாரா என திரும்பவும் உளறிவிட்டு போயிருக்கிறார் .. ஒரு பள்ளியை நிர்வகிக்கிறவர் ஒன்பது கோள்களும் நேர்க்கோட்டில் வராதென்ற உண்மையை கூட அறிந்திராமல் உளறியதும் அதை நியாயபடுத்த தன் சாதியை  பேசுகிறார்களென சிம்பதி உருவாக்குகிறார் ..
வாய்தவறி வந்துவிட்டதென்பதை ஏற்போம் .. ஆனால் அதை தலைக்கனத்தோடு சொல்வதை தான் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது ..
..
மதுவந்தி மட்டுமல்ல எச்.ராசா மாலன்,பானுகோமஸ்,பத்ரி, ராகவன்.. உட்பட எல்லோரும் விபரகேடுகள் தான்.. தங்களுக்கு எல்லாம் தெரியுமென நம்பிக்கொண்டிருப்பது தான் மிகப்பெரிய நகைச்சுவை .. தங்களை உயர்ந்தவர்களாக ,மெத்த படித்தவர்களாக இத்தனை காலம் நம்பவைத்தததின் விளைவு இன்று இவர்களின் வெளிப்படுத்தல்கள் முகத்தை கிழித்தெறிகிறது .. கல்வி தங்களுக்கு மட்டுமே என்றிருந்ததை உடைத்து அனைத்து தரப்பினரும் கல்வியறிவில் பெருத்தவெற்றியை பெற இவர்கள் நிலை பரிதாபத்திற்கு சென்றுவிட்டது.. விளக்கத்தோடு அதிலும் தெளிவோடு அறிவோடு விவாதிக்க நாம் கற்றுக்கொண்டோம் ..பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் அமைத்து தந்த செப்பனிட்ட பாதையில் நமது வெற்றி இலகுவானதும் இவர்கள் உண்மை "நிறம் " வெளியே வருகிறது .. பேராசான் சொன்னதைப்போல அவர்கள் படிப்பாளிகள் அறிவாளிகள் அல்ல என்றது எவ்வளவு உண்மை ..  கல்வியை வியாபாரமாக்கியவர்  அதன் தரம் உலகத்தரமென்றெல்லாம் விளம்பரபடுத்தி "பெரும்காசு" சேர்த்தவர்கள் இன்று அடிப்படை அறிவுகூட இல்லாதவர் என்று நிரூபிக்கிறார் .. அவரை இன்னமும் பேசவிடுங்கள் அவர்களின் "தரம்" உலகுக்கு தெரியும் அவரின் கல்வி நிறுவனத்தை நோக்கிய  நமது மக்களின் பார்வை திசைமாறும் .. 
..
மதுவந்தி தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு
சத்தியத்திற்கு உண்மைக்கு கட்டுபடுபவள் என்கிறார் அது அவரின் விருப்பம் .. சங்கரராமன் கொலையும், ராஜப்பா  குருக்கள் 100 சவரன் நகை கொள்ளையும் திருச்செந்தூர் ராஜமணி உண்டியல் உடைக்கபட்டதெல்லாம் கூட நம்பிக்கையில் தான் வந்தது .. திருப்பதி வேதபாடசாலையில் ஐந்து பேருக்கு கொரோனா தாக்கி 470 மாணவர்கள் தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள் 
தப்லிக் ஜமாத் சென்றவர்கள் தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள் புனிதவெள்ளிக்கு வாடிகன் கதவடைக்கபட்டதெவ்லாம் கூட நடந்தது .. 
மதம் அல்ல பிரச்சனை நோயை தடுக்க வேண்டிய நேரத்தில் அரசில் பேசிக்கொண்டு அதற்கு இவ்வளவு போட்டாரென தவறான கணக்கை சொல்லி சொதப்பாமல் இருந்தால் போதும் .. திமுக 1949 ல் தொடங்கபட்டபோது 48 பேர் என்கிறார் அதுகூட  தவறான தகவல்  15 பேர் என்பது வரலாறு .. தயவு செய்து நிறைய படியுங்கள் மதுவந்தி..
எதிர்மறையாளர்களின் கருத்தையும் உள்வாங்குங்கள் மாற்று சித்தாந்தத்தையும் அறிந்துக்கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் தவறான தகவலை தராதீர்கள் .. மாற்றான் தோட்டத்திலும் நல்ல மல்லிகை உண்டு ..
அறிவு தேடுவதுதான் சிறந்த கல்வி..
அறிவு கண்களை திறக்கும் .. மடமையெனும் இருள் அகலும் .. 
..
ஆலஞ்சியார்

Thursday, April 9, 2020

கொரோனா

#கொரோனா ..
நிறைய படிப்பினையை தந்திருக்கிறது வாழ்வை அதன் போக்கில் வாழ வேண்டும் ..பேராசையும் பெருமையும், பகட்டும்,போலித்தனமும், அல்ல வாழ்கை இயல்பாய் இனிதாய் இருப்பதை கொண்டு வாழு ..இருப்பது உனக்கானது மட்டுமில்லை பிறருக்கும் சேர்த்து என சொல்லியிருக்கிறது. அதிகாரம் ஆணவம்,திமிர் தான்தோன்றித்தனம் வீழ்ந்து தரைமட்டமாகும் என எச்சரித்திருக்கிறது .. வாழ்வை உயரத்திற்கு கொண்டுசெல்ல நிற்காமல் ஓடுகிறாயே எதற்கிந்த வீண்வேலை என செவிட்டில் அறைந்திருக்கிறது .. சாதி மதம் சமூகம் இனம் மொழி கடந்து மனிதமே வெல்லும் என புரிகிறமாதிரி சொல்லியிருக்கிறது .. 
..
அதிகாரம் ஆணவம் தான்தான் பெரியவன் என்ற நினைப்பை உடைத்து ஒன்றுமில்லை நீ என்ற உண்மையை போதித்திருக்கிறது ..
அதிகார திமிரில் ஆடிய நாடுகள் சப்தமின்றி கண்ணீரில் நிற்கிறது .. பணமும் பகட்டும் காட்டிய நாடுகள் குலைநடுக்கத்தில்.. எதையும் விலைபேசமுடியுமென்ற நினைப்பெல்லாம் மனதின் ஓரத்தில் ஒளிந்துக்கொண்டது ..
ஜோதிடம் சமயம் சடங்கு எல்லாம் பொய்யென்று புரிந்தது ..
கடவுள் பெயரைச் சொல்லி கலவரம் நடத்தியவர்களின் கயமைத்தனம் நொடியில் நொறுங்கியது .. தொலைநோக்கோடு திட்டம் தீட்டிய தலைவர்களால் கொஞ்சமேனும் மெச்சபட முடிகிறது .. நேருவையும் இந்திராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் கலைஞரையும் மக்கள் நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்..  சாமியையும் சாதியையும் தூக்கிபிடித்தவர்கள் கைத்தட்டவும் விளக்கேற்றவும் விம்மி அழவும் செய்கிறார்கள் ..
..
உறவின் பாலத்தை பலமாக்கியிருக்கிறது அன்பை தவிர வேறெதுவும் இங்கே பலனில்லை  என்றுணர வாய்ப்பு கிட்டியிருக்கிறது .. தனிமை துயரத்திற்கு மருந்தாகி ஆர்ப்பாட்டமிக்க வாழ்வை எளிமையாக்கி வாழ இது போதும் தேவையற்ற சுமைகளை சுமக்காதே.. இயல்பாய் வாழ பழகு பகட்டானவை எல்லாம் ஆபத்தானது .. இயற்கையோடு இணைந்து வாழு.. இல்லாத ஒன்றை கற்பனையாக்கி சாமிவேசம் கட்டிவைக்காதே .. எதுவும் இங்கே அதிகாரம் பெற்றதில்லை அமைதி அன்பு அணுசரனை ஈகை இவைதான் உயர்த்திபிடிக்கும் கல்வி அறிவு உன்னை கரைசேர்க்கும் மனிதன் மட்டும் வாழ அல்ல இந்த பூமி விலங்குகள் பறவைகள் கண்ணுக்குதெரியாத ஜீவன்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சென்றால் யாருக்கும் தீங்கில்லை .. மனிதனின் அகங்காரமும் ஆணவமும் தனக்கானது இந்த பூமியென்ற பேராசையும் தகர்தெறிந்து மீண்டும் மனிதத்தோடு வாழ பழகு எனச் சொல்லியிருக்கிறது ..
..
தொழிலுக்கொரு சமுதாயம் ..அவனவன் வேலையை அவன் செய்து பிழைக்கவேண்டும் 
அப்படிதான் சாஸ்திரம் சொல்கிறது. மழிக்க துவைக்க தனித்தனியாய் திரிந்ததுபோய் நீயே மழிக்கவும் துவைக்கவும் செய்கிறார் உன் கழிவை நீயே அப்புறப்படுத்துகிறாய் .. தும்மல் வந்தால் கடவுளை மறந்து மருத்துவரை மருந்தகத்தை நாடுகிறாய்.. காயத்துகட்டி மந்திரித்து விட்டவர்கள் யாரையும் காணோம் ஜகத்குருவெல்லாம் ஜாதையை மாற்றிக்கொண்டு கதவடைத்து  காணாமல் போனார்கள்..அல்லோலிய்யா இருக்குமிடம் தெரியவில்லை .. 
ஆனால் அறிவாயலம் திறந்திருக்கும் .. இதிலிருந்து பெரும் உண்மை தெரிகிறது .. மனிதன் சக மனிதனுக்கு உதவினால் வேறுபாடுகள் கலைந்து வேறுபாடுகளை உண்டாக்கிய சாதிமதத்தை கடந்து தெளிந்த நீரைப்போல தூயன்போடு சிந்தித்து செயல்பட்டால் அறிவின் அறிவியல் துணைக்கொண்டு எதையும் வெல்லலாம் ..
இயற்கை தன் பணியை செய்யட்டும் இயற்கையாய் இயல்பாய் இனிதாய் எளிதாய் வாழ்வோம் ..
..
ஆலஞ்சியார்

Monday, April 6, 2020

என்ன சாதித்தீர்கள் ..பிரதமர் அவர்களே..

என்ன சாதித்தீர்கள் பிரதமர் அவர்களே ..
விளக்கு பிடிக்க சொன்னீர்கள் .. சொல்வது பிரதமர் ஏதேனும் காரணமிருக்கும் என தங்கள் கோட்பாடுகளை கடந்து வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு  தீபம், மெழுகுவர்த்தி என
விளக்கேற்றினார்கள் ..சிலர் பயத்திலும் சிலர் பக்தியிலும் .. ஆனால் அறிவுடை சமூகம் வீட்டின் விளக்கை அணைக்காமல் ஒளிரவிட்டது .. ஒரு கிரகம் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என புதுகதை சொன்னது .. ஊரடங்கை மீறி தீபங்களோடு சிலர் ஊர்வலம் போனார்கள் .. வாசலில் வந்து நின்று டார்ச் அடித்தவர்களும் உண்டு சிலர் மெழுகோடு வந்து நடித்தார்கள் ரசிக்க முடியவில்லை .. பட்டாசு வெடித்து துயரத்தை கொண்டாடுகிறார்கள் .. உண்மையில் வெட்கமாக இருக்கிறது
மிக கச்சிதமாக கொரோனாவிற்கு மத சாயம் பூசி அருகில் நிற்பவரை கூட விரட்டுகிற நிலை.. கொரோனா எண்ணிக்கை கூடுகிறதே தவிர சரியான திட்டமிடல் இல்லை கூட்டமாக கூடி மகா கும்பமேளா செய்தால் கூட குற்றமில்லை  .. 
என்ன நடக்கிறது நாட்டில் ..
..
ஊரடங்க சொல்லிவிட்டு வீதியில் இறங்கி கைதட்டவும் விளக்கேற்றவும் செய்ததை தவிர நம்பிக்கையான வார்த்தைகளை காணோம்..
 இந்திய பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மீது கட்டிவிடலாம் .. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி நிறுத்திவைத்தாகிவிட்டது .. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி பணிக்காகவே செயல்படுத்தபட்ட தொகையை நிறுத்தியது ஏன் ..
நிதி ஒதுக்கீட்டில் கூட தென்னிந்தியா புறக்கணிக்கபடுகிறது ..
பேரிடர்கால நிதியில் கை வைத்த போதே எச்சரித்தார்களே.. ரிசர்வ வங்கியில் சுரண்டுவது தலைவேதனை தரும் என்ற "#பெருமக்களின்" பேச்சை எப்போது கேட்பீர் .. வரலாறு படித்தவர்களை பொருளாதார மேதைகளாக எண்ணிய பரந்த பாசிச சிந்தனை..  கல்வியாளர் என்ற பெயரில் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என்ற புழுகும் செயலுக்கு ஒப்பானது .. அறிவியல் ரீதியாக 
செயல்பட வேண்டிய தருணங்களில் செவ்வாய் குளிருமென கதையடிக்கிறார்கள் .. இவர்களை எல்லாம் மதவெறியர்களெல்லாம் அறிவிலிக்கூட்டத்தின் செயல்களையெல்லாம் எப்போது புறந்தள்ள போகிறீர்..
..
இத்தனை ஆர்ப்பாட்டங்களால்/கொண்டாட்டங்களால் அறிவியல் ரீதியாக எந்த பயனுமில்லை இஸ்லாமிய கிருஸ்துவ பௌத்த கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளில் கூட மத சடங்குகளை தங்கள் நம்பிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு 
அறிவியல் துணையை நாடுகிறார்கள் .. மதம் நம்பிக்கை வழிபாடு இவையெல்லாம் தனிநபர் சார்ந்த விடயங்கள் அதை ஒட்டுமொத்த மக்களின் மீது திணிப்பது அரைவேக்காட்டுத்தனம்.. வளைகுடா நாடுகளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் அந்த நாட்டு குடிமக்களை விட இந்தியர்களே அதிகம் ..வரும் நாட்களில் கூடலாம் ஆனாலும் அவர்கள் நோயாளியாக தான் பார்க்கிறார்கள் மதமோ, இனமோ, மொழியோ பார்க்காமல் மனிதர்களாக பார்க்கிறார்கள் .. ஆனால் இந்தியாவில் நோய் கூட மதமாகிறது .. இவையெல்லாம் களையபடவேண்டும் .. மதம் பார்த்தோ  இனம்மொழி பார்த்தோ நோய் வரவில்லை மனித சமூகத்தின் அழிமதியே காரணம் .. 
இனியேனும் நல்லதாய் செயல்படுங்கள் ..
..
அனைத்துக்கட்சி தலைவர்களோடு ஆலோசனை நடத்த தீர்மானித்திருப்பது நல்ல தொடக்கம் .. நம் கருத்துவேறுபாடுகளை கடந்து 
ஒற்றை நோக்கோடு
பெருந்தொற்றை ஒற்றைகட்டாய் இணைந்து விரட்டியடிப்போம் 
..
ஆலஞ்சியார்

Friday, April 3, 2020

கொரோனா

வல்லரசுகளும் வளர்ந்த நாடுகளும் கொரோனாவிடம் தோற்றுபோகின்றன..
எல்லாம் எம்மிடம் உண்டு அதிநவீன ஆயுதங்கள் உலகமே தங்கள் காலடியில் தங்களின் பார்வையில் தான் வளரும் நாடுகளும் ஏழைநாடுகளும் .. அய்க்கிய நாடுகள்சபையில் நாங்கள் சொல்வதுதான் நடக்கும் .. பிடிக்காதவர்களை தங்களுக்கு அடிப்பணியாத/வழங்கிநிற்காத நாடுகளுக்கு 
பொருளாதாரதடை .. ஆயுதகுவியலையும் நவீன தொழில்நுட்பத்தையும் நாங்களே விற்போம் நாங்களே யாரை எங்கே  வைக்கவேண்டுமென தீர்மானிப்போம்  என்ற அகந்தையும் திமிரும் அடிப்பட்டு கிடக்கிறது ..
..
உலகின் மிகப்பெரிய ராணுவம் .. கல்வியில் விஞ்ஞான ஆய்வில் தனிநபர் வருமானத்தில் முன்னிலை வகிக்கிறது .. மருத்துவ ஆய்வுகளுக்காகவும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.. உலகின் தரம் வாய்ந்த
மருத்துவ உபகரணங்கள்/மருந்துகள் உண்டு ஆனாலும் தோற்று நிற்கிறது .. கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் அமெரிக்க திணறுவதை உலகம் கவனிக்கிறது .. ஆயுதம் குவியலை விரும்பியவர்கள் மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்த்தின் துயரம் இன்று செய்வதறியாது கடைசியில் மரணத்தின் எண்ணிக்கை கூடுவதில் முடிகிறது .. ஒழுக்கமின்மை, மூடநம்பிக்கை, கடவுள் புனிதம் 
என்ற ஏமாற்று .. இவையாவும் மிகப்பெரிய விலைகொடுத்தபிறகே உணரமுடிகிறது ..
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 
மிக கவனமாக கையாளவேண்டிய விடயத்தை 
கேலிகூத்தாக்காக நினைப்பதை எண்ணுகையில் நிலைமை மோசமாகுமென அஞ்சவேண்டியிருக்கிறது ..
இன்னமும் சில அறிவிலிகள் விளக்கை அணைத்துவிட்டு விளக்குபிடிக்க சொல்கிற நிலை .. எதையும் அறிவுக்கொண்டோ, அறிவியல் கொண்டோ,யதார்த்த்தின் நிலையறியாமலோ போனால் .. அமெரிக்காவை பின்னுக்குதள்ளி மரணத்தின் முன்நிற்க வேண்டிவரும்,.
..
விழிப்புணர்வும்,தனிமைபடுதலும், தனிமைப்படுத்துதலும், முறையான மருத்துவமும், மீள்வோம் என்ற நம்பிக்கையும் வேண்டும் அதைவிடுத்து மூத்திரம் குடி,சாணியை தெளி பிராத்தனை செய் நேர்ச்சி செய், விளக்குபிடி என்றெல்லாம் செய்வது அறிவுடைமை இல்லை .. நம் நாட்டின் கேடு இது மதவெறிபிடித்தவர்கள் கையில் நாம் .. மீண்டுவருவோம் ..
மனிதன் தானாகவும் தனக்காவும் பிறக்கவில்லை என்றார் பெரியார் .. நாமும் வாழ மற்றவர்களும் வாழ தான் இந்த பூமி தனிமைபடுவோம் .. தேவைகளை தவிர வேறெதற்கும் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வோம் .. அரசும் ஆள்வோரும் 
விவரகேடுகளாக போனதில் நாமே காரணம் ..
அறிவுடையோரை புறக்கணித்ததின் விளைவுதான் இப்படிபட்ட கூத்துகள் ..
இன்னும் என்னென்ன காணவேண்டி வருமோ..
..
விளக்குபிடிக்கிற சொல்கிறவர்கள்  அறிவிலிகள் .. மக்களை சந்தித்து கொரோனா விழிப்புணர்வை உருவாக்கியும் மக்களுக்கு சேவை செய்கிறவர்களுக்கு உதவியையும் தெம்பையும் தன்னம்பிக்கையும் ஊட்டுகிற பேராளுமை திராவிடத்தின் தலைவன் தருவது #அறிவுடைமை .. மருத்துவர்களை தொடர்புக்கொள்கிறார் தன் கட்சியினரை தொடர்புக்கொண்டு களப்பணியை கேட்டறிகிறார்.. இதுதான் இப்போதைய தேவை 
மாறாக கைதட்டு விளக்கு பிடி என்பதல்ல
..
ஏப்ரல்5.. இந்திய முட்டாள்கள் தினமாகுமோ..
..
ஆலஞ்சியார்