Tuesday, January 28, 2020

குஜராத்

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 33 முஸ்லிம்களை  உயிரோடு எரித்து கொன்ற 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது ..
 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது சர்தார்புராவில் சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டபோது  உயிருக்கு பயந்தோடி இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில்..கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில்  மொத்தம் 33 பேர் ( 22 பெணகள்) உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.. இந்த வழக்கில் தான் 
இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி மத்திய பிரதேசத்தில் தங்கி #ஆன்மீக மற்றும் சமூக பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது ..
..
பெரியாரை அவமரியாதையாக பேசியதற்கு பரிசாக #ரஜினிகாந்த் மீது தொடரபட்ட வருமான வரிஏய்ப்பு வழக்கை வருமானவரித்துறை திரும்பபெற்றிருக்கிறது .. சிலைக்கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற டிவிஎஸ் வேணு சீனிவாச அய்யங்காருக்கு பத்மவுபூஷன் பட்டம் வழங்கி மத்திய அரசு மகிழ்கிறது ..  இதெல்லாம் சமீபத்திய நிகழ்வுகள் அரசின் லட்சணத்தை ‍.. நீதிமன்றங்களின் மீது அரசின் பாசபிணைப்பை நமக்கு உணர்த்தும் .. பாதகமாக தீர்ப்பு சொன்னால் மர்மமாக சாகவேண்டி வருமென முந்தைய நிகழ்வுகள் கண்முன் வந்து போகிறது .. சுயசார்புடைய அரசு நிறுவனங்களில் அரசின் ஆதிக்கம்  ஜனநாயக விரோதம் என பேசினாலும் புரியாது சொந்தபகையில் கொலையுண்டாலும் மதவெறியை தூண்டுவார்கள் கேட்டால் அரசை மிரட்டுவார்கள் ..இந்த நாடு சீரழிவை நோக்கி வேகமாக விரட்டபடுகிறது .. 
எல்லாதுறைகளிலும் பாசிசத்தின் கோரபற்களால் பிராண்டி  வருகிறது தாங்கள் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலை ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல..
..
சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்க வழக்கு இன்னும் எத்தனை காலம் கடக்கவேண்டும் .. அப்பாவு வழக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவை அறிவிக்க தடை .. காலதாமதமான நீதியால் ஜெயலலிதாவை புனிதராக்கி அரசின் செலவில் மக்கள் வரிப்பணத்தில் "கொள்ளையடித்தவருக்கு" மண்டபம் கட்டுகிற அவலம்.. சரியான நேரத்தில் நீதி வழங்கியிருந்தால் இன்று தமிழ்நாடு சுடுகாடாய் ஆகியிருக்காது .. நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க தொடங்கியிருக்கிறார்கள் .. எத்தனை வழக்குகளை  வேண்டுமென்றே தாமதப்படுத்தி அநீதி இழைக்கிறது உச்சபட்ச நீதிபரிபாலன அமைப்பு ..
மக்களின் கோபம் இயலாமை விரக்தி  வேறொரு பரிணாமத்தை அடைந்தால் அது கட்டுக்கடங்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது ..நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை வற்றுகிறபோது 
மக்கள் புரட்சியாக வடிவம் பெறும் என்பதை உணர வேண்டும் ..
..
நீதி வல்லவனுக்கானதாய் மாறிபோனது ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment