Tuesday, January 21, 2020

ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்

ரஜினி அவர்கள்
95 ஆண்டு காலம் தமிழ் மக்களுக்காக வாழ்ந்த தந்தை பெரியாரைப்பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் - திமுக தலைவர் தளபதி ஸ்டாலின்..
பெரியாரை பற்றி பேசுகிற அளவிற்கெல்லாம் ரசினிக்கு அறிவு கிடையாது.. 
1995 ல் தான் Out look இதழ் வந்தது அதுகூட பரவாயில்லை இந்து குழுமத்திலிருந்து வரும் அவுட் லுக் என்றாரே பாருங்கள்..  2017 ல் கார்ட்டூன் பாலா கைதின் போது வந்த கட்டுரையை படித்துவிட்டு சொல்கிறார் அதில் துக்ளக் 1971 ல் எழுதிய செய்தியை குறிப்பிட்டிருந்தது  ஆனால் தவறி இந்து குழுமம் என சொல்லிவிட்டார் ஒருவித பதட்டத்தில் மனிதர் இருப்பது புரிகிறது .. ரஜினி முழுமையாக அரசியல் அறிந்தவராகவோ அல்லது பெரியாரை படித்ததவராகவோ இல்லை என்பதே உண்மை 
தெரியாத விடயங்கள் பற்றி மௌனமாய் கடந்து போயிருக்கவேண்டும் (மகோரா )எம்ஜிஆரைபோல அதுதான் அவருக்கு நல்லது ..
..
ஏற்கனவே இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் ராமன் நிர்வாணமாக எடுத்து செல்லபட்டதாகவும் செருப்புமாலை அணிவித்ததாகவும் செய்தி வெளியிட்டதற்கு தி.க வழக்கு தொடர்ந்தது  நீதிமன்றத்தில் நேர்நின்று ரங்கராஜன் அய்யங்காரும் ராமசாமி அய்யரும் மன்னிப்பு கேட்ட வரலாறெல்லாம் ரஜினி இன்னமும் படிக்கவில்லை அல்லது இவரை இயக்குகிறவர்கள் சொல்லி தரவில்லை சினிமாவை கண்டு விசிலடிக்கிறான் கைதட்டுகிறான் என்பதற்காக தமிழனை கூமுட்டையென  நினைத்துவிட்டார் ரசிகன் நடிப்பிற்குதானே தவிர உன் கருத்திற்கில்லை ..
..
"யார் சொன்னாலும் ஏன் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே" என பேராசான் சொல்லி சென்றிருக்கிறார் .. எல்லாவற்றையும் கேட்டு கைதட்டி தலையசைக்க இது வடமாநிலம் இல்லை சினிமாவையும்   அரசியலையும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறான் இன்று ஊடகங்கள் பொய்யை பரப்பினாலும் பதிலடி தர அவனிடம் வலைதளங்கள் உண்டு எம்ஜிஆர் காலமல்ல மறுநாள் செய்தி அதற்கு மறுநாள் மறுப்போ எதிர்ப்போ வெளியிட இப்போதெல்லாம் உடனுக்குடன் தலையில் கொட்டுவார்கள்..
..
பாபா படத்தில் "பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி" வரிகள் ஒரு
பாடலில் இடம்பெற்றது ..ஆசிரியர் வீரமணி ரஜினி தொடர்புக்கொண்டு பேசினார் .. ஆடியோ வெளியாகிவிட்டது படத்தில் வராமல் பார்த்துக்கொள்கிறேன் என்ற ரஜினி மன்னிப்பு கேட்ட வரலாறு உண்டு .. இப்போது மன்னிப்பு கேட்க முடியாதென்கிறார் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை நீதிமன்றத்தில் நேர்நின்று உலகறிய மன்னிப்பு கேட்பார்.. ஆம் உதயநிதி ட்விட் போல
"பெரியார் விடயத்தில் ரஜினி உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் ..காவிரி விடயத்தில் மன்னிப்பு கேட்டதை போல.. நெருப்பின் மீது கை வைத்தால் சுடும் பாஜகவோடு கூட்டு இல்லை எனச் சொல்லிக்கொண்டே திரிந்தவரை தமிழக மக்களுக்கு எதிரானவராக நிறுத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ்..
பெரியார் நீங்கள் நினைக்கிற அளவில் வீழ்த்திவிட முடியாது .. அவரின் கொள்கை வழி பயணிப்போர் 
அவரை உள்வாங்கியோர் அவரை புகழ்ந்து கொண்டு நன்றியோடு தமிழர்கள் இருக்கும்வரை உங்கள் எண்ணம் ஈடேறாது ..
வேறு வழியில்லை வழக்கை சந்திக்க நேரிடும் 
மன்னிப்பு கேட்க வேண்டுவரும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment