Tuesday, January 28, 2020

நேரு

உழைப்பவரை தேடிபிடித்து பதவியை தராவிட்டால் இயக்கம் வளராது என்றார் பேரறிஞர் அண்ணா..
..
திமுகழகத்தின் முதன்மை செயலாளராக 
நேரு தேர்வாகியிருக்கிறார் ..மகிழ்ச்சி வாழ்த்துகள்
பொறுப்பு  கூடியிருக்கிறது .. சரியான தேர்வும் கூட எளிய தொண்டனிடமும் தலைகனத்தோடு கதைக்கிறவர் இல்லை மாறாக அரவணைத்து செல்லும் ஆற்றல் உண்டு ..சிலர் பொறுப்பு வந்தவுடனே தான்தான் எல்லாம் என்பவர்களுக்கு மத்தியில் தான் இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டாடுபவனென தெளிவோடு இருக்கிறவர்களை தேடி பதவிகள் செல்ல வேண்டும் ..ஒருவித மிதப்போடு "ராஜா வேசம் கட்டுகிறவன்" தேவையில்லை..  சிலருக்கு மட்டுமே "நலனாய் "இருப்பவர்கள் தங்களின் புகழ் ஒன்றே குறியோடு செயல்படுபவர்கள்.. தானென்ற அகந்தை கொண்டவர்கள் வெளியேற்றபடவேண்டும் 
சுயநலம், பதவிமோகம் செயல்பாடுகளில் சுணக்கம் இவையெல்லாம் தவிர்த்து அல்லது களையபடவேண்டும்,..
..
நேரு.. 
புள்ளம்பாடி ஒன்றிய தலைவராக தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் என படிபடியாக உயர்ந்தவர் .. கழகத்தின் இக்கட்டான காலகட்டத்தில் மாவட்ட செயலாளர் பொறுப்பை ஏற்று திருச்சியை மீண்டும் திமுக கோட்டையாக்கியதில் பெரும்பங்கு உண்டு ..அயராத உழைப்பு சாமானியனும் சந்திப்பதற்கு தடையேதுமில்லாத எளிமை திமுக மாவட்ட செயலர் என்றாலே தனி "ராஜபார்ட்டை" வகுத்து செயல்படுவோர் மத்தியில் கழகம் தொண்டர்களின் பலத்தில் இருக்கிறதென்று உண்மையை அறிந்து செயல்பட்டவர் ..தலைமையின் கட்டளையை ஏற்று சுழன்று உழைக்கும்,செயல்வீரர் .. இவரின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் கோ.சி.மணியை போல அடித்தளத்தின் மீது இருக்கும் எல்லோரையும் அரவணைத்து ஒரு மாவட்ட செயலாளர் எப்படி செயல்படவேண்டுமென்று கோ.சி.மணியை பார்தேது தெரிந்துக்கொள்ளுங்கள் என்பார் கலைஞர் .. அதைபோல் நேருவை பார்த்து தெரிந்து செயல்படுங்களென தளபதி கூறலாம் நேருவிற்கு அவ்வளவு தகுதி உண்டு ..
..
திமுக கட்சியல்ல அதொரு இயக்கம் தொடர்ந்து 
உழைப்பவர்களை கண்டறிந்து வாய்ப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கும், எத்தனை உயரத்தில் இருந்தால் இறுமாப்போடு இருந்தால் சரிவு தானே வருமென்பதை காலம் உணர்த்திக்கொண்டே இருக்கும் ..கலைஞரை போல அல்ல தளபதி என முன்பொருமுறை எழுதியிருந்தேன் ..களைவதும் சிறந்தவரை முன்னிருத்துவதிலும் முகம் பார்ப்பதில்லை.. உழைப்பவரை கண்டு இயக்கத்தை வழிநடத்த ..மக்களோடு கலந்தவரை உயர்த்திபிடிக்க தயக்கமில்லையென தளபதி தன் செயல்மூலம் செய்துகாட்டியிருக்கிறார்.. திமுகவிற்கு இன்றைய தேவை #நேருக்களே..
..
புரிந்தவன் புத்திசாலி..
வாழ்த்துகள் நேரு 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment